search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamil language"

    • தாய்மொழி தமிழ் மொழியை பாதுகாப்போம் என்று உறுதியேற்கப்பட்டது.
    • முடிவில் கல்லூரி அறங்காவலர் பொறியாளர் விடுதலைவேந்தன் நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தனித்தமிழ் ஆர்வலர், தமிழாசிரியர் முதுமுனைவர் பி.விருத்தாசலனார் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று காலை தஞ்சாவூர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி அறங்காவலர் முனைவர் இளமுருகன் தலைமை வகித்தார்.

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை இணை இயக்குனர் (ஓய்வு) முனைவர் குணசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் . நாட்டார் கல்லூரி ஆட்சி குழு செயலாளர் கலியபெரு மாள், கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக மக்கள் ஒருங்கிணைப்பு மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் மதச்சார்பின்மை, சோசலிசம், குடியரசு என்ற தலைப்பிலும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மக்களுக்கான கல்வி என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார்கள். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் புலவர்களும் தமிழ் பண்டிதர்களும் தேர்வு எழுத அரசாணை வெளியிட வேண்டும்.

    தமிழ் வழியில் படித்த வர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது, தாய் மொழி தமிழ் மொழியை பாதுகாப்போம் என்று உறுதியேற்கப்பட்டது.

    நினைவேந்தல் நிகழ்ச்சியில் அனைத்து கட்சி ,இயக்க நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள், பேரா சிரியர்கள், அலுவ லர்கள்,மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியினை பேராசிரியர்கள் பாரி, தமிழ்ச்செல்வன், மருத்துவர் தென்றல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    முடிவில் கல்லூரி அறங்காவலர் பொறியாளர் விடுதலைவேந்தன் நன்றி கூறினார்

    • 22 மாநிலங்களை சோ்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா்.
    • புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள் 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ள

    திருப்பூர்:

    புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளுக்கான 'தமிழ்மொழி கற்போம்' திட்டத்தை திருப்பூரில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கிவைக்கிறாா்.

    பின்னலாடை நகரமான திருப்பூரில் பிகாா், ஒடிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், ராஜஸ்தான் உள்ளிட்ட 22 மாநிலங்களை சோ்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா். திருப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் தொழிலாளா்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனா்.

    இந்த நிலையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு 'தமிழ்மொழி கற்போம்' திட்டத்தை திருப்பூா் ஆத்துப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில்மகேஸ் பொய்யாமொழி இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கி வைக்கிறாா்.

    இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் உள்ளிட்ட பலா் பங்கேற்கவுள்ளனா். தொடக்க விழாவில் புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள் 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
    • தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சி.ஆர்.பி.எப் துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் பணியிடங்களைத் தேர்வு செய்ய மே 8-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

    அதில் ஜூலை மாதம் இணைய வழி எழுத்து தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    சி.ஆர்.பி.எப் எனப்படும் துணை ராணுவப் படையில் ஆட்களை சேர்க்க நடைபெறும் எழுத்து தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும்தான் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது.

    அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை ராணுவப் படையில் வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
    • கீழமை நீதிமன்றங்களில் மாநில மொழிகள் வழக்காடு மொழியாக உள்ளன.

    திருப்பூர்:

    இந்திய உயர்நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது . கீழமை நீதிமன்றங்களில் மாநில மொழிகள் வழக்காடு மொழியாக இருக்கின்ற நிலையில் உயர் நீதிமன்றங்களிலும் அந்தந்த மாநில மொழிகள் வழக்காடு மொழிகளாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது .

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் இருப்பதால் உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதியை குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதீக நிதி ஒதுக்கீடு.
    • தமிழ் மொழியை அழித்தொழிக்கும் செயலை அண்ணாமலை ஏற்பாரா? என மக்கள் கேள்வி.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடியும், பாஜகவும் தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயம் தேட பல்வேறு சாகசங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழில் இரண்டொரு வார்த்தைகள் பேசுவது, மகாகவி பாரதியார் கவிதைகள், திருக்குறள் உள்ளிட்ட தலைசிறந்த படைப்புகளில் சிலவற்றை மேற்கோள் காட்டி பேசுவது, அண்மையில் காசியில் தமிழ் சங்கம் விழா எடுத்தது என்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி, ஆரவார வாய்ச்சவாடல் அடித்து வருகின்றனர்.

    ஆனால் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் வஞ்சகச் செயலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் அரசியல் அமைப்பு சட்டப்படி அங்கீகரிக்கபட்ட 22 மொழிகளை சமமாக அணுக வேண்டிய மத்திய அரசு, தமிழ்மொழி உட்பட பல மாநில மொழிகளை புறக்கணித்து, சமஸ்கிருத மொழியை திணித்து, ஏற்குமாறு நிர்பந்தித்து வருகிறது.

