என் மலர்

    நீங்கள் தேடியது "firing"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் சுட்டதில் உயிரிழந்த 2 வாலிபர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    • உதவி காவல் ஆணையாளர் வெள்ளத்துரை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

    மதுரை

    மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயல் இயக்குநரும், மூத்த வக்கீலுமான ஹென்றி டிபேன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை தெப்பக்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமநாதபுரம் சாலையில் அமைக்கப் பட்டிருந்த சோதனைச் சாவடி அருகே, கடந்த 2010-ல் அப்போதைய காவல் உதவி ஆணையாளர் வெள்ளத்துரை துப்பாக்கி யால் சுட்டதில், கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த கவியரசு (30), ஓடக்கரை பகுதியைச் சேர்ந்த முருகன் (34) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து கோட்டா ட்சியர் நடத்திய விசார ணையில், உதவி ஆணையாளர் வெள்ளத்துரை, தற்காப்பு க்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என்று அறிக்கை அளித்தார்.

    இதனிடையே, உயிரிழந்த முரு கனின் தாய் குருவம்மாள், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பினார். அந்த மனு ஏற்கப்பட்டு காவல் உதவி ஆணையாளர் வெள்ளத்துரை, அவருடன் பணியாற்றிய உதவி ஆய்வாளர் தென்னரசு, தலைமைக் காவலர் கணேசன், காவலர் ரவீந்திரன் ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட்டது.

    மனுதாரரான குருவம்மாள் சார்பில் வக்கீல் சின்ன ராஜா, மக்கள் கண்காணிப்பகத்தின் வக்கீல்கள் பாண்டியராஜன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் வாதாடினர்.

    இதையடுத்து, உயிரிழந்த கவியரசு, முருகன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரி மைகள் ஆணையம் உத்தரவிட் டது. இந்தத் தொகையில், உதவி ஆணையாளர் வெள்ளத்துரையிடம் இருந்து ரூ. 3 லட்சம், உதவி ஆய்வாளர் தென்னரசு, தலைமைக் காவலர் கணேசன் ஆகியோரிடம் இருந்து தலா ரூ.1.50 லட்சத்தை சட்டரீதியாக பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

    உதவி ஆணையாளர் வெள்ளத்துரை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர். அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துப்பாக்கி சூட்டில் இறந்த முருகனின் தாய் குருவம்மாள், வக்கீல்கள் சின்னராஜா, பாண்டியராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உத்தரப்பிரதேசத்தின் மொரதாபாத்தில் நடந்த திருமண விழாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு பெண்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. #CelebratoryFiring
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நேற்று திருமண விழா நடைபெற்றது. அப்போது, மணமகன் வீட்டார் உற்சாக மிகுதியில் தங்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டனர்.

    இதில், ராஷ்மி மற்றும் குசும் என்ற 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ராஜ்ராணி, ராஜ்குமாரி, ஷிவ்ராணி மற்றும் சோனம் ஆகிய 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமண விழாவில் துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #CelebratoryFiring
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விழுப்புரம் அருகே ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு குண்டு அங்கு நின்ற மாட்டின் வாயில் பாய்ந்து ரத்தம் கொட்டியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள வீராமூர் ஏரியில் இன்று அதிகாலை மாட்டு வண்டி தொழிலாளர்கள் சிலர் அனுமதி பெறாமல் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதில் ஒரு குண்டு அங்கு நின்ற மாட்டின் வாயில் பாய்ந்து ரத்தம் கொட்டியது. போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியதாக கூறி மாட்டு வண்டி தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    போலீஸ் காரர்கள் மனிதநேயம் மிக்கவர்கள். அவர்கள் விலங்குகள் மீது துப்பாக்கிசூடு நடத்த மாட்டார்கள். இதில் 90 சதவீதம் போலீசார் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அந்த பகுதியில் காட்டுபன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் காட்டு பன்றிகளை விரட்ட வேட்டைக்காரர்களை கொண்டு துப்பாக்கியால் சுட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் துப்பாக்கி வெடித்தபோது, குண்டு பாய்ந்ததில் ஒரு பெண் பரிதாபமாக பலியானார். #SuratCelebratoryfiring
    அகமதாபாத்:

    வடமாநிலங்களில் திருமண நிகழ்ச்சிகள் நம்மூர் திருவிழாக்கள் போல் களை கட்டும். ஆட்டம், பாட்டு, நடனம் என வெகு உற்சாகமாக திருமண நிகழ்ச்சிகள் அங்கு சிறப்பாக இருக்கும். உற்சாக மிகுதியில் சிலர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வேடிக்கை காட்டுவதுண்டு.

