search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Office"

    • துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்த ஒரு லேப்டாப், ஒரு கேமிராவை மர்ம நபர்கள் திருடி உள்ளனர்.
    • சூரம்பட்டி போலீசார் திருட்டு நடந்த அலுவலகங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு பெருந்துறை சாலையில் கலெக்டர் அலு வலகம் அருகே தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு தமிழக அரசின் விதை சான்று மட்டும் அங்கக சான்று விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்த ஒரு லேப்டாப், ஒரு கேமிராவை மர்ம நபர்கள் திருடி உள்ளனர்.

    பின்னர் தனி நபரின் அலுவலகத்தில் புகுந்து ஒரு லேப்டாப் மற்றும் பணம் ரூ.9000 மர்ம நபர்கள் திருடி உள்ளனர். அருகில் இருந்த பைனான்ஸ் நிறுவனத்தில் திருட முயற்சித்துள்ளனர்.

    ஆனால் பணம் பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சூரம்பட்டி போலீசார் திருட்டு நடந்த அலுவலகங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    • வரவு செலவு கணக்கில் பல குறைபாடுகள் இருப்பதால் தணிக்கை முடிந்த பிறகு நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்குவதாக கூறினார்.
    • விரத்தியடைந்த சோபித்குமார் அலுவலகம் முன்பு தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு நகரை சேர்ந்தவர் சோபித் குமார்( 62). இவர் அரும்பார்த்தபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழியராக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர். இவர் பணியாற்றிய காலத்தில் வரவு செலவில் சில முரண்பாடுகள் இருந்ததால் ஆடிட் செய்வதற்காக இவரது சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனால் விவசாய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மேலாண் இயக்குனர் அய்யப்பனை அடிக்கடி சந்தித்து ஓய்வூதிய பலன்கள் வழங்குமாறு கேட்டு வந்தார். வழக்கம் போல் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள கான்பெட் அலுவலகத்தில் இயக்குனர் அய்யப்பனை சந்தித்து முறையிட்டார்.

    அப்போது அவர் வரவு செலவு கணக்கில் பல குறைபாடுகள் இருப்பதால் தணிக்கை முடிந்த பிறகு நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்குவதாக கூறினார். தற்காலிகமாக ரூ.10 ஆயிரம் வழங்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.

    இதனால் விரத்தியடைந்த சோபித்குமார் அலுவலகம் முன்பு தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்தார். உடலில் பற்றிய தீயுடன் அங்குமிங்கும் ஓடி கார் பார்க்கிங் அருகே மயங்கி விந்தார். இதனை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

    உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஜிப்மரில் அனுமதித்தனர். சோபித் குமாருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தற்கொலைக்கு முயன்ற சோபித்குமாருக்கு மாலதி (59) என்ற மனைவியும், மகன் குழல்மாலன், ப்ரித்தி என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் தீக்குளிக்கும் முன்பு மனைவியிடம் செல்போனில் பேசி தன்னை மன்னிக்குமாறு கூறியுள்ளார்.

    நேற்று முன்தினம் புதுவை காலாப்பட்டு போலீஸ்நிலையத்தில் கலைச் செல்வி என்ற பெண் தீக்குளித்து இறந்தார். அந்த சம்பவம் அடங்குவதற்குள் அரசு அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர் தீக்குளித்த சம்பவம் புதுவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    • கள்ளச்சாராயம் கடத்தலில் பரபரப்பு தகவல்
    • ரசாயன தொழிற்சாலையில் 1200 லிட்டர் மெத்தனால் வாங்கிய ஏழுமலை 600 லிட்டரை மட்டும் வில்லியனூருக்கு கொண்டு வந்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம், செங்கல் பட்டில் விஷ சாராயம் குடித்து 23 பேர் இறந்துள்ளனர்.

     இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி புதுச்சேரியை சேர்ந்த பர்கத்துல்லா என்ற ராஜா , ஏழுமலை சென்னையை சேர்ந்த இளையநம்பி உள்பட 13 பேரை கைது செய்துள்ளனர். கைதான ஏழுமலை மெத்தனாலை அரசு அலுவலகம் அருகே பதுக்கி விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வில்லியனூர் தட்டாஞ்சாவடியில் வீட்டின் அருகே ஏழுமலை கொட்டகை ஒன்றை அமைத்துள்ளார். அங்கு சோப் ஆயில் தயாரிப்பதாக கூறி சாராயம் தயாரிக்க பயன்படும் மெத்தனாலை சென்னை உள்ளிட்ட ரசாயன தொழிற்சாலையில் இருந்து கடத்தி வந்து இங்கு பதுக்கி வைத்துள்ளார்.

     வில்லியனூர் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள கொம்யூன் அலுவலகம் அருகே பரசுராமபுரம் என்ற பகுதியில் கடை வாடகைக்கு எடுத்து அங்கு சோப் ஆயில், தண்ணீர்கேன் விற்பனை செய்வதாக விளம்பர பலகை வைத்துள்ளார்.

    அவர் எப்போது வருவார் எப்போது போவார் என்பது பக்கத்தில் கடை வைத்திருப் பவர்களுக்கு தெரியாது. திடீரென லோடு வேனில் வந்து கேனில் ஏதோ ஒரு சரக்கு இறங்கும் அது என்னவென்று தெரியாது என்ன அக்கம் பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் கூறினர்.

    இந்தக் கடையில் தான் முக்கிய சாராய வியாபாரிகள் டீல் பேசி செல்வார்களாம். கடந்த 11-ம் தேதி சென்னை மதுரவாயலில் உள்ள இளையநம்பி ரசாயன தொழிற்சாலையில் 1200 லிட்டர் மெத்தனால் வாங்கிய ஏழுமலை 600 லிட்டரை மட்டும் வில்லியனூருக்கு கொண்டு வந்துள்ளார்.

    இந்த 600 லிட்டரில் 15 லிட்டர் மெத்தனாலை மரக்காணம் மற்றும் செங்கல்பட்டுக்கு பர்கத்துல்லாவின் டிரைவர் மூலம் அனுப்பி உள்ளார்.

    ஏற்கனவே ஏழுமலை போலீசில் அளித்த தகவலில், கொரோனா காலகட்டத்தில் வாங்கி வைத்திருந்த மெத்தனாலையும் சேர்த்து மரக்காணம், செங்கல்பட்டு பகுதிக்கு விற்றதாக தெரிவித்தார்.

     இந்நிலையில் மரக்காணம் செங்கல்பட்டு பகுதியில் இவர் கொடுத்த மெத்தனாலை சாராயத்தில் கலந்ததால் அது விஷ சாராயமாக மாறி உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வில்லியனூரில் பதுக்கி வைத்திருந்த மெத்தனாலை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துள்ளார். விழுப்புரம் தனிப்படை போலீசார் சென்னை மதுரவாயலில் இருந்த 1200 லிட்டர் மெத்தனாலையும் புதுச்சேரியில் ஏழுமலை பதுக்கி வைத்திருந்த மெத்தனாலையும் பறிமுதல் செய்துள்ளனர்.

     தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விரைவில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் வில்லியனூர் பகுதியில் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

    • பணம் மற்றும் தங்க கட்டிகளை அங்கு மறைத்து வைத்தது யார்? என தெரியவில்லை.
    • பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யோஜனா பவன் என்ற அரசு அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு அரசுதுறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு அலுவலக அறையில் பணம் மற்றும் தங்ககட்டிகள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது அங்கு அலமாரியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த பையினை திறந்து சோதனை மேற்கொண்டனர்.

    அதில் கட்டுக்கட்டாக 2 கோடியே 31 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 1 கிலோ தங்கக்கட்டிகள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர், அந்த பணம் மற்றும் தங்ககட்டிகளை பறி முதல் செய்தனர். அந்த பணம் மற்றும் தங்க கட்டிகளை அங்கு மறைத்து வைத்தது யார்? என தெரியவில்லை.

