என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "nirmala devi"
அருப்புக்கோட்டை பேராசிரியை, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உள்ளது.
இந்த நிலையில் அரசு கூடுதல் வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு ஆஜராகி நிர்மலாதேவி வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேலும் அவருக்கு மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கும் போது ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என நிபந்தனை விதித்து உள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க இடைக்கால தடையும் உள்ளது.
இந்த நிலையில், நிர்மலா தேவி பற்றிய செய்திகள் தமிழ் வார இதழில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. ஆகவே அந்த வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என முறையீடு செய்தார்.
அதை கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே நிர்மலாதேவி நேரில் ஆஜராகி பல கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவரிடம் மேலும் பல சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க வேண்டி உள்ளதால் வருகிற 22-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் அறையில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். #Nirmaladevi #HCMaduraiBench
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
ஓராண்டுக்குப்பின்னர் கடந்த 12-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜரானார். இதற்காக அவர் தனியாக காரில் வந்தார். செய்தியாளர்களை பார்த்தவுடன் “பேசக் கூடாது” என்று வாயில் கையை வைத்து சைகை செய்தபடி கோர்ட்டுக்குள் சென்றார்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓராண்டாக கோர்ட்டுக்கு அவர் அழைத்து வரப்பட்ட நிலையில் இன்று அவர் தனியாக காரில் வந்தது வித்தியாசமாக இருந்தது. நிர்மலாதேவி விடுதலையானபோதும் இதுவரை அவரை குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. #nirmaladevi
கைது செய்யப்பட்டவர்களில் முருகன், கருப்பசாமி ஆகியோர் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றம் மூலம் ஜாமின் பெற்றனர். ஆனால், நிர்மலா தேவியின் ஜாமின் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக 3 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர், உரிய விசாரணை நடத்தப்படவில்லை என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. அதன்பின்னர், ஜாமின் கேட்டு நிர்மலாதேவி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
நிர்மலா தேவி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரும் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்று பிற்பகல் நிர்மலாதேவியை விசாரணைக்கு ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது. வழக்கு விசாரணையையும் இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.
இதற்கிடையில், 11 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை ஜாமினில் விடுதலை செய்யுமாறு நிர்மலா தேவி தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் இன்று விசாரணை நடத்திய உயர் நீதிமன்ற மதுரை கிளை அவரை ஜாமினில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும், இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு எவ்வித பேட்டியும் அளிக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் நிர்மலா தேவி விடுதலை செய்யப்பட்டுள்ளார். #NirmalaDevi #HighCourtMaduraiBench #NirmalaDevigetsbail
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அந்த கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள். 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
எனவே முருகன், கருப்பசாமி தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இருவருக்கும் ஜாமீன் வழங்கி கடந்த 12-ந்தேதி உத்தரவிட்டது.
நிர்மலாதேவி தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. வழக்கு கடந்த 14-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவு நகல் கிடைக்காததால் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜாமீன் உத்தரவு ஆவணங்கள் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. நீதிபதி (பொறுப்பு) சாய் பிரியா விசாரணை நடத்தி முருகன், கருப்பசாமி இருவருக்கும் தலா ரூ. 75 ஆயிரம் சொத்து மதிப்புள்ள 4 நபர்களை ஜாமீன்தாரர்களாக ஏற்றுக் கொண்டு ஜாமீனில் விட அனுமதி வழங்கினார்.
நீதிபதி உத்தரவு தொடர்பான ஆவணங்கள் மதுரை சிறைத்துறை அதிகாரிகளிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
9 மாதங்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையான இருவரையும் உறவினர்கள் அழைத்துச் சென்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த முருகன் நிருபர்களிடம் கூறும்போது ‘என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அதனை சட்டப்படி சந்திப்பேன்’ என்றார். #NirmalaDevi #NirmalaDeviAudioCase
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த முருகன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி மீது வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் என் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித ஆதாரங்களுமின்றி என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த முதல் குற்றவாளியான நிர்மலா தேவி என் மீது எத்தகைய குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை.
