search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "online fraud"

    • லிங்க் திறப்பதன் மூலம் உங்கள் மொபைல் போன் ஹேக் செய்யப்படலாம்.
    • மூத்த குடிமக்கள் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    திருப்பதி:

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக, 'அயோத்தியின் நேரடி புகைப்படங்கள்' வீடியோ இருப்பதாகக் கூறி, ஆன்லைனில் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது.

    இது ஐதராபாத் குறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதில் "ஜனவரி 22-ந் தேதி 'அயோத்தியின் நேரடிப் புகைப்படங்கள்' அல்லது அது போன்ற உள்ளடக்கம் கொண்ட பல லிங்க் மொபைல் சாதனங்களில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.


    இதுபோன்ற இணைப்புகளை நீங்கள் திறக்காமல் இருப்பது மிகவும் அவசியம்.

    லிங்க் திறப்பதன் மூலம் உங்கள் மொபைல் போன் ஹேக் செய்யப்படலாம் மற்றும் உங்கள் வங்கிக் கணக்குகள் கொள்ளையடிக்கப்படலாம்.

    மூத்த குடிமக்கள் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • சங்ககிரியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார்.
    • ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது இவரது வாட்ஸ் அப்புக்கு கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி பகுதி நேர வேலை குறித்து விளம்பரம் வந்தது.

    அதில் தெரிவிக்கப்பட்டிருந்த எண்களை டெலிகிராம் மூலம் அந்த வாலிபர் தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசிய நபர் ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என கூறினார். அதை நம்பிய அவர் மர்மநபர் அனுப்பிய யு.பி.ஐ.-ஐ.டி.க்களில் பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து 9 லட்சத்து 33 ஆயிரத்து 710 ரூபாயை அனுப்பினார்.

    பணம் சென்றடைந்த நிலையில் மர்ம நபர் தொடர்பை துண்டித்து விட்டார். பல முறை முயற்சி செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அந்த வாலிபர் அனுப்பிய வங்கி கணக்கு எண்களை வைத்து பணம் யாரிடம் சென்றுள்ளது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பொதுமக்கள் உஷாராக இருக்க சைபர் கிரைம் எச்சரிக்கை
    • ரூ.9 3/4 லட்சம் பணத்தை அனுப்பிய பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையை சேர்ந்த 5 பேர் ஆன்லைனில் ரூ.13 லட்சம் பணத்தை இழந்தனர்.

    புதுவையை சேர்ந்த பெண் இணையத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து குறைந்த விலையில் உலர் பழங்கள் (டிரை ப்ரூட்ஸ்) கிடைக்கிறது என்பதை நம்பி ரூ.18 ஆயிரத்துக்கு ஆர்டர் செய்து கடந்த 15 நாட்களாக பொருள் வரவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

    உங்களுடைய கிரெடிட் கார்டின் கடன் வாங்கும் தொகையை அதிகரித்து தருகிறோம் என்று பேசி வந்த எண்ணுக்கு ஓ.டி.பி.யை சொன்னவுடன் கிரெடிட் கார்டில் ரூ.27 ஆயிரம் பொருளை இணை மோசடிக்காரர்கள் வாங்கி அவரை ஏமாற்றி உள்ளனர்.

    மற்றொருவர் மார்க்கெட் மதிப்பில் ரூ. 4 லட்சம் விலை உடைய ஹைட்ராலிக் லிப்டிங் மிஷினை ரூ.1 3/4 லட்சத்துக்கு தருகிறோம் என்று இணையவழியில் வந்த விளம்பரத்தை நம்பி பணத்தை செலுத்தி 10 நாட்களாக பொருள் மற்றும் எந்த தகவலும் இல்லை என்று புகார் அளித்துள்ளார்.

    புதுவையைச் சேர்ந்த 2 பேர் இணைய வழியில் முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு 20 சதவீதம் உங்களுக்கு வருமானம் தருகிறோம் என்று சொன்னதை நம்பி பல்வேறு வங்கி கணக்கில் ரூ.9 3/4 லட்சம் பணத்தை அனுப்பிய பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அனுப்பிய பணத்தையும் எடுக்க முடியவில்லை என்று புகார் கொடுத்துள்ளனர்.

