search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாரதியார் பல்கலைக்கூட முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்-மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    பாரதியார் பல்கலைக்கூட முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்-மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

    • பாரதியார் பல்கலைக் கூடத்தின் பொறுப்பு முதல்வர் ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி. விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டவர்.
    • காசாளர் விடுமுறையில் இருக்கும் போது, அவருக்குத் தெரியாமல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் பணத்தை எடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    பாரதியார் பல்கலைக் கூடத்தின் பொறுப்பு முதல்வர் ஏ.ஐ.சி.டி.இ., யு.ஜி.சி. விதிகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டவர். இவர் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்ட பின் தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பல்கலைக் கூடத்திற்கு 8 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் பெரும் ஊழல், முறைகேடு, விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன.

    முதுகலைப் படிப்பு தொடங்குதாக கூறி ரூ.5 லட்சம் பல்கலைக்கூட வங்கிக் கணக்கில் இருந்து பொறுப்பு முதல்வர் எடுத்துள்ளார். காசாளர் விடுமுறையில் இருக்கும் போது, அவருக்குத் தெரியாமல் உரிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் பணத்தை எடுத்துள்ளார். இப்பணம் என்ன ஆனது என்று இன்றுவரை தெரியவில்லை.

    பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரின் விதிமீறல்கள், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் குறித்து அரசுக்கும், உயரதிகாரிகளுக்கும் ஆதா ரங்களுடன் பல மனுக்கள் அனுப்பி உள்ளோம். ஆனால், அம்மனுக்கள் மீது இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர், துறைச் செயலர் இதில் தலையிட்டு, அரசு நிதியை முறைகேடு செய்த பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு சுகுமாரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×