என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிவ் இன் ஜோடி"

    • CRPF வீரரான திலீப் டாங்கியா, அருணா பணிபுரிந்த அதெ காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
    • 2021 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் அறிமுகமாகினர்.

    குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள அஞ்சார் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளர் (ASI) ஆக அருணா ஜாதவ் என்ற பெண் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டில், வாக்குவாதத்தின் போது தனது லிவ்-இன் பார்ட்னரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.

    சனிக்கிழமை காலை, குற்றம் சாட்டப்பட்ட CRPF வீரரான திலீப் டாங்கியா, அருணா பணிபுரிந்த அதெ காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

    இடையே ஏதோ ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், திலீப் அருணாவை ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் மறுநாள் காலை காவல்துறையில் சரணடைந்தார்.

    2021 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் மூலம் இருவரும் அறிமுகமாகி, அப்போது முதல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். 

    • உத்தரகாண்டில் லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
    • 21 வயதுக்கு உள்பட்டவர்கள் லிவ் இன் உறவில் வாழ்ந்தால் அவர்கள் தங்களது பெற்றோரிடம் இதற்கு ஒப்புதல் பெறவேண்டும்.

    இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரகாண்ட் பெற்றுள்ளது.

    திருமணம், விவகாரத்து உள்ளிட்டவை அனைத்து மதத்தினருக்கும் பொது என்பதே இந்த சட்டத்தின் நோக்கம் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    அதனபடி பலதார மணம், குழந்தை திருமணம், முத்தலாக் போன்ற முறைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொது சிவில் சட்டத்தின்படி திருமணம், விவாகரத்து, லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்தல் போன்றவற்றிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்பவர்கள் இது தொடர்பாக பதிவு செய்யவில்லை என்றால் 6 மாத சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று பொது சிவில் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 21 வயதுக்கு உள்பட்டவர்கள் லிவ் இன் உறவில் வாழ்ந்தால் அவர்கள் தங்களது பெற்றோரிடம் இதற்கு ஒப்புதல் பெறவேண்டும்.

    இந்நிலையில், உத்தராகண்டில் பொது சிவில் சட்டத்தின்படி ஒருவரின் லிவ்-இன் உறவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    இதுவரை இது தொடர்பாக 5 விண்ணப்பங்கள் வந்துள்ளது என்றும் 1 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மற்ற 4 விண்ணப்பங்களும் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    டெல்லியில் ஊபர் கால் டாக்சி டிரைவரை கொலை செய்து, உடலை கழிவுநீர் கால்வாயில் வீசிவிட்டு அவரது காரிலேயே ஊர் சுற்றிய லிவ் இன் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.#Delhi #Uberdriverdead
    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி ஊபர் கால் டாக்சி டிரைவர் ராம் கோவிந்த் என்பவரின் மனைவி, தன் கணவரைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், ஊபர் வாகனம் கடைசியாக மாதங்கீர் - கபாஷேரா வழித்தடத்தில் பயணம் செய்வதற்காக பதிவு செய்யப்பட்டிருந்ததும், அதன்பின்னர் ஜிபிஎஸ் செயலிழந்திருப்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியோடு, டிரைவரின் செல்போன் மெஹ்ராலி-குருகிராமம் சாலையில் சென்று கொண்டிருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார், காணாமல் போன டிரைவரின் காரை மடக்கினர். காரில் இருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் மற்றும் டிரைவரின் செல்போனை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஃபர்கத் அலி(40) மற்றும் சீமா ஷர்மா(30) என்பதும், அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் லிவ் இன் ஜோடி என்பதும் தெரியவந்தது.

    இவர்கள், டெல்லி எம்ஜி சாலையில் இருந்து காஸியாபாத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு செல்வதற்காக கோவிந்தின் காரை புக் செய்துள்ளனர். காரில் ஏறியதும், கோவிந்தின் கார் மற்றும் செல்போன்களை பறிக்க திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கோவிந்தை வீட்டின் உள்ளே வரவைத்து, மயக்க மருந்து கலந்த டீயை கொடுத்துள்ளனர். கோவிந்த் மயங்கியதும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். மறுநாள், உடலை துண்டுதுண்டாக நறுக்கி மூன்று பைகளில் வைத்து நொய்டாவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் போட்டுள்ளனர் என போலீஸ் துணை கமிஷனர் ஆர்யா தெரிவித்துள்ளார். #Delhi #Uberdriverdead

    ×