search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SP Adithanar"

    • உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என முழங்கி தாய்நாடு மீது பற்றும் தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டிருந்தவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்.
    • தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றி புகழ்வோம்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என முழங்கி தாய்நாடு மீது பற்றும் தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டிருந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று.

    எளிய சொற்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்களை உள்ளடக்கிய தமிழர்களுக்கென தனி பத்திரிகையை தொடங்கி தமிழ் இதழியல் முன்னோடியாக திகழ்ந்ததோடு சட்டப்பேரவை தலைவராகவும் அமைச்சராகவும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றி புகழ்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    "தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. சிலை முன்பு அவரது உருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

    சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

     

    சி.பா.ஆதித்தனார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மகேஷ்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

     

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம்கதிர், பாரோஸ் ஓட்டல், மாலைமுரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், தண்டுபத்து ஜெயராமன்.

    தி.மு.க. மாநில மகளிர் ஆலோசனை குழு சிம்லா முத்துசோழன், வர்த்தக அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நிர்வாகிகள் விஜயகுமார், மோகன், தண்ட பாணி, ரகோத்தமன், தளபதி பேரவை தலைவர் அருள்காந்த்.

    அ.தி.மு.க. நிர்வாகி டைரக்டர் நாஞ்சில் பி.சி.அன்பழகன்.

     

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, நிர்வாகிகள் ஜீவன், வந்தியதேவன், சுப்பிரமணி, மகேந்திரன், சிக்கந்தர்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நிர்வாகிகள் வில்லிவாக்கம் ரவிச்சந்திரன், முனவர் பாஷா, சென்னை நந்து, ஜி.ஆர்.வெங்கடேஷ்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நிர்வாகிகள் கண்ணன், டேவிட், சீனிவாசன், ராஜேஷ், சாமுவேல், சுடலைமணி, தாஸ், சதீஷ், தங்கராஜ், வேல்முருகன், சண்முகசுந்தரம்.

    அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், பொருளாளர் சிவா.

    சென்னை வாழ் நாடார் சங்க பொதுச் செயலாளர் டி.தங்கமுத்து, நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ், நிர்வாக செயலாளர் மயிலை சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் ராபர்ட், அருண், செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், கல்விக்குழு உறுப்பினர் செல்வகுமார், ராயபுரம் தொகுதி உறுப்பினர் பூலோக பாண்டியன், சென்னை வாழ் வத்திராயிருப்பு நாடார் உறவின் முறை சங்க தலைவர் வி.வி.எம்.கோகுல்ராம், செயலாளர் காசிராஜன், பொருளாளர் ஆதிமூலம், நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல் ராஜ், இணை செயலாளர் மாரிமுத்து, இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, சென்னை மாவட்ட தலைவர் கே.ரங்கன், செயலாளர் சந்திரமோகன், மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின் முறை மகமை தருமபண்டு தலைவர் சந்திரமோகன், செயலாளர் ஹரிகரன், பொருளாளர் பொன்ராஜ், துணை தலைவர் பாலசுப்பிரமணிய நாடார், மகாஜன பொருளாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் மணலி தங்கம்,

    தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், பொதுச் செயலாளர் ரவி, பொருளாளர் ஆடிட்டர் சிவராஜ், தலைமை நிர்வாக செயலாளர் பொன்ராஜ், ஊடகப்பிரிவு தலைவர் தாமோதரன், எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் சுந்தரேசன், துணை தலைவர் சுதந்திரதாஸ், கள்ளிக்குளம் நாடார் சங்க தலைவர் தங்கத்துரை, தமிழ்நாடு நாடார் சங்க இளைஞரணி தலைவர் பாஸ்கர், பொதுச் செயலாளர் சிவஜோதி, அமைப்பாளர் முருகன், பொருளாளர் ராமமூர்த்தி, தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் டி.விஜயகுமார், பொருளாளர் மெல்வின், இணை செயலாளர் டெல்லி வெங்கடேஷ், மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின்முறை பொருளாளர் செல்வராஜ், துணை செயலாளர்கள் சுரேஷ், செந்தில், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க நிறுவன தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், துணை தலைவர் காமராஜ், தங்கத்துரை, செல்வகுமார், மாடசாமி, இளைஞரணி தலைவர் ராமராஜன், செயலாளர் மாரிமுத்து, கணேஷ்குமார், ஜான்சன்,

    தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில தலைவர் எம்.மாரிதங்கம், மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் பொன்பாண்டியன், துணை செயலாளர் பாண்டியன், வடசென்னை வியாபாரிகள் சங்க தலைவர் ராபர்ட்,

    தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், துணை பொதுச் செயலாளர் பாலமுனியப்பன், நிர்வாக குழு உறுப்பினர்கள் காயல் இளவரசு, கணேசா மற்றும் வக்கீல் ஆறுமுகநயினார், திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் டி.முல்லைராஜா, திருச்சி புறநகர் மாவட்ட நற்பணி மன்ற துணை செயலாளர் அணியாப்பூர் செல்வம், அமைப்பாளர் மணலி ராஜ கோபால், சந்தைப்பேட்டை நற்பணி மன்ற செயலாளர் காமராஜ், சீனிவாசன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் நாகராஜன், ஆர்.கே.நகர் மன்ற செயலாளர் திராவிட சக்கரவர்த்தி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த ஆர்.பால முருகன், கணபதி, பாலம் இருளப்பன், பெஞ்சமின், ராகவன், தியாகராஜன், விமல், தங்கராஜ், எட்வின், ஆதிசங்கர், ஆன்டோ, ஜெபஸ்டின், எழுத்தாளர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    • தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம் இன்று.
    • சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது இதழியல், அரசியல், சமூகப் பணிகளை நினைவு கூர்ந்து போற்றிடுவோம்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    எளிய மக்களுக்கான இதழியல் என்ற கருத்தாக்கத்தில் தமிழர்களுக்காக 'தினத்தந்தி' நாளிதழைத் தொடங்கி அதில் வெற்றி கண்ட மாமனிதர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம் இன்று.

    புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்து, தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தமிழ் இதழியல் உலகில் நீங்கா இடம்பிடித்து முடிசூடா மன்னராக திகழ்ந்த சி.பா.ஆதித்தனாரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது இதழியல், அரசியல், சமூகப் பணிகளை நினைவு கூர்ந்து போற்றிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ் மொழி மீது தீராப்பற்று கொண்டிருந்த சி.பா. ஆதித்தனார் தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான பணிகளைச் செய்தார்.
    • தமிழ் வளர்ச்சியிலும், தமிழர் நலனிலும் அக்கறை கொண்டிருந்ததால் தான் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்பட்டார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42-ஆம் நினைவு நாளில் அவரைப் போற்றுவோம். தமிழ் மொழி மீது தீராப்பற்று கொண்டிருந்த சி.பா. ஆதித்தனார் தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான பணிகளைச் செய்தார்.

    தமிழ் வளர்ச்சியிலும், தமிழர் நலனிலும் அக்கறை கொண்டிருந்ததால் தான் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்பட்டார். தமிழர் தந்தையின் நினைவு நாளில் அன்னைத் தமிழுக்கு தொண்டாற்ற நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழர் தந்தையும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42-ஆம் நினைவு நாள் இன்று.
    • தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான பணிகளை சி.பா. ஆதித்தனார் செய்தார்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழர் தந்தையும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42-ஆம் நினைவு நாள் இன்று. தமிழ்ப்பற்றும், நாட்டுப்பற்றும் தான் அவரது இரு முதன்மை நோக்கங்களாக இருந்தன.

    தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான பணிகளை அவர் செய்தார். அவரது நினைவு நாளில் அவரது சமூகப் பணிகளை போற்றுவதுடன், அவற்றை நாமும் தொடர உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழுக்காக சி.பா.ஆதித்தனார் செய்த அரும்பணிகள் ஏராளம்.
    • “பாரிஸ்டர்” பட்டம் பெற்றாலும், தமிழுக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் அரும்பாடுபட்டவர் சி.பா.ஆதித்தனார்.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 42-வது நினைவு நாளையொட்டி வி.ஜி.பி. குழும தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் வெளியிட்டுள்ள நினைவேந்தலில் கூறி இருப்பதாவது:-

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 42-வது நினைவு நாளை தமிழகம் மட்டுமல்ல உலகில் உள்ள தமிழர்கள் எல்லோரும் இன்று நினைவு கூருகின்றனர். அவர் தமிழுக்காக செய்த அரும்பணிகள் ஏராளம். தமிழகச் சட்டசபையில் சபாநாயகராக இருந்து திருக்குறளை அனைவரும் அறியும்படி செய்தவர்.

    தமிழ்! தமிழ்! என்ற தாகத்தோடு பட்டித்தொட்டி எல்லாம் இருக்கின்ற பாமர மக்களும் தினத்தந்தி நாளிதழ் மூலமாக தமிழை படிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தவர். அவர் "பாரிஸ்டர்" பட்டம் பெற்றாலும், தமிழுக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் அரும்பாடுபட்டவர். இன்று அவரின் 42-வது நினைவுநாளை நினைவு கூருகின்றோம். அவர் தம் புகழ் ஓங்குக! வாழ்க தமிழ்! வெல்க குறள் நெறி!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் 42-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருச்செந்தூர்:

    தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் 42-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராம ஜெயம், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, நகர தலைவர் வாள்சுடலை, கவுன்சிலர் ஓடைசுகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கல்லூரி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி மற்றும் பேராசிரியர்கள் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், திருச்செந்தூர் நாடார் வியாபரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதேபோல் காயாமொழியில் உள்ள சி.பா. ஆதித்தனார் சிலைக்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மனதில் பதியும் வண்ணம் தந்தவர் சி.பா.ஆதித்தனார்.
    • விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செய்திகளை வழங்கியவர் சி.பா.ஆதித்தனார்.

    நெல்லை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லை வந்தார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 42-வது நினைவு தினத்தையொட்டி நெல்லை மத்திய மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நெல்லை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு வைகோ மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது அவருடன் துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் நிஜாம் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழ் அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்று உள்ளேன். சிங்கப்பூரிலே வழக்கறிஞராக இருந்து சிறப்பு பெற்று, லண்டனில் பத்திரிகை நிருபராக செயல்பட்டு சாதனை புரிந்தவர் அவர்.

    அந்த விதத்தில் பெரும்பொருள் ஈட்டி தமிழ்நாட்டில் பத்திரிகை ஆரம்பித்தார். மாலை முரசு பத்திரிகை அவர் தொடங்கியதுதான். அதன் பின்னர் தினத்தந்தி பத்திரிகை மூலமாக புரட்சியை ஏற்படுத்தியவர் சி.பா.ஆதித்தனார் ஆவார்.

