என் மலர்

    நீங்கள் தேடியது "Former Minister"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் சார்பில் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
    • இந்த சுவரொட்டி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம்

    முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அன்வர்ராஜா அ.தி.மு.க.வில் இருந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார். அவர் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    கடந்த 24-ந்தேதி எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு அன்வர்ராஜா ஒட்டிய போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இன்று (17-ந்தேதி) எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவிற்கு அவர் ஒட்டியுள்ள போஸ்டரில், தலைவா... நம் கட்சித் தலைவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள நீதிமன்றங்களில் போராடுகின்றார்கள்.

    நாங்கள் கட்சியை காப்பாற்ற உங்களிடம் மன்றாடுகின்றோம். காப்பாற்றுங்கள்... என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சுவரொட்டி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம்.
    • சட்டமன்ற தேர்தல் வரும் போது அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் விஷயங்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வரகூடாது என்று யாருமே சொல்லகூடாது. அவர்கள் வருவதால் என்ன பயன் என்பது போக போகத்தான் தெரியும்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம். தேர்தல் ஆணைய அட்டவணையின்படி 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் போது அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி தமிழ்நாட்டில் மலரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கழகம் ஒரு குடும்பம் என்றால் அது அ.தி.மு.க.
    • குடும்பமே கழகம் என்றால் அது தி.மு.க. தான்.

    சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. ஒரு குடும்ப ஆதிக்கமிக்க ஒரு கட்சி. பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியை தனது குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நிலையிலிருந்து அதை பார்க்கலாம். கழகம் ஒரு குடும்பம் என்றால் அது அ.தி.மு.க. தான். ஆனால் குடும்பமே கழகம் என்றால் அது தி.மு.க.தான்.

    எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அது அமைச்சராகவே இருந்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பார்கள். எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போல அந்த தைரியம், துணிச்சல் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் புலம்பி தள்ளியிருக்கிறார்.அதிகாரம் இருந்தும் அவரிடம் துணிச்சல் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓசி பயணம் என்று பேசிய அமைச்சரை, முதலமைச்சர் கண்டிக்காதது ஏன்?
    • அமைச்சரின் பேச்சால், இலவச பயணம் செய்ய பெண்கள் அவமானப்படுகிறார்கள்.

    சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:- அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு மூடு விழா நடத்தியுள்ளது. தாலிக்கு தங்கம் போன்ற நல்ல திட்டங்களை திமுக அரசு மூடி விட்டது.

    யானை பசிக்கு சோளப்பொறி போல, மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பேருந்தில் பெண்கள் ஓசியாக பயணிப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியதால் ஒவ்வொரு பெண்ணும் இலவசமாக பயணம் செய்ய அவமானப் படுகிறார்கள்.

    ஓசி பயணம் என்று பேசிய அமைச்சரை, முதலமைச்சர் கண்டிக்காதது ஏன்? மேயரிடம் அமைச்சர் அதிகார தொனியில் பேசியது சரியானது அல்ல. அமைச்சர்கள் செய்யும் அடாவடிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தான் முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகள் உள்ளன.

    ஒ.பி.எஸ்.க்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை. அறிக்கைகள், டிவிட்டரில் மட்டும் தான் அவர் செயல்படுகிறார். பருவமழை வரவுள்ளதால், மழை நீர்வடிகால் பணி குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் கூறியது வெட்ட வெளிச்சத்திற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்காவிட்டால் கள்ளக்குறிச்சி மாவட்டம் போல் கடலூர் மாறும் என முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தற்போது மின்சார கட்டணம் வரலாறு காணாத வகையில் உயர்த்தி உள்ளனர்.தமிழகத்தில் 40 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கடலூர்: 

    கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டினை கண்டு கொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்து கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கி பேசினார்.அவர் ேபசியதாவது:- அ.தி.மு.க. .ஆட்சி காலத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடத்தில் தற்போது மின்சார கட்டணம் வரலாறு காணாத வகையில் உயர்த்தி உள்ளனர்.தமிழகத்தில் 40 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தனியாரிடம் ரூ.2.73-க்கு ஒரு யூனிட் மின்சாரம் கிடைத்து வரும் நிலையில் ரூ.5.25-க்கு மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்கள் மீது அரசு வரியை சுமத்தி வருகின்றனர். மேலும் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை வீடுகளுக்கும், கமர்சியல் இடத்திருக்கும் தமிழக அரசு உயர்த்தி உள்ளதால் வணிகர்கள், பொதுமக்கள் கடும் அவதிஅடைந்து உள்ளனர்.

    இது மட்டும் இன்றி சிமெண்ட், கம்பி, ஜல்லிக்கற்கள் போன்றவற்றின் விலை கடுமையாக விலை உயர்ந்து உள்ளதால் பொதுமக்களின் அடிப்படை வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், பெண்களுக்கு ஸ்கூட்டி, மற்றும் அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். தற்போது தி.மு.க. ஆட்சியில் கடலில் பேனா வைப்பதற்கு 80 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளன. ஆனால் தமிழகம் முழுவதும் மக்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் 80 கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் மேற்கொள்வது அரசுக்கு நியாயமா?.

    தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக கள்ளக்குறிச்சி சம்பவம் அனைவருக்கும் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு சட்ட ஒழுங்கு பிரச்சினை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது மட்டும் இன்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லாக்கப்பில் சாவு ஏற்பட்டு உள்ளது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மக்கள் பயன்பெறும் வகையில் கலெக்டர் அலுவலகம் அருகில் பஸ் நிலையம் அமைப்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் எம். புதூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அல்லது அந்த இடத்தை மக்கள் விரும்புகிறார்களா? என்பதனை பார்க்க வேண்டும் .மேலும் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆகையால் கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்காவிட்டால் கள்ளக்குறிச்சி மாவட்டம் போல் கடலூர் மாவட்டம் மாறும் என்பதனை கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு எச்சரிக்கை விடுகிறோம். இது போன்ற சம்பவங்கள் முழுவதும் தவிர்க்கப்பட வேண்டுமானால் தி.மு.க. ஆட்சியை அகற்றி தூக்கி எறிய வேண்டும். மேலும் தமிழகத்தில் மந்திரிகள், அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாமல் குடும்ப ஆட்சியாக திமுக செயல் படுகின்றது மக்களை வஞ்சிக்கின்ற ஆட்சியாக திமுக செயல் படுகின்றது. ஆகையால் மக்கள் பிரச்சினை தீர்க்கும் அரசாக அதிமுக இருந்து வருவதால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அமைய மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன், அ.தி.மு.க. மருத்துவர் அணி தலைவர் டாக்டர் சீனிவாச ராஜா, மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.கே.எஸ். கார்த்திக்கேயன், மீனவரணி தங்கமணி, பேரவை துணைச் செயலாளர் ஆர்.வி. ஆறுமுகம், பகுதிகளை செயலாளர்கள் வெங்கட்ராமன், வக்கீல் பாலகிருஷ்ணன், கெமிக்கல் மாதவன், வினோத் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவை தலைவர் சேவல் குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், மாவட்ட துணை செயலாளர் பக்கிரி ஆகியோர் வரவேற்றனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் வட்ட துணை செயலாளர் மணிமேகலை தஷ்ணா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சங்கீதா வசந்த ராஜ், ஏ.ஜி.தஷ்ணா, ஏ.ஜி.எம். வினோத்குமார், ஒன்றிய செயலாளர்கள் கந்தன், தமிழ்ச்செல்வம், நாகபூஷணம், சிவா, நகர செயலாளர்கள் முருகன், காசிநாதன், பேரூராட்சி செயலாளர்கள் கனகராஜ், அர்ஜுனன், மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், வர்த்தக பிரிவு வரதராஜன், இலக்கிய அணி ஏழுமலை, இணைச் செயலாளர் முத்து, சிறுபான்மை பிரிவு தாஜுதீன், ஒன்றிய கவுன்சிலர்கள் மகேஸ்வரி விஜய ராயலு, வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் அழகானந்தம் நன்றி கூறினார். முன்னதாக அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பெண்கள் திரண்டு வந்ததால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டிருந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிறந்த நாள் விழா பல்லடம் கடை வீதியில் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடத்தில்முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நேர்மைக்கு இலக்கணமாக வாழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின்114 வது பிறந்த நாள் விழா பல்லடம் கடை வீதியில் நடைபெற்றது. அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர் அங்கிருந்த குழந்தைகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, அ.தி.மு.க. பொருளாளர் தர்மராஜன், சமூக ஆர்வலர்கள், பாலசுப்பிரமணியம், மிருதுளா நடராஜன், அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருச்சியில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது. #FormerMinisterSelvaraj
    திருச்சி:

