search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Family Members"

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு, தினத்தந்தி நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #SPAdithanar #AdithanarBirthday
    சென்னை:

    ‘‘தமிழர் தந்தை’’ சி.பா.ஆதித்தனார் தமிழ்ப் பத்திரிகை உலகில் முன்னோடியாகப் போற்றப்படுகிறார்.

    தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர், கூட்டுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்த அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னை எழும்பூரில் 5 சாலைகள் சந்திக்கும் பகுதியில் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கடந்த 1987-ம் ஆண்டு அந்த சிலையை திறந்து வைத்து அந்த பகுதி சாலைக்கு ‘‘சி.பா.ஆதித்தனார் சாலை’’ என்றும் பெயர் சூட்டினார்.

    சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இன்று (வியாழக்கிழமை) சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு, ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி., மாலை முரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினர்.

    அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலகங்கா ஆகியோர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    மேலும் மாலை அணிவித்தவர்கள் விவரம் வருமாறு:-



    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, வி.ஜி.சந்தோ‌ஷம், டாக்டர் கருணாநிதி, தண்டுபத்து ஜெயராமன், திருநெல்வேலி தட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை செயலாளர் ராமராஜா, எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன்.

    அ.தி.மு.க. நிர்வாகிகள் இ.சி.சேகர், வேல் ஆதித்தன், கே.எஸ்.அரிபாபு, நித்யானந்தம்.

    தி.மு.க. நிர்வாகிகள் சிம்லா முத்துசோழன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், சூளை குப்புசாமி.

    காங்கிரஸ் பொதுச் செயலாளர் தாமோதரன், நிர்வாகிகள் சூளை ராமலிங்கம், காஜா மொய்தீன்.

    ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், ஜீவன், சுப்பிரமணியன், சி.பி.ராஜேந்திரன், மகேந்திரன், நிர்வாகிகள் நன்மாறன், நிசார், பூங்கா நகர் ராமதாஸ்.

    த.மா.கா. துணைத் தலைவர் கோவை தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சிவபாலன், ஐசக் வில்சன், காளியப்பன், ஆர்.எஸ்.முத்து, லோகநாதன், ஆர்.சம்பத்குமார், வேலா, ஸ்டீபன், நாஞ்சில் நேசையா, தி.நகர் கனகராஜ்.

    பா.ஜனதா வர்த்தகர் அணி மாநில தலைவர் ராஜா கண்ணன், மாவட்ட செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் எஸ்.ஆர்.ராமையா, வன்னியராஜன், பட்டுராமசுந்தரம்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் புழல் தர்மராஜ், மோகன், பாலாஜி, ராபர்ட், அய்யர், விக்டர், முருகேசபாண்டி, நாகராஜ், பொன்ராஜ், சக்தி முருகன், ரவிச்சந்திரன், செல்வராஜ், அருணாசல பாண்டியன், மாரிமுத்து, ஜெயபால், எஸ்.கே.மணி, ஜஸ்டின் சாம்ராஜ்.

    சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் எம்.கண்ணன், ஆர்.பாஸ்கர், பி.என்.குமார்.

    தலித் முன்னேற்ற கழக தலைவர் அன்பின் பொய்யாமொழி, மாநில செயலாளர் குமார், இணை செயலாளர் கருணாகரன்.

    காமராஜர் ஆதித்தனார் கழக மாநில பொருளாளர் டி.எம்.பிரபாகரன்.

    விடுதலை விரும்பிகள் கட்சி தலைவர் செங்கோடன், பம்மல் கார்த்திக், கோபால், நெல்லை சண்முக சுந்தரம், முருகேசன், சங்கர், முத்து ராஜ், குமார், வெங்கடேசன், வடிவேல், வாசுகி, தனசுந்தரம், குணசுந்தரம், குமார் பாபு, மூர்த்தி.

    அகில இந்திய சமத்துவ கழக தலைவர் ஆர்.ராஜேஷ், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தலைவர் பா.இசக்கி முத்து, மணியரசன், அருள்ரூபன்.

    சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், பொது செயலாளர் டி.தங்கமுத்து, பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், செயலாளர் செல்லத்துரை, துணை தலைவர் தாமஸ், இந்திய நாடார்கள் கூட்ட மைப்பு துணை தலைவர் டி.ராஜ்குமார், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் சிதம்பரம்.

