search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rumour"

    • 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா?
    • பொதுமக்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை.

    10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லாதா? என்ற சந்தேகம் இன்னும் பல இடங்களில் நீடித்து வருகிறது.

    10 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் கிழிந்தும் கசங்கியும் காணப்படுகிறது. இதனை தவிர்க்க ரிசர்வ் வங்கி கடந்த 2009-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து 2017-ம் ஆண்டு வரை 14 முறை 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது.

    ஆனால் 10 ரூபாய் நாணயம் வெளியானதில் இருந்தே இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் நாணயம் செல்லாது என்ற வதந்தி வேகமாக பரவியது. இது எங்கிருந்து எப்படி பரவியது என்பது தெரியவில்லை.

    பொதுவாக காய்கறி வியாபாரிகள், மளிகை வியாபாரிகள், சிறு ஓட்டல் வியாபாரிகள், சில்லறை காசுகள் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகினாலும் 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் மட்டும் வாங்க மாட்டோம் என கூறினர்.

    கிழிந்து போன கசங்கிய 10 ரூபாய் நோட்டு கூட வாங்கும் பொதுமக்கள் நாணயங்களை வாங்குவதில்லை.

    பெரிய வணிக வளாகங்களில் கூட 10 ரூபாய் நாணயங்கள் குறித்து தவறான எண்ணம் கொண்டுள்ளனர். இதன் காரணமாக 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் குறைந்து வருகின்றன. அதனை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் தான் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

    10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும். அவற்றை மறுக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியது . நாணயங்களை வாங்க மறுத்தால் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கையும் செய்தது. ஆனாலும் அது பல இடங்களில் எடுபடவில்லை.

    தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரிசர்வ் வங்கி ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் தற்போது 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் வர தொடங்கியுள்ளன.

    ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதிகளில் இன்னும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி தொடர்ந்து பரவி வருகிறது. கிழிந்த ரூபாய் நோட்டுகளுடன் 10 ரூபாய் நாணயங்களையும் பொதுமக்கள் வங்கிகளில் கொடுத்து அதற்கு மாற்றாக ரூபாய் நோட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.

    இதனால் விஜயவாடாவில் உள்ள ஒரு வங்கியில் மட்டும் 12 லட்சம் ரூபாய் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இல்லாமல் வீணாக குவிந்து கிடக்கின்றன.

    இதே போல பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் 10 ரூபாய் நாணயங்கள் வீணாகக் கிடக்கின்றன.

    இது ரிசர்வ் வங்கிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நாணயங்கள் தொடர்பாக நாடு முழுவதும் பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வியாபாரிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கக்கூடாது என மீண்டும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தமிழ் சினிமாவின் 90 காலக்கட்டங்களில் உச்சத்தில் இருந்தவர் நடிகை மீனா.
    • கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது கணவனான வித்யாசாகர் உடல்நலக் குறைவால் காலமானார்.

    தமிழ் சினிமாவின் 90 காலக்கட்டங்களில் உச்சத்தில் இருந்தவர் நடிகை மீனா. அனைத்து பிரபல நட்சத்திர நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு , மலையாளம் இந்தி மற்றும் கன்னடம் என பல மொழிப் படங்களிலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

    இவர் நடித்த எஜமான், வீரா, நாட்டாமை, நாடோடி மன்னன், முத்து, அவ்வை சண்முகி என பல திரைப்படங்கள் மெகா ஹிட்டானது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது கணவனான வித்யாசாகர் உடல்நலக் குறைவால் காலமானார். இச்சம்பவத்திற்கு பிறகு மீனாவின் இரண்டாம் திருமணத்தைப் பற்றிய வதந்திகள் அதிகமாக பரவி வந்தது. மீனா அவரை திருமணம் செய்துக் கொள்ள போகிறார், இந்த திரைப் பிரபலத்தை திருமணம் செய்துக் கொள்ளப்போகிறார் என செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்கிறது.

    அண்மையில் கூட, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவரின் மகன் ஒருவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஒருவருடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக பேசியது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவியது.

