தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு

தலைவராக சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பி. ராஜமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டார்.நீதி சாராத 2 உறுப்பினர்களாக வி.ராமராஜ், ஆறுமுக மோகன் அலங்காமணி நியமிக்கப்பட்டனர்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு
Published on

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் பதவி ஏற்றுக்கொண்டார். உறுப்பினர்களாக ராமராஜ், ஆறுமுக மோகன் அழகுமணி ஆகியோரும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவராக சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராஜமாணிக்கத்தை நியமித்து கவர்னர் உத்தரட்டார். மேலும் நீதி சாராத 2 உறுப்பினர்களாக, மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஷனின் தலைவர் வி.ராமராஜ் (நாமக்கல்) மற்றும் வருமான வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன்னாள் உறுப்பினர் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில்தான் இன்னு பதவி ஏற்றுக்கொண்டனர்.

லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம் 17.4.2027 வரை பதவி வகிப்பார். மற்ற 2 உறுப்பினர்கள் தங்கள் 70 வயது வரையிலோ அல்லது 5 ஆண்டுகள் வரையிலோ, இதில் எது முதலில் வருகிறதோ? அதுவரையில் பதவியில் நீடிப்பார்கள்.

லோக் ஆயுக்தா தலைவராக பதவி ஏற்றுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ராஜமாணிக்கம் 31.5.1959-ம் ஆண்டு பிறந்தவர். 1983-ம் ஆண்டு வக்கீலாக பணியை தொடங்கி, அதன்பின்னர் மாவட்ட நீதிபதி, மாவட்ட தலைமை நீதிபதி என படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். 2016-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு பதிவாளராக பதவியேற்ற அவர் அடுத்த ஆண்டில் (2017) சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனார். 30.5.2021 அன்று நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் நீதி பிரிவு உறுப்பினராக 18.4.2022 முதல் 19.8. 2024 வரை பணியாற்றினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com