என் மலர்
நீங்கள் தேடியது "புள்ளி பட்டியல்"
- கடைசி இடத்தில் இருந்த மும்பை 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- சென்னை 7-வது இடத்திலும், கொல்கத்தா கடைசி இடத்திலும் உள்ளது.
மும்பை:
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் ஐ.பி.எல். புள்ளி பட்டியலில் அணிகளின் தற்போதைய நிலையை இங்கு காணலாம்.
2 போட்டிகளில் விளையாடி 2-லும் வெற்றி கண்டுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் 4 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தாலும் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு முதலிடத்திலும், டெல்லி 2-வது இடத்திலும் உள்ளது.
அடுத்த இடங்களில் 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் அடிப்படையில் லக்னோ 3-வது இடத்திலும், குஜராத் 4-வது இடத்திலும் உள்ளது. ஒரு போட்டியில் விளையாடி ஒரு வெற்றியுடன் பஞ்சாப் 5-வது இடத்தில் உள்ளது.
6-வது இடத்தில் இருந்த கொல்கத்தா, நேற்றைய போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் கடைசி இடத்தையும், 10-வது இடத்தில் இருந்த மும்பை 6-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. சென்னை 7-வது இடத்திலும், ஐதராபாத் 8-வது இடத்திலும், ராஜஸ்தான் 9-வது இடத்திலும் உள்ளன.
இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியருக்கான புளு நிற தொப்பி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் நூர் அகமதுவிடம் உள்ளது. அவர் 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ஸ்டார்க் (2 போட்டி 8 விக்கெட்), கலீல் அகமது (3 போட்டி 6 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.
அதிக ரன்கள் குவித்த வீரருக்கான ஆரஞ்சு நிற தொப்பி லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரனிடம் உள்ளது. அவர் 2 போட்டிகளில் 145 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக சாய் சுதர்சன் 137, டிராவிஸ் ஹெட் 136 ஆகியோர் உள்ளனர்.
- உலக கோப்பை தொடரில் 20 ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா வென்றுள்ளது.
- உலக கோப்பை கிரிக்கெட் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
தரம்சாலா:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நடந்தது. இதில், இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய டேரில் மிட்செல் 137 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும், சிராஜ் , பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா 48 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 95 ரன்னும், ரோகித் சர்மா 46 ரன்னும், ஜடேஜா 39 ரன்னும், ஷ்ரேயஸ் அய்யர் 33 ரன்னும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவுசெய்தது. மேலும், உலக கோப்பை தொடரில் 20 ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து 2-வது இடத்திலும், 6 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும், 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் முறையே 4 மற்றும் 5-வது இடத்தில் உள்ளன.






