search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை மின் நிலையம்"

    • காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை செய்யப்படும்
    • பொதுமக்கள் தொடர்புகொண்டும், சரியான பதில் தரவில்லையென கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் பிள்ளைத் தெருவாசல் பகுதியில், 12 மணி நேரத்திற்கு மேல் மின் தூண்டிப்பு ஏற்பட்டதால், அங்குள்ள துணை மின் நிலையம் முன்பு, பொதுமக்கள் நள்ளிரவில் திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்காலை அடுத்த பிள்ளைத்தெருவாசல் பகுதியில் உள்ள துணை மின் நிலையததில், சில மின் பராமரிப்பு பணி காரணமாக, நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவித்த நிலையில், இரவு 11 மணியாகியும், மின் இணைப்பு தராததால், அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளகினர்.

    தொடர்ந்து, பலமுறை மின்துறைக்கு பொதுமக்கள் தொடர்புகொண்டும், சரியான பதில் தரவில்லையென கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பிள்ளைத்தெருவாசல் துணை மின் நிலையத்தின் முன்பு, திடீரென கூடி, தங்களின் வாக னங்களை சாலையில் நிறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிறிது நேரத்தில் பழுது நீக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட் டதை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பினர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும்.
    • ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே ஆர். எஸ். மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன் 2, பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (16-ந் தேதி) நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார் வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே. கே, நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை அமேடு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இதேபோல் ராமநாதபுரம் துணை மின் நிலை யத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி மற்றும் உயர்மின் தொடர் பராமரிப்பு பணி நடை பெறுவதால் எம்.ஜி. ஆர். நகர், எம்.எஸ்.கே. நகர், திருப்புல்லானி, அம்மன் கோவில், தெற்குதரவை, எல். கருங்குளம்,மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, புத்தனேந்தல், தெற்கு தரவை, பசும்பொன் நகர், கூரியூர், பொக்கனேந்தல், பால்கரை, காட்டூர்னி, பேராவூர், ஏலமனுர், மேல்கோட்டை, மாடக் கோட்டான்,நாகநாதபுரம், இந்திரா நகர், பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.

    ×