    இந்த புகார் சம்பந்தமாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி மற்றும் கார்த்திகேயன் விசாரணை செய்து வருகின்றனர்.

    இது பற்றி சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-

    செல்போனில் வரும் இணைய வழியில் வருகின்ற எந்த விளம்பரத்தையும் நம்பி பணத்தை செலுத்த வேண்டாம். வேலைவாய்ப்பிற்கு பணம் செலுத்த வேண்டாம். முக்கியமாக சந்தை மதிப்பில் இருக்கின்ற பொருட்களை சந்தை மதிப்பை விட மிகவும் விலை குறைவாக கொடுப்பதாக வருகின்ற விளம்பரங்களை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.

    பல்வேறு முக்கிய நிறுவனங்களின் பெயர்களில் படிப்பு வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு ரூ.100 ரூ.500 செலுத்தி எங்களுடைய அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அனுப்புங்கள் என்றெல்லாம் நிறைய விளம்பரங்கள் இணைய வழியில் வந்து கொண்டிருக்கிறது. அது போல் எதையும் நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்த 29 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் நீங்கள் மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.

    அதற்கு அவர் நான் எந்த பார்சலும் அனுப்பவில்லை என தெரிவித்தார். மறுமுனையில் பேசியவர் நாங்கள் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி, உங்கள் பெயரில் தான் பார்சல் சென்றுள்ளது. அதனால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.27 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டினார்.

    இதனால் பயந்து போன சாப்ட்வேர் என்ஜினீயர் 3 தவணைகளாக ரூ.8 லட்சத்து 29 ஆயிரத்து 348-ஐ அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ஆன்லைனில் அனுப்பினார். தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியது.

    இதனால் சந்தேகம் அடைந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது உத்தரபிரதேசத்தை சேர்ந்த மோசடி கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி நூதனம்
    • வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர், தொரப்பாடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆகிய இருவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த தகவலில் `ஆன்லைனில்' பகுதி நேர வேலையில் பங்கேற்று அதிகம் சம்பாதிக்க முடியும் என கூறியுள்ளனர்.

    ஆர்வம் உள்ளவர்கள் அவர்கள் அனுப்பிய இணைப்பில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறி இருந்தனர்.

    அதனை உண்மை என நம்பிய 2 பேரும் தங்களது முழு விவரத்தையும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

    மேலும் அவர்களுக்காக தனி கணக்கு தொடங்கி அதில் முதலீடு செய்து அவர்கள் அளித்த வேலையை செய்து முடித்துள்ளனர்.

    அவர்கள் கொடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்ததால் அவர்கள் முதலீடு செய்த பணத்துக்கு கூடுதல் தொகையும் சேர்ந்துள்ளது.

    அதன்படி சேவூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழிய தனது வங்கி கணக்கிலிருந்து கடந்த மாதம் மொத்தம் ரூ.13.64 லட்சமும், தனியார் பள்ளி ஆசிரியரும் தனது வங்கி கணக்கில் இருந்து கடந்த 30, 31- ந் தேதிகளில் ரூ.6.15 லட்சமும் அனுப்பியுள்ளனர்.

    அவர்கள் கூறியபடி முதலீடு செய்த பணத்துக்கு கூடுதல் தொகை கிடைத்ததும் அதை தங்களது வங்கி கணக்கு இருவரும் மாற்ற முயன்றனர்.

    ஆனால் அந்தப் பணத்தை மாற்ற முடியாததால் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் இருவரும் வேலூர் மாவட்ட சைர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார்.
    • பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மூலகுளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியத்திடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடிக்காரர்கள் கூறினர்.

    இதனை நம்பி அவர்களின் வங்கி கணக்கில் ரூ.9 லட்சத்து 13 ஆயிரத்து 274 செலுத்தினார். அதன்பின் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இதேபோல லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார். அவருக்கு பணம் திரும்பி வரவில்லை.

