search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மின்தடை
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மின்தடை

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும்.
    • ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே ஆர். எஸ். மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன் 2, பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (16-ந் தேதி) நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார் வலசை, சிவன்கோயில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே. கே, நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை அமேடு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இதேபோல் ராமநாதபுரம் துணை மின் நிலை யத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி மற்றும் உயர்மின் தொடர் பராமரிப்பு பணி நடை பெறுவதால் எம்.ஜி. ஆர். நகர், எம்.எஸ்.கே. நகர், திருப்புல்லானி, அம்மன் கோவில், தெற்குதரவை, எல். கருங்குளம்,மஞ்சன மாரியம்மன் கோவில், லாந்தை, புத்தனேந்தல், தெற்கு தரவை, பசும்பொன் நகர், கூரியூர், பொக்கனேந்தல், பால்கரை, காட்டூர்னி, பேராவூர், ஏலமனுர், மேல்கோட்டை, மாடக் கோட்டான்,நாகநாதபுரம், இந்திரா நகர், பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×