search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "swearing ceremony"

    பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தற்போது தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளார். இதேபோல் பினராயி விஜயனும் விழாவை புறக்கணித்துள்ளார்.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.  பாராளுமன்ற தேர்தல் களத்தில் மோடியும் மம்தாவும் மோதிக்கொண்ட நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்பது கேள்விக்குறியாகவே இருந்தது.



    ஆனால், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். பதவியேற்பு விழா என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வு என்பதால் கலந்துகொள்வதாக அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில், தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிய மம்தா, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன் என கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். எனினும், தவறான தகவலை பாஜகவினர் பரப்பி வரும் சூழ்நிலையில், பதவியேற்பு விழாவில் என்னால் பங்கேற்க இயலாது.

    மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறையால் 54 பேர் கொல்லப்பட்டதாக பாஜகவினர் கூறுவதாக ஊடகங்களில் செய்தியை பார்த்தேன். அவர்கள்  கூறுவதில் உண்மையில்லை. 54 பேரும் அரசியல் ரீதியாக கொல்லப்படவில்லை; தனிப்பட்ட பிரச்சினையால் கொல்லப்பட்டனர். பதவியேற்பு விழாவை அரசியல் ஆதாயத்திறக்காக எந்த கட்சியும் பயன்படுத்தக் கூடாது.” என கூறியுள்ளார்.

    இதேபோல் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும், மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டார். இத்தகவலை கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

    மோடியின் பதவியேற்பு விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்பதாக கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

    மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் விழாவில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் களத்தில் மோடியும் மம்தாவும் மோதிக்கொண்ட நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

    இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் தெரிவித்தார். பதவியேற்பு விழா என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வு என்பதால் கலந்துகொள்வதாகவும், பதவியேற்பு விழாவில் பங்கேற்பது தொடர்பாக பிற மாநில முதல்வர்களுடனும் பேசியிருப்பதாகவும் மம்தா கூறினார்.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் மற்றும் ஏராளமான கவுன்சிலர்கள் இன்று பாஜகவில் இணைந்தது திரிணாமுல் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையிலும் மம்தா, டெல்லி சென்று மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
    நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நாளை காலை பதவியேற்றுக் கொள்கின்றனர். #SCJudges #DineshMaheshwari #SanjivKhanna
    புதுடெல்லி:

    டெல்லி தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் கர்நாடக தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த 11ம் தேதி பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது.

    இதற்கிடையே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார். தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்தார்.



    இந்நிலையில், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நாளை காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.  #SCJudges #DineshMaheshwari #SanjivKhanna
    பாகிஸ்தானில் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பஞ்சாப் மாநில மந்திரி சித்துவுக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் ஜனாதிபதிக்கு அருகில் இருக்கை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ImranKhan #PakistanNewPM #NavjotSinghSidhu
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவரான இம்ரான் கான் இன்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழாவுக்கு நெருங்கிய நண்பர்கள் உட்பட சிலரையே இம்ரான் கான் அழைத்திருந்தார். அவ்வாறு முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    தனது நண்பரின் இந்த அழைப்பை ஏற்று சித்து இன்றைய பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அப்போது மரியாதை நிமித்தமாக பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜாவத் பஜ்வாவை கட்டியணைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கான விருந்தினர்களுக்கான இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் ஜனாதிபதி மசூன் கானுக்கு அருகே இந்திய மந்திரி சித்துவுக்கு இருக்கை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை விமர்சித்து பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இந்தியாவில் உள்ள காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது தொடர்பான விவகாரம் ஐ.நா சபையில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. #ImranKhan #PakistanNewPM #NavjotSinghSidhu
    பாகிஸ்தானில் ஆகஸ்ட் 11-ம் தேதி இம்ரான் கான் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pakistan #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த மாதம் 25-ம் தேதி நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி முதன்முறையாக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இருப்பினும் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கைவசம் இல்லாததால், சுயேட்சை மற்றும் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

    இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பதவியேற்பு விழாவில் இந்திய பிரதமர் மோடி உட்பட பல்வேறு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

    மோடிக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.



    இந்நிலையில், பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு ஊடகங்களில் பேசிய தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஃபவத் சவுத்ரி, முன்னர் இம்ரான் கானின் நண்பர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், நவ்ஜோத் சித், மற்றும் இந்தி நடிகர் அமீர் கான் ஆகியோருக்கும், இந்தியா, சீனா உட்பட சார்க் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது.

    இதையடுத்து தற்போது அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளதாவும், வெளிநாட்டு தலைவர்களை விடுத்து, நண்பர்களை மட்டும் அழைத்து, தனது பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த இம்ரான் கான் விரும்புவதாவும் ஃபவத் சவுத்ரி தெரிவித்துள்ளார். #Pakistan #ImranKhan
    பெங்களூருவில் இன்று நடைபெற்ற கோலாகல விழாவில், கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்றார். #KarnatakaCM #HDKumaraswamy

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 78 இடங்களையும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால் தொங்கு சட்டசபை அமைந்தது. இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால் கவர்னர் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்தார். அதோடு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமும் கொடுத்தார்.

    ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு கடந்த 19-ந் தேதி கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜனதா தளம் (எஸ்) தலைவர் குமாரசாமியை, ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து, மந்திரி பதவி பங்கீடு தொடர்பாக காங்கிரசுக்கும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. அதன்படி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு முதல்-மந்திரி பதவி உள்பட 12 மந்திரி பதவியும் மற்றும் துணை சபாநாயகர் பதவியும், காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி உள்பட 22 மந்திரி பதவியும் மற்றும் சபாநாயகர் பதவியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. காங்கிரசை சேர்ந்த ரமேஷ்குமார் சபாநாயகராக பதவி ஏற்பார்.



    கவர்னரின் அழைப்பை ஏற்று கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று (புதன்கிழமை) பதவி ஏற்றார். பெங்களூரு விதான சவுதா கட்டிடத்தின் முன்பகுதியில் பதவி ஏற்பு விழா இன்று மாலை 4:30 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. 

    குமாரசாமியுடன் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். பதவி ஏற்றவர்களுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. அதன் பிறகு மற்ற மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பதவி ஏற்பு விழாவுக்காக சுமார் 80 அடி நீளம், 60 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. அகன்ற திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. விதான சவுதாவை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பதவி ஏற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, வீரப்பமொய்லி, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



    விழா அரங்கில் உத்தரபிரதேசம் மாநில முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்ததை காண முடிந்தது. மகன் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்ற காட்சியை தேவகவுடாவும், அவரது மனைவியும் நெகிழ்ச்சியுடன் கண்டு மகிழ்ந்தனர். #KarnatakaCM #HDKumaraswamy
    ×