search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka Budget"

    கர்நாடக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் வகையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. #KarnatakaBudget #HDKumaraswamy #RebelMLAs
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், எனவே முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று கோரி பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டு, நேற்று சட்டசபையை நாள் முழுவதும் சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்தி வைத்தார்.

    பா.ஜனதாவினர் சட்டசபை நடவடிக்கைகளுக்கு குறுக்கீடு செய்யும் வகையில் தர்ணா போராட்டம் நடத்துவதாகவும், சபை சுமுகமாக நடைபெற ஒத்துழைத்தால், அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் முதல் மந்திரி குமாரசாமி கூறினார்.



    பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே கூட்டணி அரசு கவிழும் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

    இந்த சூழ்நிலையில், இன்று மதியம் முதல்  மந்திரி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பாக்கப்படுகிறது.

    பட்ஜெட் தாக்கலின்போது சட்டசபையில் தொடர்ந்து அமளியை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜகவை சமாளிக்க ஜேடிஎஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆயத்தமாக உள்ளனர்.

    இதற்கிடையே, பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் வகையில் அவர்களுக்கு முதல் மந்திரி குமாரசாமி முக்கிய பொறுப்புகள் வழங்கி உள்ளார்.  #KarnatakaBudget #HDKumaraswamy #RebelMLAs
    குமாரசாமி தாக்கல் செய்துள்ள கர்நாடக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று நடிகரும், முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் பிரமுகருமான அம்பரீஷ் கூறினார்.
    மண்டியா :

    மண்டியாவில் நடிகரும், முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் பிரமுகருமான அம்பரீஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் மண்டியா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக குறைந்தது ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வெறும் ரூ.162 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மண்டியா மாவட்ட மக்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.

    சுற்றுலாத்துறை மற்றும் தொழில் துறைக்காவது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று நினைத்தேன். அதுவும் இல்லை. புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

    கே.ஆர்.எஸ். அணை அருகே அமைந்துள்ள பிருந்தாவன் பூங்காவை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது அறிவிக்கப்பட்டதுதான். அதைத்தான் குமாரசாமியும் அறிவித்துள்ளார். ககனசுக்கி நீரீவீழ்ச்சி சுற்றுலா தலத்தை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ஒன்றுதான்.

    மண்டியாவில் உள்ள மிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்தவும், கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை போக்க, குடிநீர் திட்டத்தை செயல்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது 2 மட்டும்தான் மண்டியா மாவட்டத்திற்கு கிடைத்துள்ள புதிய திட்டங்கள் ஆகும்.

    இவ்வாறு அம்பரீஷ் கூறினார். 
    கர்நாடக பட்ஜெட்டில் மின் கட்டணம் - டீசல் விலையை உயர்த்தியதால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்கட்சி தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். #yeddyurappa #Karnatakabudget #kumaraswamy

    பெங்களூரு:

    கர்நாடக பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    முதல்-மந்திரி குமாரசாமி காங்கிரசின் கருணையால் தான் பதவியில் இருக்கிறேன், மக்களின் ஆதரவில் இல்லை என்று அவர் ஏற்கனவே கூறியதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார். குமாரசாமி அரசியல் கட்டாயத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்துகிறார்.

    அதே போல் காங்கிரஸ் கூட்டணியில் செயல்படும் மாநில அரசு பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாடு முரண்பாடாக உள்ளது. அதனால் மாநில பட்ஜெட், முரண்பாடான பட்ஜெட்டாக உள்ளது. முன்பு சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட் அமல்படுத்தப்படும் என்று கூறி இருக்கிறார். ஆனால் இந்த பட்ஜெட்டில் அதுபற்றி ஒரு விரிவான தகவல் எதுவும் இல்லை.

    காங்கிரஸ் உறுப்பினர்களே இந்த பட்ஜெட்டுக்கு அதிருப்தி அடைந்துள்ளனர். மண்டல ஏற்றத்தாழ்வு பிரச்சினைக்கு பட்ஜெட்டில் தீர்வு இல்லை. இது அண்ணன்-தம்பி பட்ஜெட். அவர்கள் சார்ந்துள்ள ராமநகர், மண்டியா மாவட்டங்களின் பட்ஜெட் இதுவாகும். இதன் மூலம் கர்நாடக மக்களை குமாரசாமி அவமதித்துவிட்டார். ஆட்சியில் இல்லாதபோது நீர்ப்பாசனத்துறை பற்றி குமாரசாமி அதிகமாக பேசினார்.


    ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த துறைக்கு முன்னுரிமை கொடுக்க அவர் தவறிவிட்டார். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிரானது. வேலை இல்லாத இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். டீசல் விலையை உயர்த்தி இருப்பதால், ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்.