    இந்நிலையில், நடிகை மீனா அவரது எக்ஸ் பக்கத்தில் அவரது புகைப்படத்தை பதிவிட்டு அதில் வதந்திகளை வெறுப்பாளர்கள் தான் உருவாக்குவார்கள், அதனை ஏமாளிகள் பகிர்வர் மற்றும் முட்டாள்கள் அதனை நம்புவர் என பதிவிட்டுள்ளார்.

    இப்பதிவு சமீபத்தில் இவரைப் பற்றிய வதந்திக்கு வாயடைக்கும் விதமாக அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நேற்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஜார்கண்ட் மாநிலம் குமண்டி ரெயில் நிலையம் அருகே ராஞ்சி - சசரம் விரைவு ரெயிலில் தீ பிடித்ததாக பரவிய வதந்தியால் ரெயிலில் இருந்து பலர் தண்டவாளத்தில் குதித்துள்ளனர்.

    அவர்கள் தண்டவாளத்தில் குதித்த சமயம் அவ்வழியே வந்த சரக்கு ரெயிலில் மோதி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், தீ விபத்து பற்றி பரவிய வதந்தி குறித்தும் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் முறையை அமல் படுத்தபடும் என்ற செய்தி பரவிவந்தது
    • திட்டமானது தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் வசூலிக்கபட உள்ளதாக தொடர்ந்து செய்திகள் பரவி வந்தது.

    மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI இனி மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் முறையை அமல் படுத்தபடும் என்ற செய்தி பரவி வந்தது

    இந்த திட்டத்தின் மூலம் நாம் பயன்படுத்தும் மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கான கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது. மேலும் இது ஒரு முறை அல்லது வருடாந்திர கட்டணமாகவும் அல்லது பிரீமியம் எண்களுக்கு ஏலம் விடுவது போன்ற முறைகளாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டும், மேலும் இந்த திட்டமானது தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் வசூலிக்கபட உள்ளதாக தொடர்ந்து செய்திகள் பரவி வந்தது.

    இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் ட்ரை நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,

    பல சிம்கள் மற்றும் தனி சிம்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு TRAI மூலம் கட்டணம் விதிக்கப்படும் என்ற செய்தி தவறானது. இத்தைய ஆதாரமற்ற மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்த மட்டுமே உதவுகிறது. இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.


    • சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
    • பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை- அண்ணாமலை விவாதம் என தகவல்.

    நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தது. ஆனால், தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறவில்லை.

    தோல்வி குறித்து அப்போது பேசிய அண்ணாமலை மற்றும் தமிழிசை கூட்டணி குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்தனர். இதனால், முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடிப்பதாக கூறப்பட்டு வந்தது.

    இதைதொடர்ந்து, விழா மேடைக்கு வந்த முன்னாள் தெலுங்கானா கவர்னரும், தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டிக்கும் வகையில் பேசினார். தமிழிசைக்கும் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தை போர்ரை தவிர்க்கவே கண்டித்ததாகவும் தகவல் பரவியது.

    இந்நிலையில், இன்று தமிழிசையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    சந்திப்பின்போது, பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை- அண்ணாமலை விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே, தமிழிசை- அண்ணாமலை இடையே கருத்து வேறுபாடு என தகவல்கள் பரவி வந்தன. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழிசையை அண்ணாமலை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தனது சந்திப்பு தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில்," இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

    தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசை அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது" என்றார்.

    • நயன்தாராவின் கன்னத்தில் விக்னேஷ் முத்தம் கொடுப்பது,உள்ளிட்ட பல புகைப்படங்களை நயன்தாரா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்
    • இணையத்தில் ரசிகர்கள் 'அழகான ஜோடி" என்று வர்ணிக்க தொடங்கி உள்ளனர்

    நயன்தாரா - விக்னேஷ்சிவன் கடந்த 2022 ஜூன்-9 ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி அக்டோபர் 2022 -ல் வாடகைத் தாய் மூலம் 2 மகன்களை பெற்றுக் கொண்டனர்.

