search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanathanam"

    • சனாதனத்துடன் நெருங்கிய பிணைப்புடன் செயல்படும் அரசுடன் இணைகிறேன்
    • பாடகி அனுராதாவுக்கு 2017ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

    பிரபல பாலிவுட் பாடகி அனுராதா பட்வால் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

    பாஜக டெல்லி தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் மற்றும் தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலுனி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் அனுராதா பட்வால் பாஜகவில் இணைந்திருக்கிறார்.

    பாஜகவில் இணைந்த பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அனுராதா, "சனாதனத்துடன் நெருங்கிய பிணைப்புடன் செயல்படும் அரசுடன் இணைகிறேன். பாஜகவின் ஓர் அங்கமாக இருப்பது தனக்கு கிடைத்த பாக்கியமாகக் கருதுவதாக தெரிவித்தார்.

    மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, "அது குறித்து இன்னும் தெரியவில்லை" என்று அவர் பதிலளித்துள்ளார்.

    பாடகி அனுராதாவுக்கு 2017ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கடந்த ஜனவரியில், அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில், பாடகி அனுராதா இசை நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும்.
    • சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.

    சேலம்:

    சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து 2017-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கருவறை மண்டபம், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்பட அழகிய வேலைபாடுகளுடன் கூடிய திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அக்டோபர் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிலையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும். பொதுவாழ்வில் எதையும் எதிர்பாராமல் கடைமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும்.

    சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான 8 வழிச்சாலை வருங்காலத்தில் வரும். சேலம் மாநகரம் சென்னைக்கு மற்றும் பெங்களூருக்கு நிகராக வளர வேண்டும் என வேண்டுகிறேன்.

    சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறும் தி.மு.க. முதலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். சனாதனத்தை ஒழிப்பேன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்து. சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.

    கவர்னர்கள் வாங்கும் சம்பளம் குறித்து அமைச்சர்கள் விமர்சிப்பதை கண்டிக்கிறேன். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கொலையாளிகள், குண்டு வைத்தவர்களை விடுவிக்க தீர்மானங்கள் நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இதை கவர்னர்களால் வேடிக்கை பார்க்க முடியாது. மாநிலங்களில் அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது கவர்னர்களின் கடமை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் ஆகும் என்று கூறி இருந்தார்.
    • இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு எதிர்க்காமல் மேடையில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    சென்னை:

    சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு இந்திய அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அவர் பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் ஆகும் என்று கூறி இருந்தார்.

    அமைச்சர் உதயநிதியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசுகையில், தமிழக முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. தலைவர்கள் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

    இவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக, சனாதன தர்மம் குறித்து பேசுகின்றனர். சனாதன தர்மத்தை அவமதிக்கின்றனர் என்று கடுமையாக பேசி உள்ளார்.

    மத்திய பிரதேச பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசுகையில், வருகிற தேர்தலில் இந்துக்களுக்கான எதிரான வியூகத்தை இந்தியா கூட்டணி பயன்படுத்தப் போகிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    தி.மு.க.வினர் வெறுப்பு அரசியலை பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

    பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் சேஷாக்பூரி வாலா கூறுகையில், உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை நோயுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்பது இந்தியாவில் சனாதனததை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு விடுப்பது போன்றது ஆகும் என்று கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறுகையில், உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்தின் மூலம் தி.மு.க.வினரின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டது என்று தெரிவித்து உள்ளார்.

    சனாதன தர்மம் என்பது நிரந்தரமானது. இது போன்ற அரசியல் கருத்துகளால் எதுவும் மாறி விடாது என்றும் கூறி உள்ளார்.

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சத்திய பிரமாணம் எடுத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'கொசுக்களைப் போல' சனாதன தர்மத்தை ஒழிக்க அழைப்பு விடுக்கிறார். இதை இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு எதிர்க்காமல் மேடையில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூட்டணியின் நோக்கமே சனாதன தர்மத்தை ஒழிப்பது என்கிறார். இந்துக்களுக்கு எதிரானது இந்தியா கூட்டணி என்று கூறி உள்ளார்.

    இப்படி பல்வேறு பா.ஜனதா தலைவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே டெல்லி பா.ஜனதா தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையிலான குழுவினர் இன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்ல முதன்மை ஆணையர் ஆஷிஷ் சாட்டர் ஜியிடம் ஒரு கடிதத்தை கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கும் படி கூறினர். அந்த கடிதத்தில் சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

    ×