    அன்ன பாக்ய திட்டம் மத்திய அரசுக்கு சேர்ந்தது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு தலா 7 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதை 5 கிலோவாக குறைப்பதாக குமாரசாமி அறிவித்துள்ளார். இது ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும். மின் கட்டண உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விவசாய கடன் தள்ளுபடி வி‌‌ஷயத்தில் குமாரசாமி நேர்மையாக செயல்படவில்லை.

    விவசாயிகளின் கடனில் ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி செய்வதாக கூறி இருக்கிறார். விவசாயிகளுக்கு குமாரசாமி துரோகம் செய்துவிட்டார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர் தவறிவிட்டார். மகளிர் சுயஉதவி குழுக்கள், மீனவர்கள், நெசவாளர்களின் கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி வாக்குறுதி அளித்து இருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவும் அவர் தவறிவிட்டார். இந்த வாக்குறுதிகளை கூறி தான் குமாரசாமி கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இது கர்நாடகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பட்ஜெட் இல்லை.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார். #yeddyurappa #Karnatakabudget #kumaraswamy

    2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அதில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. #KarnatakaBudget
    பெங்களூரு:

    2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அதில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல், மதுபானம், மின்சாரம் மீதான வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி குமாரசாமி, 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 488 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ரூ.106 கோடி உபரி பட்ஜெட் ஆகும்.



    பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இந்த சபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்படும். அதுபோல் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    * 1,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு தொடங்கப்படும்

    * அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும்.

    * 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள 28 ஆயிரத்து 847 பள்ளிகள் அருகாமையில் உள்ள 8 ஆயிரத்து 530 பள்ளிகளுடன் இணைக்கப்படும்.

    * கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரையில் நிலுவையில் உள்ள அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். அதாவது ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    * கடனை சரியாக செலுத்தி வரும் விவசாயிகளுக்கு மொத்த கடனில் ரூ.25 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

    * சம்பந்தப்பட்ட அமைப்பின் அனுமதியை பெற்று மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பெங்களூரு 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் புதிதாக 95 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படும்.

    * பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரி தலா 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    * மதுபானங்கள் மீதான கூடுதல் கலால் வரி 4 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    * மின்சார பயன்பாடு மீதான வரி 9 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    இவ்வாறு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.  #KarnatakaBudget #Tamilnews
    பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என பட்ஜெட் உரையில் அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். #KarnatakaBudget
    பெங்களூர்:

    கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னர் அம்மாநில முதல்வர் குமாரசாமி இன்று பொது பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது 34 ஆயிரம் கோடி அளவிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் அறிவித்தார்.

    மேலும், பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க மத்திய அரசின் அனுமதி பெற்று காவிரி நதியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என அவர் அறிவித்தார். மேற்கண்ட இரண்டு அறிவிப்புகளுக்கும் அம்மாநில விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனை அடுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது ரூ.34 ஆயிரம் கோடி அளவிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். #KarnatakaBudget2018 #KarnatakaFarmLoanWaives
    பெங்களூரு:

    கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்தால் முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக பிரச்சாரத்தின்போது குமாரசாமி வாக்குறுதி அளித்தார். ஆனால் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலையில், காங்கிரசுடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. குமாரசாமி முதல்வராக பதவியேற்றார்.

    ஆனால், குமாரசாமி தான் அளித்த வாக்குறுதியின்படி விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று பா.ஜனதா குற்றம்சாட்டி வந்தது.  இதற்கு பதில் அளித்த குமாரசாமி, தற்போது கூட்டணி ஆட்சி நடந்து வருவதால், விவசாய கடன் தள்ளுபடி பற்றி காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறினார்.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் குமாரசாமி இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது 34 ஆயிரம் கோடி அளவிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதனால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். #KarnatakaBudget2018 #KarnatakaFarmLoanWaives
    கர்நாடக சட்டசபையில் அடுத்த மாதம் ஜூலை 5-ந்தேதி முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் விவாதம் நடைபெறும். #KarnatakaBudget #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மந்திரி சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு மந்திரி கிருஷ்ணபைரே கவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் - ஜே.டி.எஸ். கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி தொடங்குகிறது.



    முதல் நாளில் கவர்னர் வி.ஆர். வாலா உரையாற்றுகிறார். முதல்-மந்திரியும், நிதித்துறையை கூடுதலாக கவனிப்பவருமான குமாரசாமி ஜூலை 5-ந் தேதி கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் விவாதம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaBudget #Kumaraswamy
     
    ×