search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காதல் விவகாரம்... பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த போலீஸ்காரர்
    X

    காதல் விவகாரம்... பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த போலீஸ்காரர்

    • அவளால் மறக்க முடியாத ஒரு வலியை கொடுத்திருக்கிறேன் என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
    • சுபாஷ் கராதி தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் ஷாஜபூர் மாவட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர், தான் காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதுடன், தானும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உளள்து.

    தேவாஸ் நகரில் போலீஸ் டிரைவராக பணியாற்றி வந்த சுபாஷ் கராதி (வயது 26), நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது காதலியின் வீட்டுக்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண், அவரது தந்தை, சகோதரர் என அனைவரையும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இறந்துவிட்டதாக நினைத்து புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், எனக்கு துரோகம் செய்ததால் அவளை கொன்றுவிட்டேன். அவளால் மறக்க முடியாத ஒரு வலியை அவளுக்கு கொடுத்திருக்கிறேன், என பதிவிட்டுள்ளார்.

    ஆனால் அந்த பெண் உயிரிழக்கவில்லை. அவரது தந்தை உயிரிழந்துவிட்டார். அந்த பெண்ணும், சகோதரரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் சுபாஷ் கராதி தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்துள்ளார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×