search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSKvRCB"

    • இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • கோலி - டு பிளிசிஸ் சிறப்பான துவக்கம் தந்தனர்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. கோலி - டு பிளிசிஸ் சிறப்பான துவக்கம் தந்தனர். அதிரடியாக விளையாடிய கோலி 47 ரங்களில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுமுனையில் நிதானமாக ஆட்டத்தை துவங்கி பின்னர் அதிரடியாக விளையாடிய டு பிளிசிஸ் 54 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார்.

    பின்னர் இணைந்த படிதார் - க்ரீன் ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சித்தடித்தனர். அதிரடியாக விளையாடிய படிதார் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 14 ரென்னும் மேக்ஸ்வெல் 16 ரென்னும் அடித்து ஆட்டமிழந்தனர். கிறீன் 38 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது.

    சென்னை தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், துஷார் தேஷ்பாண்டே, சாட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.

    சென்னை அணிக்கு 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு அணி. இப்போட்டியில் 201 ரன்கள் அடித்தால் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டாலும் கூட சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    • இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 3 ஓவர் முடிவில் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் கோலி 9 பந்துகளில் 19 ரன்களும், டு பிளிசிஸ் 9 பந்துகளில் 12 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் மழை நின்றதால் மீண்டும் போட்டி தொடங்கியுள்ளது. ஓவர்கள் குறைக்கப்படமால் 20 ஓவர் போட்டியாகவே மீண்டும் போட்டி தொடங்கியுள்ளது.

    இப்போட்டியில் பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 3 ஓவர் முடிவில் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் கோலி 9 பந்துகளில் 19 ரன்களும், டு பிளிசிஸ் 9 பந்துகளில் 12 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியை காண பெண்கள் பிரீமியர் லீக் கோப்பை வென்ற RCB மகளிர் அணியை சேர்ந்த ஸ்மிரிதி மந்தனா, ஷ்ரேயாங்கா பாட்டீல் உள்ளிட்ட பல வீராங்கனைகள் வருகை தந்துள்ளனர்.

    பெங்களூரு அணியின் ஜெர்ஸியில் இருக்கும் புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

    • போட்டி மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.
    • இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. 3 ஓவர் முடிவில் 31 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் கோலி 9 பந்துகளில் 19 ரன்களும், டு பிளிசிஸ் 9 பந்துகளில் 12 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

    இப்போட்டியில் பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • போட்டி மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.

    இந்நிலையில், பெங்களூரு அணியின் ஜெர்ஸியில் இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிவராஜ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இன்னைக்கு ஜெயிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

    • டோனி இந்தியாவின் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் பெரிய அளவில் வந்து பார்ப்பார்கள்.
    • நானும் டோனியும் இந்திய அணிக்காக நிறைய முறை பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளோம்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

    இந்த போட்டி குறித்து விராட் கோலி பேசியுள்ளார். அதில், "டோனி இந்தியாவின் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் பெரிய அளவில் வந்து பார்ப்பார்கள். நானும் அவரும் திரும்பவும் விளையாடுவோமா? ஒருவேளை இதுதான் கடைசிப் போட்டியா? எது நடக்கும் என்று தெரியாது.

    நானும் டோனியும் இந்திய அணிக்காக நிறைய முறை பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளோம். நாங்கள் இருவரும் ஒரே போட்டியில் விளையாடுவது ரசிகர்களுக்கு சிறப்பான சந்தர்ப்பம்" என்று தெரிவித்துள்ளார்.

