search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSKvRCB"

    • மார்ச் 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது
    • மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது

    இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அன்றைய தினம் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

    டோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கினார். இப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

    இதனையடுத்து, மார்ச் 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. இதனால் சென்னை அணி வீரர்கள் சென்னையில் ஊர் சுற்றி பொழுது போக்கினர்.

    இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் கேப்டானான எம்.எஸ்.டோனி நேற்று இரவு மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்து ரசித்திருக்கிறார். பந்துவீச்சாளர் தீபக் சஹார் உடன் சென்று சென்னை சத்யம் திரையரங்கில் அவர் இப்படத்தை கண்டுகளித்துள்ளார். அப்போது படம் முடிந்து வெளியே வந்த டோனியை பார்த்ததும் ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ஐம்பது கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் தமிழில் பல முன்னணி ஹீரோக்கள் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை பார்த்து பாராட்டிய நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை திரையில் பார்த்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரச்சின் ரவீந்திரா 15 பந்தில் 37 ரன்கள் விளாசினார்.
    • ஷிவம் துபே 27 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழகாமல் இருந்தார்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து 173 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் அனுஜ் ராவத் 25 பந்தில் 48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 26 பந்தில் 38 ரன்களும் அடித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முஸ்டாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார் ருதுராஜ் கெய்க்வாட். மறுமுனையில் ரவீந்திரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அணியின் ஸ்கோர் 4 ஓவரில் 38 ரன்கள் இருக்கும்போது ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரவீந்திரா உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். சென்னை அணி 5.3 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது. அணியின் ஸ்கோர் 71 ரன்னாக இருக்கும்போது 7-வது ஓவரின் கடைசி பந்தில் ரவீந்திரா 15 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    ரகானே தனது பங்கிற்கு 19 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். டேரில் மிட்செல் 18 பந்தில் 2 சிக்சருடன் 22 ரன்கள் அடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்தது.

    ரச்சின் ரவீந்திரா

    கடைசி ஐந்து ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட்டது. துபே உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். 16-வது ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. 17-வது ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 3 ஓவரில் 18 ரன்களே தேவைப்பட்டது. 18-வது ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது.

    இதனால் கடைசி 2 ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 18.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

    ஷிவம் துபே 34 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • அனுஜ் ராவத் 25 பந்தில் 48 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன்அவுட் ஆனார்.
    • முஸ்டாபிஜுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டு பிளிஸ்சிஸ், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    டு பிளிஸ்சிஸின் அதிரடி ஆட்டத்தால் ஆர்சிபி முதல் 3 ஓவரில் 33 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது ஓவரிலேயே சிஎஸ்கே சுழற்பந்து வீச்சை அறிமுகம் செய்தது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. தீக்சனா இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    5-வது ஓவரை முஸ்டாபிஜுர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டு பிளிஸ்சிஸ் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதே ஓவரில் ரஜத் படிதாரை டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    அடுத்த ஓவரில் தீபக் சாஹர் மேக்ஸ்வெல்லை முதல் பந்திலேயே வெளியேற்றினார். இதனால் ஆர்சிபி 6 ஓவரில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த 3 ஓவரில் (முதல் 3 ஓவருக்குப் பிறகு) 9 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கிடையே விராட் கோலி 8 பந்தில் 6 ரன் எடுத்து டி20 கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார்.

    விராட் கோலி மெல்லமெல்ல அதிரடிக்கு திரும்பிய நிலையில் முஸ்டாபிஜுர் ரஹ்மான் பந்தில் 20 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிந்தார். ரகானே பவுண்டரி லைனில் பந்தை பிடித்து ரச்சின் ரவிந்திராவிடம் தூக்கிப் போட்டார். அவர் கேட்ச் பிடித்தார். அதே ஓவரில கேமரூன் க்ரீன் க்ளீன் போல்டானார். அவர் 22 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்.

    இதனால் ஆர்சிபி 11.4 ஓவரில் 78 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது திணறியது.

    6-வது விக்கெட்டுக்கு அனுஜ் ராவத் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் ஆர்சிபி 12 ஓவரில் 100 ரன்களை கடந்தது.

    18-வது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். இந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸ் அனுஜ் ராவத் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் ஆர்சிபி-க்கு 25 ரன்கள் கிடைத்தது. ஆர்சிபி 18.1 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    முஸ்டாபிஜுர் ரஹ்மான்

    19-வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் ஆர்சிபி-க்கு 16 ரன்கள் கிடைத்தது. ஆர்சிபி 19 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்திருந்தது.

    கடைசி ஓவரை தேஷ்பாண்டே வீசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைக்க ஆர்சிபி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சிஎஸ்கே-வுக்கு 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. சிஎஸ்கே அணி சார்பில் முஸ்டாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    அனுஜ் ராவத்- தினேஷ் கார்த்திக் ஜோடி 96 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 21 ரன்னில் அவுட்டானார்.

