search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "floral tribute"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உயிர் நீத்தவர்களின் உருவ படத்திற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • எதற்காக அவர்கள் போராடினார்களோ அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்ற மக்களுடன் துணை நிற்போம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, உயிர் நீத்தவர்களின் உருவ படத்திற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா , தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் கனிமொழி எம்.பி. அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தில் அவர்களின் நினைவுகளை மனதில் ஏந்தி அஞ்சலி செலுத்துகிறோம்.

    எதற்காக அவர்கள் போராடினார்களோ அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்ற மக்களுடன் துணை நிற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38-வது ஆண்டு நினைவு நாளான இன்று எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.



    சி.பா.ஆதித்தனார் சிலைக்கு ‘மாலைமுரசு’ நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.

    தினத்தந்தி, மாலைமலர், டி.டி.நெக்ஸ்ட், ராணி, ராணி பிரிண்டர்ஸ், இந்தியா கேப்ஸ், டிராவல் மால், தந்தி டி.வி., ஏ.எம்.என். டி.வி., ஹலோ எப்.எம்., இண்டர் பிரஸ், சுபஸ்ரீ ஊழியர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

    தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், க.பாண்டியராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயதுரை, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தி.மு.க. பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன், நடிகர் எஸ்.வி.சேகர்,தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம், டாக்டர் கருணாநிதி, எழுத்தாளர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன்,

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலகங்கா, இலக்கிய அணி மாநில துணைத்தலைவர் இ.சி. சேகர், நடிகர் கே.எம்.பஷீர், டி.எஸ்.வேல்ஆதித்தன்.

    காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரூபி மனோகரன், வீரபாண்டியன், நிர்வாகிகள் நாச்சிகுளம் சரவணன், பொன். கிருஷ்ணமூர்த்தி, துரை, எம்.கே.பாபு, நாகராஜ், கவுரிசங்கர், ரகுசங்கர், ரஞ்சன், ராஜ்குமார், பிரபா, விஜய், கார்த்திகேயன், நெட் ரமேஷ், ராதாகிருஷ்ணன், கார்த்திக், தினேஷ்பாபு, சூளை ராஜேந்திரன், முனிவேல், எழும்பூர் குணா, வேலுத்தேவர்.

    பா.ஜனதா நிர்வாகிகள் ராமையா, வன்னியராஜன், அனைத்து இந்திய மக்கள் கட்சி நிறுவன தலைவர் அருள்காந்த்.

    ம.தி.மு.க. நிர்வாகிகள் வந்தியதேவன், ஜீவன், சுப்பிரமணி, மகேந்திரன், ஞானம், நிசார், இளவழகன், சிக்கந்தர், குமார், நமச்சிவாயம், கராத்தே பாபு, கழக குமார், செல்ல பாண்டியன், டாக்டர் சந்திர சேகர், பூங்கா நகர் ராமதாஸ்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, இரா.செல்வம், நிர்வாகிகள் சேத்துப்பட்டு இளங்கோ, மின்னல் பாபு, எம்.செல்வம், அண்ணாமலை. மண்வீரன்.

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.வெங்கடேஷ், கோவை தங்கம், டி.என். அசோகன், டி.எம்.பிரபாகர், முனவர் பாட்சா, விடியல் சேகர், திருவேங்கடம், சக்தி வடிவேல், ரவிசந்திரன், மனோகர், இளங்கோ, புனிதன், சத்திய நாராயணன், மனோஜ்குமார், லட்சுமி பிரபா, சிவா, வசந்தி, நரேஷ் குமார்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் தர்மராஜ், மோகன், குருசாமி, சிவகுமார், சந்தானம், ராபர்ட், வி.பி.அய்யர், நாகராஜ், விக்னேஷ்வரன், சந்துரு, ஜஸ்டின் காமராஜ், பொன்ராஜ் மாரிசெல்வம், அலெக்சாண்டர், பொன். மகேஷ், காட்வின், கருணாதாசன், முருகன், முருகேச பாண்டியன்.

    சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் கே.ஏ.எஸ்.ஆர்.பாபு, பாஸ்கர், வில்லியம், சீனிவாசன், ஜஸ்டின், சங்கர பாண்டி, செல்வா, தர்புதீன், சிவகுமார், பாக்யராஜ், சுந்தரேசன்.

    அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட கழக நிறுவன தலைவர் முத்துராமன், சிங்க பெருமாள், நாகராஜ், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தலைவர் இசக்கிமுத்து, கதிரேசன்.

    புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் ரவிகுமார், சேதுராமன், ராஜாராம், பழனி, சுதர்சன், செல்வம், லோகநாதன், மகாதேவன், கவுரிசங்கர், ராதாகிருஷ்ணன், சீனிவாசன், ரமேஷ், ஆனந்தன், முருக பெருமான், பிரகாஷ்குமார், அரிகிஷ்ணன், செந்தில் குமார், சேகர், வெங்கடேசன், சுகுமார்.

    மூவேந்தர் முன்னணி கழக நிர்வாகிகள் சுரேஷ், வரதராஜ், சண்முகவேல், பாண்டியன்.

    சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், பொதுச்செயலாளர் தங்கமுத்து, நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த.பத்மநாபன், பொருளாளர் எம்.மாரிதங்கம், பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்க செயலாளர் செல்லம், பொருளாளர் தாமோதரன், பெருவாயல் ரங்கசாமி, பி.கிருஷ்ணசாமி, ஐ.சுந்தர் ராஜ், பி.தனுஷ் கோடி, எஸ்.சோலையப்பன், எம்.சமுத்திரபாண்டி, எஸ்.மாரியப்பன், எஸ்.பொன்னுகுமார், நெல்லை, தூத்துக்குடி மகமை பரிபாலன சங்க நிர்வாக செயலாளர் மயிலை சந்திரசேகர், கமிட்டி உறுப்பினர் வெள்ளத்துரை

    சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் ஆர்.சிதம்பரம், சேலம் நாடார் சங்க துணை செயலாளர் மாடசாமி, சென்னை நாடார் நலச் சங்க செயலாளர் பி.விஜயகுமார், துணை செயலாளர் மார்க்கெட் ராஜா, பொருளாளர் ராஜாராம், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், பொருளாளர் குணசீலன்,

    மாநில ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பி.மாரி முத்து, துணை தலைவர் பொன்னம்பல சாமி, மாநில செயலாளர் வி.தங்கதுரை எம்.மாடசாமி, எம்.ஏ. தங்கதுரை, சென்னை வாழ் முல்லைக்காடு நாடார் சங்க துணை செயலாளர் முல்லை பிரைட்டன், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன்.

    இந்திய நாடார்கள் பேரமைப்பு ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.மலர்மன்னன், எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் சுந்தரேசன், துணை தலைவர் சுதந்திரதாஸ், ஆழ்வார், ராமன்நாடார், அணியாப்பூர் நாடார் சங்க பொருளாளர் மனோகரன், பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்க தலைவர் செல்வராஜ், அருணாசல மூர்த்தி, ஜெயராஜ், வெள்ளைச்சாமி.

    சென்னை வாழ் போடுபட்டி இந்து நாடார் உறவின் முறை சங்க நிர்வாகிகள் முனிரத்தினம், செந்தில்குமார், முத்துகருப்பன், காசி பாண்டி, நெற்குன்றம் நாடார் சங்க செயலாளர் கே.முத்துராமன், சேலவாயல் நாடார் சங்க நிர்வாகி செந்தில்முருகன், சர்வதேச வணிகர் சம்மேளன தலைவர் கராத்தே சந்துரு, வக்கீல் விஜய குமார், சுப்பிரமணி, ஜீவன், இசக்கிராஜா.

    திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க செயலாளர் திருப்புகழ், பொருளாளர் சிங்கராயர், நிர்வாகிகள் ராஜேந்திரன், சித்திரைப்பாண்டியன், கனகராஜ், சின்னத்துரை, ராமசாமி, அரிதாஸ், பாலகிருஷ்ணன், செந்தில் குமார், சரவணபவன், மாணிக்க வாசகம், பனங்காட்டு படை ஒருங்கிணைப்பாளர் அரிநாடார், தமிழ்நாடு நாடார் சங்க வட சென்னை மாவட்ட தலைவர் கார்த்திக்.

    தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்ற ஆயுட்கால உறுப்பினர் சபேஷ் ஆதித்தன், மன்றத்தின் சட்ட ஆலோசகர் ஆறுமுக நயினார், அயனாவரம் மன்ற தலைவர் ஜெகதீஷ் சவுந்தர் முருகன், நெல்லை மாவட்ட மன்ற செயலாளர் எம்.தோப்புமணி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் காயல் இளவரசு, ஆர்.எஸ்.நாசர், சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில துணை பொதுச்செயலாளர் பால முனியப்பன், ஆதித்தனார் முரசு கணேசா, திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் முல்லை ராஜா, திருச்சி மாவட்டம் அணியாப்பூர் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி எம்.ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட நற்பணி மன்ற துணைச்செயலாளர் செல்வம், சந்தைப்பேட்டை மன்ற செயலாளர் காமராஜ்.

    சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் செல்வம், தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் ஊதாந்த், மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்குனர் ராஜ்குமார், தமிழ்நாடு சி.பா. ஆதித்தனார் சமூக நல இயக்க தலைவர் பி.சி.பச்சைக்கனி, தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநில தலைவர் மதன், பொருளாளர் பால சுப்பிரமணியன், ரமேஷ், கார்த்திக், தமிழன்னை கலை மன்ற செயலாளர் ரவி, சினிமா ஸ்டண்ட் இயக்குனர் ஜாக்குவார் தங்கம், காமராஜர் பேத்தி மயூரி, நிலத்தரகர்கள் நலச்சங்க தலைவர் வி.என்.கண்ணன்,

    சிதம்பரம் டி.சி.ராஜா குமார் காமராஜர் மன்ற தலைவர் திருப்பதி, பொருளாளர் புவனேஸ்வரன், ஆறுமுகம், கீர்த்திராஜா, வினோத்குமார், ஆதித்தனார் மக்கள் பேரவை தலைவர் வக்கீல் செல்வநாதன், பொதுச்செயலாளர் கணேசன், பொருளாளர் ஜெயகுமார், நிர்வாகிகள் அகிலன்பாபு, ராமர், பாண்டியன், சுரேஷ்,

    அகில பாரத பெருந்தலைவர் காமராஜர் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் மதனவேல்ராஜன், மாநில மகளிர் அவை தலைவி சுந்தரம் மீனாட்சி, பனங்காட்டு மக்கள் கழக நிர்வாகிகள் டி.எம்.பிரபாகரன், செந்தில்முருகன், தாஸ், ராமச்சந்திரன், வீரத் தமிழர் பேரவை தலைவர் தங்கபாஸ்கரன், இளைஞர் அணி செயலாளர் கல்வி குமார், சிந்தாதிரிப்பேட்டை அம்பேத்கார் மக்கள் நலச் சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் சந்தர், நிர்வாகிகள் சந்திரன், மோகன், பாஸ்கர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னை மாவட்ட தலைவர் கே.ஜோதிலிங்கம், மாநில செய்தித்தொடர்பாளர் வி.பாண்டியராஜன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் கே.எஸ்.முகைதீன், நிர்வாகிகள் மாரியப்பன், ராமசாமி, காசி பாண்டியன், ஆர்.ராஜா, எஸ்.கணேசன்,

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், பொதுச்செயலாளர் கே.சி.ராஜா, பொருளாளர் பட்டேல், நிர்வாகிகள் அருண்குமார், அகஸ்டின் சுரேஷ், சுந்தரேசன், கண்ணன், இசக்கி முத்து, வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் தங்கதுரை, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி, நிர்வாகிகள் சிந்தா, ஜெயராமன், குழந்தைவேல், ராம்ஜித், அருணாசலமூர்த்தி, ரமேஷ், ஜெயக்குமார்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 6-ம் ஆண்டு நினைவு நாளான இன்று நினைவு இல்லத்தில் அவரது மகனும், தினத்தந்தி இயக்குனருமான சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். #DrSivanthiAditanarMemorial

    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

    அவரது 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 6-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள நினைவு பீடத்தில் தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

     


    தினத்தந்தி, தந்தி டிவி., டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி. ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். #DrSivanthiAditanarMemorial

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு, தினத்தந்தி நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #SPAdithanar #AdithanarBirthday
    சென்னை:

    ‘‘தமிழர் தந்தை’’ சி.பா.ஆதித்தனார் தமிழ்ப் பத்திரிகை உலகில் முன்னோடியாகப் போற்றப்படுகிறார்.

    தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர், கூட்டுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்த அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னை எழும்பூரில் 5 சாலைகள் சந்திக்கும் பகுதியில் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கடந்த 1987-ம் ஆண்டு அந்த சிலையை திறந்து வைத்து அந்த பகுதி சாலைக்கு ‘‘சி.பா.ஆதித்தனார் சாலை’’ என்றும் பெயர் சூட்டினார்.

    சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இன்று (வியாழக்கிழமை) சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு, ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி., மாலை முரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினர்.

    அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலகங்கா ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    மேலும் மாலை அணிவித்தவர்கள் விவரம் வருமாறு:-



    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, வி.ஜி.சந்தோ‌ஷம், டாக்டர் கருணாநிதி, தண்டுபத்து ஜெயராமன், திருநெல்வேலி தட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை செயலாளர் ராமராஜா, எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன்.

