search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரெயில் டிசம்பர் 7 வரை ரத்து
    X

    மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரெயில் டிசம்பர் 7 வரை ரத்து

    • மலைரெயில் பாதையில் 10-க்கும் அதிகமான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
    • மலைரெயில் சேவை ரத்து அறிவிப்பால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி, கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    கடந்த 3-ந் தேதி குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த கனமழைக்கு அடர்லி, ஹில்குரோவ் இடையே 5-க்கும் மேற்ப்பட்ட இடங்களில் மண்சரிவும், மரங்கள் முறிந்ததால் 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் கடந்த 8-ந் தேதி மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மீண்டும் ரெயில்சேவை தொடங்கியது. ஆனால் அன்று இரவு கொட்டிய கனமழையால் மீண்டும் மண் சரிவு ஏற்படவே கடந்த 9-ந் தேதி முதல்18-ந் தேதி வரை மீண்டும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் ரத்து செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மலை ெரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்பட்டது.

    கடந்த 21-ந் தேதி குன்னூர், மேட்டுப்பாளையம் பகுதியில் கன மழை பெய்தது. இதனால் கடந்த 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் குன்னூர் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மலைரெயில் பாதையில் 10க்கும் அதிகமான இடங்களில் மண்சரிவும், பாறைகளும் உருண்டு விழுந்தன.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் டிசம்பர் 7-ந் தேதி வரையும், குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் வருகிற 31-ந் தேதி வரையும் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மலைரெயில் சேவை ரத்து அறிவிப்பால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×