    42 வயதாகும் டோனி இந்த ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெற போகிறார் என்பதைத்தான் விராட் கோலி சூசகமாக சொல்கிறாரோ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90% வாய்ப்பு
    • மழையால் போட்டி ரத்தானால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இதற்கிடையே, பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்சிபி, சிஎஸ்கே இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்களும் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

    இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உள்ள கேண்டீனில் வழங்கப்பட்ட உணவினால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டதாக 23 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து விரிவான நடத்த நடத்த வேண்டுமென்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கேன்டீனில் உள்ள உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்றும் 14 நாட்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சின்னசாமி மைதானத்தில் உள்ள கேண்டீனில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாக பல புகார்கள் வந்ததாகவும், அதனால் தான் போட்டிக்கு முன்பே உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • மழையால் போட்டி ரத்தானால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
    • ஆர்சிபி வெற்றி பெற்றால் ரன்ரேட்டில் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை பெறும்.

    இந்தியாவின் அனைத்து இடங்களிலும் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தென்இந்தியாவின் பல இடங்களில மழை பெய்து வருகிறது. கோடை மழை மக்களை குளிர்வித்து வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் மழை பெய்து வருகிறது.

    தற்போது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஒருபக்கம் மழை குளிர்வித்து வரும் நிலையில், மறுபக்கம் கிரிக்கெட் ரசிகர்கள் போட்டிகள் பாதிக்கப்படுமோ என கவலைப்படுகின்றனர்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    4-வது அணியாக முன்னேறுவதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஆர்சிபி அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு அணிகளும் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஆனால் பெங்களூருவில் மழை அச்சுறுத்தி வருகிறது. ஒருவேளை இன்று மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஆர்சிபி வெளியேறிவிடும்.

    மழை பெய்தால் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய ஆபத்து. ஒருவேளை நன்றாக மழை பெய்து ஓய்ந்து விட்டால் உடனடியாக மழைநீரை மைதானத்தில் இருந்து வெளியேற்றி போட்டியை நடத்தி விடுவோம் என மைதான பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அது எப்படி நடக்கும் என்பதற்கான விளக்க வீடியோவையும் வெளியிட்டனர்.

    ஆனால், தொடர்ந்து மழை பெய்தால் ஏதும் செய்ய முடியாது. இதனால் இன்று இரவு 7.30 மணி முதல் 11.30 மணி வரை சுமார் 4 மணி நேரம் மழை பெய்யவில்லை என்றால் போட்டி நடத்தப்பட்டு விடும்.

    ஆனால் மாலை வரை பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்பில்லை. இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் தெரிவித்துள்ளனர்.

    வருண பகவான் வழிவிட்டால் போட்டியும் பரபரப்பாக இருக்கும். ரசிகர்களும் உற்சாகம் அடைவார்கள். ஒட்டுமொத்தமாக இன்று மழையை பொறுத்து சிஎஸ்கே- ஆர்சிபி-யின் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பு இறுதி செய்யப்படும்.

    • மார்ச் 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது
    • மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது

    இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அன்றைய தினம் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

    டோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கினார். இப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

    இதனையடுத்து, மார்ச் 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. இதனால் சென்னை அணி வீரர்கள் சென்னையில் ஊர் சுற்றி பொழுது போக்கினர்.

    இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் கேப்டானான எம்.எஸ்.டோனி நேற்று இரவு மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்து ரசித்திருக்கிறார். பந்துவீச்சாளர் தீபக் சஹார் உடன் சென்று சென்னை சத்யம் திரையரங்கில் அவர் இப்படத்தை கண்டுகளித்துள்ளார். அப்போது படம் முடிந்து வெளியே வந்த டோனியை பார்த்ததும் ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ஐம்பது கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் தமிழில் பல முன்னணி ஹீரோக்கள் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை பார்த்து பாராட்டிய நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை திரையில் பார்த்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரச்சின் ரவீந்திரா 15 பந்தில் 37 ரன்கள் விளாசினார்.
    • ஷிவம் துபே 27 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழகாமல் இருந்தார்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து 173 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் அனுஜ் ராவத் 25 பந்தில் 48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 26 பந்தில் 38 ரன்களும் அடித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முஸ்டாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார் ருதுராஜ் கெய்க்வாட். மறுமுனையில் ரவீந்திரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அணியின் ஸ்கோர் 4 ஓவரில் 38 ரன்கள் இருக்கும்போது ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரவீந்திரா உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். சென்னை அணி 5.3 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது. அணியின் ஸ்கோர் 71 ரன்னாக இருக்கும்போது 7-வது ஓவரின் கடைசி பந்தில் ரவீந்திரா 15 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    ரகானே தனது பங்கிற்கு 19 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். டேரில் மிட்செல் 18 பந்தில் 2 சிக்சருடன் 22 ரன்கள் அடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்தது.

