search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lokayukta"

    • கர்நாடகாவில் இன்று அதிகாலை முதல் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீார் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • சோதனை நடந்து வரும் இடங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை முதல் 10 மாவட்டங்களில் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக பொறியாளர் அனுமந்தராயப்பா, பொதுப்பணித்துறை மாண்டியா கோட்ட பொறியாளர் ஹர்ஷா, சிக்மகளூர் வணிகவரி அலுவலர் நேத்ராவதி, ஹாசன், உணவு ஆய்வாளர் ஜெகநாத் ஜி கொப்பல், வனத்துறை அலுவலர் ரேணுகாமா, சாம்ராஜ்நகர் ஊரக குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர் ரவி, மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணை அலுவலர் யக்ஞேனந்திரா, பெல்லாரி உதவி பேராசிரியர் ரவி, விஜயநகர மாவட்ட எரிசக்தி துறை அதிகாரி பாஸ்கர், மங்களூரு மெஸ்தாம் அதிகாரி சாந்தகுமார் ஆகியோருக்கு தொடர்புடைய 40 இடங்களில் இந்த சோதனை நடந்துவருகிறது என லோக் ஆயுக்தா வட்டாரங்கள் தெரிவித்தன.

    குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், பினாமிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், பண்ணை வீடுகள், வணிக வளாகங்களில் இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது.

    லோக் ஆயுக்தா போலீசார் 40 இடங்களில் நடத்தி வரும் சோதனையால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சோதனை நடந்து வரும் இடங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
    • தாசில்தாரின் வீட்டில் இருந்து சொத்துக்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    விஜயபுரா:

    கர்நாடக மாநிலம் விஜயபுரா மற்றும் பாகல்கோட் மாவட்டங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள அரசு அதிகாரிகளின் வீடுகளில், லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 20 அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் கே.ஆர்.புரா தாசில்தார் அஜித் ராய் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 லட்சம் பணம் கட்டுக்கட்டாக வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், சொத்துக்கள் தொடர்பான பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஊழல் செய்வதை தடுக்கும் நோக்கில் லோக் ஆயுக்தாவின் லஞ்ச ஒழிப்புத்துறை இயங்கி வருகிறது. 

    லோக் ஆயுக்தா வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு வழக்கின் மீதான விசாரணைணை ஜூலை மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். #Lokayukta #SupremeCourt
    புதுடெல்லி:

    தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை தமிழக அரசு நியமித்தது.

    இதில் ராஜாராம், ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட், அவர்கள் இருவரின் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்தது.

    இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த மாதம் 29-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட், மதுரை ஐகோர்ட் விதித்த இடைக்கால தடையை நீக்க முடியாது என்று கூறியது. அத்துடன், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு எதிர்மனுதாரர் ராஜேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி, எதிர்மனுதாரர் ராஜேந்திரன் தரப்பில் மூத்த வக்கீல் சிராஜூதீன் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும் இதில் அவசரம் எதுவும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், வழக்கை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.  #Lokayukta #SupremeCourt 
    லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட 2 பேரை நியமித்த உத்தரவுக்கு தடை விதித்து, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #Lokayukta #HighCourtMaduraiBench
    மதுரை:

    கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நம் நாட்டில் ஊழலை முழுவதும் ஒழிக்கும் வகையில் லோக் ஆயுக்தா சட்டம் 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால் முறையாக விசாரிப்பது லோக் ஆயுக்தாவின் கடமை. தமிழகத்தில் கடந்த ஆண்டு இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.

    இந்த அமைப்பின் தலைவராக ஐகோர்ட்டு நீதிபதி அல்லது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் 25 ஆண்டு பணியாற்றிய அனுபவம் உள்ளவரை நியமிக்க வேண்டும். 4 உறுப்பினர்களில் சட்டத்துறையைச் சேர்ந்த 2 பேரையும், பிற துறைகளில் பணியாற்றிய 2 பேரையும் நியமிக்க வேண்டும்.