அதே போல பாதிக்கப்பட்ட 4 மாணவிகள், வழக்கில் தொடர்புடைய விஜய துரை, கலைச்செல்வன் ஆகியோரும் என் மீது எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை.
அதோடு, எனது குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடன் சுமையால் தவித்து வரும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் என்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தொடர்ந்த வழக்கை, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
எனவே மகளிர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, என்னை இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து பதிலளிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். #NirmalaDevi #NirmalaDeviAudioCase
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவியுடன் கைது செய்யப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையால் நிராகரிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் பாலிநாரிமன், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் கடந்த டிசம்பர் 4-ந் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழக காவல்துறை 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பாலிநாரிமன், வினித்சரண் ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.
விசாரணை தொடங்கியதும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சஞ்சய் ஹெக்டே, இந்த இருவரும் கடந்த 9 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இனியும் அவர்களை சிறையில் அடைப்பதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை. எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் முருகன், கருப்பசாமி ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டனர். #NirmalaDevi #Murugan #Karuppasamy #SC
இந்த நிலையில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் மதுரை சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். 3 பேரும், நீதிபதி லியாகத் அலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போதும் வழக்கு விசாரணைக்கான ஆவணங்கள் வராததால், வழக்கு விசாரணையை வருகிற 14-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே கோர்ட்டுக்கு ஆஜராக வந்த நிர்மலாதேவி நிருபர்களிடம் கூறும்போது “எனது ஒப்புதல் வாக்குமூலம் மிரட்டி பெறப்பட்டது. பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்கின்றனர். மற்ற விவரங்களை எனது வக்கீல் கூறுவார்” என்று கூறிச் சென்றார்.
இதைத்தொடர்ந்து நிர்மலாதேவி தரப்பு வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது:-
கடந்த 10 மாதங்களாக நிர்மலாதேவி சிறையில் உள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு சிறையில் அவரை சந்தித்தேன். இந்த வழக்கு பாலியல் வழக்காக பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கில் பாலியல் மட்டும் அல்ல, மிகப் பெரிய அரசியல் பின்னணி உள்ளது.
சிறைக்கு வரவழைத்து உறவினர்கள், நண்பர்களை பார்ப்பதற்கு அனுமதிக்குமாறு எழுதிக் கொடுத்தும், 10 மாதமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில் சிறை விதி மீறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல நிர்மலாதேவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறையில் மருத்துவர்கள்கூட முறையாக அவரை பரிசோதிப்பதில்லை. ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இதற்கு பின்னணியில் மிகப் பெரிய அரசியல் சதி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #NirmalaDevi
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகள் சிலரை பாலியல் பேரத்திற்கு அழைத்து அவர்களை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். நிர்மலாதேவி உள்பட 3 பேர் மீதான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதைதொடர்ந்து மதுரை மத்திய சிறையில் இருந்து அவர்கள் 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைத்து வரப்பட்டு, மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். முடிவில் இந்த வழக்கை நீதிபதி லியாத் அலி, வருகிற 30-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கோர்ட்டில் இருந்து வெளியே வந்த நிர்மலாதேவியிடம் “ஏற்கனவே கோர்ட்டில் ஆஜராக வந்தபோது, உறவினர்களை சந்திக்க விரும்புவதாக கூறினீர்கள். யாராவது உங்களை சிறையில் வந்து சந்தித்தார்களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு நிர்மலாதேவி கூறும்போது, “சிறைக்கு வந்து என்னை உறவினர்கள் யாரும் இதுவரை சந்திக்கவில்லை. அது தனக்கு வருத்தம் அளிக்கிறது” என கூறினார். பின்னர் நிர்மலாதேவி உள்பட 3 பேரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். #NirmalaDevi
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கை விசாரித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் எங்கள் மீது அரசு தரப்பு குற்றம் சாட்டுவதில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனு தாககல் செய்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி முருகன், கருப்பசாமியும் மனு செய்தனர்.
