என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PVSindhu"

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, மலேசியாவின் லெச்சனா கருப்பதேவன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹரா உடன் மோதினார்.

    இதில் பிவி சிந்து முதல் செட்டை 22-20 என வென்றார். 2வது செட்டை நஜோமி 23-21 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை பி.வி.சிந்து 21-15 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    நிங்போ:

    ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்தோனேசியாவின் எஸ்தர் நுருமி வர்தயோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 44 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    • ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

    பர்மிங்காம்:

    ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தென் கொரியாவின் கிம்முடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் முதல் செட்டை லக்ஷயா சென் 21-19 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட கின் அடுத்த இரு செட்களை 21-13, 21-13 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த பிவிசிந்து மற்றும் சீனாவை சேர்ந்த ஜாங்யிமானும் மோதின.
    • ஜாங் யிமான் 21-12, 21-13 என்ற நேர்செட்களில் சிந்துவை வீழ்த்தினார்.

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று டோக்கியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 26 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் இத்தொடர் ஜூலை 25 முதல் ஜூலை 30 வரை நடக்கிறது. இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், எச்.அஸ்.பிரணாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து மற்றும் சீனாவை சேர்ந்த ஜாங்யிமானும் மோதினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜாங் யிமான் 21-12, 21-13 என்ற நேர்செட்களில் சிந்துவை வீழ்த்தினார்.

    இவர் இந்த ஆண்டு நடைபெற்ற இந்தோனேசிய ஓபன், அமெரிக்க ஓபன், கொரியன் ஓபன் என அனைத்து தொடர்களிலும் தோல்வி அடைந்திருந்த நிலையில், தற்போது ஜப்பான் ஓபனிலும் தோல்வி அடைந்து வெளியேறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

    ×