    சென்னை வாழ் கொளத்தூர் நாடார் சங்க கவுரவ தலைவர் எஸ்.பாண்டியன், நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார், நெற்குன்றம் நாடார் சங்க செயலாளர் முத்துராமன், ஆவுடையப்பன், எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொது செயலாளர் சுந்தரேசன்.

    சென்னை வாழ் கள்ளிகுளம் நாடார் சங்க தலைவர் தங்கதுரை, செயலாளர் ஜூலியட், வண்ணாரப் பேட்டை நாடார் சங்க தலைவர் ராஜன், பொருளாளர் ராஜேஷ், பெரம்பூர் வட்டார நாடார் சங்க தலைவர் த.பத்மனாபன், சத்திரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், கூடுதல் பொது செயலாளர் மாரிதங்கம், துணை தலைவர்கள் எஸ்.ஆர்.பி.ராஜன், இமானுவேல், பொருளாளர் குணசீலன்.

    பெரம்பூர் வட்டார நாடார் சங்க செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், ஆலோசகர் ரங்கசாமி, பகுதி செயலாளர் கிருஷ்ணசாமி, சுந்தர்ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் சோலையப்பன், தனுஷ்கோடி ராஜன், சிங்கராஜா, பொன்குமார், முருகேசன், பால்ராஜ், சமுத்திரபாண்டி, மாரியப்பன், ஆறுமுகலிங்கம், சந்திரசேகர்.

    சி.பா.ஆதித்தனார் சமூக நல சேவை இயக்க தலைவர் பி.சி.பச்சைக்கனி, இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் செல்வராஜ் நாடார், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க செயலாளர் மாடசாமி, தங்கதுரை, துணை செயலாளர் ராஜன், துணை தலைவர் செல்வகுமார், மாரீஸ்வரன், கிறிஸ்டோபர், கனகராஜ், வியாசை சுற்று வட்டார நாடார் இளைஞர் பேரமைப்பு காப்பாளர் காம ராஜ், கவுரவ தலைவர் ஆத்தியப்பன், தலைவர் கனகராஜ், செயலாளர் ராஜமூர்த்தி, பொருளாளர் பொன்ராஜ், துணை தலைவர் தவசிராஜன்.

    நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொது செயலாளர் கு.சுந்தரேசன், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், துணை தலைவர் பூபாண்டியன், துணை செயலாளர் ராஜா, தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் முத்து ரமேஷ், துணை பொது செயலாளர் மார்க்கெட் ராஜா.

    சென்னை புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் ரவி, ஒருங்கிணைப்பாளர் அருணாசல மூர்த்தி, பொருளாளர் ஜெயமணி, அமிர்தராஜ், கற்குவேல் ராஜன், அய்யப்பசாமி, தனியரசன், ராம்ஜித், ஜெயசந்திரன், இனாம் கரிசல்குளம் நாடார் உறவின் முறை துணை செயலாளர் விஜயகுமார், சென்னை புறநகர் நாடார்கள் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் பெருமாள், பிரித்திவிராஜ், விஜயகுமார், அமிர்தராஜ், மரிய சந்தோ‌ஷம், தமிழ்நாடு நாடார் சங்க காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் ரவி.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, சென்னை மண்டல தலைவர் ஜோதிலிங்கம், மகேஷ்வரன், எட்வர்ட், செய்தி தொடர்பாளர் பாண்டிய ராஜன்.

    மத்திய சென்னை மாவட்ட தலைவர் சாமுவேல், பொருளாளர் ஷேக் முகைதீன், வினோத் பாபு, கே.ஏ.மாரியப்பன், ராமசாமி, சண்முக சுந்தரம், வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ராபர்ட்.

    தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில துணை பொது செயலாளர்கள் எஸ்.பி.முத்து பாண்டியன், பாலமுனியப்பன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் காயல் இளவரசு, மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.நாசர்.

