என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை மின் நிலையம்"

    • அதிகாரிகளின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்தன.
    • வால்கான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில், அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள், துணை மின் நிலையத்தில் தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ரெவாசா கிராமத்தில், வெள்ளிக்கிழமை இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அதிகாரிகளின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்ததால், ஆத்திரமடைந்த சிலர் துணை மின் நிலைய அலுவலகத்துக்கு சென்றுள்ளனர்.

    அங்கும் எந்த பதிலும் இல்லாததால், அலுவலக மேசைக்கு தீ வைத்து, அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் தளபாடங்களை எரித்து சேதப்படுத்தினர். மேலும் அதிகாரிகளையும் தாக்க முயன்றுள்ளனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. வல்கான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவவோம் என போலீஸ் தெரிவித்தனர்.

    • காற்றும் வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
    • தீ அருகே இருந்த மின்மாற்றிகளுக்கும் பரவியது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து கிராமத்தில் துணை மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து தான் காற்றாலைகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த துணை மின்நிலையத்தில் உள்ள மின்மாற்றி ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்றும் வீசியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அதோடு தீ அருகே இருந்த மின்மாற்றிகளுக்கும் பரவியது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை துணை இயக்குனர் சரவண பெருமாள் உத்தரவின் பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமையில் கங்கைகொண்டான், பாளையங்கோட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு தொடங்கிய தீயை அணைக்கும் பணி மதியம் 12 மணியையும் தாண்டி தொடர்ந்தது.

    இந்த பயங்கர தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை செய்யப்படும்
    • பொதுமக்கள் தொடர்புகொண்டும், சரியான பதில் தரவில்லையென கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் பிள்ளைத் தெருவாசல் பகுதியில், 12 மணி நேரத்திற்கு மேல் மின் தூண்டிப்பு ஏற்பட்டதால், அங்குள்ள துணை மின் நிலையம் முன்பு, பொதுமக்கள் நள்ளிரவில் திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்காலை அடுத்த பிள்ளைத்தெருவாசல் பகுதியில் உள்ள துணை மின் நிலையததில், சில மின் பராமரிப்பு பணி காரணமாக, நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவித்த நிலையில், இரவு 11 மணியாகியும், மின் இணைப்பு தராததால், அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளகினர்.

    தொடர்ந்து, பலமுறை மின்துறைக்கு பொதுமக்கள் தொடர்புகொண்டும், சரியான பதில் தரவில்லையென கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பிள்ளைத்தெருவாசல் துணை மின் நிலையத்தின் முன்பு, திடீரென கூடி, தங்களின் வாக னங்களை சாலையில் நிறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிறிது நேரத்தில் பழுது நீக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட் டதை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பினர்.

    • மின் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
    • மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

    சென்னை:

    சட்ட சபையில் இன்று கேள்வி நேரத்தின் போது மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. மாதவரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மாதவரம் தொகுதியில் 4 துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பளிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    மீதமுள்ள ஒரு துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

    மதுரை மாவட்டம் கப்பலூர் தொழிற்பேட்டையில் மின் நுகர்வு அதிகமாக இருக்கும் காரணத்தினால் துணை மின் நிலையம் மற்றும் மின் மாற்றிகளை மாற்றி அமைக்கப்படுமா என்று உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்கையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 3 துணை மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் 3½ ஆண்டுகளில் 71,145 மின் மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும்.
    • ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே ஆர். எஸ். மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன் 2, பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (16-ந் தேதி) நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார் வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே. கே, நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை அமேடு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இதேபோல் ராமநாதபுரம் துணை மின் நிலை யத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி மற்றும் உயர்மின் தொடர் பராமரிப்பு பணி நடை பெறுவதால் எம்.ஜி. ஆர். நகர், எம்.எஸ்.கே. நகர், திருப்புல்லானி, அம்மன் கோவில், தெற்குதரவை, எல். கருங்குளம்,மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, புத்தனேந்தல், தெற்கு தரவை, பசும்பொன் நகர், கூரியூர், பொக்கனேந்தல், பால்கரை, காட்டூர்னி, பேராவூர், ஏலமனுர், மேல்கோட்டை, மாடக் கோட்டான்,நாகநாதபுரம், இந்திரா நகர், பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மாம்பாடி, புளியம்பட்டி, எல்.எம்.என்.பட்டி பகுதியில் மின்தடை செய்யப்படும்.

    தாராபுரம்:

    மூலனூர் எல்.எம்.என்.பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 29-ந் தேதி (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அன்று காலை 11 மணி முதல் மதியம் 2.00 மணிவரை மூலனூர் எல்.எம்.என். பட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட நந்தப்பாளையம், பாலக்கரை, அக்கரைபாளையம்கோட்டை, மூலனூர், சானார்பாளையம், குருநாதர் கோட்டை, மாம்பாடி, புளியம்பட்டி, எல்.எம்.என்.பட்டி மற்றும் இதுசார்ந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் தெரிவித்துள்ளார்.

    • சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • குழித்துறை மின்விநியோக உதவி செயற் பொறியாளர் தகவல்.

    கன்னியாகுமரி:

    குழித்துறை துணை கோட்டத்திற்குட்பட்ட மார்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை (4-ந் தேதி) மற்றும் செவ்வாய், புதன்கிழமைகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி சாங்கை, கல்லுத்தொட்டி, ஈடன் கார்டன், நாகச்சன்விளை, சீனிவிளை, பாட்டவிளை, பிராணிவிளை, குஞ்சாலுவிளை, தச்சூர்கோ ணம், குழிஞ்ஞான்விளை, மீனச்சல், மேலோட்டுவிளை, செம்மன்காலை, மடத்து விளை, நடப்பாறவிளை, நுள்ளிக்காடு, கண்ணன்புரம், பேயோட்டுகோணம், ஆலம்பாறை, செறக்கோ ணம், கட்டச்சல், சிற்றாற்ற ன்கரை ஆகிய பகுதிகளில் நாளை (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இதே போன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாங்கை, கோட்டகம், பாண்டி யான்விளை, காஞ்சிரகோடு, நரியன்வி ளை, படப்பாறவிளை, இடை விளாகம், கல்நா ட்டி, தலக்கோணம், மங்க லத்துவிளை, மலை க்கோயில், நாகராஜாகோவில், கருந்தூர், பூதப்பிலாவிளை, பணியன்விளை, பனவிளை,

    ஈந்திக்காலை, மலமாரி, குளவிளை, குருவிக்குந்நு, வைகுண்டம், அரகநாடு ஆகிய பகுதிகளுக்கும், புதன்கிழமை (ஜூலை 6) ஆம் தேதி மார்த்தாண்டம் சந்தை, பஸ் நிலையம், ரயில் நிலையம், மதிலகம். வால்குளம் விளவங்கோடு, புலிப்பாறைகாவு, ஈத்தவிளை, பாலவிளை, தேவிநகர். குரூர், தெற்றிவிளை. மழுவன்சேரி, காமராஜ்நகர், தெங்கம்பழஞ்சி, பாஞ்சிவிளை, அதங்கோடு, ஆயவிளை, நாரகத்தன்குழி, குருவில்விளை,

    பாக்கோடு, தெக்கே கோணம், தோலடி, ஆயோட்டுகோணம், மச்சக்கோணம், மாங்காலை, கிலாத்தூர், சிவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குழித்துறை மின்விநியோக உதவி செயற் பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×