    இந்த நிலையில் லோக் ஆயுக்தாவின் தலைவராக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டத்துறையை சேர்ந்த 2 உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டத்துறையை சேராத உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் என்பவரும், மற்றொரு உறுப்பினராக ஆறுமுகம் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த 1-ந் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதில் ராஜாராம், ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே அவர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதிகள் கூறும்போது, “தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தியதை மகிழ்ச்சியுடன் இந்த கோர்ட்டு வரவேற்கிறது. ஆனால் அதன் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம், அ.தி.மு.க.வில் உள்ள ஆறுமுகம் ஆகியோர் விதிகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரையும் லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக நியமனம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

    ஆனால் லோக் ஆயுக்தாவை தொடங்குவதற்கும், அதன் தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள் செயல்படவும் எந்த தடையும் கிடையாது. இந்த வழக்கு குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். அடுத்த விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #Lokayukta #HighCourtMaduraiBench
    லோக் ஆயுக்தாவில் விசாரணை வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். #jawahirullah #Lokayukta

    சென்னை:

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைக்கப்பட உள்ளது. அதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த அமைப்பிற்கான சட்டவிதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது, அந்த விதிகளில் குறிப்பிட்ட சில விதிமுறைகள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. அதில் “லோக் ஆயுக்தா அமைப்பின் விசாரணைகள் ரகசியமாக நடைபெறும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் மீது நடத்தப்படும் ஊழல் விசாரணைகளையும், நடவடிக்கைகளையும் ரகசியமாக வைத்துக்கொள்வது ஏற்றுக்கொள்ள இயலாது. இதுபோன்ற நடவடிக்கைகளால் குற்றவாளிகள் மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்படாமல் இருந்தால் அவர்கள் மீண்டும் அதே குற்றத்தைச் செய்யத் தூண்டுதலாக இருக்கும்.

    நீதியியல் நிர்வாகத்தில் அனைத்தும் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்பது அடிப்படைக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டை மீறி தமிழக அரசின் லோக் ஆயுக்தா அமைப்பு செயல்பட உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள இயலாது.

    புகார் அளித்தவர் தமது விவரங்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரினால் அதில் ரகசியம் பாதுகாக்கலாமே தவிர, தமிழக அரசே முன்வந்து லோக் ஆயுக்தா புகார்தாரர், மற்றும் அவரால் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஆகியோரின் விவரங்கள் உள்ளிட்டவற்றை ரகசியமாக வைப்பது இந்த லோக் ஆயுக்தா அமைப்பை பலவீனப்படுத்தும் சூழல் உருவாகும்.

    எனவே, தமிழக அரசின் இந்த ரகசிய விசாரணை என்ற விதிமுறையை உடனே மாற்றி, விரைவில் லோக் ஆயுக்தா அமைப்பைத் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #jawahirullah #Lokayukta 

    லோக் ஆயுக்தா அமைப்பை ஒரு காகிதப்புலி போல் ஆக்கி காலில் போட்டு மிதிக்க நினைக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #Lokayukta
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 128 நாட்கள் ஆன பிறகு “பவர்” இல்லாத லோக் ஆயுக்தா சட்டத்திற்கு அ.தி.மு.க அரசு இப்போது “பல்” இல்லாத விதிகளை உருவாக்கியிருப்பது ஊழல் ஒழிப்பின் அடிப்படை நோக்கத்தையே உருக்குலைத்து கேலிக்கூத்தாக்கி இருக்கிறது.

    அ.தி.மு.க அமைச்சர்கள் மீதோ, முதலமைச்சர் மீதோ எந்தவொரு ஊழல் விசாரணையும் நடத்தி விடாத அளவில் ஒரு லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கியது சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆர்வலர்களுக்கு பேரதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

    அப்படிப்பட்ட லோக் ஆயுக்தாவிற்கும் கூட உரிய காலத்தில் விதிகளை உருவாக்காமல், தலைவரையும் நியமிக்காமல் அ.தி.மு.க அரசு தாமதம் செய்தது. மீண்டும் உச்சநீதிமன்றம் எச்சரித்தப் பிறகு இப்போது லோக் ஆயுக்தா விதிகளை உருவாக்கியிருக்கிறது.