    தென்காசி கப்ளிமுஸ்தபா, தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், நெல்லை மாவட்ட செயலாளர் தோப்புமணி, தென் சென்னை மாவட்ட தலைவர் இந்துநாதன், துணை செயலாளர் ஊதான்ஸ், அம்பேத்கார் சேகர், திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் முல்லை ராஜா, முல்லை பிரைட்டன், ஆதித்தனார் முரசு கணேசா, ஆறுமுக கண்ணன், மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதிதலைவர் தங்க பெருமாள்.

    இட்லி இனியவன், தொழில் அதிபர் சபேஷ் ஆதித்தன், ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் மணலி மாரிமுத்து, பொருளாளர் சமுத்திர பாண்டியன், பொது செயலாளர் ஸ்டீபன், செயலாளர் சோலை கணேஷ், சந்தனா சேகர், காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், சென்னை மண்டல செயலாளர் பால் பாண்டியன்.  #SPAdithanar #AdithanarBirthday
    உறவினர்கள் கேலி செய்வார்கள் என அஞ்சி, பிறந்த பச்சிளம் குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். #WestBengal
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் தினக்கூலியாக வேலை பார்க்கும் 48 வயதுடைய நபருக்கு 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். மேலும், பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி, பேரக்குழந்தைகளும் உள்ள நிலையில், அவரது மனைவி மீண்டும் கருவுற்றார்.

    இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று, சப்திபாரி கிராமத்தில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு கணவன்- மனைவி இருவரும் சென்றபோது, மனைவி குழந்தையை பெற்றெடுத்தார். 48 வயதில் குழந்தை பெற்றதால், தனது சொந்த பிள்ளைகள் முன்பு அவமானமாக இருக்கும் எனவும், மேலும் உறவினர்களும் கிண்டல் செய்வார்கள் என்பதால் பிறந்த குழந்தையை கொன்று அருகில் இருந்த குளத்தில் வீசியுள்ளனர்.

    பச்சிளம் குழந்தை குளத்தில் இறந்து மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தகவல் அளித்தனர். போலீசார் சமபவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியபோது, பெற்றோரே குழந்தையை கொன்று வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பெற்ற தாயும் தந்தையுமே, குழந்தையை கொலை செய்து குளத்தில் வீசிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #WestBengal
    அரசு ஆஸ்பத்திரியில் உயிருடன் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு பதிலாக அவரது குடும்பத்தினரிடம் அவர் இறந்து விட்டதாக கூறி இறந்த மற்றொருவர் உடல் ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    மும்பை:

    மராட்டிய மாநிலம் சங்க்லியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில், அவினாஷ் தாதாசாகேப் பக்வடே (வயது 50) என்பவர் கல்லீரல் கோளாறு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருடைய குடும்பத்தினரை ஆஸ்பத்திரி நிர்வாகம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவினாஷ் இறந்து விட்டதாக கூறியது.

    அழுதபடி ஆஸ்பத்திரிக்கு சென்ற குடும்பத்தினரிடம், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, துணியால் மூடப்பட்ட ஒரு உடலை ஒப்படைத்தது. ஒரு உறவினர் சந்தேகப்பட்டு கேள்வி எழுப்பியபோது, உடலை பெற்றுக்கொண்டு வெளியேறுமாறு ஆஸ்பத்திரி அதிகாரிகள் கண்டிப்புடன் கூறினர்.

    அந்த உடலுடன் அவினாஷ் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்தனர். அஞ்சலி செலுத்த வந்த சில உறவினர்களுக்கு அது அவினாஷ் உடல்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால், முழுமையாக துணியை அகற்றி பார்த்தனர். அப்போது, அது வேறு ஒருவரது உடல் என்று உறுதி செய்யப்பட்டது.

    மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தபோது, அவினாஷ் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. அவரை இறந்து விட்டதாக கூறியதுடன், வேறு நபரின் உடலை ஒப்படைத்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது ஆஸ்பத்திரி சூப்பிரண்டு சுபோத் உகானேவிடம் புகார் தெரிவித்தனர். இதுபற்றி விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். அதே சமயத்தில், ஒப்படைக்கப்பட்டது யாருடைய உடல் என்பதும் அடையாளம் காணப்படவில்லை. அந்த உடலுக்கு யாரும் உரிமை கோரவில்லை. 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறினார். #Thoothukudi $SterliteProtest #ActorVijay
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.



