search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bail petition"

    • செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
    • கடைநிலை ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் சஸ்பெண்ட்.

    ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் 2வது மனு மீது அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே விசாரணையின்போது, 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள அமைச்சர் இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்திற்கு சொல்கிறீர்கள்? என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.

    கடைநிலை ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரே? என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது.

    • விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
    • சந்திரபாபு நாயுடு தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கேட்டு விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் பலமுறை மனு தாக்கல் செய்யப்பட்டன.

    சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மீது ஆந்திராவில் பைபர் நெட், அங்கல்லு கலவரம், இன்னர் ரிங் ரோடு ஊழல் உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த 3 வழக்குகளிலும் ஜாமீன் வழங்க கோரி சந்திரபாபு நாயுடு ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு ஆந்திரா ஐகோர்ட்டு மற்றும் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    இவரது மனுக்கள் மீது இன்று ஒரே நாளில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இன்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சந்திரபாபு நாயுடு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

    சந்திரபாபு நாயுடு தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆந்திரா ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணைக்கு வர உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கப்படுமா? என்பது குறித்து 20-ந் தேதி ஐகோர்ட்டு முடிவு செய்கிறது.
    மதுரை:

    ‘மக்கள் நீதி மய்யம்’ தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்தார். கமலின் இந்த பேச்சுக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    கமலுக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன. திருப்பரங்குன்றத்தில் அவர் பேசியபோது செருப்பு வீச்சும் நடந்தது.

    இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கமல் மீது புகார் செய்தார். இதன் அடிப்படையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியது என 2 பிரிவுகளில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.



    இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிடக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் கமல்ஹாசன் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்க மறுத்த ஐகோர்ட்டு, முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் விடுமுறை கால அமர்வில் விசாரிக்கலாம் என தெரிவித்தது.

    இதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

    மேலும் தேர்தல் முடியும் வரை கமலின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் விவாதிக்கக்கூடாது என்றும் கூறினார்.

    இந்த நிலையில் வருகிற 20-ந் தேதி மதுரை ஐகோர்ட்டில் நடைபெற உள்ள வழக்குகளின் பட்டியலில் கமல்ஹாசனின் முன்ஜாமீன் மனு வழக்கும் இடம் பெற்றுள்ளது.

    எனவே அவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது நாளை மறுநாள் தெரியவரும்.

    நடிகர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது திங்களன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்குகிறது.
    சென்னை:

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் ஹாசன் பேசிய விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். வழக்கு விசாரணையின்போது கமல் ஹாசன் மீது 76 புகார்கள் அளிக்கப்படிருப்பதாக அரசு தெரிவித்திருந்தது. 

    இந்த வழக்கில் நடிகர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை வரும் திங்களன்று தீர்ப்பு வழங்குகிறது.

    ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #RasipuramNurse #CBCID
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் அமுதவள்ளி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், புரோக்கர் அருள்சாமி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே அமுதவள்ளி, ரவிச்சந்திரன், பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா ஆகிய 5 பேரும் கடந்த 6-ந் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் 5 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  #RasipuramNurse #CBCID
    குட்கா ஊழல் வழக்கில் அதிகாரிகள் என்.கே.பாண்டியன், செந்தில்முருகன் ஆகியோர் மீண்டும் ஜாமீன் கோரி சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். #Gutkhascam
    சென்னை:

    குட்கா ஊழல் தொடர்பாக குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஜாமீன் கோரிய அவர்கள் 6 பேரின் மனுவை சென்னை சி.பி.ஐ. கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இந்தநிலையில் அதிகாரிகள் என்.கே.பாண்டியன், செந்தில்முருகன் ஆகியோர் மீண்டும் ஜாமீன் கோரி சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  #Gutkhascam
    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி, பரோல் கேட்டு மனு கொடுத்துள்ளார். #ilavarasi
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலா 2 முறை பரோல் மூலம் சென்னை சென்று வந்தார்.



    ஆனால் இளவரசி சிறைக்கு சென்ற பிறகு இதுவரை பரோல் கேட்கவில்லை. இதற்கிடையே சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலா, இளவரசிக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதில் லஞ்சம் கைமாறப்பட்டதாக எழுந்த புகாரை கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நெருங்கிய உறவினர் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரை பார்க்க பரோல் வழங்க கோரி சிறை நிர்வாகத்திடம் இளவரசி மனு வழங்கியுள்ளார்.

    அவருக்கு விரைவில் பரோல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 15 நாட்கள் வரை பரோலில் செல்ல அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி உள்பட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு 21 மாதங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  #ilavarasi
    நக்கீரன் அலுவலகத்தில் பணியாற்றும் 35 ஊழியர்கள், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது. #NakkeeranGopal #HighCourt
    சென்னை:

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியர் நிர்மலா தேவியை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான செய்தி நக்கீரன் பத்திரிகையில் வெளியானது. இந்த செய்தியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இதையடுத்து கவர்னர் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று அவரை மாஜிஸ்திரேட்டு விடுவித்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கில் தங்களை கைது செய்யலாம் என்று கருதி, நக்கீரன் அலுவலகத்தில் பணியாற்றும் 35 ஊழியர்கள், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது. #NakkeeranGopal #HighCourt
    ஆளுநரை பணியில் தலையிட்டதாக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #NakkheeranGopal
    சென்னை:

    நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு இருக்கும் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகையை தொடர்புபடுத்தி கட்டுரை வெளியானதால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் நக்கீரன் கோபால் மீது 124 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் பணியில் தலையிடுவது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நக்கீரன் கோபால் தரப்பில் இருந்து முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    வழக்கறிஞர் பி.டி.பெருமாள் நக்கீரன் தரப்பில் ஆஜராகி வாதிட்டு வருகிறார். எழும்பூர் 13-வது நீதிமன்றத்தில் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற வழக்குவிசாரணை சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    இந்த வழக்கு விசாரணையின்போது, நக்கீரன் இதழில் வெளியான கட்டுரையால் ஆளுநர் பணியில் என்ன இடையூறு ஏற்பட்டது என்பதை விளக்க வேண்டும் எனவும், காலதாமதாக நடவடிக்கை எடுப்பதற்கான உள்நோக்கம் என்ன? எனவும் நக்கீரன் கோபால் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

    இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் ஊடக பிரதிநிதியாக ஆஜரான இந்து என்.ராம், 124 பிரிவின் கீழ் வராத ஒரு வழக்கில் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்றும், இந்த வழக்கில் நீதிமன்ற காவல் என தீர்ப்பு வழங்கப்பட்டால் அது தவறான உதாரணம் ஆகிவிடும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். #NakkheeranGopal
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள நிர்மலாதேவி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். #NirmalaDeviAudioCase #NirmalaDevi
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில் காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் உதவி பேராசிரியர் முருகன் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. முருகன் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் வாதாடுகையில், நிர்மலாதேவி தான் பேசிய ஆடியோவில், மாணவிகளிடம் நீங்கள் சம்மதித்தால் உயர்மட்டத்தில் இருந்து பணம் கிடைக்கும் நல்ல மதிப்பெண் கிடைக்கும் இது வேற லெவல் என பேசி உள்ளார்.

    காமராஜர் பல்கலைக் கழகத்தில் உயர் பதவியில் உள்ள துணைவேந்தர் மற்றும் நிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்புடைய மகளிர் மேம்பாட்டு துறை தலைவர் மற்றும் புத்தாக்க பயிற்சி இயக்குனர் கலைச்செல்வன் ஆகியோர் மீது ஏன் விசாரனை நடத்தி வழக்குப்பதிவு செய்யவில்லை.

    சாதாரண நிலையில் உள்ள முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு பொய்யான வழக்கை பதிந்து உள்ளது. இந்த வழக்கினை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரையும் வைத்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறை முடிக்க நினைக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் பல்கலை கழகத்தின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தொடர்புடையவர்களாக உள்ளனர்.

    மேலும், நிர்மலாதேவி, முருகனுக்கு ஜாமீன் வழங்கினால் அவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளை விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்க தயாராக உள்ளனர்.

    எனவே முருகனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

    இதற்கு அரசு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் ஏற்று கொண்ட நீதிபதி இளந்திரையன் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். #NirmalaDeviAudioCase #NirmalaDevi
    கால்நடைத் தீவன வழக்கில் தண்டனை பெற்றுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், நீதிமன்ற உத்தரவையடுத்து இன்று சரண் அடைந்தார். #LaluPrasad #Lalusurrender
    ராஞ்சி:

    பீகாரில் நடந்த கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவை ஆறுவார காலம் மருத்துவ சிகிச்சைக்காக ஜாமினில் விடுவித்து ராஞ்சி ஐகோர்ட் கடந்த மே மாதம் 11-ம் தேதி உத்தரவிட்டது. அதன்பின்னர் மருத்துவ காரணங்களுக்காக அவரது ஜாமின் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.

    மேலும் ஒருமுறை நீட்டிப்பு செய்வதற்காக லாலுவின் வழக்கறிஞர் கடந்த 24-ம் தேதி தாக்கல் செய்த மனுவை ஏற்றுகொள்ள மறுத்த நீதிபதி ஆகஸ்ட் 30-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். மும்பை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு கடந்த 25-ம் தேதி பாட்னா திரும்பினார்.

    நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்ட லாலு, விமானம் மூலம் நேற்று மாலை ராஞ்சி நகரை வந்தடைந்தார். இன்று ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.

    இதுபற்றி லாலுவின் வழக்கறிஞர் கூறுகையில், ‘மும்பை ஏசியன் ஹார்ட் இன்ஸ்டிடியூட் டாக்டர்கள் லாலுவுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அவரது உடல்நிலை குறித்து  நீதிமன்றத்தில் தெரிவிப்பார்கள்’ என்றார். #LaluPrasad #Lalusurrender  
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீன் மனுவை வருகிற 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. #NirmalaDevi
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில் காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டனர்.

    நிர்மலாதேவி ஜாமீன் வழங்கக்கோரி சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுகளில் மனுத்தாக்கல் செய்தார். இதுவரை 6 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

    இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதை தொடர்ந்து மனு மீதான விசாரணை செப்டம்பர் 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    நேற்று இதே வழக்கில் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் செப்டம்பர் 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #NirmalaDevi
    ×