search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanatana Issue"

    • உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
    • இந்த வழக்கு தொடர்ந்ததில் பா.ஜ.கவின் பங்கு உள்ளது.

    சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த கோ வாரண்ட் வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் ஆ. ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றனர் என்று விளக்கம் அளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனக் கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா? என்ற கேள்வி எழுப்பினார். தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர, அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை," என்று வாதாடினார்.

    இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், "சனாதனம் பற்றி அரசியலமைப்பு சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜர் ஆவதில் இருந்தே, இந்த வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பா.ஜ.கவின் பங்கு உள்ளது," என்று தெரிவித்தார்.

    இதோடு, "இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் மட்டும்தான் தகுதி இழப்பு ஆகிறார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எந்த வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை. சனாதனம் குறித்து பேசியது இந்திய தண்டனை சட்டப்படி குற்றம் என்று மனுதாரர்கள் கூறிய போதிலும், எந்தவொரு முதல் தகவல் அறிக்கையையும் அவர்கள் தாக்கல் செய்யவில்லை," என்று தெரிவித்தார்.

    "இந்த விவகாரம் அரசியல் கொள்கை மோதல் தான். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஜாதி மதம் அடிப்படையில் மக்களை பிரித்து வைக்கக்கூடிய சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இந்த கொள்கை மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அரசியல் உள்நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்," என்ற வாதங்களை அவர் தொடர்ந்து முன்வைத்தார்.

    வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞரின் வாதம் நிறைவடையாத காரணத்தால் இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

    • அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
    • சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பா.ஜ.க.-வினர் முயற்சித்தனர்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க. கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சாலையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதற்கிடையே இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பா.ஜ.க.-வினர் முயற்சித்தனர்.

    தொடர்ந்து, நுங்கம்பாக்கம் பூங்காவை கடந்த செல்ல அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பின்னர், போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 நபர்கள் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சட்டவிரோதமாக கூடுதல் , முறையற்று தடுத்தல், பொதுத் தொல்லை தருதல் உள்ளிட்ட பிரிவுகளில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல்.
    • உதயநிதி ஸ்டாலின் நஷ்ட ஈடாக ரூ. 1 கோடியே 10 லட்சம் கொடுக்க வேண்டும்.

    சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து குறித்து பேசிய அமைச்சர் உதியநிதி ஸ்டாலின், கடந்த 7-ம் வெளியிட்ட அறிக்கையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து தெரிவித்து இருப்பதாக அவரை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இது தொடர்பான மனுவில், "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி அவதூறாக பேசி இருக்கிறார் என்றும், அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி பேசியதற்கு நஷ்ட ஈடாக ரூ. 1 கோடியே 10 லட்சம் கொடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியானது.

     

    இந்த நிலையில், தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "சனாதனத்தை எதிர்க்கும் பணியில் செய்தியாளர்களும் தீவிரமாக செயல்பட்டு வருவதற்கு எனது நன்றிகள். நான் எடப்பாடி பழனிசாமி குறித்து தரக்குறைவாக பேசவில்லை. சனாதனத்திற்கு எதிராக பேசுவதை அவர் அவ்வாறு எடுத்துக் கொள்கிறாரா என்று தெரியவில்லை," என்று தெரிவித்து உள்ளார்.

    முன்னதாக இளம் திறமையாளர்களை வளர்ப்பதில் முன்னோடியாகத் திகழும் வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளியில் உலக அளவில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வியத்தகு சாதனைகள் படைத்த பள்ளி மாணவர்களை கவுரவிக்கும் வகையில் மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர் பாபு, பத்மவிபூஷன் விருதாளரும், புகழ்பெற்ற செஸ் வீரருமான விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

     

    உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு, உலக அளவில் 8-வது நிலை வீரரும், இந்தியாவின் நம்பர் 1 செஸ் விளையாட்டு வீரருமான குகேஷ், ஆசியாவின் 2--வது இடம் பிடித்த டென்னிஸ் வீராங்கனை ஹரிதா ஸ்ரீ, உலக பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் செஸ் பயிற்சியாளர் வேலவன் ஆகியோரது சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிறப்பு விருந்தினர்கள், செஸ் சாம்பியன்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெருமிதம் சூழ்ந்த இந்த நிகழ்வில் வேலம்மாள் நெக்ஸஸ் நிர்வாகம் சார்பில் சர்வதேச அளவில் சாதனை படைத்த செஸ் சாம்பியன்களுக்கு ரூ.60 லட்சம் பரிசுத்தொகையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.

    • எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.
    • உதயநிதி ஸ்டாலின் நஷ்ட ஈடாக ரூ. 1 கோடியே 10 லட்சம் கொடுக்க வேண்டும்.

    சனாதன விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த கருத்துக்களும் இடம்பெற்று இருந்தன. இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.

    அந்த மனுவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி அவதூறாக பேசி இருக்கிறார் என்றும், அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் தன்னை பற்றி பேசியதற்கு நஷ்ட ஈடாக ரூ. 1 கோடியே 10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மனுவில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு வழக்கு பட்டியலிடப்படலாம்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், "சனாதனம் என்றால் என்ன' என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடி கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை-கொள்ளை, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப் பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்," என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே எடப்பாடி பழனிசாமி தற்போது மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.

    • மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை நிச்சயம் ஒழித்துக் கட்டுவோம் என்று கூறுகிறார்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க. கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியதாவது..,

    "சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் என பலதரப்பட்டோரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அனைத்து மக்களும் இந்த விவகாரத்தில் கண்டனக் குரல் பதிவு செய்துள்ளனர். சனாதனத்தை வேரறுப்போம் என்று கூறப்படும் மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்."

    "ஒருவர் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மற்றொருவர் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இருவரும் பேசத் தொடங்குவதற்கு முன்பே, சனாதனமும், இந்து மதமும் ஒன்றுதான். அது இரண்டும் வேறு வேறு இல்லை என்று திராவிடர் கழகம் தலைவர் வீரமணி பேசுகிறார். இவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை நிச்சயம் வேரறுப்போம், ஒழித்துக் கட்டுவோம் என்று கூறுகிறார்."

    "இருவர் பேசுவதையும், அதே மேடையில் அமர்ந்திருந்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்த்துக் கொண்டிருந்தார். இவர்களின் பேச்சுக்கு நாடு முழுக்க சாமானிய மக்கள் தொடங்கி, அனைவரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதன் பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பி.கே. சேகர்பாபு மற்றும் அமைச்சர்கள் ஒன்றிணைந்து வேடிக்கையான அறிக்கை வெளியிட்டனர்."

    "அதில், சனாதன தர்மம் வேறு, இந்து தர்மம் வேறு. சனாதன தர்மத்தை நாங்கள் கொச்சைப்படுத்தும் போது சில விஷயங்களை மட்டும்தான் கொச்சைப்படுத்தினோம். இதை பா.ஜ.க. கட்சியும் இந்தியாவில் உள்ள தலைவர்களும் எங்களுடைய பேச்சை வெட்டி, ஒட்டி, சித்தரித்து எங்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதாக கூறியுள்ளனர்."

    "நான்கு நாட்களில் அவர்களது கருத்துக்கு ஏற்பட்ட கண்டனக் குரலை பார்த்து, நாங்கள் அப்படி சொல்லவில்லை, இப்படி சொல்லி இருந்தோம் என்று கூறுகின்றனர். சனாதன தர்மம் எப்போதும், யாருக்கும் எதிரி கிடையாது. இதனால் தான், நாமாக வேறு நாட்டிற்கு போர் தொடுக்காமல் இருக்கிறோம். சனாதன தர்மம் யாருக்கும் எதிரான தர்மம் கிடையாது. இதற்கு ஆதியும் கிடையாது, முடிவும் கிடையாது எல்லா காலத்திலும் நிலைத்து நிற்கக்கூடிய தர்மம்," என்று கூறியுள்ளார்.

    ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சாலையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பா.ஜ.க.-வினர் முயற்சித்தனர்.

    ×