    சென்னை:

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்று முதலில் ஆடிய ஆர்சிபி அணியின் விராட் கோலி 21 ரன்னில் அவுட்டானார்.

    இந்நிலையில், விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் 12,000 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

    மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,000 ரன்கள் அடித்த 2-வது வீரர் விராட் கோலி ஆவார். சிஎஸ்கே அணிக்கெதிராக விராட் கோலி 32 போட்டிகளில் 1006 ரன்கள் எடுத்துள்ளார்.

    • முஸ்டாபிஜுர் ரஹ்மான் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • மேக்ஸ்வெல் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார்.

    ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டு பிளிஸ்சிஸ், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    விராட் கோலி நிதானமாக விளையாட டு பிளிஸ்சிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டு பிளிஸ்சிஸ் முதல் ஓவரில் ஒரு பவுண்டரியும், 2-வது பந்தில் 2 பவுண்டரியும் அடித்தார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில் டு பிளிஸ்சிஸ் 4 பவுண்டரிகள் அடித்தார். இதனால் ஆர்சிபி 3 ஓவரில் 33 ரன்கள் எடுத்தது.

    இதனால் 4-வது ஓவரிலேயே சிஎஸ்கே சுழற்பந்து வீச்சை அறிமுகம் செய்தது. தீக்சனா 4-வது ஓவரில் 4 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    5-வது ஓவரை முஸ்டாபிஜுர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டு பிளிஸ்சிஸ் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதே ஓவரில் ரஜ் படிதாரை டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    அடுத்த ஓவரில் தீபக் சாஹர் மேக்ஸ்வெல்லை முதல் பந்திலேயே வெளியேற்றினார். இதனால் ஆர்சிபி 6 ஓவரில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 3 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கிடையே விராட் கோலி 8 பந்தில் 6 ரன் எடுத்து டி20 கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார்.

    ஆர்சிபி 9 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.

    • சிஎஸ்கே அணிக்கு முதன்முறையாக கேப்டனாக களம் இறங்குகிறார் ருதுராஜ் கெய்க்வாட்.
    • சென்னை அணியில் சமீர் ரிஸ்வி அறிமுகம் ஆகியுள்ளார்.

    ஐபிஎல் 2024 சீசன் தொடங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டிக்கான டாஸ் 7.40 மணிக்கு சுண்டப்பட்டது. ஆர்சிபி அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சமீர் ரிஸ்வி அறிமுகம் ஆகியுள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விவரம்:-

    1. டு பிளிஸ்சிஸ், 2. விராட் கோலி, 3. ரஜத் படிதார், 4. மேக்ஸ்வெல், 5. கேமரூன் க்ரீன், 6. தினேஷ் கார்த்திக், 7. அனுஜ் ராவத், 8. கரண் சர்மா, 9 அல்சாரி ஜோசப், 10. மயங்க் தாகர், 11. முகமது சிராஜ்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-

    1. ருதுராஜ் கெய்க்வாட், 2. ரச்சின் ரவீந்திரா, 3. ரகானே, 4. டேரில் மிட்செல், 5. ஜடேஜா, 6. சமீர் ரிஸ்வி, 7. எம்.எஸ். டோனி, 8. தீபக் சாஹர், 9. மஹீஷ் தீக்சனா, 10. முஸ்தாபிஜுர் ரஹ்மான், 11. துஷார் தேஷ்பாண்டே.

    • IPL 2024 Records Virat Kohli Can Break During Royal Challengers Bengaluru vs Chennai Super Kings Clash
    • அரைசதம் அடித்தால் 100 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆர்சிபி அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி களம் இறங்குகிறார்.

    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்கான விளையாடவில்லை.

    இந்த நிலையில் அவரது ரசிகர்கள், விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க இருக்கிறார்கள். இந்த நிலையில் விராட் கோலி இன்றைய போட்டியில் பல சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.

    விராட் கோலி ஒட்டுமொத்தமாக டி20 போட்டியில் 11,994 ரன்கள் அடித்துள்ளார். இன்றைய போட்டியில் 6 ரன்கள் அடித்தால் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

    35 வயதான விராட் கோலி இன்றைய போட்டியில் அரைசதம் அடித்தால் 100 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார். கிறிஸ் கெய்ல் 110 முறை, டேவிட் வார்னர் 109 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

    இன்றைய போட்டியில் 15 ரன்கள் அடித்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான 1,000 ரன்கள் அடித்த 2-வது வீரர் ஆவார். சிஎஸ்கே அணிக்கெதிராக விராட் கோலி 31 போட்டிகளில் விளையாடி 985 ரன்கள் அடித்துள்ளார்.

    விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 237 போட்டிகளில் 222 இன்னிங்சில் 7,263 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 37.24 ஆகும். ஸ்டிரைக் ரேட் 130.02 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 113. ஏழு சதங்கள் விளாசியுள்ளார். 50 அரைசதங்கள் அடித்துள்ளார்.