    அது லஞ்சப்பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தர விடப்பட்டு உள்ளது. அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் இது சம்பந்தமாக 7 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கணக்காளராக மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
    • நோட்டீஸ் அனுப்பியது முதல் மகேஸ்வரி பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக மேலாளராக ராதா (வயது 47) என்பவர் பணியாற்றி வருகின்றார்.

    அலுவலக கணக்காளராக ராமலிங்கபுரத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த அலுவலகத்திற்கு சங்கரன் கோவிலில் உள்ள ஒரு வங்கியில் 2 நிரந்தர வைப்புத்தொகை கணக்கும், தமிழ்நாடு கிராம வங்கியில் நிர்வாக செலவுகளுக்காக பணம் எடுக்கும் வகையில் ஒரு வங்கி கணக்கும் இருந்துள்ளது.

    இந்நிலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக அதிகாரிகள் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உள்ள கணக்குகளை ஆய்வு செய்துள்ளனர்.

    அதில் தமிழ்நாடு கிராம வங்கியில் கணக்கில் இருந்து ரூ. 18 லட்சத்து 70 ஆயிரம் கணக்கில் வராதது தெரியவந்தது. மேலும் அனைத்து நிரந்தர வைப்பு நிதிக்கான ஆதாரங்களையும் முறையாக சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இது குறித்து விளக்கம் அளிக்க கணக்காளர் மகேஸ்வரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நோட்டீஸ் அனுப்பியது முதல் அவர் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அலுவலக மேலாளர் ராதா, சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அலுவலக கணக்காளரை தேடி வருகின்றனர்.

    • கிணறு தோண்ட லஞ்சம் கேட்டதால் விவசாயி ஆத்திரமடைந்தார்.
    • இதனால் அவர் ரூ.2 லட்சம் பணத்தை அரசு அலுவலகம் முன் வீசி எறிந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் சம்பாஜி நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் கிணறு தோண்ட அனுமதி கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்துள்ளார். இதற்கு அந்த அரசு அதிகாரி ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயி 2 லட்சம் ரூபாய் பணத்தை மாலையாகக் கட்டி தனது கழுத்தில் அணிந்து கொண்டு அரசு அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து கோஷமிட்டபடி தன்னிடம் இருந்த பணத்தை அந்த அலுவலக வளாகத்தின் முன்பு அவர் வீசி எறிந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பொருத்தமான நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி :

    நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டதை தொடர்ந்து அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டது. தற்போது தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதால் வருகிற 8-ந்தேதி முதல் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யுமுன் அனைத்து ஊழியர்களும் கையை சானிடைசர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இதற்காக பயோமெட்ரிக் கருவிக்கு அருகே சானிடைசர் பாட்டில்கள் இருக்க வேண்டும்.

    வருகை பதிவு செய்யும் ஊழியர்கள் 6 அடி இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். வருகை பதிவு செய்யும் நேரம் உள்பட அலுவலகத்தில் எந்நேரமும் ஊழியர்கள் முககவசம் அணிய வேண்டும். கூட்டத்தை தவிர்க்க தேவைப்பட்டால் கூடுதல் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பது போன்ற வழிகாட்டுதல்களை அரசு வழங்கியுள்ளது.

    மேலும் அலுவலகங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பொருத்தமான நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் 15-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந்தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் விரிப்புகள், உணவு பொருட் களை எடுத்து செல்ல பயன்படுத்தும் பிளாஸ் டிக் கைப்பைகள், தட்டுகள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவற்றை முற்றிலும் பயன்படுத்த கூடாது.

    எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து துறை அரசு அலுவலர்களும் கடைபிடிப்பதுடன் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை அனைத்து அலுவலகங்களிலும் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பை, காகிதப்பை, பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகிற 15-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
    ×