    காலையில் எழுந்தவுடன் தந்தி, அதன் பின்னர் தான் காபி என்று சொல்லும் அளவுக்கு மாளிகைவாசி முதல் குடிசைவாசிகள் வரையிலும் அனைவரையும் பத்திரிகை வாசிக்க வைத்தவர் சி.பா. ஆதித்தனார்.உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மனதில் பதியும் வண்ணம் தந்தவர். தமிழனுக்காக ஒரு பத்திரிகை வேண்டும் என தொடங்கியவர் அவர். இந்தியாவிலேயே அதிக மக்கள் வாசிக்கும் பத்திரிகையாக தினத்தந்தி திகழ்கிறது.

    தந்தை பெரியாரை அழைத்து சென்று தஞ்சையில் தமிழ் மாநாட்டை நடத்தினார். இதன் காரணமாக தனிச்சிறையில் வாடினார். சபாநாயகராக இருந்தபோது ஒவ்வொரு நாளும் திருக்குறளை வாசித்து தான் சட்டப்பேரவையை தொடங்க வேண்டும் என்ற மரபை ஏற்படுத்தியவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார். என் திருமணத்தை முன்னின்று நடத்தியவர். விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செய்திகளை வழங்கியவர் சி.பா.ஆதித்தனார். மண் இருக்கும் வரை அவரது புகழ் நிலைத்திருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், முதலீட்டாளர் மாநாடுக்கு வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் வெற்றியோடு திரும்புவார். எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. அதனால் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை குறை கூறி பேசுகிறார்கள். தனித்தமிழ் ஈழத்திற்கு உலக நாடுகளின் ஆதரவு பெருகும்.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். மதுவிலக்கு வேண்டும் என்று தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டேன். எனது சொந்த கிராமத்தில் எனது தாயார் தலைமையில் மதுக்கடையை அடித்து நொறுக்கி அதனை திறக்க விடாமல் செய்தோம்.

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையில் 500 கடைகளை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் கள்ளச்சாராயம் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனை பெருகியதன் விளைவாகவே தற்போது உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது மிகப்பெரிய தவறு. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பது அரசியல் ஆகிவிடும். பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    இந்த பேட்டியின்போது வைகோவின் டெல்லி உதவியாளர் செந்தூர்பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மணப்படை மணி, செய்தி தொடர்பாளர் மின்னல் அலி, பகுதி செயலாளர்கள் கோல்டன் கான், பொன் வெங்கடேஷ், ஜோசப், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான் கென்னடி, ஆறுமுகப் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 42-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
    • சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 42-வது ஆண்டு நினைவு நாள் இன்று (புதன் கிழமை) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சி.பா.ஆதித்தனார் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.

    அதனைத் தொடர்ந்து தினத்தந்தி, டி.டி.நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    தி.மு.க. சார்பில் சிம்லா முத்துச்சோழன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், சூளை குப்புசாமி,

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, டைரக்டர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், இலக்கிய அணி துணைச் செயலாளர் இ.சி.சேகர், நரசிம்மன்,

    ம.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் பிரியகுமார், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் நன்மாறன், தென்றல் நிசார், நாசர், சிக்கந்தர், அரி,

    பாரதிய ஜனதா சார்பில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் வன்னியராஜா,

    ஓ.பி.எஸ். அணி சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் சைதை எம்.எம்.பாபு, ரட்சன் அம்பிகாபதி, மீனவர் அணி மாநில செயலாளர் கோ.சு.மணி, கிருஷ்ணன், டாக்டர் ஆதிராநேவிஸ், பிரபாகர், வீரராகவன், ஆம்னி பஸ் அண்ணாதுரை, ராயபுரம் சிவா, அஞ்சலட்சுமி

    காங்கிரஸ் சார்பில் எஸ்.கே.அகமதுஅலி, ஆழ்வார் தோப்பு வேலாயுதராஜா, சூளை ராஜேந்திரன், சந்திர சேகர், மலைராஜா,

    சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொருளாளர் கண்ணன், வடசென்னை மாவட்ட செயலாளர் பாஸ்கர்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் ஜெகதீசபாண்டியன், டாக்டர் இளவஞ்சி, பர்கானா, பாக்கியராஜன்,

    தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. கு.நல்லதம்பி, பகுதி செயலாளர்கள் செந்தில்நாதன், சரவணன், ரமேஷ்,

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் உதயகுமார், வைகுண்டராஜா, வி.பி.ஐயர், புரசை நாகராஜ், சுந்தரலிங்கம், நளினி மகேந்திரன், ஆரோக்யராணி, ராபர்ட், பாலமுருகன், சுப்பிரமணி, ராஜு, அயன்புரம் செல்வராஜ், கனகராஜ், மடிப்பாக்கம் ரவி, செந்தில், செல்வன், கவிராஜ், முனிராஜ், மணிவண்ணன்,

    அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக பொதுச் செயலாளர் முத்துராமன், சிங்கபெருமாள், நிர்வாகிகள் விஜயலட்சுமி, மைக்கேல்ராஜ், வேணுகோபால், சிவா, மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம நாராயணன், நிர்வாகிகள் பழனி, ஆனந்த், உலக தமிழின பேரியக்க தலைவர் கரு.சந்திரசேகர், த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ்,