    • ஐ.பி.எல். டிக்கெட்டுகள் கள்ள மார்க்கெட்டில் ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் விலை போகிறது.
    • ரோகித் என்பவர் இந்த போலி இணையதளம் மூலம் 5 டிக்கெட்டுகளை பெற்று ரூ.8,250-யை இழந்துள்ளார்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (22-ந்தேதி) தொடங்குகிறது.

    இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டன. டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700 ஆகவும், அதிகபட்சமாக ரூ.7,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    ஆன்லைனில் டிக்கெட் வாங்க முடியாமல் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இணையதளம் முடங்கியதால் அவர்கள் டிக்கெட் இல்லாமல் தவித்தனர்.

    இந்த நிலையில் போலியான இணைய தளத்தில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. போலி ஐ.பி.எல். டிக்கெட்டுகளால் ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மோசடியாளர்கள் ஐ.பி.எல். டிக்கெட்டுக்கான அதிகாரப்பூர்வ இணைய தளத்தைபோலவே போலியான இணைய தளத்தை உருவாக்கி உள்ளனர். புதிய கணக்கை பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட்டுகளை முன்கூட்டியே வழங்குவது போல் போலியான அந்த தளம் வடிவமைத்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த விலையை விட (ரூ.1,700) குறைவான விலையாக ரூ.1,650 விலையில் போலியான டிக்கெட்டுகள் பட்டியலிடப்பட்டு இருந்தன.

    சென்னை-பெங்களூரு போட்டிக்காக 'ஏ' மேல் தளம் கேலரியில் போலி இணையதளம் டிக்கெட் வழங்கியது. அப்படி ஒரு கேலரியே அங்கு இல்லை. இந்த கேலரி இடிக்கப்பட்டு புதிதாக நவீனமயமாக்கப்பட்டு கே.எம்.கே. ஸ்டாண்டாக அமைக்கப்பட்டுள்ளது.

    பதிவை முடித்த பிறகு குறிப்பிட்ட யு.பி.ஐ. ஐ.டி.யில் பணம் செலுத்தி பரிவர்த்தனை விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்கும் வழக்கத்தில் இருந்து வேறுபட்ட கட்டண செயல்முறையின் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது.

    கியூஆர்.குறியீட்டு மின் டிக்கெட்டை உடனடியாக வழங்கும் முறையான இணைய தளம்போல் இல்லாமல் 12 மணி நேரத்துக்கு முன்பு மட்டுமே பதிவு செய்யப்பட்ட முகவரியில் டிக்கெட்டுகள் இமெயில் செய்யப்படும் என்று இந்த மோசடி இணையதளம் அறிவித்து இருந்தது.

    ரோகித் என்பவர் இந்த போலி இணையதளம் மூலம் 5 டிக்கெட்டுகளை பெற்று ரூ.8,250-யை இழந்துள்ளார். தொலைபேசியில் வந்த தொடர்பை தொடர்ந்து அவர் ஏமாற்றப்பட்டுள்ளார். இறுதி பரிவர்த்தனை பக்கங்களை பார்த்த பிறகுதான் அவருக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

    ஐ.பி.எல். டிக்கெட்டுகள் கள்ள மார்க்கெட்டில் ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் விலை போகிறது.

    இதனால் குறைந்த விலையில் டிக்கெட் கிடைக்கிறது என்று சிலர் போலி இணையதளம் மூலம் பணத்தை இழந்து ஏமாந்துள்ளனர்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ்- ஆர்சிபி அணிகள் சென்னையில் வருகிற 22-ந்தேதி மோதுகின்றன.
    • சென்னை போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு.

    "ஐபிஎல் 2024 சீசன்" டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியதும் இரு அணி ரசிகர்களும் டிக்கெட்டுகளை புக் செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் டிக்கெட் விற்பனைக்கான இணைய தளம் முடங்கியது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஒரு பக்கம் முடங்கியதாக ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்த நிலையில், மறுபக்கம் விக்கெட்டுகள் உடனடியாக தீர்ந்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

    இதற்கிடையில் Paytminsider இணைய தளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டை புக் செய்வதற்கான இடமே காண்பிக்கப்படவில்லை.

    24-ந்தேதி குஜராத்- மும்பை இந்தயின்ஸ், 27-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ், மார்ச் 23-ந்தேதி பஞ்சாப்- டெல்லி போட்டிக்கான ஸ்லாட்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது.

    அதேபோல் சிஎஸ்கே இணைய தளமும் முடங்கியதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

    குறைந்தபட்ச டிக்கெட் விலை 1,700 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலை 7,500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் 2019-க்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 23-ந்தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை - பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #IPL2019
    ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 2019 சீசன் மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின் ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடப்படும். போட்டிகள் அனைத்தும் இந்தியாவில்தான் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.



    இந்நிலையில் முதல் இரண்டு வாரத்திற்கான போட்டி அட்டவணை இன்று மதியம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் முதல் போட்டி மார்ச் 23-ந்தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    ×