    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதையடுத்து நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று தூத்துக்குடிக்கு வந்து விசாரணையை தொடங்கினார்.

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேற்று நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், நிதியுதவியும் அளித்தார்.
    தூத்துக்குடியில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கிய அரசு நிவாரண தொகையை வாங்க பலியானோர் குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ந் தேதி தூத்துக்குடியில் போராட்டம் வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலையை சேர்ந்த தொழிலாளி தமிழரசனும் (வயது 45) ஒருவர் ஆவார். துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மற்றும் அதிகாரிகள் குறுக்குச்சாலையில் உள்ள தமிழரசன் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த குடும்பத்தினரிடம், உங்களது குடும்பத்துக்கு அரசு அறிவித்த ரூ.10 லட்சம் நிவாரண தொகை வந்துள்ளது. மேலும் உங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    நிவாரண தொகையை தாசில்தார் அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். ஆனால் தமிழரசன் குடும்பத்தினர், அரசு அறிவித்த நிவாரண தொகை எங்களுக்கு வேண்டாம். அதை நாங்கள் வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு இருந்து சென்று விட்டனர்.

    இதுகுறித்து தமிழரசன் குடும்பத்தினர் கூறுகையில், எங்களுக்கு அரசு நிவாரண உதவி உள்பட எந்த ஒரு உதவியும் தேவையில்லை. அதற்கு பதிலாக ஸ்டெர்லைட் ஆலையை மூடினாலே போதும். அதுவே அரசு எங்களுக்கு செய்யும் பெரும் உதவி என்றனர்.

    இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், தமிழரசன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிவாரண உதவியாக ரூ.3 லட்சத்தை வழங்கினார். ஆனால் அதனையும் அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர்.

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 37-வது ஆண்டு நினைவு நாளான இன்று எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #spadithanar
    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.



    சி.பா.ஆதித்தனார் சிலைக்கு ‘மாலைமுரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.

    தினத்தந்தி, மாலைமலர், டி.டி.நெக்ஸ்ட், ராணி, ராணி பிரிண்டர்ஸ், இந்தியா கேப்ஸ், டிராவல் மால், தந்தி டி.வி., ஏ.எம்.என். டி.வி., ஹலோ எப்.எம்., இண்டர் பிரஸ், சுபஸ்ரீ ஊழியர்கள் மரியாதை செலுத்தினார்கள்.



    தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், க.பாண்டியராஜன் மற்றும் விஜயகுமார் எம்.பி., பாலகங்கா ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என். ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம்.

    அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் பி.சி. அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் ஆர்.எம்.டி. ரவீந்திரஜெயன், மகிழன்பன், இ.சி.சேகர், நாகராஜ், பெரம்பூர் மகேஷ், வேளாங்கண்ணி.

    தி.மு.க. பிரசார குழு செயலாளர் சிம்லா முத்து சோழன், சூளை குப்புசாமி.

    தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், சக்தி சிவகுமார், வீரபாண்டியன், தாமோதரன், ரவிராஜ், முத்தமிழ், சீதாராமன், சேகர், அன்பழகன், பன்னீர், கோல்டன் ரவி, தணிகை வேல், ஜெகதீஷ், ராமலிங்கம், அன்பழகன், எம்.எஸ்.திரவியம், ராமசாமி, சித்ரா.கிருஷ்ணன், தணிகாசலம், ஜி.கே.தாஸ், வேலுத்தேவர், சக்திவேல், ஜவகர், முகமது பாரூக், தமிழ்ச்செல்வன், சூளை ராஜேந்திரன், வக்கீல் நரேஷ்குமார்.

    பா.ஜனதா நிர்வாகிகள் காளிதாஸ், ஜெய்சங்கர், தனஞ்செயன், ஏழுமலை, சாய் வெங்கடேசன், முரளி.

    ம.தி.மு.க. நிர்வாகிகள் கணேசமூர்த்தி, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், ஜீவன், கழக குமார், சுப்பிரமணி, நன்மாறன், மைக்கேல்ராஜ், பூமிநாதன்.

    பா.ம.க. நிர்வாகிகள் ஏழுமலை, கன்னியப்பன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் வி.எஸ்.பாபு, சி.ஆர்.சரஸ்வதி, வி.பி. கலைராஜன், செந்தமிழன், எல்.ராஜேந்திரன்.