    வாணரப்பேட்டையை சேர்ந்த பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார். நெல்லித்தோப்பு ரமேஷ் ஆன்லைன் வீடியோவை பார்த்து லைக் செய்தால் பணம் கிடைக்கும் என கூறியதை நம்பி ரூ.1.3/4 லட்சம் செலுத்தி ஏமாந்தார்.

    ஏனாம் பிராந்தியம் தீபக்குமார் ஆன்லைன் முதலீடு ஆசை வார்த்தையை நம்பி ரூ.2 ¾ லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். முத்தியால்பேட்டை பிரபாகரன் பான்கார்டு புதுப்பித்தல் என நம்பி வங்கி தகவலை தெரிவித்ததால் ரூ.24 ஆயிரத்து 986 இழந்தார்.

    இவர்கள் உட்பட கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவை முழுவதும் 19 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதவிர புதுவை நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என நம்பி ரூ.5.72 லட்சம் முதலீடு செய்தார். இந்த நிறுவனத்தில் 40-க்கும் மேற்பட்டேர் ரூ.2 கோடி வரை செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஓட்டல், மால் போன்றவை தொடர்பாக ரேட்டிங் கொடுத்தால் கமிஷன் வழங்கப்படும் என மெசேஜ் வந்தது.
    • சதீஷ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை இருகூர் தீபம் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 31). இவர் பகுதி நேர வேலை தேடி வந்தார். சதீஷின் வாடஸ் அப்பிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஓட்டல், மால் போன்றவை தொடர்பாக ரேட்டிங் கொடுத்தால் கமிஷன் வழங்கப்படும்.

    இதனை பகுதி நேரமாக அதிகம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில் இலவச டாஸ்க் என்ற பெயரில் ரூ. 150 கமிஷன் பெற்றார். பின்னர் ரூ.1000 செலுத்தி கமிஷனாக ரூ.1300 ரூபாயும், பின்னர் ரூ 5 ஆயிரம் கட்டி ரூ.6500 பெற்றார்.

    இதை தொடர்ந்து சதீசை தொடர்பு கொண்ட ஒரு நபர் டாஸ்க்கில் அதிக முதலீடு செய்யுமாறு கேட்டு கொண்டார்.

    பல்வேறு தவணைகளில் சதீஷ் ரூ.14.45 லட்சம் செலுத்தினார். அதற்கு பின்னர் இவர் முதலீடு செய்த தொகையும் கிடைக்கவில்லை. கமிஷனும் வழங்கப்படவில்லை.

    இவரை தொடர்பு கொண்டு பேசிய நபரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமித்சர்மா அனுப்பிய கியூ.ஆர்.கோடை பூர்ண சந்திரராவ் ஸ்கேன் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகிறார்கள்.

    பெங்களூரு :

    பெங்களூரு விஜயநகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்ண சந்திரராவ் (வயது 41). என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பூர்ண சந்திரராவ் வீட்டில் ஒரு பழைய குளிர்பதன பெட்டி (பிரிட்ஜ்) இருந்தது. அதனை விற்று விட்டு புதிதாக வாங்க முடிவு செய்தார். இதையடுத்து, தனது வீட்டில் உள்ள அந்த குளிர்பதன பெட்டியை புகைப்படம் எடுத்து, அது விற்பனைக்கு இருப்பதாக கூறி ஆன்லைன் நிறுவனமான 'ஓ.எல்.எக்ஸ்.' என்ற இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார்.

    இந்த நிலையில், பூர்ண சந்திரராவை தொடர்பு கொண்டு ஒருநபர் பேசினார். அப்போது அவர் தனது பெயரை அமித் சர்மா என்று கூறிக் கொண்டார். மேலும் தான் ஒரு ராணுவ வீரர் என்றும், உங்களது குளிர்பதன பெட்டியை வாங்க தான் முடிவு செய்திருப்பதாகவும் பூர்ண சந்திரராவிடம் அமித் சர்மா கூறினார். இதனை அவரும் நம்பினார்.

