என் மலர்
நீங்கள் தேடியது "சிபா ஆதித்தனார் பிறந்தநாள்"
- தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
- அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை:
'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
சிலை முன்பு அவரது உருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம்கதிர், பாரோஸ் ஓட்டல், மாலைமுரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.
சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சி.பா.ஆதித்தனார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
அவர்களுடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், காங்கிரஸ் எம்.பி.க்கள், விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், அசன் மவுலானா எம்.எல்.ஏ., நடிகர் எஸ்.வி.சேகர், சினிமா தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா.
தி.மு.க. மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நெசவாளர் அணி செய லாளர் சிந்து ரவிச்சந்திரன், தளபதி பேரவை மாநில தலைவர் அருள்காந்த், நா.தமிழ்மணி, சேப்பாக்கம் வி.பி.மணி, தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன்,
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோகர், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜா ராம், ஆர்.எஸ்.ராஜேஷ், மாநில இலக்கிய அணி துணை செயலாளர்கள் இ.சி.சேகர், கே.எஸ்.மலர் மன்னன் மற்றும் முகமது இம்தியாஸ், உதயவெற்றி, நவனைய்யா, முன்னாள் கவுன்சிலர் டில்லி, ஆர்.கே.நகர் முரளிமுருகன், ஜி.பி.ராஜேந்திரன், முகப்பேர் இளஞ்செழியன்,
காங்கிரஸ் அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாநில செயலாளர் தளபதி பாஸ்கர், அருள் பெத்தையா, நெல்லை மாவட்ட காங்கிரஸ் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சிவநேஸ் ராஜேஷ், மாநில மீனவர் அணி தலைவர் ஜோர்தான், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் சிவராஜ சேகர், ஜெ.டில்லி பாபு, முத்தழகன், துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், எஸ்.எச்.அலி, கராத்தே ரவி, தமிழ்ச்செல்வன், அரும்பாக்கம் பாண்டியன், சீரணிதாஸ், சக்தி சிவகுமார், சூளை ராமலிங்கம், ஜெய்னுல் ஆப்தீன், ராதாகிருஷ்ணன், டி.எம்.தணிகாசலம், சர்க்கிள் தலைவர் ரஜினி செல்வம், அம்பத்தூர் பீர்முகமது, பெருங்குடி செந்தில்குரு, ஆர்.கே.நகர் பாஸ்கர், சூளை ஹேம்நாத்,
தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், சக்கரவர்த்தி, மயிலை பாலாஜி, மாவட்ட தலைவர் லதா சண்முகம், புயல் ராஜா மணி, கோபி, மாரியம்மன், முரளிகிருஷ்ணன், சுந்தர மூர்த்தி, நாச்சிக்குளம் சரவணன், நந்தகுமார், பாண்டியன், ரமேஷ்,
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பூக்கடை எஸ்.கே.எம்.குமார், எழும்பூர் மேற்கு பகுதி நிர்வாகி சி.நந்தா, எழும்பூர் கிழக்கு பகுதி நிர்வாகி டி.ராஜேஷ், வில்லிவாக்கம் மேற்கு பகுதி நிர்வாகி வி.எஸ்.டி.விசு, கிழக்கு பகுதி வட்ட செயலாளர்கள் சிவா, அஜித்குமார்.