    அ.தி.மு.க. நிர்வாகிகள் இ.சி.சேகர், வேல் ஆதித்தன், கே.எஸ்.அரிபாபு, நித்யானந்தம்.

    தி.மு.க. நிர்வாகிகள் சிம்லா முத்துசோழன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், சூளை குப்புசாமி.

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் தாமோதரன், நிர்வாகிகள் சூளை ராமலிங்கம், காஜா மொய்தீன்.

    ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், ஜீவன், சுப்பிரமணியன், சி.பி.ராஜேந்திரன், மகேந்திரன், நிர்வாகிகள் நன்மாறன், நிசார், பூங்கா நகர் ராமதாஸ்.

    த.மா.கா. துணைத் தலைவர் கோவை தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சிவபாலன், ஐசக் வில்சன், காளியப்பன், ஆர்.எஸ்.முத்து, லோகநாதன், ஆர்.சம்பத்குமார், வேலா, ஸ்டீபன், நாஞ்சில் நேசையா, தி.நகர் கனகராஜ்.

    பா.ஜனதா வர்த்தகர் அணி மாநில தலைவர் ராஜா கண்ணன், மாவட்ட செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் எஸ்.ஆர்.ராமையா, வன்னியராஜன், பட்டுராமசுந்தரம்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் புழல் தர்மராஜ், மோகன், பாலாஜி, ராபர்ட், அய்யர், விக்டர், முருகேசபாண்டி, நாகராஜ், பொன்ராஜ், சக்தி முருகன், ரவிச்சந்திரன், செல்வராஜ், அருணாசல பாண்டியன், மாரிமுத்து, ஜெயபால், எஸ்.கே.மணி, ஜஸ்டின் சாம்ராஜ்.

    சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் எம்.கண்ணன், ஆர்.பாஸ்கர், பி.என்.குமார்.

    தலித் முன்னேற்ற கழக தலைவர் அன்பின் பொய்யாமொழி, மாநில செயலாளர் குமார், இணை செயலாளர் கருணாகரன்.

    காமராஜர் ஆதித்தனார் கழக மாநில பொருளாளர் டி.எம்.பிரபாகரன்.

    விடுதலை விரும்பிகள் கட்சி தலைவர் செங்கோடன், பம்மல் கார்த்திக், கோபால், நெல்லை சண்முக சுந்தரம், முருகேசன், சங்கர், முத்து ராஜ், குமார், வெங்கடேசன், வடிவேல், வாசுகி, தனசுந்தரம், குணசுந்தரம், குமார் பாபு, மூர்த்தி.

    அகில இந்திய சமத்துவ கழக தலைவர் ஆர்.ராஜேஷ், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தலைவர் பா.இசக்கி முத்து, மணியரசன், அருள்ரூபன்.

    சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், பொது செயலாளர் டி.தங்கமுத்து, பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், செயலாளர் செல்லத்துரை, துணை தலைவர் தாமஸ், இந்திய நாடார்கள் கூட்ட மைப்பு துணை தலைவர் டி.ராஜ்குமார், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் சிதம்பரம்.

    சென்னை வாழ் கொளத்தூர் நாடார் சங்க கவுரவ தலைவர் எஸ்.பாண்டியன், நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார், நெற்குன்றம் நாடார் சங்க செயலாளர் முத்துராமன், ஆவுடையப்பன், எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொது செயலாளர் சுந்தரேசன்.

    சென்னை வாழ் கள்ளிகுளம் நாடார் சங்க தலைவர் தங்கதுரை, செயலாளர் ஜூலியட், வண்ணாரப் பேட்டை நாடார் சங்க தலைவர் ராஜன், பொருளாளர் ராஜேஷ், பெரம்பூர் வட்டார நாடார் சங்க தலைவர் த.பத்மனாபன், சத்திரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், கூடுதல் பொது செயலாளர் மாரிதங்கம், துணை தலைவர்கள் எஸ்.ஆர்.பி.ராஜன், இமானுவேல், பொருளாளர் குணசீலன்.

    பெரம்பூர் வட்டார நாடார் சங்க செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், ஆலோசகர் ரங்கசாமி, பகுதி செயலாளர் கிருஷ்ணசாமி, சுந்தர்ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் சோலையப்பன், தனுஷ்கோடி ராஜன், சிங்கராஜா, பொன்குமார், முருகேசன், பால்ராஜ், சமுத்திரபாண்டி, மாரியப்பன், ஆறுமுகலிங்கம், சந்திரசேகர்.