    விடுதலைச் சிறுத்தை நிர்வாகிகள் வன்னியரசு, செல்லத்துரை, ரவிசங்கர், ராஜேந்திரன், எழில் இமயன், சேத்துப்பட்டு இளங்கோ, ஜேக்கப்.

    த.மா.கா. நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், சைதை மனோ கரன், ரவிச்சந்திரன், டி.சிவ பால், நாஞ்சில் நேசையா.

    தே.மு.தி.க. நிர்வாகிகள் பார்த்தசாரதி, நல்லதம்பி, விசாகராஜன், பூங்கா ரமேஷ், பிரபு, பாஸ்கர்.

    நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலைக்கோட்டுதயம், அன்பு தென்னரசு, வாகைவேந்தன், பார்த்த சாரதி, ராஜா, சாலமன், சரவணன், விக்னேஷ், விமல்ராஜ்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்தானம், சிவகுமார், வைகுண்டராஜா, வி.பி.அய்யர், விக்டர், ராபர்ட், மாங்காடு முருகேச பாண்டி, பொன்ராஜ், கருணைதாசன்.

    புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், நிர்வாகிகள் ஆர்.டி.சேது ராமன், ராஜாராம், எஸ்.பழனி, செல்வம், சுதர்சன், மனோகரமூர்த்தி.

    தலித் முன்னேற்ற கழக தலைவர் அன்பின் பொய்யா மொழி, மாநில செயலாளர் கருணாகரன்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், நிர்வாகிகள் அப்துல்சபிக், ஸ்ரீதர், தர்மேஷ், விஜய் ஆனந்த், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், தீபா பேரவை மாதவன்.

    அகில இந்திய காந்தி - காமராஜ் காங்கிரஸ் தலைவர் இசக்கிமுத்து, மாநில தலைவர் மணிஅரசன், ஐகோர்ட்டு வக்கீல் இரா.சிவசங்கர்.

    சென்னைவாழ் நாடார் சங்க தலைவர் சின்னமணி நாடார், பொதுச்செயலாளர் பி.தங்கமுத்து, அனியாப்பூர் ராஜகோபால், தமிழ்நாடு நாடார் சங்க மாநில இளைஞரணி தலைவர் மணிமாறன், நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் கு.சுந்தரேசன், தமிழ்நாடு பனை வளர்ச்சி கழக முன்னாள் இயக்குனர் பார்வதிமுத்து, தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் முத்து ரமேஷ் நாடார், எவர்கிரீன் நாடார் திருமண தகவல் நிலைய உரிமையாளர் சக்கரவர்த்தி, இட்லி இனியவன், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை சென்னை மண்டல தலைவர் செல்வராஜ், தமிழ்நாடு நாடார் சங்க தலைமை நிலைய செயலா ளர் கார்த்திகேயன், சேலம் நாடார் சங்க துணை செயலாளர் மாடசாமி, சென்னை நாடார் சங்க தலைவர் கரன்சிங் நாடார், அகில இந்திய ரியல் எஸ்டேட் நிலத்தரகர்கள் சங்க தலைவர் விருகை கண்ணன், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் நிலத்தரகர்கள் சங்க மத்திய செனனை மாவட்ட தலைவர் வில்லிவாக்கம் பிரபாகரன்.

    திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் ராஜசேகரன் நாடார், சி.திருப்புகழ் நாடார், எஸ். சிங்கராய நாடார், சாமுவேல், தேவராஜ் சீலன், செந் தில்குமார், சரவணபவன், ஹரிதாஸ், சேம் நாடார், நாகராஜ் நாடார், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்.