    ஊழல் புகார்கள் மீது ரகசிய விசாரணை நடத்த வேண்டும்; புகாருக்குள்ளான ஊழல்வாதி குறித்து பத்திரிகைகளுக்கோ, பொது மக்களுக்கோ தெரிவிக்கக் கூடாது; விசாரணை நடக்கும் போதோ அல்லது விசாரணை முடிந்த பிறகோ கூட அந்த விவரங்களை தெரிவிக்கக் கூடாது என்றெல்லாம் வகுத்துள்ள விதிகள் அ.தி.மு.கவில் உள்ள ஊழல் அமைச்சர்களையும், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள முதல்- அமைச்சர் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளவும் வகுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.


    லோக் ஆயுக்தாவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் “தேடுதல் குழு” உறுப்பினர்களை எந்த நேரத்திலும் மாற்றலாம் என்று கொண்டு வரப்பட்டுள்ள விதி, அரசுக்கு விரும்பாத யாரையும் “தேடுதல் குழு” லோக் ஆயுக்தா அமைப்பிற்கு தலைவராகவோ, உறுப்பினராகவோ பரிந்துரை செய்து விடக்கூடாது என்ற இழிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெரிகிறது.

    அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கும், ஊழல் ஒழிப்பு பணியிலும் ஈடுபட வேண்டிய லோக் ஆயுக்தா அமைப்பு ஊழல் விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும் என்று கூறியிருப்பது ஊழல் ஒழிப்பின் அடித்தளத்தையே தகர்த்து எறியும் அ.தி.மு.க அரசின் கேடு கெட்ட நடவடிக்கை மட்டுமல்ல ஊழலே எங்கள் வாழ்க்கையாக இருக்கும் போது நாங்கள் எப்படி அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பது போல் அமைந்துள்ளது.

    ஆகவே, லோக் ஆயுக்தா அமைப்பிற்கு நேர்மையான ஒரு தலைவரை நியமிக்கவும், ஊழல்வாதிகள் மீது நடைபெறும் விசாரணைகள் ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக பொது மக்களுக்குத் தெரியும்படி நடக்கவும் “ரகசிய விசாரணை” என்ற விதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், லோக் ஆயுக்தா அமைப்பை ஒரு “காகிதப்புலி” போல் ஆக்கி காலில் போட்டு மிதிக்க நினைக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin #Lokayukta
    தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி முதல் லோக் ஆயுக்தா அமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. #SupremeCourt #LokAyukta #TamilnaduGovernment
    புதுடெல்லி:

    அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக் பால், மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கடந்த 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, அனைத்து மாநிலங்களும் ஓராண்டில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஆனால் 20 மாநிலங்கள் மட்டுமே லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கி உள்ளன. தமிழ்நாடு, தெலுங்கானா, புதுச்சேரி, காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா உள்ளிட்ட 12 மாநிலங்கள் இதுவரை லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தவில்லை.

    எனவே தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களும் உடனடியாக லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ உத்தரவிடக்கோரி அஸ்வினி உபாத்தியாயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இதேபோல் தமிழ் நாட்டில் இருந்து, திருச்சியைச்சேர்ந்த சமூக சேவகர் குருநாதன் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி விசாரணைக்கு வந்த போது, லோக்பால் அமைப்பை உருவாக்க காத்திருக்கிறோம், அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது? என்பதை பொறுத்து மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

    இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘மத்திய அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை, மத்திய அரசுக்காக மாநிலங்கள் ஏன் காத்திருக்க வேண்டும், உங்களால் சுயமாக முடிவு எடுக்க முடியாதா?‘ என்று கேள்வி எழுப்பிதோடு, லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகளை உடனே தொடங்குமாறு உத்தரவிட்டனர்.

    இந்த உத்தரவின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் 9-ந் தேதி தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இது தொடர்பான பிரமாண பத்திரத்தை மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த தமிழக அரசு, லோக் ஆயுக்தா அமைக்க 2 மாதகால அவகாசம் கேட்டது. அதை ஏற்ற நீதிபதிகள் 2 மாதத்தில் எந்த தாமதமும் இல்லாமல் லோக் ஆயுக்தா அமைப்பை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் 2 மாத காலத்துக்குள் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை.