இந்த வழக்கு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலாதேவியை வழக்கில் இருந்து விடுவிக்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய நிர்மலாதேவியின் மனுவை மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்தார். முருகன், கருப்பசாமியின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கின் மூல விசாரணையை நீதிபதி வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். #Nirmaladevi #Nirmaladeviaudiocase
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர்கள் சுகந்தி, மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், "அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவியை, அதே கல்லூரி மாணவிகள் சிலருக்கு பாலியல் அழைப்பு விடுத்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் மதுரை காமராஜர் கல்லூரி உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், விசாரணையில் உயர் அதிகாரிகள் குறித்து எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை. நியாயமான முறையில் விசாரணை நடைபெறவில்லை என தெரிவித்தார்.
அதற்கு அரசுத்தரப்பில், முறையாக விசாரணை நடைபெற்று, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையை சீலிட்ட கவரில் டிசம்பர் 3-ந் தேதிக்குள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டு நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 10-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். #Nirmaladevi
கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி 7 முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு குற்றப்பத்திரிகையில் போதிய முகாந்திரம் இல்லை. எனவே எங்கள் 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று இன்று விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. #NirmalaDevi
நாகர்கோவில்:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் முன்னாள் மாநில செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சிறு, குறு தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்டேலுக்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு சிலை அமைத்துள்ளது. இதனை விளம்பர படுத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி.வரிவிதிப்பு காரணமாக மக்களும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து வருகிறது.
தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டதாகவும், இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும் தமிழக சட்டசபையில் அமைச்சரே தெரிவித்து உள்ளார். அந்த அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. திருப்பூரில் ஏற்றுமதி குறைந்துவிட்டது. தொழிற்சாலைகள் செயல்பட வில்லை.
எனவே தான் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் கம்யூனிஸ்டு கட்சி செயல்படுகிறது.
அடிமைகள் ஒருபோதும், தங்களை அடிமைகள் என்று ஒப்புக்கொள்வதில்லை. மத்திய அரசு தமிழகத்தில் நிறைவேற்ற துடிக்கும் மக்கள் விரோத திட்டங்களை இப்போதைய அரசு எதிர்ப்பதில்லை.
அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பலரும் ஊழல் வழக்கில் சிக்கி இருப்பதுதான் இதற்கு காரணமாகும். இந்த நிலை மாற வேண்டும். இப்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்தும் சோதனையில் அதிகாரிகள் சிக்கியிருப்பது இதற்கு எடுத்து காட்டாகும்.
தமிழகத்தில் பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் கூடுதல் வரிவிதிப்பை அரசு அமல்படுத்தி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத போது வரி விதிப்பை அமல் படுத்தியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கையாகும். இதனை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேராசிரியை நிர்மலா தேவி வாக்குமூலம் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. வி.ஐ.பி.க்களை தப்ப வைக்க இந்த நடவடிக்கையா என்று எண்ண தோன்றுகிறது.
எனவே இந்த வழக்கின் விசாரணையை வெளிப்படையாக நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை வெளிவரும்.
கேரளாவில் நடந்து வரும் சபரிமலை விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சி அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல் படுத்தும் கேரள அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள்.
அரசியலுக்காக போராடும் இவர்கள் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யாதது ஏன்? என்பதை விளக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் இதே நிலைப்பாட்டுடன்தான் போராடுகிறார்கள்.
குமரியில் ஓகி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. இங்கு கொண்டுவரப்பட்ட தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.
இம்மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இம்மாத இறுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கை மாநாடு நடக்கிறது. டிசம்பர் மாதம் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியும் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நூர்முகம்மது, லீமா ரோஸ் ஆகியோர் உடன் இருந்தனர். #gramakrishnan #parliamentelection #bjp #communistparty
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்