    சி.பா.ஆதித்தனார் சமூக நல சேவை இயக்க தலைவர் பி.சி.பச்சைக்கனி, இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் செல்வராஜ் நாடார், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க செயலாளர் மாடசாமி, தங்கதுரை, துணை செயலாளர் ராஜன், துணை தலைவர் செல்வகுமார், மாரீஸ்வரன், கிறிஸ்டோபர், கனகராஜ், வியாசை சுற்று வட்டார நாடார் இளைஞர் பேரமைப்பு காப்பாளர் காம ராஜ், கவுரவ தலைவர் ஆத்தியப்பன், தலைவர் கனகராஜ், செயலாளர் ராஜமூர்த்தி, பொருளாளர் பொன்ராஜ், துணை தலைவர் தவசிராஜன்.

    நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொது செயலாளர் கு.சுந்தரேசன், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், துணை தலைவர் பூபாண்டியன், துணை செயலாளர் ராஜா, தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் முத்து ரமேஷ், துணை பொது செயலாளர் மார்க்கெட் ராஜா.

    சென்னை புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் ரவி, ஒருங்கிணைப்பாளர் அருணாசல மூர்த்தி, பொருளாளர் ஜெயமணி, அமிர்தராஜ், கற்குவேல் ராஜன், அய்யப்பசாமி, தனியரசன், ராம்ஜித், ஜெயசந்திரன், இனாம் கரிசல்குளம் நாடார் உறவின் முறை துணை செயலாளர் விஜயகுமார், சென்னை புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் பெருமாள், பிரித்திவிராஜ், விஜயகுமார், அமிர்தராஜ், மரிய சந்தோ‌ஷம், தமிழ்நாடு நாடார் சங்க காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் ரவி.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, சென்னை மண்டல தலைவர் ஜோதிலிங்கம், மகேஷ்வரன், எட்வர்ட், செய்தி தொடர்பாளர் பாண்டிய ராஜன்.

    மத்திய சென்னை மாவட்ட தலைவர் சாமுவேல், பொருளாளர் ஷேக் முகைதீன், வினோத் பாபு, கே.ஏ.மாரியப்பன், ராமசாமி, சண்முக சுந்தரம், வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ராபர்ட்.

    தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில துணை பொது செயலாளர்கள் எஸ்.பி.முத்து பாண்டியன், பாலமுனியப்பன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் காயல் இளவரசு, மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.நாசர்.

    தென்காசி கப்ளிமுஸ்தபா, தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், நெல்லை மாவட்ட செயலாளர் தோப்புமணி, தென் சென்னை மாவட்ட தலைவர் இந்துநாதன், துணை செயலாளர் ஊதான்ஸ், அம்பேத்கார் சேகர், திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் முல்லை ராஜா, முல்லை பிரைட்டன், ஆதித்தனார் முரசு கணேசா, ஆறுமுக கண்ணன், மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதிதலைவர் தங்க பெருமாள்.

    இட்லி இனியவன், தொழில் அதிபர் சபேஷ் ஆதித்தன், ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் மணலி மாரிமுத்து, பொருளாளர் சமுத்திர பாண்டியன், பொது செயலாளர் ஸ்டீபன், செயலாளர் சோலை கணேஷ், சந்தனா சேகர், காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், சென்னை மண்டல செயலாளர் பால் பாண்டியன்.  #SPAdithanar #AdithanarBirthday
    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். #SivanthiAditanar
    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி போயஸ் கார்டனில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ‘மாலைமலர்’ இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன், மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி. ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினர்.

    மேலும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவித்தவர்கள் விவரம் வருமாறு:-



    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. எம்.பி. கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், த.மா.கா. மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், டாக்டர் கருணாநிதி, முன்னாள் எம்.எல்.சி. கடலூர் எல்.ஜெயச்சந்திரன், தண்டு பத்து ஜெயராமன், முல்லை ராமராஜன், காயாமொழி முருகன் ஆதித்தன்.



    சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனக ராஜ், மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்குனரும் இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் தலைவருமான ராஜ்குமார், எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன்.

    அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கவிஞர் காசி முத்துமாணிக்கம், தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், சிம்லா முத்துச்சோழன்.