    இந்த நிலையில் மேற்படி வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, “லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கால அவகாசம் வழங்கியும் அதை தமிழக அரசு முறையாக பயன்படுத்தவில்லை” என்று வேதனை தெரிவித்தார்.

    மேலும், “இதுவரை தமிழக அரசு லோக் ஆயுக்தாவை அமைக்காதது ஏன்? இன்னும் காலதாமதம் செய்ய விரும்புகிறதா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

    அத்துடன், தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களும் லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை மதியம் 2 மணிக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன்படி மதியம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தாத மாநிலங்கள் ஒவ்வொன்றும் அதற்கான விளக்கத்தை அளித்தன.

    தமிழக அரசு தனது விளக்கத்தில், லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கு இன்னும் 3 மாத காலம் கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும், அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி முதல் வாரத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கி விடுவோம் என்றும் தெரிவித்தது.

    அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழகத்துக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கினர். அத்துடன், தமிழகத்தில் பிப்ரவரி 1-ந் தேதி முதல் லோக் ஆயுக்தா அமைப்பு செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    இதேபோல் இந்த வழக்கில் மணிப்பூர் மாநிலத்துக்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. மேற்கு வங்காள மாநிலத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் லோக் ஆயுக்தா அமைப்பு செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

    லோக் ஆயுக்தாவை ஏற்படுத்தாத பிற மாநிலங்களும் உடனடியாக லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.  #SupremeCourt #LokAyukta #TamilnaduGovernment
    தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. #Lokayukta #TNLokayukta
    புதுடெல்லி:

    முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் என பொது ஊழியர்கள் செய்யும் ஊழல்களை விசாரிப்பதற்காக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி சில மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு செயல்பட்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை.

    இந்த மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.  வழக்கு விசாரணையின்போது, லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது.



    இந்நிலையில், லோக் ஆயுக்தா தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லோக் ஆயுக்தா அமைக்காதது குறித்து தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் லோக் ஆயுக்தா அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிற்பகல் 2 மணிக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

    இதையடுத்து பிற்பகல் மீண்டும் விசாரணை தொடங்கியபோது தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிப்ரவரி மாதத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசுக்கு மூன்று மாதம் அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. #Lokayukta #TNLokayukta

    சட்டம் இயற்றி 50 நாட்கள் ஆன பிறகும் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்காமல் இருப்பது ஏன்? என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #lokayukta

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஊழல் சேற்றில் ஊறித் திளைக்கும் அரசு ஒருபோதும் ஊழலை ஒழிக்காது என்பது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு விவகாரத்தில் மீண்டும் ஒருமுறை உறுதியாகியிருக்கிறது. ஊழலை ஒழிப்பதற்கான் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில், அச்சட்டத்தின்படி லோக்ஆயுக்தா அமைப்பை தமிழக அரசு இன்னும் ஏற்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.

    இந்தியாவில் 22 மாநிலங்களில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பு நடைமுறையில் இருக்கும் நிலையில், தமிழகத்திலும் அத்தகைய அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திராவிடக் கட்சிகள் திட்டமிட்டு அத்தகைய அமைப்பை ஏற்படுத்தாமல் இருந்து விட்ட நிலையில், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

    இதை வலியுறுத்தி எனது தலைமையில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றமும் இந்த வி‌ஷயத்தில் கண்டிப்புக் காட்டியதால் வேறு வழியின்றி கடந்த ஜூலை 9-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பெயரளவில் விவாதம் நடத்தி இதற்கான சட்டத்தை பினாமி அரசு நிறைவேற்றியது. நிறைவேற்றப்பட்ட சட்டம் தொடர் நடவடிக்கைகளின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    லோக் ஆயுக்தா சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 9-ந்தேதியே நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில், உரிய அனுமதிகள் பெறப்பட்டு லோக் ஆயுக்தா சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும்.

