search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "swearing in ceremony"

    • கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
    • 18 பேர் திட்டக்குழு உறுப்பினராக பதவியேற்கின்றனர்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட திட்டக்குழு பிரதிநிதிகள் பதவியேற்பு விழா வருகிற 28-ந் தேதி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. திட்டக்குழு தலைவராக மாவட்ட ஊராட்சி கவுன்சில் தலைவர் சத்தியாபாமா, துணை தலைவராக கலெக்டர் கிறிஸ்துராஜ், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர் 18 பேர் திட்டக்குழு உறுப்பினராக பதவியேற்கின்றனர்.

    மேலும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய தலைவர்கள், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கின்றனர்.

    • மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பிதழ் அனுப்பினார்.
    • மம்தாவிற்கு பதிலாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பங்கேற்கவுள்ளதாக தகவல்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.

    கடந்த 5 நாளாக பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

    இதையடுத்து, பெங்களூருவில் இன்று 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பிதழ் அனுப்பினார்.

    இந்நிலையில், இந்த விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ககோலி கோஷ் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள இருக்கிறார். #Kumaraswamy #KarnatakaCM #MKStalin #PinarayiVijayan

    புதுடெல்லி :

    கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரி மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    அதன் அடிப்படையில் நாளை (23-ந்தேதி) கர்நாடக முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்கள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. 



    அந்த வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று பினராயி விஜயனும், ஸ்டாலினும் நாளை பெங்களூரு சென்று பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர். 

    இதுதவிர காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், நடிகர் கமல்ஹாசன் ஆகியோரும் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. #Kumaraswamy #KarnatakaCM #MKStalin #PinarayiVijayan
    ×