என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளிலும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு- பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு
Byமாலை மலர்18 Jun 2018 10:52 AM GMT (Updated: 18 Jun 2018 10:52 AM GMT)
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறையில், முன்பு இருந்ததுபோன்று இந்த ஆண்டும் தமிழ் உள்பட 20 பிராந்திய மொழிகளில் தேர்வை நடத்தும்படி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார். #CTETExam
புதுடெல்லி:
மத்திய அரசின் பள்ளிகளான கேந்திர வித்யாலயா, டெல்லி மாநில பள்ளிகள், திபெத் பள்ளிகள் போன்ற தேசிய கல்வி முறைகளில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிய தேசிய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு தனி தேர்வாகவும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு மற்றொரு தேர்வும் நடத்தப்படுகிறது.
இந்த தகுதி தேர்வில் மொழி அடிப்படையில் 2 தேர்வுகள் எழுத வேண்டும். முதல் பேப்பரை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றில் எழுத வேண்டும். 2-வது பேப்பரை முதல் பேப்பரில் தேர்வு செய்த மொழி அல்லாத இன்னொரு மொழியில் எழுத வேண்டும்.
இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்பு இருந்ததுபோல் தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். முன்பு இருந்ததுபோல் 20 மொழிகளில் தேர்வு நடத்த ஏற்கனவே உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #CTETExam #CTETLanguages #PrakashJavadekar
மத்திய அரசின் பள்ளிகளான கேந்திர வித்யாலயா, டெல்லி மாநில பள்ளிகள், திபெத் பள்ளிகள் போன்ற தேசிய கல்வி முறைகளில் செயல்படும் பள்ளிகளில் பணிபுரிய தேசிய ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு தனி தேர்வாகவும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு மற்றொரு தேர்வும் நடத்தப்படுகிறது.
இந்த தகுதி தேர்வில் மொழி அடிப்படையில் 2 தேர்வுகள் எழுத வேண்டும். முதல் பேப்பரை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றில் எழுத வேண்டும். 2-வது பேப்பரை முதல் பேப்பரில் தேர்வு செய்த மொழி அல்லாத இன்னொரு மொழியில் எழுத வேண்டும்.
2-வது பேப்பரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, வங்க மொழி உள்ளிட்ட 20 பிராந்திய மொழிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், இந்த ஆண்டு தமிழ் உள்ளிட்ட 17 மொழிகள் இடம்பெறவில்லை. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X