    இந்நிலையில், குஜராத்தின் சூரத் நகரில் உள்ள வராச்சா பகுதியில் திருமண ஊர்வலம் இன்று மதியம் நடைபெற்றது. அதில் இருந்தவர்கள் துப்பாக்கியால் வானை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

    அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் இருந்து சாவித்ரி பென் வட்ஜுகர் என்ற 47 வயது பெண்மணி திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென துப்பாக்கியில் இருந்த குண்டு சாவித்ரி பென் மீது பாய்ந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே சாவித்ரி பென் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமண ஊர்வலத்தில் கொண்டாட்டத்துக்காக நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #SuratCelebratoryfiring
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரோந்து சென்ற ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். #JammuKashmir #Firng
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாண்டிபோரா மாவட்டத்தில் ராணுவ வாகனத்தில் வீரர்கள் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். தகவலறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். பாதுகாப்பை பலப்படுத்தினர்.

    அங்கு பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. #JammuKashmir #Firng
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான காஸாமுனை எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். #Gazaprotest
    காஸா நகரம்: 

    1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர்.

    கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பாலஸ்தீனர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறலாக அமைத்த வசிப்பிடங்களில் சுமார் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் அரசு பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

    இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் கடந்த நான்கு வாரங்களாக காசா எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை காசா எல்லையோரத்தில் உள்ள தடுப்பு வேலியின் அருகே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர்.

    கம்பி வேலியை வெட்டி இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றதால் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் நான்கு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் என இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.#Gazaprotest #tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக டிஜிபி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கலவரத்தில் 72 போலீசார் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு தொடர்பாக டிஜிபி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்டதையடுத்து, பொது மக்களின் உயிரை காப்பாற்றவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  கலவரத்தின்போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.



    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தை தூண்டியதாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தின்போது 72 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

    அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ThoothukudiFiring #DGPReport
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறினார். #Thoothukudi $SterliteProtest #ActorVijay
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.



    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதையடுத்து நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று தூத்துக்குடிக்கு வந்து விசாரணையை தொடங்கினார்.

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேற்று நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், நிதியுதவியும் அளித்தார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சண்முகம் என்பவரின் உடல், மறுபிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். அவர்களில் 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்ப‌ட்டது. கோர்ட்டு உத்தரவின்பேரில் அந்த உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே, சுட்டு கொல்லப்பட்டவர்களின் உடலை பொதுமக்கள் தரப்பிலான தனியார் மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதனை வீடியோ பதிவுசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரது உடல்களை தடயவியல் நிபுணர்கள் மற்றும் எய்ம்ஸ் அல்லது ஜிப்மர், திருவனந்தபுரம் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் அடங்கிய குழு முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பிறகு அந்த உடல்களை அவர்களின் உறவினர்கள் கேட்கும் பட்சத்தில் ஒப்படைக்கலாம். பிரேத பரிசோதனையின் போது குண்டடிபட்ட இடங்களை கண்டிப்பாக புகைப்படம், வீடியோ மற்றும் எக்ஸ்ரே எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

    ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 7 பேர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், திருவனந்தபுரம் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. 

    இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் பலியான சண்முகம் என்பவரது உடலை மருத்துவர்கள் அடங்கிய குழு இன்று மறு பிரேத பரிசோதனை செய்தது. மறு பிரேத பரிசோதனை முடிந்ததும், சண்முகத்தின் உடல் அவரது உறவினர்களிடம் இன்று மாலை ஒப்படைக்கப்பட்டது. 

    பலியானவர்களில் மற்ற இருவர் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும், துப்பாக்கிசூடு நடத்திய போலீசாரை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #ThoothukudiShooting
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். #sterliteprotest #DMK
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று சபாநாயகர் தலைமையிலான பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புறக்கணித்தனர்.

    மேலும், முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் பலர் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து முதல்வர் தரப்பிலிருந்து அனுமதி ஏதும் அளிக்கப்படாத நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை முன்பு அமர்ந்து திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு காவல்துறையே காராணம் என திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டபடி தர்ணா செய்தனர்.

    இதேபோல, தலைமை செயலகத்திற்கு வெளியே திமுகவினர் சாலையை மறித்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

    இதனை அடுத்து, ஸ்டாலினை குண்டுக்கட்டாக தலைமை செயலகத்தில் இருந்து போலீசார் வெளியே தூக்கி வந்தனர். பின்னர், வெளியே வந்த ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் சாலையில் அமர்ந்து மறியல் நடத்தினர்.

    சிறிது நேரத்திற்கு பின்னர், போலீசார் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். 



    முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின், சீருடை அணியாத காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியது பற்றி விசாரணை தேவை என்றும், துப்பாக்கிச்சூடு பற்றி பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும் எனவும், துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்காக டிஜிபியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    மேலும், 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டமே கொந்தளிப்புடன் காணப்படும் நிலையில், முதல்வர் பழனிசாமி நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூட கூறவில்லை என்றும், துப்பாக்கிச்சுடு பற்றி நடவடிக்கை எடுக்காமல் ஒப்புக்காக ஆட்சியர், எஸ்.பி., போன்றோரை மாற்றம் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். #sterlilteprotest #DMK
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo