என் மலர்
நீங்கள் தேடியது "WTC points table"
- பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஆஸ்திரேலியாவின் வெற்றியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 1 - 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் 14-ம் தேதி துவங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலியா 478 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 164 ரன்களும், மிட்சேல் மார்ஷ் 90 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் அமீர் ஜமால் 6 விக்கெட்களை சாய்த்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக இமாம்-உல்-ஹக் 62 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அதன் பின் 216 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 233 ரன்களில் 2-வது இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 90, மிட்சேல் மார்ஷ் 63* ரன்களும் எடுத்தனர். இதனால் பாகிஸ்தானுக்கு 450 ரன்களை இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது.
கடினமாக இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சவுத் சாக்கில் 24 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஹேசல்வுட், மிட்சேல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
மேலும் ஆஸ்திரேலியாவின் வெற்றியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் 66.67% புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே 66.67% புள்ளிகளை கொண்டிருந்தாலும் 3-ல் 1 தோல்வியை பதிவு செய்ததால் பாகிஸ்தான் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஆஸ்திரேலியா 41.67% புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகியவை உள்ளன.
- நியூசிலாந்துக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளை ஐசிசி குறைத்துள்ளது.
துபாய்:
ஐசிசி நடத்தும் 2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இன்னும் 16 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது.
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடும் போட்டியிடுகின்றன.
புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் உள்ளன.
இதற்கிடையே, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி தாமதமாக பந்து வீசியதால் அந்த அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3 புள்ளிகளைக் குறைத்துள்ளது.
இதனால் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
- நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
துபாய்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டியில் அபாரமாக செயல்பட்ட நியூசிலாந்து 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (63.33 சதவீதம்), ஆஸ்திரேலியா (60.71 சதவீதம்), இந்தியா (57.29 சதவீதம்) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களில் தொடர்கின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் 6-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து (48.21 சதவீதம்) 4-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கை 5-ம் இடத்திலும், இங்கிலாந்து 6-ம் இடத்திலும் உள்ளன.
தொடர்ந்து 7 முதல் 9 இடங்களில் முறையே பாகிஸ்தான், வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன.






