ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காயத்தால் அரையிறுதியில் விலகிய ரிபாகினா

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.கஜகஜஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா அரையிறுதியில் இருந்து விலகினார்.
ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காயத்தால் அரையிறுதியில் விலகிய ரிபாகினா
Published on

டோக்கியோ:

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் அரையிறுதி சுற்றில் கஜகஸ்தான் எலினா ரிபாகினா, செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா உடன் மோத இருந்தார்.

ஆனால் காயம் காரணமாக அவதிப்பட்டதால் போட்டியில் இருந்து விலகுவதாக ரிபாகினா அறிவித்தார். இதன்மூலம் செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com