search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Air Force"

    • அப்பாச்சி ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • இதையடுத்து அந்த ஹெலிகாப்டர் லடாக் பகுதியில் தரையிறக்கப்பட்டது.

    லடாக்:

    இந்திய விமானப்படையின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களில் விமானப்படை வீரர்கள் வழக்கமான பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கட்டுப்பாட்டு பேனலில் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது. இதையடுத்து ஹெலிகாப்டரை லடாக்கில் அவசரமாக தரையிறக்கினர். அதில் பயணித்த இரண்டு பைலட்டுகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விமானப்படை அதிகாரிகள், ஹெலிகாப்டர் திடீரென தரையிறக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    • விமானப் படைக்குச் சொந்தமான போர்விமானம் ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கியது.
    • விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    ஜெய்ப்பூர்:

    இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

    இந்நிலையில், இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தேஜாஸ் இலகு ரக போர்விமானம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 19-ந் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.
    • இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் மோதவுள்ளது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 19-ந் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா ஆகிய அணிகள் மோதவுள்ளது.

    இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு 10 நிமிடங்கள் விமான சாகசத்தில் ஈடுபடும் என்றும் இதற்கான ஒத்திகை இன்றும், நாளையும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழு பொதுவாக ஒன்பது விமானங்களைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான கண்காட்சிகளில் அதன் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது. 

    இறுதிப் போட்டியை நேரில் காண பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்போது பிரதமர் மோடி, வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

    • ஹெலிகாப்டர் ஜான்சி சென்று கொண்டிருந்த போது, திடீரென அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • ஹெலிகாப்டர் துங்கரியா எனும் ஏரியின் அருகில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இந்திய வான்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் மாவட்டத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. போபாலில் உள்ள ஏரி ஒன்றின் அருகில் இந்திய வான்படை ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இந்த ஹெலிகாப்டரில் பைலட் மற்றும் ஐந்து பேர் பயணம் செய்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்று பெராசியா காவல் நிலைய கண்காணிப்பாளர் நரேந்திர குலாஸ்த் தெரிவித்தார். போபாலில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் ஜான்சி சென்று கொண்டிருந்த போது, திடீரென அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட சமயத்தில் இந்திய வான்படை ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து, துங்கரியா எனும் ஏரியின் அருகில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த ஏரி போபால் விமான நிலையத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

    ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, இன்று மாலை 5 மணியளவில் ஹெலிகாப்டர் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளது. போபால் மற்றும் நாக்பூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் ஹெலிகாப்டரை சரி செய்துள்ளனர்.

    • இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பிற்கான அக்னிவீர் வாயு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 17-ந் தேதி ஆகும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    2023-ம் ஆண்டிற்கு இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பிற்கான அக்னிவீர் வாயு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 18 முதல் 21 வயது வரையுள்ள திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27.06.2003 மற்றும் 27.12.2006 ஆகிய தேதிகளுக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

    கல்வித்தகுதியாக பிளஸ்-2 வகுப்பில் (இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலம்) குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அல்லது 3 ஆண்டு டிப்ளோமா பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரி க்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரு மென்டேஷன் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி) படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது 2 வருட தொழிற்கல்வி கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துடன் 50 சதவீத மதிப்பெண்ணுடன் படித்திருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 17-ந் தேதி ஆகும். இந்த ஆட்சேர்ப்பு 3 கட்டங்களாக நடை பெறவிருக்கிறது. முதலாவதாக எழுத்து தேர்வு 13.10.2023 அன்று நடைபெறுகிறது. 2-வதாக உடற்தகுதி தேர்வும், 3-வதாக மருத்துவ பரிசோதனையும் நடைபெறும்.

    இத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை https://agnipathvayu.cdac.in என்ற இணைய தளத்தில் அறியலாம். இந்திய விமானப்படையில் இணைந்து பணியாற்ற விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய விமானப்படையில் அக்னிவீர்வயு 2024-க்கு ஆட்சேர்ப்பு முகாம் இணையதளம் வாயிலாக நேற்று தொடங்கியது
    • மாதிரி வினாத்தாள் மற்றும் ஏனைய விவரங்கள் இணையதள மூலம் தெரிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    இந்திய விமானப்படையில் அக்னிவீர்வயு 2024-க்கு ஆட்சேர்ப்பு முகாம் இணையதளம் வாயிலாக நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 17-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியக் குடிமகனாக உள்ள திருமணமாகாத ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 27.06.2003 முதல் 27.12.2006-க்குள் (வயது 17½ முதல் 21 வரை) பிறந்திருக்க வேண்டும். 10, +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிக்க வேண்டும்.