ம.தி.மு.க. நிர்வாகிகள் சு.ஜீவன், சுப்பிரமணியன், திருப்பூர் லோகு, மகேந்திரன், மல்லை சத்யா ஆதரவாளர்கள் செல்வபாண்டியன், ஊனை பார்த்திபன், இளவழகன், ஞானம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., இரா.செல்வம், செல்லத்துரை, ரஜினிகாந்த்,
பா.ம.க. நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், ஈகை தயாளன், குமார், சீனிவாசன், வண்ணை சத்யா, ஜி.வி.சுப்பிரமணியம், சிவகுமார், தாயுமானவன், சீனிவாசன், சரவணன், துரைராஜ், சுந்தரம், முனு சாமி, செல்வம், பூங்காநகர் ஆறுமுகம், வெங்கடேசன்,
அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., சைதை எம்.எம்.பாபு, கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி, ரெட்சன் அம்பிகா பதி, ராமமூர்த்தி, தனபால், ரமேஷ், அரிபாபு, ஆனந்தன், அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்கள் கரிகாலன், சுகுமார் பாபு, மாவட்ட செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன்
த.மா.கா. மாநில பொதுச் செயலாளர் ஜி.ஆர்.வெங்க டேஷ், சக்தி வடிவேல், கோவிந்தசாமி, பத்மநாபன், ராஜம் எம்.பி.நாதன், சிவ பால், ஆர்.எஸ்.முத்து, நரேஷ், மோகன், மகேஷ் குமார், சத்யா, லோகநாதன், சஞ்சய், காந்தியம் வெங்கடேசன்,
தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி, நிர்வாகிகள் மாறன், பூங்கா ரமேஷ், ஸ்ரீநாத், பிரபு, பாலாஜி, சசிகுமார், ஜோதி லட்சுமி, அன்பு, கோவேந்தன், முருகேசன்,
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அய்யனார், மாவட்ட தலைவர் வாசன், செயலாளர்கள் தீபக், விக்னேஷ் மற்றும் மணி, நாகேந்திரன், சசி குமார், தஸ்தகீர், லோகேஷ்,
சமத்துவ மக்கள் கழக தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன், சமத்துவ மக்கள் கழக மாநில பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், காரைக்கால் மாவட்ட செயலாளர் விஜய், வண்ணாரப்பேட்டை நாடார் சங்க செயலாளர் ராஜேஷ், கடையல் நாடார் சங்கத் தலைவர் தாஸ், திசையன்விளை நாடார் உறவின் சங்க பொருளாளர் சதீஷ், சமத்துவ மக்கள் கழக செயற்குழு உறுப்பினர் சாபுதீன், வேல்முருகன்.
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், வர்த்தக அணி செயலாளர் எம்.வைகுண்டராஜா, வர்த்தக அணி பொருளாளர் ஆடிட்டர் சுந்தரபாண்டியன், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் டி.உதயகுமார், தென்சென்னை தெற்கு மாவட்டத் தலைவர் மடிப்பாக்கம் சாமுவேல்ரவி, செயலாளர் வி.எஸ்.கே.செந்தில்குமார், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், மத்திய சென்னை வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கோட்டீஸ்வரராஜா, செயலாளர் கணேஷ்குமார், பொருளாளர் டி.மாரிமுத்து, தென்சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் ஆர்.பாலமுருகன், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நிர்வாகிகள் சுதர்சன், லோகநாதன், சந்தோஷ், முருகபெருமாள்,
மக்கள் தேசிய கட்சி மாநில தலைவர் சேம.நாராயணன், நிர்வாகிகள் ஆனந்த், பழனி,
அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக தலைவர் முத்துராமன் சிங்க பெருமாள், நிர்வாகிகள் பார்த்திபன், சாந்தி முத்துராமன்,
காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் இசக்கிமுத்து, நிர்வாகிகள் மணிஅரசன், வசீகரன், ஜேம்ஸ், கதிரேசன், காந்தி மக்கள் கட்சி தலைவர் கார்த்திக், அருந்ததியர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஆவடி ரங்கநாதன், நிர்வாகிகள் கிருபாகரன், பிரதீப், காண்டீபன்,
தமிழர் தந்தை பார்அட்லா சி.பா.ஆதித்தனார் வக்கீல் சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் எமிலிசன், கிதியோன்கிங், தமிழ்நாடு ஆதிதிராவிடர் பேரவை தலைவர் இளங்கோ, தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச்சங்க தலைவர் லிங்கபெருமாள்.
நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் போரூர் ஆனந்தராஜ், சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் தங்கமுத்து, பொதுச்செயலாளர் செல்வகுமார், பொருளாளர் செல்லதுரை, நிர்வாகிகள் ரவீந்திரநாதன், செந்தில், மாணிக்கம், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், நிர்வாகிகள் ரவி, பாஸ்கர், ராஜ்குமார், நாகராஜ், தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் என்ஜினீயர் டி.விஜயகுமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் நாடார்,
மாடம்பாக்கம் நாடார் சங்க தலைவர் பொன்னம் பலம், திருச்சி அனியாப்பூர் நாடார் சங்க தலைவர் அமல்நாதன், செயலாளர் ராஜேந்திரன், பூந்தமல்லி நாடார் சங்க தலைவர் சுரேஷ், நெல்லை-தூத்துக் குடி நாடார் மகமை பரிபா லன சங்க பூந்தமல்லி தொகுதி தலைவர் ராம்ராஜ் நாடார், தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் சிவாஜிராஜன், செயலாளர் படப்பை சேவியர், காஞ்சி மாவட்ட தலைவர் ரமேஷ்,
எர்ணாவூர் நாடார் உறவின்முறை பொதுச் செயலாளர் சுந்தரேசன், நிர்வாகிகள் சுதந்திரதாஸ், வெள்ளைச்சாமி, ராபின்,
பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்க தலைவர் பத்மநாபன், நிர்வாகிகள் ரெங்கசாமி, பேரின்பராஜ், சோலையப்பன், கிருஷ்ணசாமி, செல்வகுமார், லிங்கராஜா, மாரியப்பன், பொன்குமார்,
தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால், துணைத் தலைவர் காமராஜ், சத்திரிய பாசறை நிறுவன மாநில தலைவர் ஆர்.ஜி.சம்பத்குமார்,
நாடார் மகாஜன சங்க சென்னை மண்டல தலைவர் மணலி தங்கம், நாடார் மகாஜன இளைஞரணி தலைவர் தமிழ்செல்வன், கனகராஜ், ஆறுமுகசாமி, செந்தில்குமார், கடற்கரை தங்கம், பெருமாள்,
இந்திய நாடார்கள் பேர மைப்பு மாநில செயலாளர் மலர்மன்னன், எஸ்.டி.பன்னீர்செல்வம், வெங்க டேசன், சேரன், விஜயன், திரவியம், எட்வர்ட் ராஜா, ரவிராஜா.
திருவான்மியூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலை வர் சுந்தர், பொதுச்செய லாளர் திருபுகழ், பொருளா ளர் சின்னதுரை, நிர்வாகி கள் மாணிக்கவேல், ஹரி தாஸ், ராமசாமி, சிவகுமார், தாமஸ், மாசானமுத்து, தாமஸ் சவரிமுத்து, சுரேஷ் பொன்ராஜ், ராஜதுரை, புஷ்பராஜ், முருகேசன், செந்தில்குமார்,
சென்னை வியாசர்பாடி நாடார் முன்னேற்ற சங்க தலைவர் செந்தில்முருகன், செயலாளர் முத்துராம், பொருளாளர் கனிராஜ்.
தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எட்வர்ட் ராஜா, தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க சென்னை மண்டல தலைவர் மாரிமுத்து, மாவட்ட தலைவர் எட்வர்ட்,
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேர மைப்பு தலைவர் கொளத் தூர் ரவி, நிர்வாகிகள் அருணாசலமூர்த்தி, குழந்தை வேல், ரமேஷ், வைரவேல்.
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன் சவுந்தர்முருகன், துணை செயலாளர் பால முனியப்பன், நிர்வாக குழு உறுப்பினர் ஆ.ஆறுமுக நயினார், மத்திய சென்னை நற்பணி மன்ற மாவட்ட தலைவர் எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன், ஆர்.கே.நகர் கிளை நற்பணி மன்ற தலைவர் திராவிட சக்கரவர்த்தி, திருச்சி அனியாப்பூர் கிளை மன்ற தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் ராஜா, செயலாளர் காமராஜ், பொருளாளர் சந்திரன்,
தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற அயன்புரம் கிளை செயலாளர் சச்சிதானந்தம், பொருளாளர் துரைராஜ், நிர்வாகிகள் பார்வதி செல்வன், ஜஸ்டிஸ், சிவப் பிரகாசம், முத்துதுரை, நந்தகுமார், அருண் பாண்டி யன், பாலமுருகன், ஜெய் பாலாஜி, பூபேஷ், செபாஸ்டியன், சதீஷ்குமார்,
திருச்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வம், சந்தைப்பேட்டை மன்ற செயலாளர் காமராஜ், உறுப்பினர்கள் சீனிவாசன், துரைக்கண்ணு சிவசக்தி, திருச்சி அனியாப்பூர் மன்ற அமைப்பாளர் மணலி ராஜ கோபால் மற்றும் நற்பணி மன்ற அம்பலவாணன்,
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க நிறுவனர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் வேத வள்ளி, சீனிவாசன், காஞ்சா, சாந்தி, ஓய்வு பெற்ற போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் மோகன்ராஜ், வ.உ.சி. தமிழ்ச்சங்க தலைவர் லட்சுமி.