    மேலும் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் அதிக பணத்தை பரிமாற்றம் செய்ய முடியாது, தான் அனுப்பும் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து உங்களது வங்கி கணக்கு தகவல்களை தெரிவித்தால், அதன் மூலமாகவே பணம் அனுப்புவதாக கூறினார். இதையடுத்து, அமித்சர்மா அனுப்பிய கியூ.ஆர்.கோடை பூர்ண சந்திரராவ் ஸ்கேன் செய்தார்.

    அப்போது அவரது கணக்கில் இருந்த ரூ.99 ஆயிரத்தையும் எடுத்து மர்மநபர் மோசடி செய்து விட்டார். இதனால் பூர்ண சந்திரராவ் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகிறார்கள்.

    • பிரபு (வயது 31). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலில், ஆன்லைனில் வேலை தருவதாக கூறப்பட்டு இருந்தது.
    • குறுந்தகவல் வந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி நாகப்பன் மெயின் ரோடு புதுதெரு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் பிரபு (வயது 31). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலில், ஆன்லைனில் வேலை தருவதாக கூறப்பட்டு இருந்தது.

    அதை உண்மை என நம்பிய பிரபு, குறுந்தகவலில் கொடுக்கப்பட்ட லிங்கில் சென்று பார்த்தபோது, சில நிபந்தனைகளை பணம் கட்டி நிறைவேற்றினால் உடனடியாக வேலை தருவதாக கூறினர்.

    இதையடுத்து பிரபு, மேற்கண்ட நபர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.2,01959 செலுத்துள்ளார். ஆனால் அவருக்கு எந்த ஒரு வேலையும் தராததால் சந்தேகம் அடைந்த பிரபு, மேற்கண்ட குறுந்தகவல் வந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்த பிரபு, இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்த நகையை அடகு வைத்து ஏமாந்த அவலம்
    • பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    வேலூர்:

    வேலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு வீட்டிலிருந்தே வேலை தருவதாக கூறி ஆன்லைனில் விளம்பரம் வந்தது.

    அதனை வாலிபர் பின் தொடர்ந்தார். அப்போது மர்ம நபர்கள் செல்போனுக்கு ஒரே லிங்க் அனுப்பினர்.

    அதில் அதிக பொருட்கள் மற்றும் ஓட்டல்களை காட்டி இதில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என தெரிவித்தனர். முதலில் 100 ரூபாய் 150 ரூபாய் என வாலிபர் அந்த லிங்கில் முதலீடு செய்தார்.

    அதில் அவருக்கு இரண்டு முதல் 3 மடங்கு லாபம் கிடைத்ததாக கணக்கு காட்டியது.

    அதிக பணம் கிடைக்கும் என்று ஆசையில் தொடர்ந்து வாலிபர் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் ஆன்லைனில் முதலீடு செய்து கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்த பணம் தீர்ந்து போனது.

    இதனால் வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து பணத்தை கொண்டு வந்து ஆன்லைனில் முதலீடு செய்தார். மேலும் வங்கியில் கடன் வாங்கியும் அவர் பணம் கட்டியுள்ளார். ரூ.32 லட்சம் வரை வாலிபர் பணத்தை கட்டிய பிறகு அதனை எடுக்க முயன்றார்.

    ஆனால் முடியவில்லை. ஆன்லைன் முதலீடுகளை முழுவதாக முடித்தால்தான் பணத்தை எடுக்க முடியும் என அதில் தெரிவித்தனர்.

    அப்போதுதான் வாலிபர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இது குறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா மற்றும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் வரும் வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தி பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் போட்டோவை மார்பிங் செய்ததை அறிந்த மோகனசுந்தரி அதிர்ச்சியில் மன உளைச்சலுக்கு ஆளானார்.
    • வெங்கடாசலம் நம்பியூர் போலீசில் மாயமான மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்துள்ளார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் இருகலூரை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (42). இவரது மனைவி மோகன சுந்தரி (39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    நம்பியூர் அரசு போக்குவரத்துக்கு கழக கிளையில் வெங்கடாசலம் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனசுந்தரி ஆன்லைன் செயலி மூலமாக கடன் பெற்றிருந்தார்.