    இணையவழி தேர்வு 13.10.2023 அன்று நடைபெறும். இத்தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் மற்றும் ஏனைய விவரங்கள் இணையதள மூலம் தெரிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • விமானம் விபத்தில் சிக்க இருப்பதை உணர்ந்த விமானிகள் உடனே வெளியே குதித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
    • விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடகா மாநிலம் சமராஜாநகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூரிய கிரண் பயிற்சி விமானம் இன்று காலை வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

    விமானத்தில் பெண் விமானி உள்பட இரண்டு விமானிகளும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, போகாபூர் கிராமம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    விமானம் விபத்தில் சிக்க இருப்பதை உணர்ந்த விமானிகள் உடனே வெளியே குதித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
    • விமான நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ள பயணிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தன.

    லடாக்கில் உள்ள லே விமான நிலையத்தில். இந்திய விமானப்படைக்கு சொந்தமான போக்குவரத்து விமானம் இன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஓடுபாதையின் நடுவில் நின்றுவிட்டது. அந்த விமான நிலையத்தில் ஒரே ஒரு ரன்வே மட்டுமே இருப்பதால் வேறு எந்த விமானத்தையும் இயக்க முடியாத நிலை உருவானது. எனவே, அங்கிருந்து புறப்படும் மற்றும் வரக்கூடிய அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    நிலைமையை சரி செய்யவும், திட்டமிட்டபடி நாளை விமானங்களை இயக்கவும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், இதுபற்றி அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும் என்றும் விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதேபோல் ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட அனைத்து விமான நிறுவனங்களும், முன்பதிவு செய்துள்ள பயணிகளை தொடர்பு கொண்டு விமான சேவைகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளன. 

    • 31-ந்தேதி கடைசி நாள்
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கு 26.12.2002 முதல் 26.6.2006 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும்.

    பள்ளி கல்வி வாரியங்க ளின் கவுன்சிலில் உறுப்பினராக பட்டியலிடப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத் துடன் 10-ம் வகுப்பு, பிளஸ்-2-க்கு சமமான தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும்.

    முதற்கட்ட தேர்வாக இணைய வழியில் பொதுஅறிவு மற் றும் ஆங்கிலம் சார்ந்த வினாக்கள் தேர்வும், 2-ம் கட்டமாக உடற்தகுதிகள் தேர்வும் நடைபெறும். 2 தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் இறுதியில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் http://agnipathvayu.cdac. in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ள அறிவிப் பைப் பார்த்து தேர்வு முறை, தேர்வுக்கு வேண்டிய ஆவணங் கள் உள்பட அனைத்து விவரங்களையும் அறிந்து தகுதியு டையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க. வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கடைசிநாள் ஆகும்.

    மேலும் விவரங்களுக்கு 04175-233381என்ற மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் கலந்து கொண் பயன்பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • விமான படைக்கு 70 எச்.டி.டி. 40 ரக அடிப்படை பயிற்சி விமானங்களை வாங்க உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய விமான படையில் புதிதாக விமானிகளாக சேர்க்கப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையாக உள்ள அடிப்படை பயிற்சி விமானங்களின் பற்றாக்குறையை நீக்க ஆலோசிக்கப்பட்டது. இதன்படி, இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 828 கோடியே 36 லட்சம் மதிப்பில் இந்திய விமான படைக்கு தேவையான 70 எச்.டி.டி. 40 ரக அடிப்படை பயிற்சி விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தினை ஊக்குவிக்கும் முயற்சியாகவும் இந்திய வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு இருக்கும். இந்த விமானங்கள் 6 ஆண்டுகளில் ஒப்படைக்கப்படும். இந்த விமானம் குறைந்த வேகத்தில் கையாள கூடிய தன்மைகளை நல்ல முறையில் கொண்டுள்ளதுடன், சிறந்த பயிற்சி அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைத்து, தயாரிக்கப்படும் சூழலால், இந்திய ஆயுத படைகளின் வருங்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான மேம்படுத்துதலை செய்யும் வசதியையும் விமானம் கொண்டிருக்கும்.

    சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்பட இந்திய தனியார் தொழிற்சாலைகளை இந்த தயாரிப்பு பணிக்கு எச்.ஏ.எல். ஈடுபடுத்தும் என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த விமான கொள்முதலால், 100-க்கும் கூடுதலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை சேர்ந்த 1,500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 3 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கப் பெறும்.

    • வான்வெளி தாக்குதல் பயிற்சி மற்றும் போர் உத்திகள் மேற் கொள்ளப்பட்டன.
    • சுகோய் போர் விமானங்கள் வானில் பறந்து சாகசம்.

    குவான்டன்:

    இந்திய விமானப்படையும், மலேசியாவின் ராயல் மலேசிய விமானப்படையும் பங்கேற்ற முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சி மலேசியாவின் குவான்டன் விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது.

    உதாரா சக்தி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையின் சுகோய் 30-எம்கேஐ, சி-17 ரக விமானங்கள், ராயல் மலேசியன் விமானப்படை எஸ்யூ 30-எம்கேஎம் விமானங்கள் பங்கேற்றன.

    நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் இரு நாட்டு விமானப்படைகளும் இணைந்து வான்வெளி தாக்குதல் பயிற்சி மற்றும் போர் உத்திகளை மேற்கொண்டன. பயிற்சியின் நிறைவு விழாவில், சுகோய்-30எம் கேஐ & சுகோய் -30 எம்கேஎம் போர் விமானங்கள் வானில் பறந்து சாகத்தை நிகழ்த்தின. 


    இந்தப் பயிற்சி, இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களுக்கு, ராயல் மலேசிய விமானப்படையின் சிறந்த நடைமுறைகளை அதன் நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மற்றும் பரஸ்பர போர் திறன்கள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியது.

    இருநாடுகளிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் அதிகரிப்பதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகளை மேம்படுத்தி, இருநாட்டு பாதுகாப்பை அதிகரித்துள்ளது என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து இந்திய விமானப்படை குழுவினர், ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் நடக்கவுள்ள பிட்ச் பிளாக் -22 விமான பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    • பல்வேறு வான்வழிப் போர் பயிற்சிகளில் இரு விமானப்படைகளும் பங்கேற்பு.
    • இருநாட்டு பாதுகாப்பை ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை.

    இந்திய விமானப்படையும்,மலேஷியாவின் ராயல் மலேசிய விமானப்படையும் பங்கேற்கும் முதல் இருதரப்பு கூட்டுப் பயிற்சி மலேஷியாவில் நடைபெறுகிறது.

    உதாரா சக்தி என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படைப் படையின் ஒருபிரிவு, விமானப்படை விமான தளத்தில் இருந்து மலேசியாவின் குந்தன் விமானத் தளத்திற்கு புறப்பட்டுச் சென்றது.

    இந்திய விமானப்படையின் எஸ்யூ 30-எம்கேஐ, சி-17 ரக விமானங்கள் இந்த வான் பயிற்சியில் ஈடுபடுகின்றன. ராயல் மலேசியன் விமானப்படை எஸ்யூ 30-எம்கேஎம் விமானம் வான் பயிற்சியில் பங்கேற்கிறது.

    இந்தப் பயிற்சி, இந்திய விமானப்படையை சேர்ந்தவர்களுக்கு, ராயல் மலேசிய விமானப்படையின் சிறந்த நடைமுறைகளை அதன் சிறந்த நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது மற்றும் பரஸ்பர போர் திறன்கள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கும்.

    நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில், இரு நாட்டு விமானப்படைகளுக்குமிடையே, பல்வேறு வான்வழிப் போர் பயிற்சிகள் இடம் பெறுகின்றன.

    உதாரா சக்தி பயிற்சி இருநாடுகளிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் அதிகரிப்பதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகளை மேம்படுத்தி, இருநாட்டு பாதுகாப்பை அதிகரிக்கும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    ×