search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dismissed"

    • மலைரெயில் பாதையில் 10-க்கும் அதிகமான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
    • மலைரெயில் சேவை ரத்து அறிவிப்பால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி, கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    கடந்த 3-ந் தேதி குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த கனமழைக்கு அடர்லி, ஹில்குரோவ் இடையே 5-க்கும் மேற்ப்பட்ட இடங்களில் மண்சரிவும், மரங்கள் முறிந்ததால் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் கடந்த 8-ந் தேதி மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மீண்டும் ரெயில்சேவை தொடங்கியது. ஆனால் அன்று இரவு கொட்டிய கனமழையால் மீண்டும் மண் சரிவு ஏற்படவே கடந்த 9-ந் தேதி முதல்18-ந் தேதி வரை மீண்டும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் ரத்து செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மலை ெரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டது.

    கடந்த 21-ந் தேதி குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் கன மழை பெய்தது. இதனால் கடந்த 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் குன்னூர் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மலைரெயில் பாதையில் 10க்கும் அதிகமான இடங்களில் மண்சரிவும், பாறைகளும் உருண்டு விழுந்தன.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் டிசம்பர் 7-ந் தேதி வரையும், குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் வருகிற 31-ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மலைரெயில் சேவை ரத்து அறிவிப்பால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
    • சந்திரபாபு நாயுடு தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கேட்டு விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் பலமுறை மனு தாக்கல் செய்யப்பட்டன.

    சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மீது ஆந்திராவில் பைபர் நெட், அங்கல்லு கலவரம், இன்னர் ரிங் ரோடு ஊழல் உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த 3 வழக்குகளிலும் ஜாமீன் வழங்க கோரி சந்திரபாபு நாயுடு ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு ஆந்திரா ஐகோர்ட்டு மற்றும் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இவரது மனுக்கள் மீது இன்று ஒரே நாளில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இன்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சந்திரபாபு நாயுடு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    சந்திரபாபு நாயுடு தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆந்திரா ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணைக்கு வர உள்ளது.

    • ரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்தது மட்டுமின்றி, போலீசார் குறித்த சில ரகசிய தகவல்களை கசிய விட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
    • போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் போலீஸ் சரகத்தில் பணிபுரிந்த சிலர், சுரங்க மாஃபியாவுடன் தொடர்பு வைத்திருந்ததாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் விசாரணை நடத்த அதிகாரி நியமிக்கப்பட்டார்.

    அவர், சுரங்க மாஃபியாவுடன் தொடர்பு வைத்திருந்த போலீசார் பற்றி ரகசிய விசாரணை நடத்தினார். அதில் கோழிக்கோடு ரூரல் பகுதி ஜாய் தாமஸ், கண்ணூர் ரூரல் கோகுலன், கண்ணூர் நகரம் நிசார், கோழிக்கோடு ஷிபின், கண்ணூர் கிராமம் ஷெஜிர், காசர்கோடு ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சுரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

    அவர்களில் ஜாய் தாமஸ், கோகுலன் ஆகிய இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆவார். மற்ற 5 பேரும் சிவில் போலீஸ் அதிகாரிகள் ஆவார். அவர்கள் சுரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்தது மட்டுமின்றி, போலீசார் குறித்த சில ரகசிய தகவல்களை கசிய விட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் அவர்கள் 7 பேரையும் டிஸ்மிஸ் செய்து கண்ணூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. புட்டா விமலாதித்யா உத்தரவிட்டார். கடமை தவறியது, ஒழுக்கமின்மை உள்ளிட்ட காரணங்களால் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுரங்க மாஃபியாவுடன் தொடர்பில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது கேரள மாநில காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பாரதியார் பல்கலைக் கூடத்தின் பொறுப்பு முதல்வர் ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி. விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டவர்.
    • காசாளர் விடுமுறையில் இருக்கும் போது, அவருக்குத் தெரியாமல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் பணத்தை எடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    பாரதியார் பல்கலைக் கூடத்தின் பொறுப்பு முதல்வர் ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி. விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டவர். இவர் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்ட பின் தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பல்கலைக் கூடத்திற்கு 8 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் பெரும் ஊழல், முறைகேடு, விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன.

