என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழக மக்களிடம் மோடியின் கபட நாடகம் எடுபடாது- செல்வபெருந்தகை
    X

    தமிழக மக்களிடம் மோடியின் கபட நாடகம் எடுபடாது- செல்வபெருந்தகை

    • மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து வருகிறார்கள்.
    • உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ்மொழி என்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி மாதந் தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை வானொலி மூலம் மன்-கி-பாத்-மனதில் குரல் நிகழ்ச்சியில் நேற்று பேசும் போது, 'உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ்மொழி என்தில் ஒவ்வொரு இந்தியருக்கு பெருமை என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்".

    இதைப்போல கடந்த காலங்களில் திருவள்ளுவர், மகாகவி பாரதியார் ஆகியோரை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இதன்மூலம் அனைத்து மொழிகளையும் சமமாக கருதுவதாக ஒரு நாடகத்தை நீண்டகாலமாக அரங்கேற்றி வருகிறார். அதன் தொடர்ச்சியாகத் தான் நேற்றைய பேச்சும் அமைந்திருக்கிறது.

    மோடியையும், பா.ஜ.க. வையும் தமிழக மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் நிராகரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து வருகிறார்கள். எனவே, பிரதமர் மோடியின் கபட நாடகத்தை தமிழக மக்கள் என்றைக்குமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×