    ரச்சின் ரவீந்திரா

    கடைசி ஐந்து ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட்டது. துபே உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். 16-வது ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. 17-வது ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 3 ஓவரில் 18 ரன்களே தேவைப்பட்டது. 18-வது ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது.

    இதனால் கடைசி 2 ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 18.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

    ஷிவம் துபே 34 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • அனுஜ் ராவத் 25 பந்தில் 48 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன்அவுட் ஆனார்.
    • முஸ்டாபிஜுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டு பிளிஸ்சிஸ், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    டு பிளிஸ்சிஸின் அதிரடி ஆட்டத்தால் ஆர்சிபி முதல் 3 ஓவரில் 33 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது ஓவரிலேயே சிஎஸ்கே சுழற்பந்து வீச்சை அறிமுகம் செய்தது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. தீக்சனா இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    5-வது ஓவரை முஸ்டாபிஜுர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டு பிளிஸ்சிஸ் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதே ஓவரில் ரஜத் படிதாரை டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    அடுத்த ஓவரில் தீபக் சாஹர் மேக்ஸ்வெல்லை முதல் பந்திலேயே வெளியேற்றினார். இதனால் ஆர்சிபி 6 ஓவரில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த 3 ஓவரில் (முதல் 3 ஓவருக்குப் பிறகு) 9 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கிடையே விராட் கோலி 8 பந்தில் 6 ரன் எடுத்து டி20 கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார்.

    விராட் கோலி மெல்லமெல்ல அதிரடிக்கு திரும்பிய நிலையில் முஸ்டாபிஜுர் ரஹ்மான் பந்தில் 20 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிந்தார். ரகானே பவுண்டரி லைனில் பந்தை பிடித்து ரச்சின் ரவிந்திராவிடம் தூக்கிப் போட்டார். அவர் கேட்ச் பிடித்தார். அதே ஓவரில கேமரூன் க்ரீன் க்ளீன் போல்டானார். அவர் 22 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்.

    இதனால் ஆர்சிபி 11.4 ஓவரில் 78 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது திணறியது.

    6-வது விக்கெட்டுக்கு அனுஜ் ராவத் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் ஆர்சிபி 12 ஓவரில் 100 ரன்களை கடந்தது.

    18-வது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். இந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸ் அனுஜ் ராவத் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் ஆர்சிபி-க்கு 25 ரன்கள் கிடைத்தது. ஆர்சிபி 18.1 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    முஸ்டாபிஜுர் ரஹ்மான்

    19-வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் ஆர்சிபி-க்கு 16 ரன்கள் கிடைத்தது. ஆர்சிபி 19 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்திருந்தது.

    கடைசி ஓவரை தேஷ்பாண்டே வீசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைக்க ஆர்சிபி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சிஎஸ்கே-வுக்கு 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. சிஎஸ்கே அணி சார்பில் முஸ்டாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    அனுஜ் ராவத்- தினேஷ் கார்த்திக் ஜோடி 96 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 21 ரன்னில் அவுட்டானார்.

    சென்னை:

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்று முதலில் ஆடிய ஆர்சிபி அணியின் விராட் கோலி 21 ரன்னில் அவுட்டானார்.

    இந்நிலையில், விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் 12,000 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

    மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,000 ரன்கள் அடித்த 2-வது வீரர் விராட் கோலி ஆவார். சிஎஸ்கே அணிக்கெதிராக விராட் கோலி 32 போட்டிகளில் 1006 ரன்கள் எடுத்துள்ளார்.

    ×