    நயன்தாரா அடிக்கடி தனது கேமராவுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை குறித்த படங்கள், மற்றும் செய்திகளை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.சமீபத்தில் இணையதளத்தில் கணவரை 'அன்பாலோ' செய்தது பற்றி ரசிகர்கள் பலவித வதந்திகள் பரப்பினர்.

    நயன்தாரா- விக்னேஷ் ஜோடி விவாகரத்து வதந்தி பரவிய நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை அனைவருக்கும் தெரிவிப்பதற்காக ஒரு போட்டோவை இணைய தளத்தில் பகிர்ந்தார்.

    இந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவனுடன் இருக்கும் அழகான புகைப்படங்களை நயன்தாரா பகிர்ந்துள்ளார்.வெளி நாட்டில்நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியாக ஒருவரைஒருவர் அன்புடன் பார்ப்பது, நயன்தாராவின் கன்னத்தில் விக்னேஷ் முத்தம் கொடுப்பது,உள்ளிட்ட பல புகைப்படங்களை நயன்தாரா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதில் நயன்தாராஸ்கின்-பிட் பேண்ட்- கருப்பு நிற கோட் அணிந்து உள்ளார். விக்னேஷ் சாதாரண சிவப்பு டி-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட் அணிந்து உள்ளார். இந்த படங்கள் இணைய தளத்தில் வெளியானதன் மூலம் விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு நயன்தாரா பெரிய முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.

    நயன்தாரா- விக்னேஷ் ஜோடி அழகாக மகிழ்ச்சியாக உள்ள படங்களை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் 'அழகான ஜோடி" என்று வர்ணிக்க தொடங்கி உள்ளனர்.தற்போது நயன்தாராவும், விக்னஷும் சவுதி அரேபியாவில் விடுமுறைக்கு சென்று உள்ளனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • மகனை இடுப்பில் வைத்து கொண்டு புன்முறுவலுடன் காணப்படும் அழகான புகைப்படங்களை வெளியிட்டார்
    • நயன்தாரா சிவப்பு இதய 'எமோஜி' அடையாளம் எதுவும் தெரிவிக்கவில்லை

    நயன்தாரா - விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஜூன்-9 ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி அக்டோபர் 2022 -ல் வாடகைத் தாய் மூலம் தங்கள் இரட்டை மகன்களை பெற்றனர். நயன்தாரா அடிக்கடி தனது சினிமாவுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை குறித்த படங்கள் மற்றும் செய்திகளை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

    இந்நிலையில் நேற்று இரவு அதுபோல் இன்ஸ்டாகிராமில் தனது மகனை இடுப்பில் அமரவைத்து கொண்டு மொட்டைமாடி தோட்டத்தில் புன்முறுவலுடன் காணப்படும் அழகான புகைப்படங்களை வெளியிட்டார். தாய்-மகன் இருவரும் தங்கள் மொட்டை மாடியில் செடிகளை கைகளால் தொட்டுக்கொண்டு இருப்பதை காண முடிந்தது.

    அந்த புகைப்படத்தில் நயன்தாரா சிவப்பு இதய 'எமோஜி' அடையாளம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் பலவித கருத்துகளை பதிவு செய்தனர். சமீபத்தில், இணையதளத்தில் கணவரை 'அன்பாலோ' செய்தது பற்றி ரசிகர்கள் பலவித வதந்திகள் பரப்பினர்.இதனிடையே, தனது இன்ஸ்டாகிராமில் U mm..I' m Lost ! என்ற ஒரு ரகசிய குறியீட்டையும் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.

    நயன்தாரா- விக்னேஷ் ஜோடி குறித்து விவாகரத்து வதந்தி பரவிய நிலையில் தற்போது குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை அனைவருக்கும் தெரிவிப்பதற்காக இந்த போட்டோவை நயன்தாரா இணையத்தில் பகிர்ந்துள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • விக்கியும்,நயன்தாரா பிரிகிறார்கள் என ரசிகர்கள் குழப்பம்
    • 2 மகன்களை அன்போடு வளர்ப்பதில் நயன்தாரா தீவிரம்

    நடிகை நயன்தாரா தமிழ்பட உலகின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா 75- வது படமான 'அன்னபூரணி' படத்தில் நடித்து இருந்தார்.