    காங்கிரஸ் மாநில பொருளாளர் நாசே.ராமசந்திரன், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர், டி.நகர் பகுதி தலைவர் நாச்சிகுளம் சரவணன்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் ஆதித்தன், தொழில் அதிபர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், நெல்லை மாவட்ட நற்பணி மன்ற செயலாளர் தோப்பு மணி, மாநில நிர்வாகக் குழு இயக்குனர் காயல் இளவரசு, மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.நாசர், தென்காசி ஆல்பா பீர்முகமது, திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் முல்லைராஜா, தொழில் அதிபர் முல்லை பிரைசன், வடசென்னை மாவட்ட நற்பணி மன்ற செயலாளர் ஜி.ராபர்ட், ஆர்.கே.நகர் நற்பணி மன்ற தலைவர் திராவிட சக்கரவர்த்தி.

    அசோக்நகர் கிளை செயலாளர் பொன். அருணாசல பாண்டியன், துணை செயலாளர் ஸ்ரீதரன் பாண்டியன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, அணியாபூர் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி ராஜகோபால், மாவட்ட துணை செயலாளர் செல்வம், சிவந்தி ஆதித்தனார் விளையாட்டுக் குழு தலைவர் சாமிநாதன், செயலாளர் சீனிவாசன்.

    பெரம்பூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் பத்மநாபன், செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், ஆலோசகர் ரெங்கசாமி, தமிழ்நாடு சத்ரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், கூடுதல் பொதுச்செயலாளர் மாரிதங்கம், மாநில துணை தலைவர் செல்வக்குமார், ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரன், செயலாளர் தங்கதுரை, மாடசாமி, தென்சென்னை மாவட்ட தலைவர் இம்மானுவேல், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கிறிஸ்டோபர், வடசென்னை இளைஞர் அணி தலைவர் கனகராஜன், தயானஷ், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் சிதம்பரம்.

    பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் காளிதாஸ், பொதுச் செயலாளர் தனம் என்ற ராமச்சந்திரன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை தலைவர் அ.முத்துக்குமார், எழில் நகர் நாடார் சங்க தலைவர் மாடசாமி, அய்யா வைகுண்டர் தர்மபதி கோவில் தலைவர் தங்கபெரு மாள், ஆர்.கே.நகர் ஆதித்தனார் முரசு கணேசா.

    நந்தம்பாக்கம் நாடார் சங்க தலைவர் ஆர்.வி.கணேசன், ஆலந்தூர் நாடார் சங்க தலைவர் கணேசன், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் லட்சுமணன், துணை தலைவர் தங்கராஜ், துணை செயலாளர் ஆர்.ஏ.கதிரேசன், நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், சென்னை புறநகர் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் சுந்தரே சன், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், துணைத் தலைவர் பூபாண்டியன், பால்ராஜ், தென்னிந்திய நாடார் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், மாநில இளைஞர் அணி தலைவர் விஜயகுமார், உமரிசங்கர், அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரசேகர், ஒருங்கிணைப்பாளர் சண்முக பாலாஜி, தமிழ்நாடு நாடார் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மார்க்கெட் ராஜா. #SivanthiAditanar
    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 37-வது ஆண்டு நினைவு நாளான இன்று எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #spadithanar
    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.



    சி.பா.ஆதித்தனார் சிலைக்கு ‘மாலைமுரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.

    தினத்தந்தி, மாலைமலர், டி.டி.நெக்ஸ்ட், ராணி, ராணி பிரிண்டர்ஸ், இந்தியா கேப்ஸ், டிராவல் மால், தந்தி டி.வி., ஏ.எம்.என். டி.வி., ஹலோ எப்.எம்., இண்டர் பிரஸ், சுபஸ்ரீ ஊழியர்கள் மரியாதை செலுத்தினார்கள்.



    தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், க.பாண்டியராஜன் மற்றும் விஜயகுமார் எம்.பி., பாலகங்கா ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என். ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம்.

    அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் பி.சி. அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.எம்.டி. ரவீந்திரஜெயன், மகிழன்பன், இ.சி.சேகர், நாகராஜ், பெரம்பூர் மகேஷ், வேளாங்கண்ணி.

    தி.மு.க. பிரசார குழு செயலாளர் சிம்லா முத்து சோழன், சூளை குப்புசாமி.

    தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், சக்தி சிவகுமார், வீரபாண்டியன், தாமோதரன், ரவிராஜ், முத்தமிழ், சீதாராமன், சேகர், அன்பழகன், பன்னீர், கோல்டன் ரவி, தணிகை வேல், ஜெகதீஷ், ராமலிங்கம், அன்பழகன், எம்.எஸ்.திரவியம், ராமசாமி, சித்ரா.கிருஷ்ணன், தணிகாசலம், ஜி.கே.தாஸ், வேலுத்தேவர், சக்திவேல், ஜவகர், முகமது பாரூக், தமிழ்ச்செல்வன், சூளை ராஜேந்திரன், வக்கீல் நரேஷ்குமார்.

