என் மலர்
நீங்கள் தேடியது "வோடபோன்"
- ஜியோ ரூ.209 திட்டம் 22 நாட்கள் சேவை செல்லுபடியாகும், தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது.
- ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுட் திட்டத்துடன் வழங்கப்படும் கூடுதல் நன்மைகள்.
வோடபோன் ஐடியா (Vi) அதன் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றான ரூ.249 திட்டத்தை நீக்கியுள்ளது. ரூ.249 திட்டம் இப்போது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. ரூ.249 திட்டம் முன்பு 1 ஜிபி தினசரி டேட்டாவுடன் வந்தது. இந்தத் திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உடன் வருகிறது.
பிரபல ரீசார்ஜ் திட்டம் நீக்கப்பட்டுள்ள போதிலும், வோடபோன் ஐடியா இன்னும் ரூ.239 திட்டத்தை வழங்குகிறது, இது இன்னும் ஒரு நல்ல சலுகையாகும். ரூ.239 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்து. இத்துடன் ஜியோஹாட்ஸ்டார் மொபைல், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வருகிறது.
1.5 ஜிபி அல்லது அதற்கும் மேற்பட்ட தினசரி டேட்டாவை வழங்கும் அதிக விலை திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்ய பயனர்களை தூண்டுவதற்காக வோடபோன் ஐடியா (Vi) இந்த திட்டத்தை நீக்கியிருக்கலாம். இதற்கு பிறகு, மலிவு விலை வரம்பை (ரூ.300க்குக் கீழ்) பார்க்கும்போது, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை 1 ஜிபி தினசரி டேட்டா திட்டங்களை பெரும்பாலும் நீக்கியுள்ளன. ஜியோ இன்னும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.209 திட்டத்தை வழங்குகிறது.
ஜியோ ரூ.209 திட்டம் 22 நாட்கள் சேவை செல்லுபடியாகும், தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுட் திட்டத்துடன் வழங்கப்படும் கூடுதல் நன்மைகள். நிர்ணயிக்கப்பட்ட டேட்டாவைப் பயன்படுத்திய பிறகு வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது.
மலிவு விலை பேக்குகள் பிரிவின் கீழ் ஜியோ வழங்கும் மேலும் இரண்டு திட்டங்கள் உள்ளன, அவை ரூ.189 மற்றும் ரூ.799 விலையில் உள்ளன. இந்த இரண்டு திட்டங்களும் அன்லிமிடெட் கால்ஸ் வழங்குகின்றன. ஆனால் ரூ.189 திட்டத்துடன், பயனர்கள் 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். ரூ.799 திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. மேலும் இது 84 நாட்கள் சேவை செல்லுபடியை வழங்குகிறது.
- இந்த டேட்டா 28 நாட்களுக்கு 300 ஜிபி என வரையறுக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுக்க பல நகரங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் 5ஜி டேட்டா கனெக்டிவிட்டி பெற முடியும்.
வோடபோன் ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல புதுமையான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களில், பயனர்களுக்கு அமேசான் பிரைமை வழங்கும் சில திட்டங்களும் உள்ளன. இந்த இரண்டு திட்டங்களும் ரூ.696 மற்றும் ரூ.996 விலையில் கிடைக்கின்றன. பயனர்களுக்கு அமேசான் பிரைம் சந்தா வழங்கும் இரண்டு திட்டங்கள் மட்டுமே உள்ளன.
இரு ரீசார்ஜ் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்குகின்றன. இந்த டேட்டா 28 நாட்களுக்கு 300 ஜிபி என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் நன்மைகளை தொடர்ந்து பாரப்போம்.
வோடபோன் ஐடியா நான்-ஸ்டாப் ஹீரோ திட்டங்கள்:
வோடபோன் ஐடியா ரூ.696 திட்டம் அன்லிமிட்டெட் இன்கமிங், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் டேட்டா (300 ஜிபி/28 நாட்கள்) ஆகியவற்றை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.
இந்த திட்டத்தில் 56 நாட்களுக்கான அமேசான் பிரைம் லைட் சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் HD (720p) தரத்தில் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். மேலும் அமேசான் தளத்தில் ஒரு நாள் இலவச டெலிவரி சேவைகளை பெறலாம். 5ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர், நாடு முழுக்க பல நகரங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் 5ஜி டேட்டா கனெக்டிவிட்டி பெற முடியும்.
வோடபோன் ஐடியா ரூ.996 திட்டம் அன்லிமிட்டெட் இன்கமிங், தினமும் 100 எஸ்எம்எஸ், மற்றும் அன்லிமிட்டெட் டேட்டா (300 ஜிபி/28 நாட்கள்) ஆகியவற்றுடன் பயனர்களுக்கு வருகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் 90 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா வழங்கப்படுகிறது.
- 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- 2019-இல் கட்டண உயர்வு 20 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்தது.
புதுடெல்லி:
ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தையும் உயர்த்துகிறது. 12 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கட்டணம் உயர்கிறது. ஜூலை 3-ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், 5ஜி சேவையில் அளவற்ற இலவச 5ஜி சேவைகளை பெறுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, முதல்முறையாக செல்போன் சேவை கட்டணங்களை ஜியோ உயர்த்துகிறது. 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து பாரத் ஏர்டெல் நிறுவனம் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் 20 சதவீதம் வரை தங்களின் கட்டணத்தை உயர்த்தின. அதற்கு முன்பு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிசம்பர் 2019-ல் கட்டணங்களை உயர்த்தின. 2016-ல் ஜியோ தனது சேவையை அறிமுகப்படுத்திய பிறகு முதல் முறை உயர்த்தியது.
2019-இல் கட்டண உயர்வு 20 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்தது. அதே நேரத்தில் 2021 உயர்வு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நான்கு காலாண்டுகளில் ஏர்டெல் ஒரு பயனரிடம் இருந்து பெறும் லாபத்தில் ரூ. 30 மற்றும் 36 உயர்வை வழங்குகிறது.
கட்டண உயர்வால் வரும் காலாண்டுகளில் தொழில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.






