search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Regional Languages"

    • 48 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
    • மார்ச் 7-ந்தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது.

    சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் போன்ற மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களது மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    மாநில அரசுகளும், கட்சித் தலைவர்களும் அந்ததந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில் இனிமேல் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்மறு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    மத்திய ஆயுதப்படை காவலர் பணிக்கான தேர்வு நேற்று முதல் மார்ச் 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் 48 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். நாட்டின் 128 நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

    தமிழ், அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, கொங்கனி ஆகிய பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறையில், முன்பு இருந்ததுபோன்று இந்த ஆண்டும் தமிழ் உள்பட 20 பிராந்திய மொழிகளில் தேர்வை நடத்தும்படி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார். #CTETExam
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பள்ளிகளான கேந்திர வித்யாலயா, டெல்லி மாநில பள்ளிகள், திபெத் பள்ளிகள் போன்ற தேசிய கல்வி முறைகளில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிய தேசிய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு தனி தேர்வாகவும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு மற்றொரு தேர்வும் நடத்தப்படுகிறது.

    இந்த தகுதி தேர்வில் மொழி அடிப்படையில் 2 தேர்வுகள் எழுத வேண்டும். முதல் பேப்பரை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றில் எழுத வேண்டும். 2-வது பேப்பரை முதல் பேப்பரில் தேர்வு செய்த மொழி அல்லாத இன்னொரு மொழியில் எழுத வேண்டும்.

    2-வது பேப்பரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, வங்க மொழி உள்ளிட்ட 20 பிராந்திய மொழிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், இந்த ஆண்டு தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் இடம்பெறவில்லை. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


    இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்பு இருந்ததுபோல் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். முன்பு இருந்ததுபோல் 20 மொழிகளில் தேர்வு நடத்த ஏற்கனவே உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #CTETExam #CTETLanguages #PrakashJavadekar
    தேசிய ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து தமிழ் உள்பட 16 பிராந்திய மொழிகள் நீக்கப்பட்டுள்ளதால் இனி தமிழில் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    தேசிய ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து தமிழ் உள்பட 16 பிராந்திய மொழிகள் நீக்கப்பட்டுள்ளதால் இனி தமிழில் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. #CTET

    மத்திய அரசின் பள்ளிகளான கேந்திர வித்யாலயா, டெல்லி மாநில பள்ளிகள், திபெத் பள்ளிகள் போன்ற தேசிய கல்வி முறைகளில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிய தேசிய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தான் இந்த பள்ளிகளில் பணியாற்ற முடியும். மேலும் மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. மூலம் நடத்தப்படும் தனியார் பள்ளிகளிலும் இந்த தேர்வில் வெற்றி பெற்றிருப்பவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன.

    எனவே இந்த பள்ளிகளில் சேருவதற்காக தேசிய ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு தனி தேர்வாகவும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு மற்றொரு தேர்வும் நடத்தப்படுகிறது.

    இந்த தகுதி தேர்வில் மொழி அடிப்படையில் 2 தேர்வுகள் எழுத வேண்டும். அதில் முதல் பேப்பர், 2-ம் பேப்பர் என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

    முதல் பேப்பரில் மொழியில் தகவல் பரிமாற்ற திறனை பற்றியும், 2-வது பேப்பர் தகவல் மற்றும் புரிதல் திறன் பற்றியும் கேள்விகள் இருக்கும்.

    முதல் பேப்பரை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றில் எழுத வேண்டும். 2-வது பேப்பரை முதல் பேப்பரில் தேர்வு செய்த மொழி அல்லாத இன்னொரு மொழியில் எழுத வேண்டும்.

    ஆனால் 2-வது பேப்பரில் இதற்கு முன்பு பிராந்திய மொழிகளும் இடம் பெற்றிருந்தன. தமிழ், மலையாம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, வங்க மொழி என 16 பிராந்திய மொழிகள் அதில் இடம்பெற்றிருந்தன.

    அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து 2-வது பேப்பரை எழுத முடியும். ஆனால் இப்போது இதில் தமிழ் உள்ளிட்ட 16 மொழிகளையும் நீக்கி விட்டனர். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்மொழி இதில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதால் தமிழக ஆசிரியர்களுக்கு கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. தமிழக ஆசிரியர்களை பொறுத்த வரை இதற்கு முன்பு முதல் பேப்பரை ஆங்கில மொழியில் எழுதுவார்கள். 2-வது பேப்பரை தமிழ் மொழியில் எழுதுவார்கள்.

    இப்போது தமிழ்மொழி இல்லாததால் 2-வது பேப்பராக இந்தி அல்லது சமஸ்கிருதத்தை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு போட்டியிடும் ஆசிரியர்கள் பலருக்கு இந்தி தெரியும் என்றாலும் அவர்களால் இந்தியை தாய்மொழியாக கொண்டு எழுதும் மாணவர்களுடன் போட்டிபோட முடியாது.

    தாய்மொழியான தமிழில் அவர்களும் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு இருந்தால் இந்தி மொழியில் எழுதுபவர்களுடன் இவர்களும் போட்டிபோட முடியும்.

    இதன் காரணமாக தமிழக ஆசிரியர்கள் கடுமையான பாதிப்பை சந்திப்பார்கள். ஆசிரியர் தகுதி தேர்வில் 150 மார்க்குக்கு, 30 மார்க் இந்த தேர்வுக்கு உள்ளது. அதை இழக்கும் சூழ்நிலை தமிழக ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக ஆசிரியர்கள் தேசிய ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும் பார்க்கப்படுகிறது.

    2016-ல் 7 லட்சத்து 6 ஆயிரம் பேர் நாடு முழுவதும் தேர்வு எழுதினார்கள். அதில் தமிழ்நாட்டில் இருந்து 12 ஆயிரத்து 700 பேர் தேர்வு எழுதினர்.

    பிராந்திய மொழி நீக்கப்பட்டது தொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, அரசியல் சாசன சட்டம் 14, 15, 16, 21 பிரிவுகளின் படி மைனாரிட்டி மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்வில் அதை கைவிட்டிருக்கிறார்கள். இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என்று கூறினார். #CTET
    ×