search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petition dismissed"

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய நிர்மலாதேவியின் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. #Nirmaladevi #Nirmaladeviaudiocase
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைதானார்கள்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கை விசாரித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் எங்கள் மீது அரசு தரப்பு குற்றம் சாட்டுவதில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனு தாககல் செய்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி முருகன், கருப்பசாமியும் மனு செய்தனர்.

    இந்த வழக்கு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலாதேவியை வழக்கில் இருந்து விடுவிக்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய நிர்மலாதேவியின் மனுவை மாஜிஸ்திரேட்டு தள்ளுபடி செய்தார். முருகன், கருப்பசாமியின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கின் மூல விசாரணையை நீதிபதி வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். #Nirmaladevi #Nirmaladeviaudiocase
    டெல்லி தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பான விவரங்களை காவல்துறை ஊடகங்களுக்கு வெளியிடுவதற்கு தடை கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #DelhiChiefSecretary #AAPMLAs
    புதுடெல்லி:

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அமனாதுல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜார்வால் தாக்கியதாக புகார் எழுந்தது.

    தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் துணை நிலை ஆளுநரைச் சந்தித்து புகாரளித்தார். இதனை அடுத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஜார்வா, அமனாதுல்லா கானை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீசார், பாட்டியாலா கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன.

    இதையடுத்து குற்றப்பத்திரிகை விவரங்களை ஊடகங்களுக்கு காவல்துறை தெரிவிப்பதை தடுக்கக் கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பாட்டியாலா கோர்ட்டில் தனியாக மனு தாக்கல் செய்தனர்.


    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆம் ஆத்மி தலைவர்கள் காவல்துறையினரைப் பற்றி மோசமாக பேசுவதாகவும், காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்கும் வகையிலும் நடந்துகொள்வதாகவும் காவல்துறை குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கட்சி வழக்கறிஞர் மறுத்தார். வழக்கு விவரங்களை ஊடகங்களுக்கு தெரிவித்து அவமதிப்பதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் பிற்பகல் 2 மணிக்கு முடிவு செய்வதாக கூறினார்.

    பிற்பகல் 2 மணிக்கு விசாரணை நடைபெற்றபோது, காவல்துறைக்கு எதிராக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன், வரும் செப்டம்பர் 18-ம் தேதி குற்றப்பத்திரிகை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது. #DelhiChiefSecretary #AAPMLAs
    கடர் நீரை குடிநீராக்கும் டெண்டரை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் சுமார் ரூ.1,259 கோடி செலவில் தினமும் 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் கடந்த ஆண்டு சர்வதேச அளவில் ஒப்பந்த புள்ளிகள் கோரியது.

    இந்த டெண்டருக்கு விண்ணப்பித்த 5 நிறுவனங்களை தேர்வு செய்து ராஞ்சியில் உள்ள ஆய்வு நிறுவனத்திற்கு ஆய்வுக்காக குடிநீர் வாரியம் அனுப்பியது.

    இந்த ஆய்வு நிறுவனம் 5 நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளிகளையும் நிராகரிக்க பரிந்துரைத்துள்ளது. இருப்பினும் இரு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு நிறுவனத்தை சட்ட விரோதமாக தேர்வு செய்ய சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறி சிங்க் எலக்ட்ரிகல் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்த போது டெண்டரில் பங்கேற்காத இந்த நிறுவனம் வழக்கு தொடர எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று சென்னை பெருநகர குடிநீர் வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #HighCourt
    ×