    அகில இந்திய மனித உரிமைகள் கழக தொழிற் சங்க பேரவை தலைவர் முத்துராமன், செயல் தலைவர் ராஜேஷ், பொதுச்செயலாளர் சுரேஷ்பாபு, கார்த்திகேயன், குகன்கோபிநாத், பாலமுருகன், முத்துக்குமார், நந்தகுமார், மவுலிவாக்கம் சுற்றுவட்டார நாடார் சங்க தலைவர் ஆனந்தராஜ், பொதுச்செயலாளர் பாஸ்கர், துணை பொதுச்செயலாளர் பொன்ராஜ்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணி ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், நற்பணி மன்ற மாநில நிர்வாக குழு உறுப்பினர் காயல் ஆர்.எஸ்.இளவரசு, வடசென்னை மாவட்ட தலைவர் தங்கபெருமாள், செயலாளர் ராபர்ட், துணை செயலாளர் வன்னியரசு, இணை செயலாளர் நாகராஜன், அனியாப்பூர் ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம், அனியாப்பூர் நாடார் சங்க தலைவர் தங்கவேல் நாடார், பொருளாளர் மனோகரன், மணலிபுதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தலைவர் தங்கபெருமாள், அகில பாரத பெருந்தலைவர் காமராஜர் மக்கள் நற்பணி இயக்க மாநில பொதுச்செயலாளர் மதனவேல்ராஜன், மகளிரணி தலைவி சுந்தரமீனாட்சி, தேரடி ராஜன், சென்னை ஓட்டேரி நாடார் ஐக்கிய சங்க தலைவர் தங்கசாமி, பொதுச்செயலாளர் சாலமோன், பொருளாளர் செல்வராஜ், சட்ட ஆலோசகர் செல்வராஜ், காமராஜர் நற்பணி மன்ற மாநில தலைவர் திருப்பதி, பொருளாளர் புவனேஸ்வரன், ஆலோசகர் வைரவராஜன்.

    ஆலந்தூர் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்க தலைவர் ஆலந்தூர் கணேசன் நாடார், பம்மல் அண்ணாநகர் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் சுந்தரபாண்டியன், பொதுச்செயலாளர் பால் ராஜன், பொருளாளர் நம்புசாமி, ஆலோசகர் முத்து, வீரமாமுனிவர் தமிழ் சங்க தலைவர் ஆண்ட்ரூஸ், தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால், மாநிலத் தலைவர் மயிலை மாரித்தங்கம், செயலாளர் அப்துல்ஹாரி, பொருளாளர் சுந்தரசேகர், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் பொய்யாமொழி, தலைமை நிலைய செயலாளர் ஆறுமுகவேல், ஞானசேகர், முல்லைராஜா, தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநிலத் தலைவர் முத்துக் குமார், ஆலந்தூர் வட்டார நாடார் சங்க செயலாளர் ஆர்.செல்வகுமார், பொருளாளர் சி.லட்சுமணன், தங்கமுத்து நாடார், சின்னமணி நாடார், கொட்டிவாக்கம் முருகன், வன்னிய ராஜன்.

    அயனாவரம் ரஜினிராஜ், சுரேஷ்குமார், பிரபாகரன், செல்வம், கணபதி, ஜெய், தமிழன்னை செய்தி ஆசிரியர் ரவி, பார்க்கவ குல சங்க நிர்வாகி தனபால் உடையார், சந்தானம், தங்கவேல் உடையார், செல்வ கண்ணன், மகாலட்சுமி, சிந்தாதிரிப்பேட்டை அம்பேத்கார் மக்கள் நலச்சங்க செயல் தலைவர் நாகராஜன், செயலாளர் சுந்தர், பொருளாளர் சந்திரபாபு, சந்திரன், மோகன், பாஸ்கர், கந்தவேல், ராஜேந்திரன், அந்தோணி, உஷாராணி, ஹரி, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் நற்பணி மன்ற திருவொற்றியூர் நகரத் தலைவர் முல்லைராஜா, நிர்வாக குழு உறுப்பினர் ஜாம்ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க துணை பொதுச் செயலாளர் பாஸ்கர் ராஜா, மயிலை வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரசேகர், அனைத்திந்திய சிறுபான்மை பாதுகாப்பு கழக தலைவர் காட்ஸ்பிரே நோபிள், சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழக தலைவர் மணலி மாரிமுத்து, நற்பணி மன்ற மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.நாசர்.

    பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்க தலைவர் பத்மநாபன், செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், ஆலோசகர் ரங்கசாமி, பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சுந்தர்ராஜ், சோலையப்பன், தனுஷ்கோடி ராஜன், முருகேசன், பால்ராஜ், அய்யங்கண்ணு. #spadithanar
    ×