search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமர்நாத்தில் கூடுதல் பாதுகாப்பு: யாத்திரை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிஆர்பிஎப் தொடர் கண்காணிப்பு
    X

    அமர்நாத்தில் கூடுதல் பாதுகாப்பு: யாத்திரை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிஆர்பிஎப் தொடர் கண்காணிப்பு

    • யாத்திரையைக் கருத்தில் கொண்டு படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
    • சிஆர்பிஎஃப் வீரர்கள் போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    காஷ்மீரின் பாஹல்காமில் இருந்து சுமார் 29 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோயில். இக்கோயிலில் குளிர்காலத்தில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய, அமர்நாத் யாத்திரை என்ற புகழ் பெற்ற யாத்திரையின் மூலம் ஒவ்வொரு வருடமும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இந்த யாத்திரை சந்தன்வாரி பகுதியில் ஆரம்பித்து கோயில் வரை நடைபெறும்.

    தற்போது நடைபெற்று வரும் யாத்திரைக்கு பாதுகாப்பை அதிகரிக்க, ஏராளமான சிஆர்பிஎஃப் படையினர் நவீன பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    "யாத்திரையைக் கருத்தில் கொண்டு படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் உலகில் கிடைக்கக்கூடிய மிக நவீன தொழில்நுட்பத்தை பாதுகாப்பிற்கும் கண்காணிப்பிற்கும் பயன்படுத்துகிறோம். தெற்கு காஷ்மீர் பகுதியில் நவீன கருவிகள் மற்றும் ஆயுதங்களை கொண்டு பருந்து போன்ற விழிப்புணர்வுடன் சிஆர்பிஎஃப் செயல்பட்டு வருகிறது" என சிஆர்பிஎஃப் அமைப்பின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலோக் அவஸ்தி தெரிவித்தார்.

    அமர்நாத் யாத்திரைக்கு குறிப்பிட்ட அச்சுறுத்தல் உள்ளதா என்று கேட்டதற்கு அவஸ்தி பதிலளித்திருப்பதாவது:

    "குறிப்பிட்டு சொல்லும்படியான அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனால், யாத்திரை இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை. எங்கள் வீரர்கள் ஓய்வெடுக்காமல் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள்; 365 நாட்களும் பணியில் இருக்கிறார்கள். உங்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இருக்கிறோம். நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் யாத்திரை குழு சுமூகமாக செல்வதை உறுதி செய்வதற்காக சிஆர்பிஎஃப் வீரர்கள் போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். எங்களுக்கு உள்ளூர் மக்களின் முழு ஒத்துழைப்பு உள்ளது. அவர்கள் யாத்ரீகர்களுக்கு குடிநீர் வழங்குகிறார்கள்.

    இவ்வாறு அவஸ்தி கூறினார்.

    Next Story
    ×