search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "professor murugan"

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதான பேராசிரியர் முருகனை விடுவிக்க கோரிய வழக்கில் சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு பதில் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #NirmalaDevi
    மதுரை:

    மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த முருகன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி மீது வழக்கு தொடரப்பட்டு அவர் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் என் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித ஆதாரங்களுமின்றி என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த முதல் குற்றவாளியான நிர்மலா தேவி என் மீது எத்தகைய குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை.

    அதே போல பாதிக்கப்பட்ட 4 மாணவிகள், வழக்கில் தொடர்புடைய விஜய துரை, கலைச்செல்வன் ஆகியோரும் என் மீது எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை.

    அதோடு, எனது குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடன் சுமையால் தவித்து வரும் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் என்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி தொடர்ந்த வழக்கை, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    எனவே மகளிர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, என்னை இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணவள்ளி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து பதிலளிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். #NirmalaDevi #NirmalaDeviAudioCase
    வெளியே இருப்பவர்களின் தூண்டுதலால் சிறை காவலர்கள், கைதிகளால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதியிடம் நிர்மலாதேவி முறையிட்டார். #NirmalaDevi #NirmaladeviAudio
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த மாதம் 13-ந் தேதி 1160 பக்கங்களை கொண்ட முதல் கட்ட குற்றப்பத்திரிகையையும், கடந்த 7-ந்தேதி 200 பக்கம் கொண்ட 2-வது குற்றப்பத்திரிகையையும் விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    இந்த குற்றப்பத்திரிகையை பெற்றுக்கொள்ள நிர்மலாதேவி உள்பட 3 பேரும் நேற்று விருதுநகர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து குற்றப்பத்திரிகை நிர்மலா தேவி உள்பட 3 பேரிடம் நீதிபதி முன்னிலையில் வழங்கப்பட்டது.

    அப்போது நிர்மலாதேவி நீதிபதியிடம், வெளியே இருப்பவர்களின் தூண்டுதலால் சிறை காவலர்கள், கைதிகளால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே என்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதை கேட்ட நீதிபதி கோரிக்கை தொடர்பாக மனு அளிக்குமாறு கூறினார். விசாரணை 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து 3 பேரும் மதுரை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். #NirmalaDevi #NirmaladeviAudio
    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி-முருகன் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை 27-ந்தேதிக்கு தள்ளிவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #NirmalaDevi
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசியதாக கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் 3 பேரும் ஜாமீன்கேட்டு பலமுறை மனுதாக்கல் செய்தனர். சாத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.

    கருப்பசாமி மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு 2 முறை தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. அப்போது நீதிபதிகள் மாணவிகள் தொடர்பான இந்த வழக்கை சாதாரணமாக கருதமுடியாது.


    வழக்கில் கைதானவர்களை விசாரணை முடிவடையும் வரை ஜாமீனில் விடக்கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை மார்ச் மாதத்துக்குள் விசாரித்து முடிக்கவும் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் பேராசிரியர்கள் நிர்மலாதேவி, முருகன் ஆகியோர் ஜாமீன்கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். #NirmalaDevi
    நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.#AruppukottaiProfessor #NirmalaDevi #CBCID
    மதுரை:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசிய செல்போன் பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார் கூறப்பட்டதன் அடிப்படையில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

    அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். காமராஜர் பல்கலைக்கழகம், தேவாங்கர் கலைக்கல்லூரி ஆகியவற்றிலும் விசாரணை நடத்தப்பட்டது.

    தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை, நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வந்து விசாரணை நடத்தியது.


    துறைத்தலைவர்கள், மூத்த பேராசிரியர்கள் என 36 பேரிடம் இந்த விசாரணை சுமார் 8 மணி நேரம் நடந்தது.

    இரவு 7.30 மணிக்கு விசாரணையை முடித்த சி.பி.சி.ஐ.டி.போலீசார் இன்று 2-வது நாளாக மீண்டும் பல்கலைக்கழகம் சென்று விசாரணை நடத்தினர்.

    நிர்மலாதேவிக்கும், பல்கலைக்கழகத்திற்கும் உள்ள தொடர்பு, உயர் அதிகாரிகளுடன் தொடர்பு என பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. தரப்பு வக்கீலாக சிறப்பு அரசு வக்கீல் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.#AruppukottaiProfessor #NirmalaDevi #CBCID
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோருக்கு வருகிற 28-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. #NirmalaDevi #Murugan #Karuppasamy
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரிடம் நடத்திய அதிரடி விசாரணையில் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக கூறினார்.

    அதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    முருகன், கருப்பசாமியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இருவரும் இன்று காலை மதுரை சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விருதுநகர் அழைத்துச் செல்லப்பட்டு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்.1) ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அவர்களை வருகிற 28-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு மும்தாஜ் உத்தரவிட்டார். முருகன் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி, அவரது மனைவி சுஜா கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

    அவர் நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவருக்கு ஜாமீன் கிடைத்த பிறகு உங்களை சந்திக்கிறேன். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க நீங்கள் உதவ வேண்டும் என்றார். #NirmalaDevi #Murugan #Karuppasamy
    ×