என் மலர்
நீங்கள் தேடியது "kapil sharma"
- கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது.
- கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ஒட்டாவா:
கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்று இருந்தார்.
கப்ஸ் கஃபே என அழைக்கப்படும் இந்த ஹோட்டல் கடந்த ஜூன் மாதம் கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில நாட்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது
தொடர்ந்து ஆகஸ்ட் மாதமும் இந்த ஓட்டலில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது முறையாக கபில் சர்மா ஓட்டலில் மீண்டும் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், குல்வீர் சித்து, கோல்டி தில்லோன் உள்ளிட்ட குற்றவாளி குழுக்க்கள் பொறுப்பேற்றுள்ளன.
இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது.
- இங்கு கடந்த ஜூலை 9ம் தேதி காலிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஒட்டாவா:
கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்று இருந்தார்.
கப்ஸ் கஃபே என அழைக்கப்படும் இந்த ஹோட்டல் கடந்த மாதம்தான் கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில நாட்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது
இந்நிலையில், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கபில் சர்மா ஓட்டலில் மீண்டும் இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. 25 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏற்கனவே சில பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
- கொலை மிரட்டலை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளர்.
பிரபல நகைச்சுவை நடிகரும், தொலைகாட்சி தொகுப்பாளருமான கபில் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை மிரட்டல் பாகிஸ்தானில் இருந்து மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது. முன்னதாக ராஜ்பால் யாதவ், சுகந்தா மிஸ்ரா மற்றும் ரெமோ டி சோசா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் தற்போது கபில் சர்மாவும் இணைந்துள்ளார். கொலை மிரட்டல் தொடர்பாக அம்போலி காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது பி.என்.எஸ். சட்டம் பிரிவு 351 (3) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொலை மிரட்டல் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை துவங்கி, மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய தகவல்களின் படி கொலை மிரட்டல் மின்னஞ்சல் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த மின்னஞ்சலில், "உங்கள் சமீபத்திய செயல்பாடுகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். மேலும் ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது முக்கியம் என்று நம்புகிறோம். இது விளம்பரத்திற்காகவோ அல்லது உங்களை துன்புறுத்தும் முயற்சியோ இல்லை. இந்த செய்தியை மிகுந்த தீவிரமாகவும், ரகசியமாகவும் அணுக கேட்டுக்கொள்கிறோம்" என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் இதில் அனுப்புநர் 'பிஷ்ணு' என்று கையெழுத்திடப்பட்டுள்ளது.