    அதனடிப்படையில் லோக் ஆயுக்தா தேர்வுக்குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அக்குழுவின் கூட்டத்தை உரிய முன் அவகாசத்தில் கூட்டி, லோக் ஆயுக்தாவை தேர்ந்தெடுத் திருக்க வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் ஜூலை மாதம் 10-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.


    ஆனால், உச்சநீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில், கெடு முடிவதற்கு ஒரு நாள் முன்பாக லோக்ஆயுக்தா சட்டத்தை பினாமி அரசு நிறைவேற்றியது. இதனால் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான கெடுவை செப்டம்பர் 10-ந்தேதி வரை நீதிபதிகள் நீட்டித்தனர்.

    நீட்டிக்கப்பட்ட கெடு முடிவதற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் லோக்ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றியதைத் தவிர பினாமி அரசு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. லோக் ஆயுக்தா சட்டத்தை அரசிதழில் நிறைவேற்றுதல், தேர்வுக்குழுவுக்கான அரசாணை வெளியிடுதல், தேர்வுக்குழு கூட்டத்தை அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒத்து வரும் நாளில் கூட்டுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளுமே கால அவகாசம் தேவைப்படுபவை என்பதால் உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது சாத்தியமல்ல.

    உச்சநீதிமன்றம் பலமுறை எச்சரித்தும், கண்டித்தும் கூட லோக் ஆயுக்தாவை அமைக்க அரசு முன்வர வில்லை என்றால், அந்த அமைப்புக்கு தமிழகத்தை ஆளும் பினாமி ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு அஞ்சுகின்றனர் என்பதை அறியலாம்.

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்தா சட்டம் பல் இல்லாத சட்டம்; அச்சட்டத்தில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. அரசு நிர்வாகத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுவது ஒப்பந்தங்களை வழங்குவதிலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களிலும் தான்.

    ஆனால், இவை இரண்டிலும் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரம் லோக் ஆயுக்தாவுக்கு இல்லை. அதேபோல், அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்த புகார்களை லோக் ஆயுக்தா நேரடியாக விசாரிக்க முடியாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

    லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக அப்பழுக்கற்ற பின்னணி கொண்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியோ, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியோ தான் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கூட லோக் ஆயுக்தாவாக நியமிக்கப்படலாம் என்று அரசு கூறுகிறது.

    இதற்கெல்லாம் மேலாக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், சட்டப்பேரவைத் தலைவர் ஆகியோரடங்கிய குழு தான் லோக் ஆயுக்தாவை தேர்ந்தெடுக்கும் என்ற அளவுக்கு லோக் ஆயுக்தா சட்டம் வலுவற்றதாக உள்ளது.

    இத்தகைய பொம்மை அமைப்பை ஏற்படுத்துவதற்கே தமிழக ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள் என்றால், அவர்கள் எந்த அளவுக்கு ஊழல் செய்திருக்க வேண்டும்; பொது நிதியை கொள்ளையடித்திருக்க வேண்டும் என்பதை மக்கள் யூகித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

    லோக் ஆயுக்தாவை அமைப்பதற்குத் தவறியதற்காக வரும் செப்டம்பர் 10-ந்தேதி உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தால் கூட, அதை அரசு துடைத்துக் கொள்ளுமே தவிர லோக் ஆயுக்தா அமைத்து மாட்டிக் கொள்ளாது.

    அதே நேரத்தில் ஊழலில் திளைக்கும் இந்த அரசு வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #lokayukta

    லோக் ஆயுக்தா, லோக்பால் அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். #SC #Lokayukta
    புதுடெல்லி:

    அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை விசாரிக்க வகை செய்யும் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் இயற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து தமிழக சட்டசபையில் சமீபத்தில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில் லோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லோக் ஆயுக்தா, லோக்பால் அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதற்கு பதில் அளித்த மத்திய அரசு வக்கீல், “நாளை மறுநாள் (19-ந் தேதி) தேர்வுக்குழு கூட உள்ளதாக தெரிவித்தார்.

