என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆன்லைனில் வேலை தருவதாக வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி
- பிரபு (வயது 31). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலில், ஆன்லைனில் வேலை தருவதாக கூறப்பட்டு இருந்தது.
- குறுந்தகவல் வந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி நாகப்பன் மெயின் ரோடு புதுதெரு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் பிரபு (வயது 31). இவரது செல்போனுக்கு வந்த குறுந்தகவலில், ஆன்லைனில் வேலை தருவதாக கூறப்பட்டு இருந்தது.
அதை உண்மை என நம்பிய பிரபு, குறுந்தகவலில் கொடுக்கப்பட்ட லிங்கில் சென்று பார்த்தபோது, சில நிபந்தனைகளை பணம் கட்டி நிறைவேற்றினால் உடனடியாக வேலை தருவதாக கூறினர்.
இதையடுத்து பிரபு, மேற்கண்ட நபர்கள் கூறிய வங்கி கணக்கில் ரூ.2,01959 செலுத்துள்ளார். ஆனால் அவருக்கு எந்த ஒரு வேலையும் தராததால் சந்தேகம் அடைந்த பிரபு, மேற்கண்ட குறுந்தகவல் வந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது அது போலியானது என்பது தெரியவந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்த பிரபு, இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்