    முதுகலைப் படிப்பு தொடங்குதாக கூறி ரூ.5 லட்சம் பல்கலைக்கூட வங்கிக் கணக்கில் இருந்து பொறுப்பு முதல்வர் எடுத்துள்ளார். காசாளர் விடுமுறையில் இருக்கும் போது, அவருக்குத் தெரியாமல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் பணத்தை எடுத்துள்ளார். இப்பணம் என்ன ஆனது என்று இன்றுவரை தெரியவில்லை.

    பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரின் விதிமீறல்கள், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் குறித்து அரசுக்கும், உயரதிகாரிகளுக்கும் ஆதா ரங்களுடன் பல மனுக்கள் அனுப்பி உள்ளோம். ஆனால், அம்மனுக்கள் மீது இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர், துறைச் செயலர் இதில் தலையிட்டு, அரசு நிதியை முறைகேடு செய்த பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு சுகுமாரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • 60 வார்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடிக்கு புகார்கள் வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகிறது. இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் மக்கள் அதிகம் நிறைந்த பகுதியாக திருப்பூர் மாநகராட்சி உள்ளது. 60 வார்டுகள் உள்ள நிலையில், 60 வார்டுகளிலும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குப்பைகளை அகற்ற மற்றும் துப்புரவு பணியாளர்களும் தேவைக்கு ஏற்ப நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு என வருகை பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் எந்தெந்த பணிகள் எங்கு நடந்துள்ளது என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை (56). இவர் 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடுகள் செய்து வருவதாக மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடிக்கு புகார்கள் வந்தது. அதன்படி அடிப்படையில் முதற்கட்டாக நடந்த விசாரணையின்படி 2 வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சையை, மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் பிச்சை துப்புரவு பணியாளர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு செய்து வருவதாகவும், வராத பணியாளர்கள் வேலைக்கு வந்ததாக அதில் பதிவிட்டு முறைகேடு செய்ததாகவும் வந்த புகாரின் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிந்த பின்னர் முறைகேடுகளுக்கு ஏற்ப துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார்.

    • அங்காளம்மன் கோவில் முன்புறம் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது.
    • துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் குடி அமர்த்தியுள்ளார்.

    குன்னத்தூர் :

    குன்னத்தூரில் கடந்த 6-ந் தேதி ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்ட வேளாண்மை விற்பனை கூடத்தை திறந்து வைக்க செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கலெக்டர் வினீத் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது குன்னத்தூர் பஸ் நிலையம் அங்காளம்மன் கோவில் முன்புறமும் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது. மதியம் 2 மணிக்கு மேல் தான் குப்பை அகற்றப்பட்டுள்ளது. மேலும் திடக்கழிவு வளாகத்தில் தன்னிச்சையாக தனி நபரை துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் குடி அமர்த்தியுள்ளார்.

    இந்தநிலையில் குன்னத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமாரை தற்காலிகபணியிடை நீக்கம் செய்து செயல் அலுவலர் ராஜா உத்தரவிட்டுள்ளார்.

    ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #RasipuramNurse #CBCID
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் அமுதவள்ளி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே அமுதவள்ளி, ரவிச்சந்திரன், பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா ஆகிய 5 பேரும் கடந்த 6-ந் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  #RasipuramNurse #CBCID
    பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ponmanickavel
    புதுடெல்லி:

    சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து, ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது. பொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிராக போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 66 போலீசார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    பொன்.மாணிக்கவேல் விளம்பர நோக்கில் செயல்பட்டு வருவதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த மனு மீதான வாத பிரதிவாதங்கள் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், காவல்துறை அதிகாரிகளின் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  #SupremeCourt #ponmanickavel 
    பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #SupremeCourt #SterliteCopperPlant
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. பின்னர் அந்த ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த பிப்ரவரி 18-ந்தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

    அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பராமரிப்பு பணி மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக ஆலையை திறக்க அனுமதிக்கும்படி மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.



    இதற்கிடையே, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க போதிய நேரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருப்பதால், இயந்திரங்களை பழுதுபார்த்து பராமரிப்பதற்காக ஆலைக்குள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது, அதனை மீறி விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். #SupremeCourt #SterliteCopperPlant 
    ராகுலை எதிர்த்து போட்டியிட நினைத்த சரிதாநாயரின் வேட்புமனுக்கள் எதற்காக தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். #rahulgandhi #sarithanair #parliamentelection

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்த போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க தேவையான சோலார் பேனல் கருவிகளை பொருத்தி தருவதாக கேரளாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் பலரிடமும் பணம் வசூல் செய்தார்.

