என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "HD Kumaraswamy"
- கே.ஆர்.எஸ். அணையின் நீர்தேக்கத்தை முன்னாள் முதலமைச்சர் குமாரசுவாமி பார்வையிட்டார்.
- நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில விவசாயிகள் தொடர் போராட்டம்.
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடும் விவகாரத்தில், கர்நாடக அரசு காவிரி நீர் மேலான்மை ஆணையத்தை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு தவறி விட்டது என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசுவாமி குற்றம்சாட்டி உள்ளார்.
இதன் காரணமாகவே காவிரி நீர் மேலான்மை ஆணையம், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கே.ஆர்.எஸ். அணையின் நீர்தேக்கத்தை பார்வையிட்ட குமாரசுவாமி, அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நீர்தேக்கத்தில் உள்ள நீர் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வருகிறது. இங்குள்ள பயிர்களை காக்க இருமடங்கு நீரை திறந்துவிட வேண்டிய நிலைதான் நிலவுகிறது. எங்களது விவசாயிகள் இதன் காரணமாக எதிர்காலத்தில் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். இங்குள்ள நிலைமை கைமீறிவிட்டது."
"காவிரி நீர் மேலான்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு அரசு சரியான தகவல்களை வழங்கவில்லை. இந்த அரசாங்கம் காவிரி நீர் மேலான்மை ஆணையத்தை முதல் நாளில் இருந்தே, சமாதானப்படுத்த தவறிவிட்டது. அவர்கள் இந்த விவகாரத்தை எளிதாக நினைத்துவிட்டனர்," என்று தெரிவித்து உள்ளார்.
தமிழகத்திற்கு நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், எனவே முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று கோரி பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டு, நேற்று சட்டசபையை நாள் முழுவதும் சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்தி வைத்தார்.
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே கூட்டணி அரசு கவிழும் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழ்நிலையில், இன்று மதியம் முதல் மந்திரி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பாக்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கலின்போது சட்டசபையில் தொடர்ந்து அமளியை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜகவை சமாளிக்க ஜேடிஎஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆயத்தமாக உள்ளனர்.
இதற்கிடையே, பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் வகையில் அவர்களுக்கு முதல் மந்திரி குமாரசாமி முக்கிய பொறுப்புகள் வழங்கி உள்ளார். #KarnatakaBudget #HDKumaraswamy #RebelMLAs
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு சிறிய அளவில் திருத்தம் செய்தது. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவை குறைத்து, அதை பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு வழங்கியது. இந்த பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துள்ளது.
அதில் தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 4 மாநிலங்களின் பிரதிநிதிகளும் இடம் பெறுகிறார்கள். தமிழக அரசு தனது பிரதிநிதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக அரசு இதுபற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்து இருக்கிறார். இதற்கான ஆலோசனையில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக புதிய முதல்-மந்திரி குமாரசாமியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்.
இரு மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் காவிரி பிரச்சினை குறித்து அவர்கள் இருவரும் சுமார் 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். முதலில் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காவிரி பிரச்சினையில் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையே ஒரு இணக்கமான நல்லுறவு ஏற்பட வேண்டும் என்று கமல்ஹாசன் விரும்புகிறார். அதுபற்றி நாங்கள் பேசினோம்.
இரு மாநிலங்களும் பரஸ்பரம் இணக்கமான நல்லுறவை தொடர வேண்டும் என்று அவர் கூறினார். காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. சகோதரத்துவ மனப்பான்மையுடன் இரு மாநிலங்களும் நட்புறவோடு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார்.
கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு என இரு மாநில விவசாயிகளுமே எங்களுக்கு முக்கியமானவர்கள். காவிரி பிரச்சினையில் கர்நாடக விவசாயிகளுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை தான். இவற்றை பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். பிரச்சினைகளையும் இரு மாநில விவசாயிகள் சரிசமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும்.
இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
தமிழக மக்கள் சார்பில் நான் இங்கு வந்து கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்தேன். அவரும் கர்நாடக மக்கள் சார்பில் என்னிடம் பேசினார். இரு மாநிலங்களும் சகோதரத்துவ மனப்பான்மையுடன் காவிரி நீர் பிரச்சினையை அணுகி தீர்த்துக்கொள்ள வேண்டும். காவிரி பிரச்சினை குறித்து சில முக்கியமான விஷயங்களை கர்நாடக முதல்-மந்திரியிடம் எடுத்துக் கூறினேன். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வேண்டும் என்று கூறினேன். எனது உணர்வை அவரும் பிரதிபலித்தார். இந்த பேச்சுவார்த்தை உணர்வுப்பூர்வமாக இருந்தது.
குமாரசாமியின் பேச்சு எனது இதயத்தை நிரப்பிவிட்டது. காவிரி இல்லாமல் இரு மாநில மக்களும் வாழ முடியாது. நான் வக்கீல் கிடையாது. ஆனால் எனது தந்தை வக்கீலாக பணியாற்றியவர். எங்கள் குடும்பத்தில் பலர் வக்கீலாக இருக்கிறார்கள். அவர்கள் கூறும் ஆலோசனை என்னவென்றால், கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு மக்கள் ஒன்றுசேர வேண்டும் என்பது தான். இந்த பிரச்சினையில் நமது மனநிலை மாற வேண்டும்.
எங்களது கட்சி சிறிய கட்சி. நான் இப்போது தான் குழந்தையாக உள்ளேன். இப்போது தான் கட்சியே ஆரம்பித்துள்ளேன். எனக்கு எந்த சுமையும் இல்லை. நான் ‘ஈகோ’ பார்க்கவில்லை. அதனால் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக அணிலாக, பாலமாக, காலணியாக மாறவும் தயார். குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு கர்நாடகத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசியலை விட நமக்கு விவசாயிகளின் நலன் முக்கியம். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆணைய வழிகாட்டுதல்படி இரு மாநிலங்களும் நடந்து கொள்ளும் என்று நம்புகிறேன். சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் காவிரி பிரச்சினை மட்டுமல்ல, தேசத்தில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும். முதல்-மந்திரி குமாரசாமியின் பேச்சு பெருந்தன்மையாக இருந்தது. இது நீண்ட நட்பின் தொடக்கம் ஆகும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #Kamalhaasan #Kumaraswamy #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்