    குறிப்பாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை வெட்டி குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை மந்திரி அளித்த எழுத்து மூலமான பதிலில் சமஸ்கிருதத்துக்கு ரூ.199 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.12 கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கியிருக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டு வளர்ச்சி, மக்கள் நலன் குறித்து நீலிக் கண்ணீர் வடித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாய் திறந்து பேசுவாரா? எட்டுக் கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் மொழியான தமிழுக்கு, தொன்மை சிறப்பும், இலக்கிய செறிவும் கொண்ட செம்மொழியாம் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் செயலை வாய் பொத்தி, கைகட்டி, முதுகை வளைத்து பணிந்து ஏற்பாரா? என தமிழக மக்கள் வினா எழுப்பி வருகின்றனர். தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யும், மோடி அரசை, அதிகாரத்தில் இருந்து நீக்குவது மட்டுமே தமிழ்மொழிக்கு பாதுகாப்பாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பிளஸ் 1 மாணவர்களும் எழுதத்தகுதி பெற்றுள்ளனர்.
    • பிளஸ் 2 வகுப்பு முடிக்கும் வரை மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும்.

    குடிமங்கலம் :

    பள்ளிக்கல்வித்துறை, தமிழ் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வை நடத்த உள்ளது.

    இந்தத்தேர்வை பிளஸ் 1 மாணவர்களும் எழுதத்தகுதி பெற்றுள்ளனர். அவ்வகையில் இந்தத்தேர்வில் வெற்றி பெறும் அரசு, தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 1,500 பேருக்கு பிளஸ் 2 வகுப்பு முடிக்கும் வரை மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும்.இதற்கான எழுத்துத்தேர்வு அக்டோபர் மாதம் நடக்கவுள்ள நிலையில் உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையம் சார்பில் ராமமூர்த்தி மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து வருகிறார்.இதற்கான ஏற்பாடுகளை, பள்ளித்தலைமையாசிரியர் பழனிசாமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • மத்திய அரசின் கல்வி உதவித்தொகை தகுதி தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
    • தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் கேள்வித்தாள் வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் கூறினார்.

    மதுரை

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு கடந்த ஆண்டு கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா கல்வி உதவித் தொகைக்கான தகுதித் தேர்வை இந்தி, ஆங்கில மொழிகளில் நடத்தியது. இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

    இந்த நிலையில் மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் "அடுத்த ஆண்டு முதல் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித்தாள்கள் வழங்கப்படும்" என உறுதி அளித்தது. இப்போது அந்த திட்டமே இன்ஸ்பையர் சி திட்டத்தோடு இணைக்கப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் செயலூக்கம் உள்ள இந்தியாவின் இளைய சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான தகுதித் தேர்வு வருகிற 11-ந் தேதி நடக்கிறது. இது 9, 11-ம் வகுப்பு படிக்கும் இதர பிற்பட்டோர், சீர்மரபினருக்கான உதவித்தொகை திட்டம் ஆகும். இதற்கான கேள்வித்தாள்கள் இந்தி-ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அடித்தள மாணவர்கள் பயன் பயன்பெறும் ஒரு திட்டத்தை அறிவித்து விட்டு, அதற்கு இந்தி- ஆங்கிலத்தில்தான் கேள்வித் தாள் தருவேன் என்பது என்ன நியாயம்?. கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி இந்தி பேசும் மாநிலத்துடன் போட்டி போடுவார்கள்? இது அப்பட்டமான பாரபட்சம், அநீதி ஆகும்.

    இது தமிழ் இளைஞர்களின் வாழ்வு சம்பந்தப்பட்டது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் கேள்வித்தாள் வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு, நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்கலாம்.

    திருப்பூர் :

    தமிழ் இலக்கிய வாசிப்பில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு, நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்கலாம்.இத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 1,500 பேருக்கு, பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதில் 50 சதவீத இடங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், மீதமுள்ள 50 சதவீத இடங்களில், அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து, அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இடம்பெறும். இத்தேர்வு வரும் அக்ேடாபர் மாதம் 1ம் தேதி நடைபெறவுள்ளது.

    இதில் பங்கேற்க 22ந் தேதி முதல் வரும் செப்டம்பர் 9ந் தேதி வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளி மாணவர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவ- மாணவிகள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தி கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தர–விட்டுள்ளது.
    • அதன்படி இந்த தேர்வை அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்த உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இங்கு மாணவ- மாணவிகள் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளி மாணவ- மாணவிகள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தி கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வை அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்த உள்ளது.

    இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் 2 வருடங்களுக்கு வழங்கப்படும். எனவே அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, மாணவ- மாணவிகள் வருகிற 22-ந்தேதி முதல் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறும், தமிழ்நாடு அரசின் 10-ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும் என கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உலகின் மிக உயரமாக உருவாக்கப்பட்ட வல்லபாய் படேலின் சிலையில், தமிழ் மொழிப்பெயர்ப்பு மிக மோசமான முறையில் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #VallabhbhaiPatel #Tamil #StatueofUnity
    அகமதாபாத்:

    இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத் மாநிலம் நர்மதா ஆற்றின் குறுக்கே மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. 182 மீட்டர் உயரமான இந்த சிலை உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இந்த சிலைக்கு ‘ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி’ அதாவது ஒற்றுமையின் சிலை என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில். இந்த சிலைக்கு கீழே பல்வேறு மொழிகளில் ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி என்ற சிலையின் பெயர் மொழிப்பெயர்க்கப்பட்டு இருந்தது. அந்த வரிசையில் தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு மிகவும் மோசமாக இருப்பதால் சர்ச்சையாகி உள்ளது.



    ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி என்ற ஆங்கில வார்த்தையை கூகுளில் மொழிப்பெயர்ப்பு செய்து இருந்தால் கூட ஒற்றுமையின் சிலை என வந்திருக்கும் ஆனால், ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள். இதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.



    இதையடுத்து, தமிழ் மொழிப்பெயர்ப்பின் மீது வண்ணம் பூசி அதை தற்காலிகமாக மறைத்து உள்ளனர். இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட உலகின் மிக உயரமான சிலையில் தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு மோசமான நிலையில் இருப்பது, தமிழை வஞ்சிக்கும் பார்வையை வெளிப்படுத்துவதாக கருத்துக்களும், கண்டங்களும் கூறப்படுகிறது. #VallabhbhaiPatel #Tamil #StatueofUnity
    மத்திய அரசின் மனித வளத்துறை சார்பில் துவங்கப்பட்டுள்ள இணையவழி நூலகத்தில் தமிழ் உள்பட தென்னக மொழிகள் புறக்கணிப்பு ஏன்? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். #veeramani #centralgovernment

    சென்னை:

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் மனித வளத்துறை சார்பில் துவங்கப்பட்டுள்ள இணையவழி நூலகத்தில் ஆங்கிலம், இந்தி சமஸ்கிருதம் மட்டுமே இடம்பெற்றுள்ளன! மாநில மொழிகளில் வங்காளம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதில் தென் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் போன்ற மொழிகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

    கரக்பூர் தொழில்நுட்ப நிறுவனம் இந்த நூலகத்தை வடிவமைத்துள்ளது, இந்த நூலகம் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள பல் கலைக் கழக மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இந்தியா குறித்தும், இந்திய கலாச்சாரம் குறித்தும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு அதிக அளவு நூல்கள் இந்த இணையவழி நூலகத்தில் கிடைக்கும். இதுவரை இந்தியாவில் உள்ள 170 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த, நூல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 3 லட்சம் எழுத்தாளர்களின் 1 கோடி புத்தகங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சமூக அறிவியல், விஞ்ஞானம், மொழி, இலக்கியம், புவியியல், வரலாறு, தொழில் நுட்பம், மதம் போன்ற பலதுறைகளைச் சேர்ந்த புத்தகங்கள் பொருள்வாரியாக இடம்பெற்றுள்ளன. வேத நூல்களின் மூல நூல்கள் அதற்கான பொருள் விளக்கங்களுடன் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் சார்பில் சில புத்தகங்களும், புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் சார்பில் சில நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆண்டாள் பாசுரங்கள் ஆங்கிலத்தில் தனியாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வரலாற்று நூல்கள், பிரபல எழுத்தாளர்களின் நூல்கள் என எதுவும் இடம் பெறவில்லை. அதே போல் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களும் இதில் கிடையாது. முக்கியமாக நீங்களும் உங்கள் நூல்களைப் பதிவிடலாம் என்ற இடத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட தென் இந்திய மொழி நூல்களுக்கு இடமில்லை.

    தென் இந்தியமொழி நூல்களைப் பதிப்பவர்கள் அதன் ஆங்கில அல்லது இந்தி பதிப்பை மட்டுமே பதிவேற்றவேண்டும் என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மத்திய பி.ஜே.பி. அரசு இந்தியா முழுவதற்கும் உள்ள அரசா? அல்லது இந்தி மாநிலங்களுக்கு மட்டும் உள்ள அரசா? சமஸ்கிருதம் என்ற செத்தொழிந்த மொழியைச் சிம்மாசனம் ஏற்றுவதிலேயே குறியாக இருப்பது மத்திய பி.ஜே.பி. அரசின் பார்ப்பனிய சமஸ்கிருத ஆதிக்க உணர்வின் வெளிப்பாடே!

    இதுகுறித்து தமிழக முதலமைச்சரும், தென் மாநில முதலமைச்சர்களும் மத்திய அரசுக்கு எழுதிடவேண்டும். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை நடந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் எதிர்க்கட்சியினர் இந்தப் பிரச்சினையை எழுப்பிட வேண்டும். இதில் கட்சி வேறுபாடுகளுக்கு இடமில்லை.

    மத்திய அரசின் ஒவ்வொரு செயல்பாடுமே வெகு மக்கள் விரோத குறிப்பாக, இந்தி பேசாத மக்கள் விரோத போக்குடையதாகவே இருக்கிறது தேவை விழிப்புணர்வே!

    இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார். #veeramani #centralgovernment

    ×