    இந்த படம் நயன்தாராவுக்கு ஏமாற்றம் கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் விக்னேஷ்சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டபின்குடும்பத்துடன் நேரம் செலவிடுவதில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தனது 2 மகன்களை அன்போடு வளர்ப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை நயன்தாரா 'அன்பாலோ' செய்துவிட்டார் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனால் 2 பேரும் பிரிகிறார்கள் என்று கூறப்பட்டது.

    ரசிகர்களிடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் ஒரு 'போஸ்ட்' போட்டிருக்கிறார். அதில் தனது 9 ஸ்கின் நிறுவனத்துக்காக தான் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால், விக்கியும், நயன்தாராவும் பிரிகிறார்கள் என்பது வதந்தியா அல்லது இருவரும் பிரிவது உண்மையா என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

    • விடிய விடிய சோதனை நடத்தினர்.ஆனால் இளம்பெண்களை காரில் கடத்தி செல்லும் எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை.
    • போலீசார் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்ட மா்ம நபரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தனர்.

    திருப்பூா்:

    திருப்பூா் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் அவிநாசி சாலை, அனுப்பர்பாளையம் பகுதியில் காரில் 2 இளம்பெண்களை கடத்திச் செல்வதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவிநாசி சாலையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினா். விடிய விடிய சோதனை நடத்தினர்.ஆனால் இளம்பெண்களை காரில் கடத்தி செல்லும் எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை. இதனால் வதந்தி என தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்ட மா்ம நபரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் பகுதியை காட்டியுள்ளது.

    இதைத்தொடா்ந்து, போலீசார் அங்கு சென்று நடத்திய விசாரணையில், மதுபோதையில் இருந்த ஓட்டல் தொழிலாளி செந்தில்முருகன் (வயது 42) என்பவா் வதந்தி பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரணைக்காக அனுப்பா்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனா். இதன் பின்னா் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த வீண் வதந்திகளை நம்பாதீர்கள் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்
    • வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பெரம்பலூர்,

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இதனால் இத்திட்டத்திற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் குடும்ப அட்டை பதிவு செய்துள்ள ரேஷன் கடை பணியாளர் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்களை வழங்கிடவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்ப பெறவும் சிறப்பு முகாம்கள் நடத்திடவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 282 ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த உகந்ததாக உள்ள சமுதாயக் கூடங்கள், அரசு பள்ளி கட்டிடங்கள், அரங்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கோனேரிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே முகாம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறும்டபோது, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்பாதீர்கள். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயலுசமூக விரோதிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தல்
    • தனியார் ஆக்கிரமிப்பை அகற்றிய விவகாரம் திசைதிருப்பபடுவதாக போலீசார் விளக்கம்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்திற்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் ஆக்கிரமித்ததை தொடர்ந்து, கடந்த 7-ந்தேதி அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதனை திசை திருப்பும் விதமாக போலீசார் குறித்து தவறான பிரசாரங்களை பல்வேறு இந்து இயக்கங்கள் மூலம் சிவனடியார் மீது தாக்குதல் என்று தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சமூக அமைதி மற்றும் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொய் பிரசாரங்களை செய்து வருவதாக தெரியவருகிறது. இது போன்ற பதிவுகளை பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்று மதத்தின் பெயரால் மக்களின் கவனத்தை திசை திருப்பி தங்களது சுயலாபத்திற்காக சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயலும் சமூக விரோதிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அரியலூர் மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.

    ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல்கள் பரவிவந்த நிலையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரஜினி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. #Rajinikanth
    ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த சில மணிநேரங்களாக தகவல்கள் பரவி வந்ததால், ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.



    ரஜினி உடல்நிலை குறித்த இந்த வதந்தி சமூக வலைதளங்களிலும் பரவியதை தொடர்ந்து, இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் தெரிவிக்கையில், ரஜினிகாந்த் நலமாக உள்ளார், ரஜினியின் உடல்நலம் குறித்து வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றார். #Rajinikanth

    ×