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் (வயது 75). என்ஜினீயரான இவர் 1980-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை திருச்சி தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருந்தார். இவர் 1987-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்தார்.

    ம.தி.மு.க. தொடங்கப்பட்டபோது, அந்த கட்சிக்கு சென்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்களில் செல்வராஜூம் ஒருவர். பின்னர் மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்த இவர் 2006-ம் ஆண்டு முசிறி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் செல்வராஜூக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். கடந்த ஓர் ஆண்டு காலமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் திருச்சி வந்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், செல்வராஜ் சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரிக்கு சென்று உடல் நலம் விசாரித்தார்.

    இந்தநிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார். அவரது உடல் தில்லைநகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. செல்வராஜின் உடலுக்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    செல்வராஜின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 3 மணி அளவில் திருச்சி தில்லைநகர் முதல் குறுக்கு சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுகிறது. செல்வராஜூக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.  #FormerMinisterSelvaraj



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போது அதிமுக அமைப்புச் செயலாளராகவும் உள்ள கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் (வயது 86) இன்று மரணம் அடைந்தார். #GokulaIndira
    திருவொற்றியூர்:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் தற்போது அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராகவும் உள்ள கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் (வயது 86) இன்று மரணம் அடைந்தார்.

    மரணம் அடைந்த சுப்பிரமணிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மகன் ஏற்கனவே சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் சுப்பிரமணி கோகுல இந்திரா வீட்டில் வசித்து வந்தார்.

    சமீப காலமாக உடல் நலக்குறைவில் இருந்த அவர் இன்று அதிகாலை 5 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் அண்ணாநகர் ஐயப்பன் கோயில் அருகில் உள்ள கோகுல இந்திரா இல்லத்தில் தொடங்கி மாலை 5 மணிக்கு வேலாங்காடு சுடுகாட்டில் நடைபெறுகிறது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அதிமுகவினரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #GokulaIndira


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பீகார் மாநிலம் முசாபர்பூர் காப்பகத்தில் சுமார் 30 சிறுமிகள் சீரழிக்கப்பட்டது தொடர்பாக பதவி விலகிய முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். #ManjuVerma #ManjuVermasurrenders
    பாட்னா:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சுமார் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில்  நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் காப்பகத்தின் பொறுப்பாளர் பிரஜேஷ் தாக்கூர் உள்பட 17 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு பீகார் மாநில சமூக நலத்துறை மந்திரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்திரசேகர்  வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் மஞ்சு வர்மா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

    இதைதொடர்ந்து, தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மாவின் வீட்டை போலீசார் சோதனையிட்டபோது அனுமதி பெறாத கள்ளத்துப்பாக்கிகள் மஞ்சு சர்மா வீட்டில் கிடைத்தன. இதன் அடிப்படையில் கணவன் - மனைவி இருவருக்கும் எதிராக ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்தனர். இவ்விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்த தொடங்கியது.

    இதனால் தன்னை இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க பாட்னா உயர் நீதிமன்றத்தில் மஞ்சு வர்மா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து போலீசார் கையில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா கடந்த மாதம் பேகுசராய் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எம்.பி.லோக்குர், எஸ்.அப்துல் நசீர் மற்றும் தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தது.

    பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி ரஜேஷ் தாக்கூர் சிறைக்குள் கைபேசி வைத்திருந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் குறிப்பிட்டதையடுத்து, பிரஜேஷ் தாக்கூரை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு நிறைந்த பாட்டியாலா சிறைக்கு உடனடியாக மாற்றுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், முன்னாள் மந்திரி மஞ்சு வர்மா மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய தவறியதற்காக பீகார் அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் இன்னும் மஞ்சு வர்மாவை கைது செய்யாதது ஏன்? என பீகார் மாநில அரசின் சார்பில் வாதாடும் வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினர்.

    மஞ்சு வர்மா முன்னாள் மந்திரியாக இருக்கலாம். ஆனால், அவர் என்ன சட்டத்தை விட உயர்ந்தவரா? இன்னும் அவரை கைது செய்யாதது ஏன்? இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? எனவும் கண்டனம் தெரிவித்தனர்.



    சுப்ரீம் கோர்ட்டின் கெடுபிடியால் கலக்கமடைந்துள்ள பீகார் போலீசார் மஞ்சு வர்மாவை கைது செய்ய வாரண்ட் வழங்குமாறு உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதைதொடர்ந்து கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட  நிலையில் மஞ்சு சர்மாவை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், சுமார் 3 மாதங்களாக போலீசார் கண்ணில் சிக்காமல் இருந்த மஞ்சு வர்மா பேகுசராய் மாவட்டத்தில் உள்ள மஞ்ஹவுல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். யாரும் தன்னை அடையாளம் காணாமல் இருப்பதற்காக முகத்தை துப்பட்டாவால் மறைத்தவாறு நீதிமன்றத்துக்குள் நுழைந்த அவர் நீதிபதியிடம் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். #ManjuVerma #ManjuVermasurrenders

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மு.க.அழகிரி ஒரு பொருட்டல்ல. திமுக தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். #DMK #IPeriyasamy
    பரமக்குடி:

    பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தி.மு.க.சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூத் கமிட்டி முகவர்களிடம் ஆலோசனை செய்வதற்காக தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, சுப்பிரமணியன், மேகநாதன் ஆகியோர் வந்தனர்.

    அப்போது அவர்கள் நகரில் சேதுபதி நகர், காட்டுப் பரமக்குடி, சந்தைக்கடை, சுப்பிரமணியசுவாமி தெரு உள்பட பல்வேறு வார்டுகளில் ஆலோசனை வழங்கினர்.

    ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், முன்னாள் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சுப.த.சம்பத், மாநில தீர்மானக் குழு துணைத் தலைவர் திவாகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திசைவீரன், முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர் செயலாளர் சேது கருணாநிதி வரவேற்றார். ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த தி.மு.க. ஆட்சிகளின் போது ரூ. 616 கோடியிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் உள்பட எண்ணற்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

    உழவர் சந்தை, பசும்பொன் தேவருக்கு நினைவு மண்டபம், சேது சமுத்திரத் திட்டம் என நல்ல திட்டங்களையும் தி.மு.க. செயல்படுத்தியுள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அ.திமு.க. அரசால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை.

    20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றால் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். தி.மு.க. அமோக வெற்றி பெறும். கடந்த தேர்தல்களைப் போல் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் தடுக்கப்படும்.

    அரசியலில் யாருடன் கூட்டணி வைக்கலாம்? என்பது பற்றி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார். மு.க.அழகிரி ஒரு பொருட்டல்ல. தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர். தமிழகத்தில் மத்தியில் ஆளும் மோடியின் ரிமோட் ஆட்சி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, பொதுக்குழு உறுப்பினர்கள் அருளானந்து, வக்கீல் பூமிநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன். துரைச்சாமி, ஒன்றிய செயலாளர் போகலூர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #IPeriyasamy
    • Whatsapp
    • Telegram
    • Linkedin