    சென்னை வாழ் நாடார் சங்க பொதுச் செயலாளர் தங்கமுத்து, தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் மெல்வின், கவுரவ ஆலோசகர் பெருமாள்,

    தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், நாடார் மகாஜன சங்க சென்னை மாவட்ட தலைவர் மணலி தங்கம், எர்ணாவூர் நாடார் உறவின்முறை பொதுச் செயலாளர் சுந்தரேசன், ராயபுரம் நாடார் சங்க தலைவர் எட்வர்ட் ராஜா,

    நாடார் மகாஜன சங்க சென்னை மாவட்ட செயலாளர் சந்திரமோகன், மணலி நாடார் சங்க செயலாளர் ஹரிகரன், பொருளாளர் பொன்ராஜ்,

    இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், பொருளாளர் சிவக்குமார், வர்த்தக அணி துணை தலைவர் வெங்கட்ராமன், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன், செயலாளர் பாலாஜி, பொருளாளர் குமரன், செயலாளர் செந்தில், தகவல் தொடர்பு பிரிவு பொருளாளர் ரவி ராஜா, இளைஞர் அணி பொருளாளர் தியாகவேல், வர்த்தக அணி துணை தலைவர் எட்வர்ட் ராஜா, கூடுவாஞ்சேரி பீட்டர்,

    நெல்லை-தூத்துக்குடி நாடார் மகாஜன சங்க நிர்வாக செயலாளர் மயிலை சந்திரசேகர பாண்டியன், செல்வகுமார், பாஸ்கர், பூந்தமல்லி தொகுதி தலைவர் பூவை ராமராஜ்,

    நாடார் மகாஜன சங்க சென்னை மாவட்ட தலைவர் அருணாசல மூர்த்தி, சுவைராஜா, மங்களபுரம் நாடார் ஐக்கய சங்க இணை செயலாளர்கள் செல்வ மாரியப்பன், பாலாஜி,

    அகில இந்திய நாடார் சங்க தலைவி விஜயாசந்திரன், பூந்தமல்லி ஐக்கிய நாடார் சங்க தலைவர் ஆர்.சுரேஷ்,

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் சபேச ஆதித்தன், மாநில நிர்வாக குழு செயலாளர்கள் ஆறுமுக நயினார், காயல் இளவரசு, கணேசா, முல்லை ராஜா, மாநில துணை பொதுச் செயலாளர் பால முனியப்பன், திருச்சி நற்பணி மன்ற அமைப்பாளர் ராஜகோபால், கவுரவ ஆலோசகர் தங்கவேல்,

    சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழக பொதுச் செயலாளர் சமுத்திரபாண்டி,

    வடசென்னை வியாபாரிகள் சங்க தலைவர் ராபர்ட், நாகராஜ், துணை செயலாளர் செல்வம், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், காமராஜ்,

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னை மண்டல தலைவர் ஜோதிலிங்கம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஷேக் முகமது, சிந்தாதிரிப்பேட்டை பகுதி தலைவர் ராஜேந்திரன், செயலாளர் கந்தவேல், பொருளாளர் ராஜேந்திரன்,

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் ரவி, பொதுச் செயலாளர் ரமேஷ்குமார், மாவட்ட தலைவர்கள் செந்தில்முருகன், செல்வநாயகம், செய்தித் தொடர்பாளர் எம்.பி.ரமேஷ், சூளைமேடு சக்திவேல்,

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் கள் சங்க அகில இந்திய தலைவர் டாக்டர் வி.என்.கண்ணன், மாநில அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன், செந்தில், ராமையா, சுதாகர், ஆசைதம்பி, முபாரக், ரஜினி, செல்வம், ஜோதிட ஆசான் கீழஈரால் பண்டிதர் பச்சைராஜென் தஞ்சை தமிழ்பித்தன்.

    • சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
    • தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    "தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

    சிலை முன்பு அவரது உருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

    சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரகுபதி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன், கூடுதல் இயக்குனர்கள் சரவணன், அன்பு சோழன், இணை இயக்குனர்கள் மேகவர்ணம், தமிழ் செல்வராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம்கதிர், பாரோஸ் ஓட்டல், மாலைமுரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    பா.ஜனதா மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், பால்கனகராஜ், மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், சுமதி வெங்கடேசன், மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், விஜய்ஆனந்த், தனசேகர், நிர்வாகிகள் யமஹகா சுரேஷ், ஈஸ்வரன், மணி, நல்லாங்குப்பம் நாகராஜ், ஜெ.ஜெ.ஆர்.தினேஷ், வக்கீல்கள் டேவிட், வேல்மாரியப்பன், கண்ணன் மற்றும் லதா சண்முக சுந்தரம்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், திருநாவுக்கரசர் எம்.பி., முன்னாள் மாநில தலைவர்கள் தங்கபாலு, அசன் மவுலானா எம்.எல்.ஏ., மாநில செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர்கள் அடையாறு துரை, சிவராஜசேகரன் மற்றும் கராத்தே ரவி, சூளை ராஜேந்திரன், சரவணன், சூளை ராமலிங்கம், ஏகாம்பரம், செந்தில்குரு, சந்திரசேகர், பெரியமேடு ஜான்சன், ஏசுதாஸ், கொண்டல்தாசன், ஜி.கே.தாஸ், துல் கருணை, முகமது அலி, தணிகாசலம், பெரியமேடு ஜான்சன்,