    இந்த நிலையில் ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் மோகனசுந்தரியின் செல்போனை ஹேக் செய்து அதில் இருந்த அனைத்து போன் நம்பர்களையும் எடுத்து அனைவருக்கும் அவரது போட்டோவை மார்பிங் செய்து அனுப்பி உள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனசுந்தரி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக குழந்தைகளிடம் கூறிவிட்டு சென்ற மோகனசுந்தரி அதன் பின் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதையடுத்து வெங்கடாசலம் நம்பியூர் போலீசில் மாயமான மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மோகன சுந்தரியை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அவ்வப்போது மிரட்டி பணம், விலை உயர்ந்த பொருட்களைப் பெற்றுள்ளார்.
    • டொனால்டு அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிடம் புகார் செய்தார்.

    புதுடெல்லி :

    அமெரிக்காவின் பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருப்பவர் டொனால்டு (பெயர் மாற்றித்தரப்பட்டுள்ளது.).

    இவர் இந்தியாவில் உள்ள ரோஷி என்ற பெண்ணுடன் (பெயர் மாற்றித்தரப்பட்டுள்ளது) 'பேஸ்புக்' மூலம் தொடர்பு கொண்டு அறிமுகமானார்.

    இருவரிடையே நட்பு மலர்ந்தது. அந்த நட்பு, அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்கிறவரை வளர்ந்தது. இவர்கள் அடிக்கடி 'வீடியோ சாட்' மூலம் ஆபாசமாக பேசிக்கொள்வதும், ஆபாசமாக தோன்றுவதும் தொடர்ந்துள்ளது.

    இதைத் தகவல் தொழில்நுட்ப வசதியால் மோப்பம் பிடித்த டெல்லி அசோலா பகுதியை சேர்ந்த ராகுல் குமார் என்பவர் பதிவு செய்தார். அதைத் தனக்கு சாதகமாக அவர் பயன்படுத்த முடிவு செய்தார்.

    இது தொடர்பாக அவர் அமெரிக்க பேராசிரியர் டொனால்டுடன் தொடர்பு கொண்டார். " நீங்கள் அந்தப் பெண்ணுடன் ஆபாசமாகப்பேசியது, நடந்து கொண்டது தொடர்பான அனைத்தையும் நான் பதிவு செய்து வைத்துள்ளேன்.

    நீங்கள் எனக்கு இந்தத் தொகையை பேபால் கணக்கின் (ஜி பே போன்றது) வழியாக அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பாவிட்டால் சமூக ஊடகங்களில் உங்கள் லீலைகள் அடங்கிய வீடியோ காட்சிகளை வெளியிட்டு விடுவேன்" என இ-மெயில் வாயிலாக மிரட்டி உள்ளார்.

    இப்படி அவ்வப்போது மிரட்டி பணம், விலை உயர்ந்த பொருட்களைப் பெற்றுள்ளார். 48 ஆயிரம் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.39 லட்சம்) இப்படி மிரட்டியே ராகுல்குமார் கறந்துள்ளார்.

    ஆனாலும் அவர் பேராசிரியர் டொனால்டுவை மிரட்டுவதை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் 'பொறுத்தது போதும், பொங்கியெழு' என்ற நிலைக்கு பேராசிரியர் டொனால்டு போனார்.

    அவர் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிடம் (எப்.பி.ஐ.), இந்தியர் ஒருவரால் தான் மிரட்டி பணம் பறிக்கப்படும் பிரச்சினை பற்றி புகார் செய்தார். அந்த அமைப்பினர், புகாரை டெல்லி சி.பி.ஐ.யின் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து ராகுல் குமார் வீடடில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தினர். முக்கிய தடயங்களை கைப்பற்றினர். மேலும் ராகுல் குமாரை கைது செய்தனர்.

    அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி டெல்லி ரவுஸ் அவினியு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×