search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக துறை தலைவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. 2-வது நாளாக விசாரணை
    X

    நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக துறை தலைவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. 2-வது நாளாக விசாரணை

    நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர்.#AruppukottaiProfessor #NirmalaDevi #CBCID
    மதுரை:

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசிய செல்போன் பேச்சு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார் கூறப்பட்டதன் அடிப்படையில் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

    அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். காமராஜர் பல்கலைக்கழகம், தேவாங்கர் கலைக்கல்லூரி ஆகியவற்றிலும் விசாரணை நடத்தப்பட்டது.

    தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2-வது கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை, நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வந்து விசாரணை நடத்தியது.


    துறைத்தலைவர்கள், மூத்த பேராசிரியர்கள் என 36 பேரிடம் இந்த விசாரணை சுமார் 8 மணி நேரம் நடந்தது.

    இரவு 7.30 மணிக்கு விசாரணையை முடித்த சி.பி.சி.ஐ.டி.போலீசார் இன்று 2-வது நாளாக மீண்டும் பல்கலைக்கழகம் சென்று விசாரணை நடத்தினர்.

    நிர்மலாதேவிக்கும், பல்கலைக்கழகத்திற்கும் உள்ள தொடர்பு, உயர் அதிகாரிகளுடன் தொடர்பு என பல்வேறு கோணங்களில் இந்த விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. தரப்பு வக்கீலாக சிறப்பு அரசு வக்கீல் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.#AruppukottaiProfessor #NirmalaDevi #CBCID
    Next Story
    ×