தென்காசி மாவட்டம் தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங் காவலர் செண்பகராமன், முத்தாலம்குறிஞ்சி எழுத்தாளர் காமராசு, திரைப்பட இயக்குனர்கள் ஜெய் சாய் குமார், ராஜேஷ்குமார்,
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூர் அருகே அவரது சொந்த ஊரான காயாமொழியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ராகவ ஆதித்தன், பாலசுப்பிரமணிய ஆதித்தன், டாக்டர். பாலசுப்பிரமணிய ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், தங்கேச ஆதித்தன், அசோக் ஆதித்தன், குமார்ராமசாமி ஆதித்தன, முருகன் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், அச்சுத ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், குமரேச ஆதித்தன், தனிகேச ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், அமிர்தலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 1942-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரையில் `தினத்தந்தி' நாளிதழை தொடங்கி வெளியிட்டார்.
- சி.பா.ஆதித்தனார் ஏடு நடத்துவோருக்கும், எழுத்தாளர்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார்.
சென்னை:
`தமிழர் தந்தை'சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் இன்று (சனிக்கிழமை) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
`தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி என்கிற கிராமத்தில் 27.9.1905 அன்று பிறந்தார். செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து வெளிநாட்டில் சட்டப்படிப்பு முடித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கின்ற நாட்களிலேயே சிறு தொழில்கள் செய்து முன்னேறுவது குறித்து பல கட்டுரைகளும், நூல்களும் எழுதியுள்ளார்.
1942-ம் ஆண்டு முதன்முதலாக `மதுரை முரசு' என்ற வாரம் இருமுறை இதழையும், பின்னர் `தமிழன்' என்ற வார இதழையும் தொடங்கினார். யாருக்கும் அஞ்சாமல் உண்மைச் செய்திகளை வெளியிட வேண்டும் என்கிற கொள்கைப் பிடிப்பின் காரணமாக, இவரது பத்திரிகையை ஆங்கிலேய அரசு தடை செய்தும்கூட, இவர் தம் கொள்கையை மாற்றிக் கொள்ளாதவர்.
1942-ம் ஆண்டு நவம்பர் மாதம் மதுரையில் `தினத்தந்தி' நாளிதழை தொடங்கி வெளியிட்டார். தொடர்ந்து, `மாலை மலர்' என்ற மாலைப் பத்திரிகையையும் `ராணி' என்ற வார இதழையும் தொடங்கினார். பத்திரிகைகளில் மக்கள் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் தமிழ்ச் சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்கள் உள்ளிட்ட யுக்திகளைக் கையாண்டார்.
நாளிதழில் ஏராளமான படங்களுடன் செய்திகளை வெளியிட்டு தமிழ் இதழியல் துறையில் முத்திரை பதித்தார். 1942-ம் ஆண்டு முதல் 1953-ம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், 1957-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதல்-அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்தில் சட்டமன்றப் பேரவைத் தலைவராகப் பணியாற்றினார். அப்போது, சட்டப்பேரவை விதிகள் ஆங்கிலத்தில் இருப்பது பொருத்தமாக இருக்காது என்பதை அறிந்து தமிழில் மொழிபெயர்த்தார். கருணாநிதி முதல்-அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்1969-ல் கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சராகவும் திறம்படப் பணியாற்றினார். தமிழ் மீதும், தமிழர் மீதும் மாறாப் பற்று கொண்டு தம் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டதனால், அனைவராலும் "தமிழர் தந்தை" என அன்போடு அழைக்கப்படுகிறார்.
சி.பா.ஆதித்தனார் ஏடு நடத்துவோருக்கும், எழுத்தாளர்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார். ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில், அவரின் பிறந்த நாளான செப்டம்பர் 27-ந் தேதி அரசு விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
- சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை:
'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
சிலை முன்பு அவரது உருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம்கதிர், பாரோஸ் ஓட்டல், மாலைமுரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.
சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சி.பா.ஆதித்தனார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
அவர்களுடன் எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகரராஜா, வேளச்சேரி எம்.எல்.ஏ. அசன் மவுலானா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-
முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர் எஸ்.வி.சேகர், தொழில் அதிபர் தண்டுபத்து ஜெயராமன், ஓய்வு பெற்ற போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் மோகன்ராஜ்,
தி.மு.க. வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் தமிழ்மணி, அன்பு, பாபு, சத்தியா, புருஷோத், பரத், உமரி சங்கர், சதீஷ்,
அ.தி.மு.க. சார்பில் சிம்லா முத்து சோழன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நிர்வாகிகள் கண்ணன், தங்கமுத்து, பாஸ்கர், வில்லியம்ஸ், சுபாஷ், ராஜலிங்கம், சீனிவாசன், சாமுவேல், சுடலைமணி, ராஜன், ராஜேஷ், சங்கர பாண்டியன், தாஸ், சண்முகசுந்தரம், ராபர்ட், சுப்பிரமணி, ராஜ்குமார், சதீஷ், பாக்யராஜ், பாலமுருகன், நடராஜன்.
ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் வந்திய தேவன், மாவட்ட செயலா ளர்கள் ஜீவன், கழக குமார், ராஜேந்திரன், சுப்பிரமணி, மகேந்திரன், நிர்வாகிகள் தென்றல் நிசார், நாசர், பாஸ்கர், இளவழகன், துரை குணசேகர், கவிஞர் மணி வேந்தன், கோவில்பட்டி ராமச்சந்திரன், அண்ணா துரை, சேகரன், ஜானகிராமன், தனசேகர், தியாகராஜன், சகாயஅரசி,
காங்கிரஸ் நிர்வாகி அகமது அலி உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
- உண்மையின் பக்கம் நின்று, மனித சமூகம் முன்னேற்றம் அடைவதற்கான முற்போக்குச் சிந்தனைகளைப் பாமர மக்களிடமும் கொண்டு செல்லும் இதழியல் பணிக்கு வேர் சி.பா.ஆதித்தனார்.
- உலகமெங்கும் பரவலாக உள்ள கோடான கோடி தமிழ் மக்களுக்கு பத்திரிகை படிப்பதற்கு ஆர்வத்தை ஊட்டியவரான சி.பா.ஆதித்தனாரை உலகம் இருக்கின்ற வரையில் யாரும் மறக்க இயலாது.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ் இதழியலின் முன்னோடியான சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று. உண்மையின் பக்கம் நின்று, மனித சமூகம் முன்னேற்றம் அடைவதற்கான முற்போக்குச் சிந்தனைகளைப் பாமர மக்களிடமும் கொண்டு செல்லும் இதழியல் பணிக்கு வேர் அவர். பொய்கள் சூழ் உலகில் இதழியலுக்கு அறமே அச்சாணி.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழுக்கும், தமிழர் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்றி, தொலைநோக்கு சிந்தனைகளால் அச்சு ஊடக உலகில் பல்வேறு வளர்ச்சிகளை ஏற்படுத்திய தமிழ் இதழியல் முன்னோடியும் தினத்தந்தி நிறுவனருமான 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளில் அவரின் புகழை போற்றி வணங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச்.வி. ஹண்டே வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
மதிப்பிற்குரிய சி.பா.ஆதித்தனாரும், நானும் தமிழ்நாடு மேலவையில் 1964-67ல் ஒன்றாக அமர்ந்திருந்தோம்.
1965-ல் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற லட்சியத்திற்காக போராடியவர் சி.பா.ஆதித்தனார். இதற்காக அவரை எம்.பக்தவச்சலத்தின் ஆட்சியில் 9.10.1965 அன்று கைது செய்தார். இந்த தவறான, மன்னிக்க முடியாத செயலால் தான் 1967-ல் நடைபெற்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
உலகமெங்கும் பரவலாக உள்ள கோடான கோடி தமிழ் மக்களுக்கு பத்திரிகை படிப்பதற்கு ஆர்வத்தை ஊட்டியவரான சி.பா.ஆதித்தனாரை உலகம் இருக்கின்ற வரையில் யாரும் மறக்க இயலாது.
சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளை கொண்டாடுவது நாம் தமிழை போற்றுவதற்கு சமமாகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






