என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரீசார்ஜ்"

    • அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம்.
    • டிசம்பர் மாதத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவின் தனியார் தகவல் தொலைதொடர்பு நிறுவனங்களாக ஜியோ, ஏர்டெல், வி.ஐ. உள்ளன. இந்தநிலையில் அடுத்த மாதமான டிசம்பாில் அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களுடைய செல்போன் சேவைக்கான ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கடந்தாண்டு ஜூலையில் விலை உயர்த்தப்பட்டிருந்தநிலையில் 10 முதல் 12 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம்.



    மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த காரணம்: 5G சேவைகளுக்கான பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால், நிறுவனங்கள் தங்கள் வருவாயை ஈடுகட்ட இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    அமல்படுத்தப்படும் தேதி: டிசம்பர் மாதத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வு குறித்து கவலை தெரிவித்த நிலையில், இது அவர்களுக்கு மேலும் ஒரு சுமையாக இருக்கும். 

    • ஜியோ ரூ.209 திட்டம் 22 நாட்கள் சேவை செல்லுபடியாகும், தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது.
    • ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுட் திட்டத்துடன் வழங்கப்படும் கூடுதல் நன்மைகள்.

    வோடபோன் ஐடியா (Vi) அதன் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றான ரூ.249 திட்டத்தை நீக்கியுள்ளது. ரூ.249 திட்டம் இப்போது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. ரூ.249 திட்டம் முன்பு 1 ஜிபி தினசரி டேட்டாவுடன் வந்தது. இந்தத் திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உடன் வருகிறது.

    பிரபல ரீசார்ஜ் திட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும், வோடபோன் ஐடியா இன்னும் ரூ.239 திட்டத்தை வழங்குகிறது, இது இன்னும் ஒரு நல்ல சலுகையாகும். ரூ.239 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்து. இத்துடன் ஜியோஹாட்ஸ்டார் மொபைல், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வருகிறது.

    1.5 ஜிபி அல்லது அதற்கும் மேற்பட்ட தினசரி டேட்டாவை வழங்கும் அதிக விலை திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்ய பயனர்களை தூண்டுவதற்காக வோடபோன் ஐடியா (Vi) இந்த திட்டத்தை நீக்கியிருக்கலாம். இதற்கு பிறகு, மலிவு விலை வரம்பை (ரூ.300க்குக் கீழ்) பார்க்கும்போது, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை 1 ஜிபி தினசரி டேட்டா திட்டங்களை பெரும்பாலும் நீக்கியுள்ளன. ஜியோ இன்னும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.209 திட்டத்தை வழங்குகிறது.

    ஜியோ ரூ.209 திட்டம் 22 நாட்கள் சேவை செல்லுபடியாகும், தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுட் திட்டத்துடன் வழங்கப்படும் கூடுதல் நன்மைகள். நிர்ணயிக்கப்பட்ட டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது.

    மலிவு விலை பேக்குகள் பிரிவின் கீழ் ஜியோ வழங்கும் மேலும் இரண்டு திட்டங்கள் உள்ளன, அவை ரூ.189 மற்றும் ரூ.799 விலையில் உள்ளன. இந்த இரண்டு திட்டங்களும் அன்லிமிடெட் கால்ஸ் வழங்குகின்றன. ஆனால் ரூ.189 திட்டத்துடன், பயனர்கள் 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். ரூ.799 திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. மேலும் இது 84 நாட்கள் சேவை செல்லுபடியை வழங்குகிறது.

    • வாய்ஸ் கால்' மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    • பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) TELIKAAMநிறுவனங்களின் கட்டண வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது.

    அதன்படி இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 'வாய்ஸ் கால்' [டாக்-டைம்] மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    சமீப காலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படாத சேவைகளை ரீசார்ஜ் பேக் உடன் இணைத்து அதிக நிதி சுமையை உருவாக்குகின்றன.

    அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை மட்டுமே வேண்டும் வாடிக்கையாளரிடம் கூடுதல் சேவைகள் திணிக்கப்படுகின்றன. தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    எனவே அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றிற்கு மட்டுமே சிறப்பு பிளான்களை கட்டாயமாக்குவது, இன்டர்நெட் தேவையில்லாத வாடிக்கையாளர்களின் தேவையற்ற சுமையை தீர்க்கும் என டிராய் தெரிவித்துள்ளது.  

    • வாய்ஸ் கால்' மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
    • பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) டெலிகாம் நிறுவனங்களின் கட்டண வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது.

    அதன்படி இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 'வாய்ஸ் கால்' [டாக்-டைம்] மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.

    அதன்படி, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு தனித்தனியே ரீசார்ஜ் செய்யும் திட்டங்களை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.

    தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி (SMS) சேவைகளை மட்டுமே வேண்டும் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.

    ஜியோவில் 458 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 1,000 எஸ்எம்எஸ் சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    முன்னதாக, இதே திட்டத்தின் விலை 479 ரூபாயாக இருந்தது. அதில், 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 6ஜிபி டேட்டா மற்றும் 1,000 எஸ்எம்எஸ் சேவைகள் அடங்கும். இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட இந்த திட்டம் ரூ. 21 குறைவானதாகும். 

    ×