    தி.மு.க. எம்.பி. கிரிராஜன், எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன் (எழும்பூர்), ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா (விருகம்பாக்கம்), நிவேதா முருகன் (பூம்புகார்), சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் எஸ்.ஆஸ்டின், சிம்லா முத்து சோழன், மடிப்பாக்கம் பகுதி துணை செயலாளர் மடிப்பாக்கம் சிந்தன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், முத்துராமன், கமலக் கண்ணன்,

    சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, தேர்தல் பிரிவு துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை, பாபு முருகவேல், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.விஜயகுமார், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர், வக்கீல் பிரிவு இணை செயலாளர் இ.சி.எஸ்.பாலாஜி, மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் மலர்மன்னன்

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ் ணன், ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.எல்.ஏ. வி.என்.பி.வெங்கட்ராமன், சைதை எம்.எம்.பாபு, ரெட்சன் அம்பிகாபதி, ராயபுரம் பி.எஸ்.சிவா, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, துணை தலைவர் கலி பூங்குன்றன்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கவுன்சிலர் கள் ஜீவன், சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் மகேந்திரன், நன்மாறன், கழக குமார், பகுதி செயலாளர் தென்றல் நிசார், பூங்காநகர் ராமதாஸ்.

    பா.ம.க. இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் ரா.சே.வெங்கடேசன், சுப்பிரமணி, ஏழுமலை மற்றும் துரைராஜ், ஜோதிராஜ், பாலு.

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, பாலசிங்கம், இரா.செல்வம், சேத்துப்பட்டு இளங்கோ.

    த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., சக்தி வடிவேல், ஜி.ஆர். வெங்கடேஷ், ஆர்.எஸ்.முத்து, கோவிந்தசாமி, முனவர் பாட்சா, சென்னை நந்து, எஸ்.ஆர்.பரத், ஜெ.ஜெ.மோகன், ரவிராஜன், எஸ்.ஆர்.ராமு, பொன்வில்சன், புரசை சார்லஸ்.

    அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், சி.ஆர்.சரஸ்வதி, சேப்பாக்கம் எல்.ராஜேந்திரன், கரிகாலன், சுகுமார்பாபு, விருகை சுந்தரராஜன், சித்திக், ராமஜெயம், விதுபாலன், பழனி, ஆனந்த்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில நிர்வாகிகள் ஜெகதீஷ்பாண்டியன், அன்பு தென்னரசு, கதிர் ராஜேந்திரன், அரிமா நாதன், அமுதா நம்பி, கவிஞர் சுமித்ரா, பாக்யராஜ், அகமது பாசில், அய்யனார், டால்பின் ரவி.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் டி.மகாலிங்கம், துணை பொதுச் செயலாளர் ஜி.ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர்கள் ஆண்டனி, பொன்னரசன், பொன்வேல், கார்த்திக், குருமூர்த்தி, மணலி பாலா, எழும்பூர் பகுதி செயலாளர் சரத் வெங்கடேஷ், திரு.வி.க. நகர் பகுதி செயலாளர் ஏழுமலை, வட்டச் செயலாளர்கள் மணிமாறன், ஆறுமுகம், தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாலசுந்தர்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா, உயர்மட்ட குழு உறுப்பினர் டி.உதயகுமார், தென் சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் பொன்.அருணாசல பாண்டியன், தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.பாலமுருகன், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் புரசை சி.நாகராஜ், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், தி.நகர் தொகுதி தலைவர் எம்.எம்.டி.ஏ.பால முருகன், விருகம்பாக்கம் தொகுதி தலைவர் கே.மணிராஜ், வில்லிவாக்கம் தொகுதி தலைவர் ஏ.பொன்ராஜ், குன்றத்தூர் ஒன்றிய தலைவர் ஏ.சி.தர்மராஜ்.

    சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாவட்ட செயலாளர் பாஸ்கர், தொகுதி செயலாளர் ராஜேஷ், நாடார் பேரவை மாவட்ட செயலாளர் சீனிவாசன், பாக்யராஜ், சங்கர பாண்டி, வேல்முருகன்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மாவட்ட செயலாளர்கள் வாசுதேவன், முத்துராஜ், மதுரவாயல் பகுதி தலைவர் சதீஷ், துணை அமைப்பாளர் பி.தாமு, இளைஞர் அணி செயலாளர் கோ.அருண், பொருளாளர் நடராஜன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் பி.விக்னேஷ்.

    புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், அமைப்புச் செயலாளர்கள் பழனி, செல்வம், ஏ.சி.எஸ். பேரவைத் தலைவர் சுதர் சன், லோகநாதன், நடராஜன், தனசேகர், ராதாகிருஷ்ணன், ஏ.வி.மணி, சங்கர், முருகப்பெருமான், வேலாயுதம், ஐயாகண்ணு, சண்முகம், ஆனந்தன், தீர்த்தகிரி, வெங்கடேசன்.

    இந்து முன்னணி மாநில செயலாளர் மணலி மனோகர், மாநகர தலைவர் இளங்கோவன், சிவ விஜயன், தங்கராஜ்.

    அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக நிறுவனர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள், மாநில பொதுச்செயலாளர் ஞானப்பிரகாசம், மாநில செயலாளர் கந்தசாமி, தாமஸ், ராஜசேகர், சுந்தர்ராஜன், சுரேஷ், புதுச்சேரி மாநில செயலாளர் சேகர், ஆசைதம்பி, சிலம்பரசன், ராஜ்குமார், சக்திவேலன், கிருஷ்ணன், பரந்தாமன், குமரேசன், ஜெயக்குமார், கோபாலகிருஷ்ணன், கொழுந்தியப்பன், மணிகண்டன், பழனிசாமி, பிரதீப்.

    அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தலைவர் இசக்கிமுத்து, மாநில தலைவர் மணியரசன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38-வது ஆண்டு நினைவு நாளான இன்று எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 38-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.



    சி.பா.ஆதித்தனார் சிலைக்கு ‘மாலைமுரசு’ நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.

    தினத்தந்தி, மாலைமலர், டி.டி.நெக்ஸ்ட், ராணி, ராணி பிரிண்டர்ஸ், இந்தியா கேப்ஸ், டிராவல் மால், தந்தி டி.வி., ஏ.எம்.என். டி.வி., ஹலோ எப்.எம்., இண்டர் பிரஸ், சுபஸ்ரீ ஊழியர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

    தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், க.பாண்டியராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயதுரை, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தி.மு.க. பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன், நடிகர் எஸ்.வி.சேகர்,தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம், டாக்டர் கருணாநிதி, எழுத்தாளர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன்,

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலகங்கா, இலக்கிய அணி மாநில துணைத்தலைவர் இ.சி. சேகர், நடிகர் கே.எம்.பஷீர், டி.எஸ்.வேல்ஆதித்தன்.

    காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரூபி மனோகரன், வீரபாண்டியன், நிர்வாகிகள் நாச்சிகுளம் சரவணன், பொன். கிருஷ்ணமூர்த்தி, துரை, எம்.கே.பாபு, நாகராஜ், கவுரிசங்கர், ரகுசங்கர், ரஞ்சன், ராஜ்குமார், பிரபா, விஜய், கார்த்திகேயன், நெட் ரமேஷ், ராதாகிருஷ்ணன், கார்த்திக், தினேஷ்பாபு, சூளை ராஜேந்திரன், முனிவேல், எழும்பூர் குணா, வேலுத்தேவர்.

    பா.ஜனதா நிர்வாகிகள் ராமையா, வன்னியராஜன், அனைத்து இந்திய மக்கள் கட்சி நிறுவன தலைவர் அருள்காந்த்.

    ம.தி.மு.க. நிர்வாகிகள் வந்தியதேவன், ஜீவன், சுப்பிரமணி, மகேந்திரன், ஞானம், நிசார், இளவழகன், சிக்கந்தர், குமார், நமச்சிவாயம், கராத்தே பாபு, கழக குமார், செல்ல பாண்டியன், டாக்டர் சந்திர சேகர், பூங்கா நகர் ராமதாஸ்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் செல்லத்துரை, இரா.செல்வம், நிர்வாகிகள் சேத்துப்பட்டு இளங்கோ, மின்னல் பாபு, எம்.செல்வம், அண்ணாமலை. மண்வீரன்.

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.வெங்கடேஷ், கோவை தங்கம், டி.என். அசோகன், டி.எம்.பிரபாகர், முனவர் பாட்சா, விடியல் சேகர், திருவேங்கடம், சக்தி வடிவேல், ரவிசந்திரன், மனோகர், இளங்கோ, புனிதன், சத்திய நாராயணன், மனோஜ்குமார், லட்சுமி பிரபா, சிவா, வசந்தி, நரேஷ் குமார்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் தர்மராஜ், மோகன், குருசாமி, சிவகுமார், சந்தானம், ராபர்ட், வி.பி.அய்யர், நாகராஜ், விக்னேஷ்வரன், சந்துரு, ஜஸ்டின் காமராஜ், பொன்ராஜ் மாரிசெல்வம், அலெக்சாண்டர், பொன். மகேஷ், காட்வின், கருணாதாசன், முருகன், முருகேச பாண்டியன்.

    சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் கே.ஏ.எஸ்.ஆர்.பாபு, பாஸ்கர், வில்லியம், சீனிவாசன், ஜஸ்டின், சங்கர பாண்டி, செல்வா, தர்புதீன், சிவகுமார், பாக்யராஜ், சுந்தரேசன்.

    அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட கழக நிறுவன தலைவர் முத்துராமன், சிங்க பெருமாள், நாகராஜ், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தலைவர் இசக்கிமுத்து, கதிரேசன்.

    புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் ரவிகுமார், சேதுராமன், ராஜாராம், பழனி, சுதர்சன், செல்வம், லோகநாதன், மகாதேவன், கவுரிசங்கர், ராதாகிருஷ்ணன், சீனிவாசன், ரமேஷ், ஆனந்தன், முருக பெருமான், பிரகாஷ்குமார், அரிகிஷ்ணன், செந்தில் குமார், சேகர், வெங்கடேசன், சுகுமார்.

    மூவேந்தர் முன்னணி கழக நிர்வாகிகள் சுரேஷ், வரதராஜ், சண்முகவேல், பாண்டியன்.

    சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், பொதுச்செயலாளர் தங்கமுத்து, நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் த.பத்மநாபன், பொருளாளர் எம்.மாரிதங்கம், பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்க செயலாளர் செல்லம், பொருளாளர் தாமோதரன், பெருவாயல் ரங்கசாமி, பி.கிருஷ்ணசாமி, ஐ.சுந்தர் ராஜ், பி.தனுஷ் கோடி, எஸ்.சோலையப்பன், எம்.சமுத்திரபாண்டி, எஸ்.மாரியப்பன், எஸ்.பொன்னுகுமார், நெல்லை, தூத்துக்குடி மகமை பரிபாலன சங்க நிர்வாக செயலாளர் மயிலை சந்திரசேகர், கமிட்டி உறுப்பினர் வெள்ளத்துரை

    சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் ஆர்.சிதம்பரம், சேலம் நாடார் சங்க துணை செயலாளர் மாடசாமி, சென்னை நாடார் நலச் சங்க செயலாளர் பி.விஜயகுமார், துணை செயலாளர் மார்க்கெட் ராஜா, பொருளாளர் ராஜாராம், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், பொருளாளர் குணசீலன்,

    மாநில ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பி.மாரி முத்து, துணை தலைவர் பொன்னம்பல சாமி, மாநில செயலாளர் வி.தங்கதுரை எம்.மாடசாமி, எம்.ஏ. தங்கதுரை, சென்னை வாழ் முல்லைக்காடு நாடார் சங்க துணை செயலாளர் முல்லை பிரைட்டன், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன்.

    இந்திய நாடார்கள் பேரமைப்பு ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.மலர்மன்னன், எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் சுந்தரேசன், துணை தலைவர் சுதந்திரதாஸ், ஆழ்வார், ராமன்நாடார், அணியாப்பூர் நாடார் சங்க பொருளாளர் மனோகரன், பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்க தலைவர் செல்வராஜ், அருணாசல மூர்த்தி, ஜெயராஜ், வெள்ளைச்சாமி.

    சென்னை வாழ் போடுபட்டி இந்து நாடார் உறவின் முறை சங்க நிர்வாகிகள் முனிரத்தினம், செந்தில்குமார், முத்துகருப்பன், காசி பாண்டி, நெற்குன்றம் நாடார் சங்க செயலாளர் கே.முத்துராமன், சேலவாயல் நாடார் சங்க நிர்வாகி செந்தில்முருகன், சர்வதேச வணிகர் சம்மேளன தலைவர் கராத்தே சந்துரு, வக்கீல் விஜய குமார், சுப்பிரமணி, ஜீவன், இசக்கிராஜா.

    திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க செயலாளர் திருப்புகழ், பொருளாளர் சிங்கராயர், நிர்வாகிகள் ராஜேந்திரன், சித்திரைப்பாண்டியன், கனகராஜ், சின்னத்துரை, ராமசாமி, அரிதாஸ், பாலகிருஷ்ணன், செந்தில் குமார், சரவணபவன், மாணிக்க வாசகம், பனங்காட்டு படை ஒருங்கிணைப்பாளர் அரிநாடார், தமிழ்நாடு நாடார் சங்க வட சென்னை மாவட்ட தலைவர் கார்த்திக்.

    தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணிமன்ற ஆயுட்கால உறுப்பினர் சபேஷ் ஆதித்தன், மன்றத்தின் சட்ட ஆலோசகர் ஆறுமுக நயினார், அயனாவரம் மன்ற தலைவர் ஜெகதீஷ் சவுந்தர் முருகன், நெல்லை மாவட்ட மன்ற செயலாளர் எம்.தோப்புமணி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் காயல் இளவரசு, ஆர்.எஸ்.நாசர், சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில துணை பொதுச்செயலாளர் பால முனியப்பன், ஆதித்தனார் முரசு கணேசா, திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் முல்லை ராஜா, திருச்சி மாவட்டம் அணியாப்பூர் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி எம்.ராஜகோபால், திருச்சி புறநகர் மாவட்ட நற்பணி மன்ற துணைச்செயலாளர் செல்வம், சந்தைப்பேட்டை மன்ற செயலாளர் காமராஜ்.

    சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் செல்வம், தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் ஊதாந்த், மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்குனர் ராஜ்குமார், தமிழ்நாடு சி.பா. ஆதித்தனார் சமூக நல இயக்க தலைவர் பி.சி.பச்சைக்கனி, தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநில தலைவர் மதன், பொருளாளர் பால சுப்பிரமணியன், ரமேஷ், கார்த்திக், தமிழன்னை கலை மன்ற செயலாளர் ரவி, சினிமா ஸ்டண்ட் இயக்குனர் ஜாக்குவார் தங்கம், காமராஜர் பேத்தி மயூரி, நிலத்தரகர்கள் நலச்சங்க தலைவர் வி.என்.கண்ணன்,

    சிதம்பரம் டி.சி.ராஜா குமார் காமராஜர் மன்ற தலைவர் திருப்பதி, பொருளாளர் புவனேஸ்வரன், ஆறுமுகம், கீர்த்திராஜா, வினோத்குமார், ஆதித்தனார் மக்கள் பேரவை தலைவர் வக்கீல் செல்வநாதன், பொதுச்செயலாளர் கணேசன், பொருளாளர் ஜெயகுமார், நிர்வாகிகள் அகிலன்பாபு, ராமர், பாண்டியன், சுரேஷ்,

