என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jharkhand Governor"
- ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும்.
- சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.
சேலம்:
சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து 2017-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கருவறை மண்டபம், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அர்த்த மண்டபம், மகா மண்டபம் உள்பட அழகிய வேலைபாடுகளுடன் கூடிய திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அக்டோபர் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆன்மீகம் மட்டும்தான் தனிநபர் ஒழுக்கத்தை வளர்க்கும். பொதுவாழ்வில் எதையும் எதிர்பாராமல் கடைமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்கும்.
சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான 8 வழிச்சாலை வருங்காலத்தில் வரும். சேலம் மாநகரம் சென்னைக்கு மற்றும் பெங்களூருக்கு நிகராக வளர வேண்டும் என வேண்டுகிறேன்.
சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறும் தி.மு.க. முதலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற்ற வேண்டும். சனாதனத்தை ஒழிப்பேன் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்து. சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு அவருக்கு என்ன அரசியல் ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை.
கவர்னர்கள் வாங்கும் சம்பளம் குறித்து அமைச்சர்கள் விமர்சிப்பதை கண்டிக்கிறேன். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கொலையாளிகள், குண்டு வைத்தவர்களை விடுவிக்க தீர்மானங்கள் நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இதை கவர்னர்களால் வேடிக்கை பார்க்க முடியாது. மாநிலங்களில் அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது கவர்னர்களின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேண்டாத ஒரு விவாதத்தை எடுத்துக்கொண்டு அதில் அரசியல் லாபம் காண்பது தான் தி.மு.க.வின் அணுகுமுறையாக உள்ளது.
- தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா விற்பனை நடக்கிறது.
கோவை:
ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தப்படுவதும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அரவணைப்பது போல தமிழக அரசு செயல்படுவதும் கண்டனத்துக்குரியது.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை தண்டனையில் இருந்து தப்ப வைப்பதும், மன்னிப்புத்தருவதும் அதற்கு அண்ணாவின் பெயரை உபயோகப்படுத்துவதும் சரியான அணுகுமுறை அல்ல.
மக்களுக்கு நன்மை செய்வதை காட்டிலும் வேண்டாத ஒரு விவாதத்தை எடுத்துக்கொண்டு அதில் அரசியல் லாபம் காண்பது தான் தி.மு.க.வின் அணுகுமுறையாக உள்ளது. தேவையற்றதை ஒதுக்கிவிட்டு தமிழகத்தின் முன்னேற்றத்தில் தி.மு.க. அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா விற்பனை நடக்கிறது. இதில் காவல்துறையினர் கவனத்தை செலுத்தி கஞ்சாவை தமிழகத்தில் இருந்து முற்றிலும் அகற்ற வேண்டும். போதையில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும்போது தான் தமிழகம் முன்னேற்றத்தை நோக்கி விரைவாக பயணிக்கும். பிரதமர் நரேந்திரமோடியை தமிழர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். சாதிவாரியான கணக்கெடுப்பு தேவையா, இல்லையா? என்பதை காலமும், சமூகமும் தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலம், காலமாக இருக்கின்ற பாரம்பரியத்தை குறை சொல்வது திராவிட முன்னேற்ற கழகத்தின் வாடிக்கையாக மாறியிருக்கிறது.
- முடியாது என்று தெரிந்தே நீங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள்.
கோவை:
ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதை ஒருபோதும் இந்து மதமோ, சனாதன தர்மமோ வலியுறுத்தவில்லை. பல்வேறு தொழில்களை செய்து கொண்டிருந்தவர்கள் பல்வேறு சாதிகளாக பிரிந்து கொண்டிருக்கிறார்கள். காலம், காலமாக இருக்கின்ற பாரம்பரியத்தை குறை சொல்வது திராவிட முன்னேற்ற கழகத்தின் வாடிக்கையாக மாறியிருக்கிறது.
இவர்கள் இன்னும் 1952-ல் இருப்பதாகவே நான் கருதுகிறேன். காலம் மாறி வருகிறது. மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பாரம்பரியமும், அதனுடைய பெருமையும் காக்கப்பட வேண்டும் என்று நினைக்கிற தமிழர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.
