search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செந்தில் பாலாஜி ஜாமின் மனு- அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
    X

    செந்தில் பாலாஜி ஜாமின் மனு- அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

    • செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
    • கடைநிலை ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் சஸ்பெண்ட்.

    ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் 2வது மனு மீது அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே விசாரணையின்போது, 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள அமைச்சர் இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்திற்கு சொல்கிறீர்கள்? என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.

    கடைநிலை ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரே? என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது.

    Next Story
    ×