என் மலர்
நீங்கள் தேடியது "CRPF"
- ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
- தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சி.ஆர்.பி.எப் துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் பணியிடங்களைத் தேர்வு செய்ய மே 8-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில் ஜூலை மாதம் இணைய வழி எழுத்து தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சி.ஆர்.பி.எப் எனப்படும் துணை ராணுவப் படையில் ஆட்களை சேர்க்க நடைபெறும் எழுத்து தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும்தான் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது.
அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை ராணுவப் படையில் வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர், இரு வர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.
பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை வேட்டையாட சிறப்பு தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.
இந்நிலையில் விசாகப்பட்டினத்தின் பேடாபயலு பகுதியில் நக்சலைட்கள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று அதிகாலை சிஆர்பிஎப் மற்றும் மாநில போலீசார் அங்கு சென்று, அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் முடிவடைந்த நிலையில், ஒரு சிஆர்பிஎப் வீரர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #AndraNaxal #ShotDead
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி 2,500 பாதுகாப்பு படையினர் (சி.ஆர்.பி.எப்.) 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்து தீவிரவாதி மோத செய்தான்.
இதில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். இது நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
தாக்குதலை நடத்தியது உள்ளூரைச் சேர்ந்த 22 வயது ஆதில் அகமதுதர் என்பது தெரிந்தது. அவன் 350 கிலோ வெடிமருந்து நிரப்பிய காரை ஓட்டி வந்து தாக்குதல் நடத்தியதும் தெரிந்தது.
இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இந்த தாக்குதல் காஷ்மீர் இளைஞர்கள் மூலம் நடத்தப்படும் என்றும் கூறி உள்ளது.

சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் (புல்வாமா) காஷ்மீர் மக்கள் மீதான அட்டூழியங்களுக்காக நடத்தப்பட்டது. பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் இருக்கும் வரை தொடர்ந்து அழுகுரல் கேட்டு கொண்டேதான் இருக்கும்.
ராணுவம் இங்கு இருக்கும் வரை உங்களது வீரர்களின் சவப்பெட்டிகள் நிரம்பி கொண்டே இருக்கும். நாங்கள் சாக இருக்கிறோம். ஆனால் உங்களை வாழவிட அனுமதிக்க மாட்டோம். எங்கள் உயிர்களை தியாகம் செய்ய துணிந்து விட்டோம்.
சரண் அடைவதை விட இறப்பதற்கே நாங்கள் முன்னுரிமை கொடுக்கிறோம். 15 வயது சிறுவர் கூட தற்கொலை படை பயங்கரவாதியாக மாறி ராணுவ வாகனத்தை தகர்க்கும் நாள் வெகு தூரம் இல்லை. அவர்கள் (ராணுவம்) இங்கு இருக்கும்வரை இந்தகைய தாக்குதல் நீடிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PulwamaAttack #CRPF #HizbulMujahideen #RiyazNaikoo
புல்வாமா நகரில் கடந்த வியாழக்கிழமை ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தற்கொலை தாக்குதலை நடத்தியவன் பெயர் ஆதில் அகமதுதார்.
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவனை மிகவும் திட்டமிட்டு ஜெய்ஷ்-இ- முகமது தலைவன் மசூத் அசார் தேர்வு செய்து இருந்தான்.
பாகிஸ்தான் உள்பட வெளிநாட்டு பயங்கரவாதிகளை தாக்குதலுக்கு பயன்படுத்தினால் சர்வதேச அளவில் பாகிஸ்தான் அரசுக்கு குறிப்பாக இம்ரான் கானுக்கு நெருக்கடி வரும் என்பதால் காஷ்மீரைச் சேர்ந்த ஆதிலை தேர்வு செய்துள்ளனர். இவன் சிறு வயதிலேயே தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து விட்டான்.
முதலில் இவன் ஜாகீர் மூஷா என்பவன் நடத்திய அன்சார் காஸ்வத் உல் ஹிந்த் என்ற இயக்கத்தில் இருந்தான். ஆனால் அந்த இயக்கத்துக்கு காஷ்மீர் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த இயக்கம் அல் கொய்தா இயக்கத்தின் ஒரு பிரிவாக காஷ்மீரில் இயங்கி வந்தது. ஆனால் இந்த இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் அனைவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி விட்டனர். 4 பேர் மட்டுமே மிஞ்சி இருந்தனர்.
இதையடுத்து அந்த இயக்கத்தில் இருந்து விலகிய ஆதில் அகமதுதார் ஜெய்ஷ்- இ-முகமது இயக்கத்தில் போய் சேர்ந்தான். மிக குறுகிய காலத்தில் இவன் மசூத் அசாரின் நம்பிக்கையை பெற்றான்.
ஜிகாத் எனும் புனித போரை மேற்கொள்ள தயாராக இருப்பதாக ஆதில் கூறி இருந்தான். எனவே அவனை மிகப்பெரிய தாக்குதலுக்கு மசூத் அசார் பயன்படுத்தி கொண்டான்.

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இவர்கள் தனித்தனியாக காஷ்மீர் வந்து சேர்ந்தனர். பிறகு ஒருங்கிணைந்து தற்கொலை தாக்குதல் திட்டமிட்டனர். ஜனவரி மாதமே குண்டுகளை தயாரித்து காரில் பொருத்தினார்கள். பிறகு அந்த கார் மூலம் ஒத்திகை நடத்தப்பட்டது.
ஆதிலுக்கு சிறிய ரக காரை ஓட்டி சென்று தற்கொலை தாக்குதல் நடத்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அவன் 3 முறை ஒத்திகை பார்த்தது தெரிய வந்துள்ளது.
ஒத்திகை பார்த்தப்படி அவன் தற்கொலை தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. #PulwamaAttack #CRPF #AdilAhmedDar
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நேற்று முன்தினம் நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். பலியான வீரர்களின் உடல்கள் நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன.

உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் லடாக் புத்த சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
வீரர்களின் யாத்திரையில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், வீரர்களின் இறுதி யாத்திரைக்காக சென்றுள்ளனர். #PulwamaAttack #Peoplepaytribute
காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பயங்கரவா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நாடு துணை நிற்கும். பயங்கரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடன் இருந்தார். #PulwamaAttack #CRPF #RahulGandhi