search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CBCID Police investigation"

    சேலத்தில் இருந்து சென்னை வந்த ரெயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நெருங்கியதால் வடமாநில கும்பல் தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து தப்பியுள்ளனர். #ChennaiTrainRobbery #RBIMoney
    சேலம்:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி இரவு சென்ற ரெயிலின் தனிப்பெட்டியில் ரூ.323 கோடி கொண்டு செல்லப்பட்டது. சென்னை செல்லும் வழியில் ரெயிலின் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.78 கோடியை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    சென்னை எழும்பூருக்கு மறுநாள் அதிகாலை சென்றபோது தான் இந்த கொள்ளை சம்பவம் பற்றி போலீசாருக்கு தெரியவந்தது.

    தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். பல்வேறு கட்டங்களாக இந்த விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    இந்த வழக்கில் கொள்ளையர்கள் குறித்து துப்பு துலக்க ரெயில் பெட்டி சேலத்திற்கு எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்ற விபரத்தை எடுத்த அதிகாரிகள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) உதவியை நாட முடிவு செய்தனர்.

    இஸ்ரோ விஞ்ஞானிகளிடமும் ஆலோசனை நடத்தினார்கள்.

    இதையடுத்து ரெயில் கொள்ளை நடந்த அன்று சேலத்தில் இருந்து சென்னை வரை உள்ள 350 கிலோ மீட்டர் தூரத்தில் செயற்கைக்கோளில் பதிவாகியிருந்த படங்களை விஞ்ஞானிகள் எடுத்தனர். இந்த படங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

    இந்த புகைப்படங்களை கொண்டு ரெயில் எங்கு வரும்போது, கொள்ளை நடந்தது? என்ற தகவலை திரட்டினார்கள். இதில் சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் வரையில் உள்ள பகுதிகளில் தான் ரெயிலின் மேற்கூரை வெட்டப்பட்டது தெரிய வந்தது.


    சுமார் 1 லட்சம் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் இந்த கொள்ளை சம்பவத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த கும்பல் ஈடுபட்டுள்ளது கண்பிடிக்கப்பட்டது.

    கொள்ளை நடந்து 2 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் துப்பு துலங்கியதால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுறுசுறுப்பு அடைந்தனர். மத்திய பிரதேச மாநில போலீசாருடன் இணைந்து கொள்ளையர்களை பிடிப்பதற்கான பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டனர்.

    சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ரெயில்வே நிலையங்களில் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    கொள்ளை கும்பலுடன் இந்த ஊழியர்களில் யாருக்காவது தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக சேலம் கோட்டத்தில் வேலை பார்த்து வரும் வடமாநில ஊழியர்களின் செல்போன் எண்களை கைப்பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதனால் விரைவில் குற்றவாளிகள் பிடிபடலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அறிந்த வடமாநில கொள்ளையர்கள் உஷார் அடைந்துள்ளனர். போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த அவர்கள், கடைசியாக தாங்கள் பயன்படுத்தி வந்த செல்போன் எண்களை சுவிட்ச் -ஆப் செய்து விட்டு வேறு இடங்களுக்கு தப்பி ஓடிவிட்டனர்.

    இதனால் போலீசாரால் கொள்ளையர்களின் இருப்பிடத்தை கண்டு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இருந்தாலும், கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க 20 பேர் கொண்ட 4 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  #ChennaiTrainRobbery #RBIMoney
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்குகளில் ஆவணங்கள், தடயங்கள் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களின் விவரங்களை சேகரித்தனர். இதேபோல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர். அதன்படி சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையிலான போலீசார் 4 டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

    நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.#AruppukottaiProfessor #NirmalaDevi #CBCID
    மதுரை:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசிய செல்போன் பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார் கூறப்பட்டதன் அடிப்படையில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

    அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். காமராஜர் பல்கலைக்கழகம், தேவாங்கர் கலைக்கல்லூரி ஆகியவற்றிலும் விசாரணை நடத்தப்பட்டது.

    தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை, நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வந்து விசாரணை நடத்தியது.


    துறைத்தலைவர்கள், மூத்த பேராசிரியர்கள் என 36 பேரிடம் இந்த விசாரணை சுமார் 8 மணி நேரம் நடந்தது.

    இரவு 7.30 மணிக்கு விசாரணையை முடித்த சி.பி.சி.ஐ.டி.போலீசார் இன்று 2-வது நாளாக மீண்டும் பல்கலைக்கழகம் சென்று விசாரணை நடத்தினர்.

    நிர்மலாதேவிக்கும், பல்கலைக்கழகத்திற்கும் உள்ள தொடர்பு, உயர் அதிகாரிகளுடன் தொடர்பு என பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. தரப்பு வக்கீலாக சிறப்பு அரசு வக்கீல் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.#AruppukottaiProfessor #NirmalaDevi #CBCID
    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதான பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோருக்கு வருகிற 28-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. #NirmalaDevi #Murugan #Karuppasamy
    விருதுநகர்:

    அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரிடம் நடத்திய அதிரடி விசாரணையில் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக கூறினார்.

    அதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    முருகன், கருப்பசாமியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இருவரும் இன்று காலை மதுரை சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விருதுநகர் அழைத்துச் செல்லப்பட்டு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்.1) ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அவர்களை வருகிற 28-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு மும்தாஜ் உத்தரவிட்டார். முருகன் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி, அவரது மனைவி சுஜா கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

    அவர் நிருபர்களிடம் கூறும்போது, எனது கணவருக்கு ஜாமீன் கிடைத்த பிறகு உங்களை சந்திக்கிறேன். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க நீங்கள் உதவ வேண்டும் என்றார். #NirmalaDevi #Murugan #Karuppasamy
    ×