    ஆனால் அவர் கோடிக் கணக்கில் பணம் வசூல் செய்துவிட்டு மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. சோலார் பேனல் அமைக்கும் திட்டத்திற்கு தனக்கு அனுமதி பெற்று தருவதாக கூறி கேரளாவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சரிதா நாயரும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    இதற்கிடையில் சரிதா நாயர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்து உள்ளார்.

    இந்த நிலையில் சரிதா நாயரால் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஹைபிஈடன் என்பவர் காங்கிரஸ் வேட் பாளராக எர்ணாகுளம் தொகுதியில் நிறுத்தப்பட்டார். இதற்கு சரிதா நாயர் கண்டனம் தெரிவித்தார். அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

    ஆனாலும் அவரது கோரிக்கையை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சரிதா நாயர் எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.


    மேலும் எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை மாற்றக் கோரி அவர் ராகுல்காந்திக்கு ஈ-மெயில் மூலம் புகார் அனுப்பினார். அதற்கும் எந்த பலனும் இல்லாததால் ராகுல்காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியிலும் சரிதா நாயர் வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அப்போது எர்ணா குளம் தொகுதியிலும், வயநாடு தொகுதியிலும் சரிதா நாயரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. சோலார் பேனல் வழக்கில் சரிதா நாயருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. தேர்தல் கமி‌ஷன் விதிமுறைப்படி 2 ஆண்டோ அல்லது அதற்கு மேலோ ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டால் அவர்கள் தண்டனைக்காலம் முடியும் வரையும் அதன்பிறகு 6 ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் சரிதா நாயரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். #rahulgandhi #sarithanair #parliamentelection

    தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடப்படாததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #PMModi #NationalAnthem
    சென்னை:

    தமிழகத்தில் மதுரை மற்றும் திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி வேம்பு என்பவர், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.



    அவர் தனது மனுவில், பிரதமர் பங்கேற்ற இரண்டு அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்படாதது குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது பிரதமர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். #PMModi #NationalAnthem
    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாரில் சிக்கிய தலைமை பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #StudentHarassment #ProfessorDismissed
    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொடர்பியல் துறை தலைவராக பேராசிரியர் கோவிந்த ராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் புகார் கூறினார்.

    இது தொடர்பாக ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஓய்வு பெற்ற பல்கலைக்கழக பதிவாளர், மூத்த பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினார்கள். இதில் ஆராய்ச்சி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்கள் நடந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக அந்த குழுவினர் பல்கலைக்கழகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தனர். இதுபோல பல்கலைக்கழக ஆங்கில துறையில் பணிபுரிந்த துணை பேராசிரியர்கள் பூவலிங்கம், ரமேஷ், உதவி பேராசிரியர் ஜெனிதா ஆகிய 3 பேர்களும் வகுப்புகளுக்கு ஒழுங்காக சென்று பாடம் நடத்தாமலும், துறை தலைவரின் கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாகவும் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஓய்வு பெற்ற பதிவாளர் மற்றும் மூத்த பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினார்கள். இதில் 3 பேராசிரியர்களும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதுகுறித்தும் ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் பல்கலைக்கழகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் துணைவேந்தர் பாஸ்கர் தலைமையில் நடந்தது. அப்போது ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் சமர்ப்பித்த அறிக்கைகளும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    பூவலிங்கம், ஜெனிதா, ரமேஷ்

    இதில் பாலியல் புகார் கூறப்பட்ட தலைமை பேராசிரியர் கோவிந்தராஜுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து பணி நீக்கம் செய்வது என்றும், மற்ற 3 பேராசிரியர்களையும் பணிநீக்கம் செய்வது என்றும் ஆட்சிமன்ற குழுவில் முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு ஆகியோர், 4 பேராசிரியர்களையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டனர். பல்கலைக்கழகத்தில் 4 பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது கல்லூரி பேராசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #StudentHarassment #ProfessorDismissed
    ×