search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Japan Open"

    • ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்றது.
    • இதில் டென்மார்க் வீரர் அக்சல்சென் சாம்பியன் பட்டம் வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடந்தது. இதில் டென்மார்க் வீரர் அக்சல்சென், இந்தோனேசிய வீரர் ஜொனாடன் கிறிஸ்டியை எதிர்கொண்டார்.

    இதில் அக்சல்சென் 21-7, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

    • கால்இறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் கோகி வாதனபே உடன் மோதினார்.
    • லக்சயா சென் 21-15, 21-19 என்ற நேர்செட்டில் கோகி வாதனபேவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற கால்இறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் கோகி வாதனபே உடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லக்சயா சென் 21-15, 21-19 என்ற நேர்செட்டில் கோகி வாதனபேவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

    • ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • 2வது சுற்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரரை வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், ஜப்பான் வீரர் காந்தா சுனேயமா உடன் மோதினார். இந்த போட்டியில் லக்சயா சென் 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், சகநாட்டு வீரரான ஶ்ரீகாந்த் கிடாம்பியுடன் மோதினார்.

    பரபரப்பாக நடந்த இப்போட்டியில் பிரனாய் 19-21, 21-9, 21-9 என்ற செட் கணக்கில் கிடாம்பியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், சக நாட்டு வீரரான பிரியான்ஷூ ரஜாவத்துடன் மோதினார்.
    • லக்சயா சென் 21-15, 12-21, 24-22 என்ற செட் கணக்கில் ரஜாவத்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், சக நாட்டு வீரரான பிரியான்ஷூ ரஜாவத்துடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டில் லக்சயா சென் 21-15 என்ற கணக்கிலும் 2-வது செட்டில் ரஜாவத் 21-12 என கைப்பற்றினார். இதனையடுத்து வெற்றி யாருக்கு என்ற 3-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் 24-22 என்ற செட் கணக்கில் ரஜாவத்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு லக்சயா சென் முன்னேறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த பிவிசிந்து மற்றும் சீனாவை சேர்ந்த ஜாங்யிமானும் மோதின.
    • ஜாங் யிமான் 21-12, 21-13 என்ற நேர்செட்களில் சிந்துவை வீழ்த்தினார்.

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று டோக்கியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 26 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் இத்தொடர் ஜூலை 25 முதல் ஜூலை 30 வரை நடக்கிறது. இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், எச்.அஸ்.பிரணாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து மற்றும் சீனாவை சேர்ந்த ஜாங்யிமானும் மோதினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜாங் யிமான் 21-12, 21-13 என்ற நேர்செட்களில் சிந்துவை வீழ்த்தினார்.

    இவர் இந்த ஆண்டு நடைபெற்ற இந்தோனேசிய ஓபன், அமெரிக்க ஓபன், கொரியன் ஓபன் என அனைத்து தொடர்களிலும் தோல்வி அடைந்திருந்த நிலையில், தற்போது ஜப்பான் ஓபனிலும் தோல்வி அடைந்து வெளியேறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். #JapanOpen #PVSindhu
    டோக்கியோ:

    முன்னணி வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ள ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தர வரிசையில் 14-வது இடத்தில் உள்ள சீனாவின் பான்ஜிவ் காவை சந்தித்தார்.

    55 நிமிடம் விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 18-21, 19-21 என்ற நேர்செட்டில் பான்ஜிவ் காவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.



    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 21-14 என்ற நேர்செட்டில் 27-ம் நிலை வீரர் வோங் விங் கி வின்சென்டை (ஹாங்காங்) வீழ்த்தி கால்இறுதிக்குள் கால் பதித்தார். இந்த வெற்றியை பெற ஸ்ரீகாந்துக்கு 36 நிமிடமே தேவைப்பட்டது. கால் இறுதியில் ஸ்ரீகாந்த், 33-ம் நிலை வீரர் லீ டோங் குன்னை (தென்கொரியா) எதிர்கொள்கிறார்.

    மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரனாய் 14-21, 17-21 என்ற நேர்செட்டில் 10-வது இடத்தில் உள்ள அந்தோணி சினிசுகா ஜின்டிங்கிடம் (இந்தோனேஷியா) தோல்வி கண்டு நடையை கட்டினார். இந்த ஆட்டம் 48 மணி நேரம் நீடித்தது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் மனு அட்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 18-21, 21-16, 12-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹீ ஜிட்டிங்-டான் கியாங் இணையிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது. இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி இணை மலேசியாவின் சன் பெங் சூன்-கோஹ் லி யிங் ஜோடியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீரர்-வீராங்கனைகளில் ஸ்ரீகாந்த் தவிர மற்ற அனைவரும் மூட்டை முடிச்சுகளை கட்டி விட்டனர்.  #JapanOpen #PVSindhu
    ×