தேவையில்லாதவற்றை தொடாமல் தமிழகத்தின் முன்னேற்றத்தில் தி.மு.க. அரசு கருத்தைச் செலுத்துவதும், கவனத்தை செலுத்துவதும், தி.மு.க.விற்கும், தமிழகத்திற்கும் நல்லது. ஒட்டு மொத்தத்தில் தி.மு.க. தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அடிக்கடி தேர்தல் என்பது ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும். ஒரே நேரத்தில் எல்லா அமைப்புகளுக்கும் தேர்தல் என்பது தேசத்தின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்தும்.
ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்ன குறை கண்டு வேண்டாம் என்கிறார்கள்? ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் முடிவுகளை எடுப்பது எந்த கட்சியாக இருந்தாலும் எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் அது சாத்தியம்.
தி.மு.க. பகையை வளர்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு எதையும் எதிர்பார்க்காத நல்ல கவர்னர் கிடைத்திருக்கிறார். அதைவிட இவர்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியவில்லை. தமிழ் மீதும், தமிழரின் மீதும், தமிழர்களின் முன்னேற்றத்தின் மீதும், அக்கறை கொண்ட கவர்னர் கிடைத்திருக்கிறார்.
அதை விட்டுவிட்டு இவர்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக நீட் தேர்வு ரத்து சட்ட மசோதாவை அமல்படுத்த முடியுமா?. முடியாது என்று தெரிந்தே நீங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள். அதன் பழியை கவர்னர் மீது போடுகிறீர்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து என்றீர்கள். நீங்கள் முதல் கையெழுத்து போட்டால் அது சட்டமாகிவிடுமா என்ன? எதுவெல்லாம் அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறதோ எதெல்லாம் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலுக்கு உட்பட்டு இருக்கிறதோ அதில் மட்டும்தான் கவர்னர் கையெழுத்திட முடியும்.
ஏழை மக்களின் நிலையை கண்டு, பொருளாதார நிலையை மனதில் கொண்டு ஏழை மக்களிடம் அதன் பலனை கொண்டு செல்ல வேண்டும் என கருத்தில் கொண்டே ரூ.200 கியாஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது
பா.ஜ.க.விற்கு எதிரான கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்கள் கருத்து. அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும், ஜே.பி. நட்டாவுக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கலைஞர் காலத்தில் நடைபெறாததெல்லாம் ஸ்டாலின் காலத்தில் நடைபெறுவதன் மூலம் தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை.
- ராஜீவ் காந்தி தேசிய தலைவராக தான் இந்த மண்ணில் இறந்தார்.
கோவை:
ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கவுமார மடாலயம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளிடம் ஆசி பெற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பின்னர் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. அரசு காலம் காலமாக ஒன்றைத்தான் செய்து வருகிறது. தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதும், தவறான முன்னுதாரணங்களை உதாரணமாக காட்டி மேலும் மேலும் தவறுகளை செய்வதும் தான் திமுக அரசின் சாதனையாக உள்ளது.
கலைஞர் காலத்தில் நடைபெறாததெல்லாம் ஸ்டாலின் காலத்தில் நடைபெறுவதன் மூலம் தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை. அராஜகம் செய்பவர்களின் கைகளில் அடங்கிப் போகிற மாநிலமாக ஆகிவிடுமோ என்ற அச்சம் நல்லுணர்வு படைத்த அத்தனை தமிழ் நெஞ்சங்களிலும் இருக்கிறது.
ராஜீவ் காந்தியை கொன்றவர்களை கட்டி அணைத்தார். அப்போது அவர் ஒரு செய்தி சொல்கிறார். எந்தத் தவறு இன்றைக்கு நாம் செய்கிறோமோ, அந்த தவறு மீண்டும் நம்மை வந்து தாக்கும். அதுதான் கர்மா. இன்றைக்கு ஸ்டாலின் எந்த தவறுகளை செய்கின்றாரோ அந்த தவறுகளுக்குரிய விலையை அவர் நிச்சயமாக கொடுக்க வேண்டியது இருக்கும்.
ராஜீவ் காந்தி என்பவரை காங்கிரஸ் தலைவராக பார்க்க கூடாது. அவர் தேசிய தலைவராக தான் இந்த மண்ணில் இறந்தார். காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் உணவுகள் வீணாவதாக எழுந்த புகார் குறித்த கேள்விக்கு குழந்தைகளுக்கு என்ன வேண்டுமோ அதை தருவதற்கு அரசு முயல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராகிம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