    அதை தொடர்ந்து கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் குறித்தும் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் வருகிற 23-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர். மேலும் வழக்கை 24-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். #SC #Lokayukta
    தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்திருந்தால் லோக் ஆயுக்தாவில் புகார் செய்து நிரூபிக்கலாம் என்று பாரதிய ஜனதாவுக்கு தம்பிதுரை பதில் அளித்துள்ளார்.#ADMK #ThambiDurai #BJP
    கரூர்:

    கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போதே எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க தமிழகத்தில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் விவரம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய அரசுதான் பல்வேறு காரணங்களால் இத்திட்டத்தை கொண்டு வராமல் காலம் தாழ்த்தி இருக்கிறது. தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க உள்ளது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்ததை பெருமையாக பேசி வருகின்றனர். அதனை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கி வருவதால் இதனை செயல்படுத்துவதாக கூட எடுத்து கொள்ளலாம்.

    பிரதமர் நரேந்திரமோடி எங்கள் நண்பர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் ஆட்சியை பற்றி குறை சொன்னால் ஏற்றுக் கொள்ளமாட்டோம். தமிழகத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதனை தடுக்க ஏதேனும் இதுவரை முயற்சி செய்துள்ளாரா? இவை அனைத்தும் அ.தி.மு.க. அரசை குறை கூறும் நோக்கில் கூறப்படும் பொய் குற்றச்சாட்டுகள். ஆதாரம் இருந்தால் பொன். ராதாகிருஷ்ணன் நிரூபிக்கட்டும்.


    சென்னை வந்திருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் மலிந்து இருப்பதாக கூறியுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் என்று கூறிய பா.ஜ.க. இதுவரை எத்தனை ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மேல்முறையீடு செய்ய பா.ஜ.க. அரசு மெத்தனமாக செயல்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் நடந்த ஊழல்களில் எதற்கான தீர்வை பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. தமிழக அமைச்சர்கள் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் அதை நிரூபிக்க வேண்டும். லோக் ஆயுக்தாவில் பா.ஜ.க.வினர் புகார் தெரிவிக்கலாம். எதையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 20 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் கொள்கை ஏற்புடையது அல்ல. தமிழக கலாச்சாரத்திற்கு இந்த கொள்கை ஒத்துவராது. உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தி.மு.க. தான் கோர்ட்டுக்கு சென்றது. அதற்காக உள்ளாட்சி நிதி ரூ.2ஆயிரம் கோடியை பெற முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் தம்பிதுரையிடம் நிருபர்கள், அ.தி.மு.க. கட்சியை கைப்பற்றி இரட்டை இலை சின்னத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைவர் தீபா கூறியுள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், தீபா யார்? அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றார்.

    பேட்டியின் போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்,கீதா எம்.எல்.ஏ. உடனிருந்தனர். #ADMK #ThambiDurai
    லோக் ஆயுக்தா மசோதா மீதான விவாதம் தமிழக சட்டசபையில் நடந்து வரும் நிலையில், பல அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பிய திமுக அமைச்சரின் விளக்கத்தில் திருப்தி அடையாததால் வெளிநடப்பு செய்தனர். #TNAssembly #Lokayukta #DMK
    சென்னை:

    தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தாக்கல் செய்தார். பிற்பகலில் மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் முக ஸ்டாலின் கூறியதாவது:-

    லோக் ஆயுக்தா கொண்டு வருவதில் திமுகவுக்கு மகிழ்ச்சி. இந்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்யும் குழுவில் ஐகோர்ட் நீதிபதி ஒருவரை சேர்க்க வேண்டும்.

    மற்ற மாநிலங்களில் முதல்வரை விசாரிக்கலாம் என தெளிவாக உள்ளது. இந்த மசோதாவில் அமைச்சர்கள் என குறிப்பிட்டு முதல்வரையும் சேர்த்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்தங்கள் குறித்து இந்த அமைப்பில் முறையிட முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

    என அவர் கூறினர். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத திமுக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

    இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், அதிகாரம் இல்லாத அமைப்பாக லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என்றார்.
    ×