    பா.ஜனதா நிர்வாகிகள் காளிதாஸ், ஜெய்சங்கர், தனஞ்செயன், ஏழுமலை, சாய் வெங்கடேசன், முரளி.

    ம.தி.மு.க. நிர்வாகிகள் கணேசமூர்த்தி, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஜீவன், கழக குமார், சுப்பிரமணி, நன்மாறன், மைக்கேல்ராஜ், பூமிநாதன்.

    பா.ம.க. நிர்வாகிகள் ஏழுமலை, கன்னியப்பன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் வி.எஸ்.பாபு, சி.ஆர்.சரஸ்வதி, வி.பி. கலைராஜன், செந்தமிழன், எல்.ராஜேந்திரன்.



    விடுதலைச் சிறுத்தை நிர்வாகிகள் வன்னியரசு, செல்லத்துரை, ரவிசங்கர், ராஜேந்திரன், எழில் இமயன், சேத்துப்பட்டு இளங்கோ, ஜேக்கப்.

    த.மா.கா. நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், சைதை மனோ கரன், ரவிச்சந்திரன், டி.சிவ பால், நாஞ்சில் நேசையா.

    தே.மு.தி.க. நிர்வாகிகள் பார்த்தசாரதி, நல்லதம்பி, விசாகராஜன், பூங்கா ரமேஷ், பிரபு, பாஸ்கர்.

    நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலைக்கோட்டுதயம், அன்பு தென்னரசு, வாகைவேந்தன், பார்த்த சாரதி, ராஜா, சாலமன், சரவணன், விக்னேஷ், விமல்ராஜ்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்தானம், சிவகுமார், வைகுண்டராஜா, வி.பி.அய்யர், விக்டர், ராபர்ட், மாங்காடு முருகேச பாண்டி, பொன்ராஜ், கருணைதாசன்.

    புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், நிர்வாகிகள் ஆர்.டி.சேது ராமன், ராஜாராம், எஸ்.பழனி, செல்வம், சுதர்சன், மனோகரமூர்த்தி.

    தலித் முன்னேற்ற கழக தலைவர் அன்பின் பொய்யா மொழி, மாநில செயலாளர் கருணாகரன்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், நிர்வாகிகள் அப்துல்சபிக், ஸ்ரீதர், தர்மேஷ், விஜய் ஆனந்த், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், தீபா பேரவை மாதவன்.

    அகில இந்திய காந்தி - காமராஜ் காங்கிரஸ் தலைவர் இசக்கிமுத்து, மாநில தலைவர் மணிஅரசன், ஐகோர்ட்டு வக்கீல் இரா.சிவசங்கர்.

    சென்னைவாழ் நாடார் சங்க தலைவர் சின்னமணி நாடார், பொதுச்செயலாளர் பி.தங்கமுத்து, அனியாப்பூர் ராஜகோபால், தமிழ்நாடு நாடார் சங்க மாநில இளைஞரணி தலைவர் மணிமாறன், நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் கு.சுந்தரேசன், தமிழ்நாடு பனை வளர்ச்சி கழக முன்னாள் இயக்குனர் பார்வதிமுத்து, தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் முத்து ரமேஷ் நாடார், எவர்கிரீன் நாடார் திருமண தகவல் நிலைய உரிமையாளர் சக்கரவர்த்தி, இட்லி இனியவன், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் செல்வராஜ், தமிழ்நாடு நாடார் சங்க தலைமை நிலைய செயலா ளர் கார்த்திகேயன், சேலம் நாடார் சங்க துணை செயலாளர் மாடசாமி, சென்னை நாடார் சங்க தலைவர் கரன்சிங் நாடார், அகில இந்திய ரியல் எஸ்டேட் நிலத்தரகர்கள் சங்க தலைவர் விருகை கண்ணன், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் நிலத்தரகர்கள் சங்க மத்திய செனனை மாவட்ட தலைவர் வில்லிவாக்கம் பிரபாகரன்.

    திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் ராஜசேகரன் நாடார், சி.திருப்புகழ் நாடார், எஸ். சிங்கராய நாடார், சாமுவேல், தேவராஜ் சீலன், செந் தில்குமார், சரவணபவன், ஹரிதாஸ், சேம் நாடார், நாகராஜ் நாடார், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்.