    அகில பாரத பெருந்தலைவர் காமராஜர் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் மதனவேல்ராஜன், மாநில மகளிர் அவை தலைவி சுந்தரம் மீனாட்சி, பனங்காட்டு மக்கள் கழக நிர்வாகிகள் டி.எம்.பிரபாகரன், செந்தில்முருகன், தாஸ், ராமச்சந்திரன், வீரத் தமிழர் பேரவை தலைவர் தங்கபாஸ்கரன், இளைஞர் அணி செயலாளர் கல்வி குமார், சிந்தாதிரிப்பேட்டை அம்பேத்கார் மக்கள் நலச் சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் சந்தர், நிர்வாகிகள் சந்திரன், மோகன், பாஸ்கர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னை மாவட்ட தலைவர் கே.ஜோதிலிங்கம், மாநில செய்தித்தொடர்பாளர் வி.பாண்டியராஜன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் கே.எஸ்.முகைதீன், நிர்வாகிகள் மாரியப்பன், ராமசாமி, காசி பாண்டியன், ஆர்.ராஜா, எஸ்.கணேசன்,

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார், பொதுச்செயலாளர் கே.சி.ராஜா, பொருளாளர் பட்டேல், நிர்வாகிகள் அருண்குமார், அகஸ்டின் சுரேஷ், சுந்தரேசன், கண்ணன், இசக்கி முத்து, வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் தங்கதுரை, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி, நிர்வாகிகள் சிந்தா, ஜெயராமன், குழந்தைவேல், ராம்ஜித், அருணாசலமூர்த்தி, ரமேஷ், ஜெயக்குமார்.

    ம.பொ.சி., காலிங்கராயன், அழகுமுத்துக்கோன், பென்னி குயிக், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் ஆகியோரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். #EdappadiPalaniswami #SPAdithanar
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழ்நாட்டில் இதழியல் முன்னோடியும், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான “தினத்தந்தி” தமிழ் நாளிதழைத் தொடங்கி, பாமரரும், பாட்டாளியும் எளிய தமிழ் மூலம் படிக்க வழிவகை செய்தவர் சி.பா.ஆதித்தனார்.

    தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டப்பேரவையின் அவைத்தலைவராகவும், கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் சி.பா.ஆதித்தனார்.

    தமிழ் ஆர்வலர்கள் அன்னாரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென்று விடுத்த கோரிக்கையினை ஏற்று, சென்னை எழும்பூரில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு அவர் பிறந்த நாளான செப்டம்பர் 27 அன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.

    இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞரும், சிலப்பதிகாரத்தின் மீது ஆளுமை கொண்டிருந்த சிலம்புச் செல்வர் என அனைவராலும் அறியப்பட்டவர், முன்னாள் மேலவைத் தலைவர் ம.பொ.சிவஞானம். மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின்போது, சென்னையை தமிழ்நாட்டின் தலைநகராக தொடரச் செய்யவும், திருத்தணி, செங்கோட்டை பகுதிகளையும், கன்னியாகுமரி மாவட்டத்தையும் தமிழ்நாட்டுடன் இணைக்க பாடுபட்டவர்; எழுத்து சீர்திருத்தத்தின்போது ‘ஐ’யும், ‘ஒள’வும் தமிழ் மொழியில் தொடரச் செய்தவர் ம.பொ.சிவஞானம்.

    அவரது தமிழ் தொண்டினை போற்றிடும் வகையில், சென்னை, தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள ம.பொ.சிவஞானத்தின் திருவுருவச் சிலைக்கு அன்னாரின் பிறந்த நாளான ஜூன் 26 அன்று அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும்.



    துணிச்சல், மன உறுதி, தன்னம்பிக்கையுடன் விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை தனது சொந்த செலவில் கட்டி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெற வழிவகுத்த கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளினை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட அப்பகுதி விவசாய பெருமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அவர்களது கோரிக்கையினை ஏற்று கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளான ஜனவரி மாதம் 15-ம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.

    பவானி ஆறு காவேரி ஆற்றுடன் கூடும் இடத்திற்கு சற்று முன்பே அணை கட்டி பவானி ஆற்றின் நீரை வாய்க்கால் மூலம் நேராகக் கொண்டு சென்றால் தண்ணீர் விரைந்து ஓடிவிடும் என்பதாலும், வாய்க்கால்களை வளைத்து வளைத்து வெட்டுவதனால் அதிக பரப்பளவு பாசனம் பெறும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடனும், விவசாயிகளின் நலன்களுக்காக வாய்க்கால்களை திறம்பட வெட்டி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தை மாதம் 5-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தவர் காலிங்கராயன்.

    அன்னாரை சிறப்பு செய்யும் வகையில் தை மாதம் 5-ந்தேதியன்று பொதுமக்கள் சார்பாக காலிங்கராயன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு மேலும் சிறப்பு செய்யும் விதமாக 13.5.2018 அன்று அவரது முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணி மண்டபம் என்னால் திறந்து வைக்கப்பட்டது. காலிங்கராயனின் நினைவைப் போற்றுகின்ற வகையில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ந்தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

    சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் வீரத்தையும் வரலாற்றையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்ட சிலையை 15.3.1996 அன்றும், தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் நினைவு மண்டபத்தை 8.12.2014 அன்றும், அம்மா திறந்து வைத்து அன்னாருக்கு பெருமை சேர்த்தார்.

    தூத்துக்குடி மாவட்டம், கட்டாளங்குளத்தில் உள்ள அன்னாரது நினைவு மண்டபத்தில் ஆண்டுதோறும், அவரது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னாருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, சென்னை, எழும்பூரில் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு ஆண்டுதோறும் ஜூலை 11-ம் நாள் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami #SPAdithanar

    ×