என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வீடியோ: ஒழுங்கா பேசும்மா... தமிழ்ல்ல பேசும்மா... - அழுது புலம்பும் சிறுவன்
- சிலர் தங்கள் தாய்மொழியான தமிழை பேசுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை.
- ஒழுங்கான்னா எப்படி பேசுவாங்க... என்று கேட்கிறான்.
தாய்மொழியில் கல்வி கற்பது ஒருவரின் சிந்தனைத் திறனை வளர்க்க உதவுகிறது. ஏனெனில் ஒருவரின் சிந்தனை தாய்மொழியில் தான் ஆழமாக வேரூன்றுகிறது. தாய்மொழியில் பேசுவது ஒருவருடன் எளிதாக தொடர்பு கொள்ள உதவுகிறது. அது ஒருவரை ஒரு சமூகத்துடன் இணைக்கிறது.
தற்போதுள்ள காலகட்டத்தில் தனியார் பள்ளிகளின் மூலம் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழியாக இல்லாவிட்டால், ஆங்கில வழிக் கல்வியானது கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகளில் முதன்மை மொழியாக பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் சிலர் தங்கள் தாய்மொழியான தமிழை பேசுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை. அப்படி விரும்பாததற்கான காரணங்கள் பல உள்ளன. சமூக அழுத்தங்கள், ஆங்கில மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது, அல்லது பிற மொழிகளில் பேசுவதால் கிடைக்கும் சமூக அந்தஸ்து போன்ற காரணங்களால் சிலர் தமிழைப் பேசுவதை தவிர்க்கிறார்கள்.
இந்நிலையில் தமிழ்ல்ல பேசும்மா என்று ஒரு சிறுவன் அழும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், சிறுவனிடம் அவரது அம்மா..
whats your problem என்கிறார்.
சிறுவன், ஒழுங்கா பேசும்மா... தமிழ்ல்ல பேசும்மா... என்று அழுகிறான்.
அதற்கு அவனது அம்மா தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசுகிறார்.
ஒழுங்கான்னா எப்படி பேசுவாங்க... என்று கேட்கிறார்.
இப்படி... இப்படி பேசுமா... தமிழ்ல்ல பேசும்மா என்று சொல்கிறான்.
English-ல பேசுறது புரியவே புரியலை என்று சொல்கிறான்.
உங்க school-ல மேம் எப்படி பேசுறாங்க... என்று கேட்கிறார்.
English-ல பேசுறாங்க என்று சிறுவன் சொல்ல...
நானும் அதான் English-ல பேசுறேன் என்று சொல்கிறார்.
நீ மட்டும் இப்படியே பேசு என்கிறான்.
மேம்.. பேசும்போது English புரியுதா? என்று கேட்கிறார்.
நான் சொல்றதை கேளும்மா... தமிழ்ல்ல பேசும்மா என்று அந்த சிறுவன் தலையில் அடித்துக்கொண்டு அழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.