    அகில இந்திய மனித உரிமைகள் கழக தொழிற் சங்க பேரவை தலைவர் முத்துராமன், செயல் தலைவர் ராஜேஷ், பொதுச்செயலாளர் சுரேஷ்பாபு, கார்த்திகேயன், குகன்கோபிநாத், பாலமுருகன், முத்துக்குமார், நந்தகுமார், மவுலிவாக்கம் சுற்றுவட்டார நாடார் சங்க தலைவர் ஆனந்தராஜ், பொதுச்செயலாளர் பாஸ்கர், துணை பொதுச்செயலாளர் பொன்ராஜ்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணி ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், நற்பணி மன்ற மாநில நிர்வாக குழு உறுப்பினர் காயல் ஆர்.எஸ்.இளவரசு, வடசென்னை மாவட்ட தலைவர் தங்கபெருமாள், செயலாளர் ராபர்ட், துணை செயலாளர் வன்னியரசு, இணை செயலாளர் நாகராஜன், அனியாப்பூர் ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம், அனியாப்பூர் நாடார் சங்க தலைவர் தங்கவேல் நாடார், பொருளாளர் மனோகரன், மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தலைவர் தங்கபெருமாள், அகில பாரத பெருந்தலைவர் காமராஜர் மக்கள் நற்பணி இயக்க மாநில பொதுச்செயலாளர் மதனவேல்ராஜன், மகளிரணி தலைவி சுந்தரமீனாட்சி, தேரடி ராஜன், சென்னை ஓட்டேரி நாடார் ஐக்கிய சங்க தலைவர் தங்கசாமி, பொதுச்செயலாளர் சாலமோன், பொருளாளர் செல்வராஜ், சட்ட ஆலோசகர் செல்வராஜ், காமராஜர் நற்பணி மன்ற மாநில தலைவர் திருப்பதி, பொருளாளர் புவனேஸ்வரன், ஆலோசகர் வைரவராஜன்.

    ஆலந்தூர் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்க தலைவர் ஆலந்தூர் கணேசன் நாடார், பம்மல் அண்ணாநகர் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் சுந்தரபாண்டியன், பொதுச்செயலாளர் பால் ராஜன், பொருளாளர் நம்புசாமி, ஆலோசகர் முத்து, வீரமாமுனிவர் தமிழ் சங்க தலைவர் ஆண்ட்ரூஸ், தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால், மாநிலத் தலைவர் மயிலை மாரித்தங்கம், செயலாளர் அப்துல்ஹாரி, பொருளாளர் சுந்தரசேகர், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் பொய்யாமொழி, தலைமை நிலைய செயலாளர் ஆறுமுகவேல், ஞானசேகர், முல்லைராஜா, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநிலத் தலைவர் முத்துக் குமார், ஆலந்தூர் வட்டார நாடார் சங்க செயலாளர் ஆர்.செல்வகுமார், பொருளாளர் சி.லட்சுமணன், தங்கமுத்து நாடார், சின்னமணி நாடார், கொட்டிவாக்கம் முருகன், வன்னிய ராஜன்.

    அயனாவரம் ரஜினிராஜ், சுரேஷ்குமார், பிரபாகரன், செல்வம், கணபதி, ஜெய், தமிழன்னை செய்தி ஆசிரியர் ரவி, பார்க்கவ குல சங்க நிர்வாகி தனபால் உடையார், சந்தானம், தங்கவேல் உடையார், செல்வ கண்ணன், மகாலட்சுமி, சிந்தாதிரிப்பேட்டை அம்பேத்கார் மக்கள் நலச்சங்க செயல் தலைவர் நாகராஜன், செயலாளர் சுந்தர், பொருளாளர் சந்திரபாபு, சந்திரன், மோகன், பாஸ்கர், கந்தவேல், ராஜேந்திரன், அந்தோணி, உஷாராணி, ஹரி, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் நற்பணி மன்ற திருவொற்றியூர் நகரத் தலைவர் முல்லைராஜா, நிர்வாக குழு உறுப்பினர் ஜாம்ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க துணை பொதுச் செயலாளர் பாஸ்கர் ராஜா, மயிலை வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரசேகர், அனைத்திந்திய சிறுபான்மை பாதுகாப்பு கழக தலைவர் காட்ஸ்பிரே நோபிள், சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் மணலி மாரிமுத்து, நற்பணி மன்ற மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.நாசர்.

    பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்க தலைவர் பத்மநாபன், செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், ஆலோசகர் ரங்கசாமி, பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சுந்தர்ராஜ், சோலையப்பன், தனுஷ்கோடி ராஜன், முருகேசன், பால்ராஜ், அய்யங்கண்ணு. #spadithanar
    ×